Wednesday, February 6, 2013

பிரபு-குஷ்பு மனதில் காதலை விதைத்தது யார்?

பிரபு – குஷ்பு ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்த பாவத்தைச் செய்தவர்கள் சாட்சாத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள்தான். அதில் சந்தேகமில்லை.
பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவும் குஷ்புவும் திருமண வைபவமொன்றின் போது....
பிரபு – குஷ்புக்கே தோன்றியிருக்காத ஒரு எண்ணத்தை “காதல் இருக்கா.....? இருக்கோ.....? இருக்காம்ல்ல....? என்ன சொல்ல மாட்டேங்குaங்க?” என்றெல்லாம் தினம்தோறும் அந்த எண்ணத்தை அவர்களது மனதில் விதைத்து திருமணம் வரையிலும் கொண்டு போய்ச் சேர்த்து புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது தமிழ்ச் சினிமா பத்திரிகை உலகம். போதாக்குறைக்கு இந்த இருவருக்குமே ஒருவரே பி.ஆர்.ஓ. வாகவும் இருந்ததினால் நட்பு காதலாகி, கசிந்து திருமணத்தில் முடிய வேண்டிய கட்டாயம்!
அதுவரையிலும் ‘அன்னை இல்ல’த்தின் அடுப்படி வரையிலும் உரிமையுடன் சென்று தானே எடுத்துப்போட்டு சாப்பிட்டு வரும் அளவுக்கு பழக்கமாகி இருந்த குஷ்புவை, திரும்பவும் அந்த வீட்டுக்குள் கொஞ்ச காலம் நுழையாதபடிக்குக் கொண்டு சென்றது அந்த மண விவகாரம். நடிகர் திலகத்திற்கு பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மூன்று மாதத்தில் இந்த ஜோடி பிரிய வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது.
அந்த நேரத்தில் பிரிவது என்று இருவரும் எடுத்துக் கொண்ட முடிவு பாராட்டுக்குரியது. ஒரு திருமணத்தால் குடும்பமே பிரியக்கூடிய அளவுக்கு போகுமென்றால் பத்துப் பேரின் சந்தோஷத்திற்காக இருவர் துயரத்தை அனுபவிப்பதில் தவறில்லை என்பதால் துன்பத்தைத் தாங்கிக் கொண்டார்கள்.
பத்திரிகைகளுக்கு இதுவும் ஒரு பரபரப்புச் செய்திதான். மஞ்சள் குளித்தன பத்திரிகைகள்! ஆனாலும் ரசிகர்களுக்கு மனம்கொள்ளா வருத்தம்தான்....! அவர்களுக்குப் பிடித்த ஜோடியல்லவா...!?



No comments:

Post a Comment