
இதில், ‘எனது சொந்த வாழ்க்கையை சொல்லப் போவதாகவும், திரையுலக வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் படத்தில் இருக்கும். இருட்டு பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன் என்றெல்லாம் மிரட்டியிருந்தார்.
இந்த அறிவிப்பால், யார் யாரைப் பற்றிய ரகசியங்களை சோனா காட்சிகளாக வைத்து கவிழ்க்கப் போகிறாரோ என்று பரபரப்பாக எதிர்பார்த்தனர். ஆனால் இப்போது அத்தனையும் புஸ்ஸாகிவிட்டது. ஆம் சோனா திடீரென அந்த முடிவை கைவிட்டு விட்டாராம்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘யோசித்துப் பார்த்தேன். இப்போதே என் கதையைச் சொல்லிவிட்டால், அப்புறம் என்னை யாரும் ரசிக்க மாட்டார்களே. எனவே இப்போதைக்கு அந்த முடிவை தள்ளி வைத்துவிட்டேன். இரண்டு மூன்று வருடங்கள் போகட்டும் எப்போது வந்தாலும் என் கதை கலக்கும் என்றார்.
No comments:
Post a Comment