அமிதாப்பச்சன் ‘பூத்நாத்’ இந்தி
படத்தில் நகைச்சுவை இழையோட நடித்தார். படம் வெற்றியடைந்தது. அதன்
தொடர்ச்சியாக ‘பூத்நாத் ரிட்டர்ன்ஸ்’ படம் வெளிவந்து பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது. அதில் உள்ள சுவாரஸ்யங்களை அமிதாப்பச்சன்
பகிர்ந்துகொள்கிறார்.
‘பூத்நாத் ரிட்டர்ன்ஸ்‘சில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அதில் ஹீரோ, வில்லன் எல்லாமே நான்தான். கதாநாயகி கிடையாது. அரைகுறை ஆடை நடனமும் கிடையாது. உண்மையை சொன்னால் அந்த படத்தில் என்னோடு நடித்த பார்த்த ராவ் என்ற சிறுவன்தான் ஹீரோ.
பெரிய சூப்பர் ஸ்டாரான உங்களோடு நடிக்க அந்த சிறுவன் பயந்தானா?
பெரிய சூப்பர் ஸ்டாரா! யார் நானா? இப்படியெல்லாம் சொல்லி நான் யாரையும் பயமுறுத்துவதில்லை. இத்தனை ஆண்டுகாலம் கேமராமுன் நிற்கிறேன். இன்னமும் கேமரா எனக்கு புதிதுபோலதான் தோன்றுகிறது. நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே அந்த சிறுவன் அருமையாக நடித்துவிட்டான். அந்த வயதில் எனக்கு அவ்வளவு திறமை இருந்ததில்லை.
பூத்நாத் படங்கள் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
இரண்டும் வெவ்வேறு விதமான விஷயங்கள் கொண்டவை. முதல் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை. பூத்நாத் இறந்து பூத உலகிற்கு செல்வதோடு கதை முடிந்துவிடுகிறது. பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறேன். அக்ரோட் என்ற சிறுவனோடு நட்பு ஏற்படுகிறது. சமூக அவலங்களைப் பார்த்து கொந்தளிக்கிறேன். தேர்தல் களத்திலிறங்கி ஜெயிக்கிறேன். இந்த படம் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டதால் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது.
படத்தின் வெற்றி யாரை உற்சாகப்படுத்தும்?
படம் வெற்றிபெற வேண்டும். எனக்காக அல்ல, என் நண்பர் தயாரிப்பாளர் ரவி சோப்ராவிற்காக! அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இந்தப் படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தும்.
படத்தில் அந்த சிறுவனோடு நடிக்க உங்களுக்கு சிரமமாக இருந்ததா?
அவனைப் போன்ற சினிமாவிற்கு முற்றிலும் புதிய சிறுவனோடு நடிப்பது கஷ்டம்தான். ஆனாலும் சுவாரசியமான விஷயமாக இருந்தது. புதுமுகமான சிறுவர்கள் கேமரா முன்பு என்ன செய்வார்கள் என்றே தெரியாது. அவர்களோடு நடிப்பது சிரமம்தான். ஆனால் அவர்களிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர நாமும் கொஞ்சம் ஒத்துழைக்கவேண்டும்.
இந்தப் படத்தை யாரெல்லாம் பார்க்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
இந்தியாவில் உள்ள சிறுவர்கள் அனைவரும் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதில் இந்திய அரசியல் சாசனம், தேர்தல் விதிமுறைகள் பற்றி விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியமாக என் பேத்தி ஆராத்யா பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு பெரிய பட்ஜெட் படமானாலும் ஒரு வாரம்தானே ஓடுகிறது?
உண்மைதான். காரணம் சினிமாவைத் தவிரவேறு பல பொழுது போக்கு சாதனங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சி, வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து விட்டது. கையில் வைத்திருக்கும் போனிலேயே சினிமாவை பார்த்துவிடுகிறார்கள். பயணங்களிலே பார்த்து ரசிக்கும் அளவுக்கு பொழுது போக்கு அம்சங்கள் எளிமையாக்கப்பட்டுவிட்டது. அதனால் சினிமா அதிக நாட்கள் ஓடவில்லை என்பதற்காக சினிமா எடுப்பவர்களை குறைசொல்லக்கூடாது.
ஆனால் சிறுவர்களுக்கான சினிமாக்கள் குறைந்து கொண்டிருக்கிறதல்லவா?
நல்ல விஷயங்களை குழந்தைகள் மனதில் பதிவு செய்ய சினிமா ஒரு நல்ல சாதனம். நாளைய பாரதம் அவர்கள் கையில்தான் இருக்கிறது. சில்ட் ரன் பிலிம் சொசைட்டி, சிறுவர்களுக்கான நிறைய படங்கள் உருவாக ஊக்குவிக்கவேண்டும்.
கால்பந்து விளையாட்டில் அபிஷேக் பச்சன் கலக்குகிறாரே. அவரது விளையாட்டை பார்த்தீர்களா?
சமீபத்தில்கூட பிரபலமானவர்களுக்கான போட்டியில் அபிஷேக் விளையாடியுள்ளார். அதை நான் வீடியோவில் பார்த்தேன். எனக்கும் கால்பந்து விளையாட்டு அதிகம் பிடிக்கும். நமக்கு வேண்டியவர்கள் விளையாடும் விளையாட்டு நமக்கு திரில்லை தரத்தான் செய்கிறது.
காலையில் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறீர்கள். இரவில் டுவிட்டர், பேஸ்புக், ப்ளாக்கில் எழுதுகிறீர்கள். கவிதையும் வடிக்கிறீர்கள். இத்தனைக்கும் மத்தியில் எப்போதுதான் தூங்குகிறீர்கள்?
வாழ்க்கை வாழ்வதற்கே. தூக்கம் வரும்போது தூங்குவேன். மற்ற நேரங்களில் என் மனதுக்குப் பிடித்ததை செய்துக் கொண்டிருப்பேன். காலையில் நடிகன், இரவில் நண்பன், ப்ளாக்கில் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் அப்பா கவிஞர். அந்த வாசனை எனக்கு கொஞ்சமாவது இருக்குமல்லவா! மனம் கொந்தளிக்கும்போது கவிதைதான் எனக்கு ஆறுதல்.
‘க்வின்’ படத்தைப் பாராட்டி கங்கணா ரணாவத்திற்கு நீங்கள் வலைதளத்தில் எழுதிய கடிதம் பற்றி அவர் பெருமைப்பட்டிருக்கிறாரே?
ஆமாம். கடிதம் எழுதுவது பழைய முறைதான். ஆனாலும் அதற்குரிய மரியாதை அதிகம். கடிதத்தில் உணர்வுகளும், தனிப்பட்ட அக்கறையும் வெளிப் படும். அந்தக்காலத்து கடிதங்களையெல்லாம் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். கடிதத்தின் அருமை எனக்குத் தெரியும். ஒருவரின் எண்ணங்களை காலம் முழுவதும் பத்திரப்படுத்த கடிதமே சிறந்தது.
நீங்கள் யாருடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பினீர்கள்?
பழம்பெரும் நடிகர் திலீப்குமாருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பல முறை முயற்சி செய்தேன். ஆனால் கைகூடவில்லை. பிறகு அவருடன் சேர்ந்து ‘சக்தி’ படத்தில் நடித்தேன். அப்போதுதான் என் கனவு நிறைவேறியது.
‘பூத்நாத் ரிட்டர்ன்ஸ்‘சில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அதில் ஹீரோ, வில்லன் எல்லாமே நான்தான். கதாநாயகி கிடையாது. அரைகுறை ஆடை நடனமும் கிடையாது. உண்மையை சொன்னால் அந்த படத்தில் என்னோடு நடித்த பார்த்த ராவ் என்ற சிறுவன்தான் ஹீரோ.
பெரிய சூப்பர் ஸ்டாரான உங்களோடு நடிக்க அந்த சிறுவன் பயந்தானா?
பெரிய சூப்பர் ஸ்டாரா! யார் நானா? இப்படியெல்லாம் சொல்லி நான் யாரையும் பயமுறுத்துவதில்லை. இத்தனை ஆண்டுகாலம் கேமராமுன் நிற்கிறேன். இன்னமும் கேமரா எனக்கு புதிதுபோலதான் தோன்றுகிறது. நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே அந்த சிறுவன் அருமையாக நடித்துவிட்டான். அந்த வயதில் எனக்கு அவ்வளவு திறமை இருந்ததில்லை.
பூத்நாத் படங்கள் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
இரண்டும் வெவ்வேறு விதமான விஷயங்கள் கொண்டவை. முதல் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை. பூத்நாத் இறந்து பூத உலகிற்கு செல்வதோடு கதை முடிந்துவிடுகிறது. பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறேன். அக்ரோட் என்ற சிறுவனோடு நட்பு ஏற்படுகிறது. சமூக அவலங்களைப் பார்த்து கொந்தளிக்கிறேன். தேர்தல் களத்திலிறங்கி ஜெயிக்கிறேன். இந்த படம் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டதால் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது.
படத்தின் வெற்றி யாரை உற்சாகப்படுத்தும்?
படம் வெற்றிபெற வேண்டும். எனக்காக அல்ல, என் நண்பர் தயாரிப்பாளர் ரவி சோப்ராவிற்காக! அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இந்தப் படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தும்.
படத்தில் அந்த சிறுவனோடு நடிக்க உங்களுக்கு சிரமமாக இருந்ததா?
அவனைப் போன்ற சினிமாவிற்கு முற்றிலும் புதிய சிறுவனோடு நடிப்பது கஷ்டம்தான். ஆனாலும் சுவாரசியமான விஷயமாக இருந்தது. புதுமுகமான சிறுவர்கள் கேமரா முன்பு என்ன செய்வார்கள் என்றே தெரியாது. அவர்களோடு நடிப்பது சிரமம்தான். ஆனால் அவர்களிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர நாமும் கொஞ்சம் ஒத்துழைக்கவேண்டும்.
இந்தப் படத்தை யாரெல்லாம் பார்க்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
இந்தியாவில் உள்ள சிறுவர்கள் அனைவரும் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதில் இந்திய அரசியல் சாசனம், தேர்தல் விதிமுறைகள் பற்றி விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியமாக என் பேத்தி ஆராத்யா பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு பெரிய பட்ஜெட் படமானாலும் ஒரு வாரம்தானே ஓடுகிறது?
உண்மைதான். காரணம் சினிமாவைத் தவிரவேறு பல பொழுது போக்கு சாதனங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சி, வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து விட்டது. கையில் வைத்திருக்கும் போனிலேயே சினிமாவை பார்த்துவிடுகிறார்கள். பயணங்களிலே பார்த்து ரசிக்கும் அளவுக்கு பொழுது போக்கு அம்சங்கள் எளிமையாக்கப்பட்டுவிட்டது. அதனால் சினிமா அதிக நாட்கள் ஓடவில்லை என்பதற்காக சினிமா எடுப்பவர்களை குறைசொல்லக்கூடாது.
ஆனால் சிறுவர்களுக்கான சினிமாக்கள் குறைந்து கொண்டிருக்கிறதல்லவா?
நல்ல விஷயங்களை குழந்தைகள் மனதில் பதிவு செய்ய சினிமா ஒரு நல்ல சாதனம். நாளைய பாரதம் அவர்கள் கையில்தான் இருக்கிறது. சில்ட் ரன் பிலிம் சொசைட்டி, சிறுவர்களுக்கான நிறைய படங்கள் உருவாக ஊக்குவிக்கவேண்டும்.
கால்பந்து விளையாட்டில் அபிஷேக் பச்சன் கலக்குகிறாரே. அவரது விளையாட்டை பார்த்தீர்களா?
சமீபத்தில்கூட பிரபலமானவர்களுக்கான போட்டியில் அபிஷேக் விளையாடியுள்ளார். அதை நான் வீடியோவில் பார்த்தேன். எனக்கும் கால்பந்து விளையாட்டு அதிகம் பிடிக்கும். நமக்கு வேண்டியவர்கள் விளையாடும் விளையாட்டு நமக்கு திரில்லை தரத்தான் செய்கிறது.
காலையில் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறீர்கள். இரவில் டுவிட்டர், பேஸ்புக், ப்ளாக்கில் எழுதுகிறீர்கள். கவிதையும் வடிக்கிறீர்கள். இத்தனைக்கும் மத்தியில் எப்போதுதான் தூங்குகிறீர்கள்?
வாழ்க்கை வாழ்வதற்கே. தூக்கம் வரும்போது தூங்குவேன். மற்ற நேரங்களில் என் மனதுக்குப் பிடித்ததை செய்துக் கொண்டிருப்பேன். காலையில் நடிகன், இரவில் நண்பன், ப்ளாக்கில் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் அப்பா கவிஞர். அந்த வாசனை எனக்கு கொஞ்சமாவது இருக்குமல்லவா! மனம் கொந்தளிக்கும்போது கவிதைதான் எனக்கு ஆறுதல்.
‘க்வின்’ படத்தைப் பாராட்டி கங்கணா ரணாவத்திற்கு நீங்கள் வலைதளத்தில் எழுதிய கடிதம் பற்றி அவர் பெருமைப்பட்டிருக்கிறாரே?
ஆமாம். கடிதம் எழுதுவது பழைய முறைதான். ஆனாலும் அதற்குரிய மரியாதை அதிகம். கடிதத்தில் உணர்வுகளும், தனிப்பட்ட அக்கறையும் வெளிப் படும். அந்தக்காலத்து கடிதங்களையெல்லாம் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். கடிதத்தின் அருமை எனக்குத் தெரியும். ஒருவரின் எண்ணங்களை காலம் முழுவதும் பத்திரப்படுத்த கடிதமே சிறந்தது.
நீங்கள் யாருடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பினீர்கள்?
பழம்பெரும் நடிகர் திலீப்குமாருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பல முறை முயற்சி செய்தேன். ஆனால் கைகூடவில்லை. பிறகு அவருடன் சேர்ந்து ‘சக்தி’ படத்தில் நடித்தேன். அப்போதுதான் என் கனவு நிறைவேறியது.
வாசிக்கப்பட்டது