Tuesday, July 23, 2019

සරසවි සම්මාන උළෙල


ශ්‍රී ලංකා සිනමාවේ අභිවෘද්ධිය සඳ්හා  සතිපතා පුවත්පතක් වන සරසවිය පුවත්පත  සරසවි සම්මාන උළෙල  1964  ආරම්භ කළේය

ප්‍රථම සරසවිය සිනමා සම්මාන උළෙලට  1960 සිට 1963 දක්වා තීර ගතවූ සිනමාපටයන්  තෝරා ගනු ලැබීය. හොඳම සිනමාපටය, හොඳම අධ්‍යක්ෂණය, හොඳම තිර රචකයනය, හොඳම නළුවා සහ නිළිය එ දවසෙහි තෝරනු ලැබුවා. ගම්පෙරළිය හොඳම සිනමාපටය ලෙසට එහි නිෂ්පාදක ඇන්ටන් වික්‍රමසිංහ සම්මාන ලැබූවා. එම චිත්‍රපටියටම සර්.ලෙස්ටර් ජෙම්ස් පීරිස් හොඳම අධ්‍යක්ෂණට සහ රෙජී සිරිවර්ධන හොඳම තිර රචනයට සම්මාන ලැබුවා. ඩී.ආර්. නානායක්කාර හොඳම නළුවා ලෙස සිකුරු තරුවෙහි දක්ෂතාවයට සම්මාන ලැබූවා, 1964 සම්මානීය අනෙක් සිනමාපටයයි. පුන්‍යා හීන්දෙණිය හොඳම නිළිය සම්මානය ලබා ගනු ලැබූයේද ගම්පෙරළිය සිනමාපටයෙන්මය. මුල්ම සරසවි සම්මාන උළෙල පැවැතියේ කොළඹ අශෝකා සිනමා හලදීයි.සිළුමිණපුවත්පතේ උප කතුවරයකු වූ විමලසිරි පෙරේරා මහතා විසින් 1964 දී ප්‍රථම සරසවි සම්මාන උළෙල පවත්වන ලදී. සරසවිය සම්මාන උළෙලට ජනප්‍රිය හින්දි නිළි මීනා කුමාරි සහභාගී විය.



கடவுனு பொருந்துவ திரையிடப்பட்ட அன்று



කඩවුණු පොරොන්දුව Released Date : 1947-01-21


වංශවතෙකු වූ රාළහාමි මියයන විට තමන්ට හිමි සියලු ධනය බීමත්කම හා වෙනත් දුරාචාර නිසා නාස්ති කරනගනිමින් ණයගැතික් වී සිටියේය. රාළහාමිගේ බිරිද වන ටෙක්ලා ණයෙන් නිදහස් වීම සදහා තම දුව වන රන්ජනී පෙර විවාහයක දරුවෙක් සිටින වික්ටර් නම් මිනිසෙකුට විවාහ කරදීමට සැරසේ. මේ අතර , මෙම පවුල ණයබරින් ගොඩ ගැනීමට උත්සහ දරමින් සිටි රංජනීගේ පෙම්වතා වූ සැම්සන් ව ප්‍රතික්ෂේප කර දමනු ලැබේ. සැම්සන් මුදල් උපයාගැනීම පිණිස පිටරට යයි.
සැම්සන් ලංකාවට පැමිණෙන විට රංජනී වික්ටර් හා විවාහ ගිවිස සිටින බව දැනගැනී. ඇයට සැම්සන් ලියන ලිපි ඇගෙන් සගවන අතර , සැම්සන් ආබාධිත තත්වයක පසුවන බවට කටකතා පැතිරේ. අවසානයේ සත්‍ය හෙළි වේ.
1st Sarasavi Award - 1964
2nd Sarasavi Award - 1965
3rd Sarasavi Award - 1966
4th Sarasavi Award - 1967
5th Sarasavi Award - 1968
6th Sarasavi Award - 1969
7th Sarasavi Award - 1970
8th Sarasavi Award - 1980
9th Sarasavi Award - 1981
10th Sarasavi Award - 1982
11th Sarasavi Award - 1983
12th Sarasavi Award - 1984
13th Sarasavi Award - 1985
14th Sarasavi Award - 1986
15th Sarasavi Award - 1987
16th Sarasavi Award - 1988
17th Sarasavi Award - 1989
18th Sarasavi Award - 1990
19th Sarasavi Award - 1991
20th Sarasavi Award - 1992
21st Sarasavi Award - 1993
22nd Sarasavi Award - 1994
23rd Sarasavi Award - 1995
24th Sarasavi Award - 1996
25th Sarasavi Award - 1998
26th Sarasavi Award - 1998
27th Sarasavi Award - 2002
28th Sarasavi Award - 2003
29th Sarasavi Award - 2004
30th Sarasavi Award - 2005
31st Sarasavi Award - 2006
32nd Sarasavi Award - 2007
32nd Award Ceromony 2010

SaraSaviya Awards


The Sarasaviya film awards ceremony began in 1964 at a time when the local cinema was trying to shed its South Indian orientation and establish an indigenous identity. There was no need to go to India to make films any more and the era of Indian artistes too had ended. The first Sarasaviya film festival was held on May 9, 1964 at the Asoka Cinema Hall, Colombo, 17 years after the first Sinhala film screened. By then a series of good Sinhala films like Podi Putha, Rekhawa, Sandeshaya , Ranmuthuduwa, Kurulubedda, Sikurutharuwa and Gamperaliya had appeared on screen. Yet the main stream consisted of simulations of Indian productions. The year 1960 is seen as the beginning of the golden era of Sinhala cinema. The first Sarasaviya Awards Festival had as entries not only the films screened in 1963 but also the films screened from 1960 to 1963. The best film, best director, best script- writer, best actor and best actress were honoured that day. Gamperaliya was regarded as the best film and it was awarded to its producer Anton Wickremasinghe. Sir Lester James Peiris and Regi Siriwardena won the awards for best director and best script-writer, respectively and that too was for Gamperaliya. D.R. Nanayakkara was awarded the best actor title for his performance in Sikuru Tharuwa, another popular film in the 1964 film festival. The best actress award was bagged by Punya Heendeniya for her performance in Gamperaliya.

நடிகை சந்தியா குமாாி.


இலங்கை சிங்களத் திரைப்படத்துறையின் குறிப்பிடத்தக்க நடிகைகளில் இவரும் ஒருவா்.  1945 ஜனவாி 06ஆம் திகதி பிறந்த இவர், இலங்கையின் பிரபல நடிகை சந்தியா குமாாி. இவா் 1994.06.02 ஆம் திகதி காலமானாா். இவா் கடைசியாக நடித்த திரைப்படம் "அலிபாபாவும் 40 திருடா்களும்". இது 1991 ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. Sandya Kumari (1945.01.06).




Clarice De Silva - ක්ලැරිස් ද සිල්වා

Clarice is the second heroine in the Sinhala cinema after Rukmani Devi who is the icon of the Sinhala cinema. Her parents never objected to her career, but allowed her to enrich the Sinhala cinema.

Known As : Clarice De Silva
Real Name : Clarice De Silva
First Released : Umathu Wishwasaya 1952
Latest Released : Dawala Pawra
2011


Monday, July 22, 2019

பராசக்தியும் பருத்திவீரனும்



நூற்றாண்டு கடந்த தமிழ் சினிமாவை திரும்பிப் பார்த்தால், இரண்டே இரண்டுபேருக்கு மட்டும்தான், முதல் படமே ஸ்டார்என்கிற நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. பருத்திவீரன்எனும் முதல்படமே கார்த்தியை அப்படியொரு உயரத்துக்குக் கொண்டுசென்றது. அதற்கு முன்பு, இப்படியான பரபர நெருப்பைப் பற்ற வைத்தது பராசக்திஹீரோதான். அவர்... சிவாஜிகணேசன்! இது 2-வது சக்ஸஸ்.
அக்கினியை வார்த்து எழுதினாலும் உச்சரிப்பில் அனல் தெறிக்கவிட்டால்தான் தமிழுக்கும் பெருமை. எழுத்தின் வீரியமும் புலப்படும். வசன நடையிலும் மாற்றம் செய்து, வசனத்திற்குள்ளேயும் திரிகிள்ளிப் போட்ட எழுத்தை தமிழ் மக்களுக்குக் கடத்தியிருப்பார் சிவாஜி. அந்த அனல்கனல் எழுத்தாளர் கலைஞர். இது 3-வது சக்ஸஸ்.
எல்லாம் நல்லாருக்கு. ஆனா, அந்தப் பையன் வத்தலும் தொத்தலுமா சரியா இல்லியே முதலியார். அவனைத் தூக்கிட்டு வேற ஆளைப்போட்டு படத்தை திரும்பவும் எடுத்துருங்கஎன தயாரிப்பாளர் ஜாம்பவான் ஏவி.மெய்யப்பச் செட்டியார் படத்தின் சக தயாரிப்பாளரான பெருமாள் முதலியாருக்கு அறிவுரையாகவும் கட்டளையாகவும் சொல்ல, அவற்றையெல்லாம் கடந்து, “இந்தப் பையன் மேல நம்பிக்கை இருக்கு. நல்லாப் பண்ணுவான்னு தோணுது. கொடுத்துதான் பாப்போமே செட்டியார்என்று பெருமாள் முதலியார், நாசூக்காகச் சொன்னது, கலைத்தாயின் லீலையோ மகிமையோ... என்னவோ?
குணசேகரன் எனும் சமகாலப் பிரதி
ரங்கூனிலிருந்து தமிழகத்தில் இறங்குகிற குணசேகரனாக வரும் சிவாஜி, பிறகு மக்களின் மனங்களில் ஏறி சிம்மாசனமிட்டு உட்கார்ந்துகொண்டார். அந்தப் பணக்கார மிடுக்கை, அலட்சியமான சிரிப்பில் காட்டுவார், தாய்மண்ணுக்கு வந்த பூரிப்பை கண்கள் உணர்த்தும். ஆனால் தனிமையும் சபலமும் கைகோர்க்க, பணத்தையெல்லாம் இழந்து நிற்பார். அவரை இந்தச் சமூகம் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்பதை, கொஞ்சம்கொஞ்சமாக, உணர்த்திக் கொண்டே வருவார் குணசேகரன் என்கிற சமகாலத்தின் பிரதியாகப் படைக்கப்பட்ட சிவாஜி.
ஒரு பிச்சைக்காரனைப்போல, பைத்திய வேஷமும் கட்டிக்கொண்டு, இந்தச் சமூகத்தை சவுக்கால் விளாசுவது போல் இருக்கிற குணசேகரன் கதாபாத்திரம், கவனிக்கத்தக்கது. பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் குணாவை, போலீஸ்காரர் எழுப்புவார். என்னடா முழிக்கிறே?” என்பார். தூங்கிட்டிருக்கறவனை எழுப்பினா முழிக்காம என்ன பண்ணுவான்?” என்பார். அதில் நக்கல் லேசாகத்தான் இருக்கும். ஒரு கோபமும் சலிப்புமாகத்தான் வெளிப்படுத்துவார். அடுத்து, “என்ன, பிக்பாக்கெட்டா?” என்பார். உடனே சிவாஜி, “இல்ல, எம்ட்டி பாக்கெட்என்று, பேண்ட் பாக்கெட்டை பிரித்துக்காட்டுவார். இதுதான் நக்கல். இந்த வித்தியாசத்தை, வசன உச்சரிப்பின் மூலமும் முகபாவனைகள் மூலமும் விநாடி நேரத்துக்குள் நமக்குக் கடத்திவிடுவார்.
கைத்தட்டல்களை அள்ளிய கலைஞன்
தங்கை கல்யாணியைப் பார்த்துவிடுவார். ஆனால் தங்கை என அழைக்கமுடியாத நிலை. ஆகவே அங்கேயே பைத்தியக்காரன்போல சுற்றிச்சுற்றி வருவார் சிவாஜி. ரங்கூனில் இருந்து இங்கே வந்து அகதி வாழ்க்கை வாழும் உண்மையான குணசேகரனே இவர்தானோ என்று பார்த்தவர்கள் நடிப்பால் மிரண்டுபோனார்கள். தமிழ் சினிமா உலகில், முதல் படத்திலேயே காட்சிக்குக் காட்சி கைத்தட்டல்களை அள்ளியது நடிகர் திலகமாகத்தான் இருக்கும்.
கோயிலையும் கோயிலில் நடக்கிற ஊழல்களையும் அர்ச்சகரின் அத்துமீறல்களையும் ஆன்மிகம் பேசுகிறவரின் எல்லை மீறல்களை யும் பொளேர் பொளேர் என முகத்தில் அறைந்து சொல்வதற்கு வீரிய வசனமும் அதை இன்னும் வீரியப்படுத்தும் உச்சரிப்புமாகக் கலந்துகட்டி, வண்டிச்சக்கரம்போல இரண்டு விஷயங்களும் உருண்டு வந்துகொண்டே இருக்கும்.
பராசக்திஎன்று பெயர் வைத்து, ஆன்மிகக் கூட்டத்தை உள்ளே இழுத்ததுதான் முதல் வெற்றி. அதேபோல சக்ஸஸ்என்கிற வசனத்தைத்தான் சிவாஜி முதலில் பேசி எடுத்தார்களாம். ஆனால், படம் முழுவதும் அடுத்தடுத்த தோல்விகளும் காயங்களும் எதிர்கொண்ட கதாபாத்திரம் குணசேகரன்! எவ்வளவு பெரிய முரண்...!
குத்தீட்டி வசனங்கள். அந்த குத்தீட்டியின் முனையில் இன்னும் கூர் செய்யப்பட்ட விதமாக ஏற்ற இறக்கத்துடன் கர்ஜித்து ஓலமிட்டு உலுக்கியெடுத்த குரல். இரண்டும் கைசேர்ந்து, இரண்டறக் கலந்து, மும்மடங்கு வசூல் சாதனை செய்தது. அவ்வளவு ஏன்... தடையே செய்யப்பட்டது.
காலம் மறக்காத நீதிமன்றக் காட்சி
ஐம்பதுகளிலிருந்துதான் தொடங்கி யது நாயகனுடனேயே இருக்கிற காமெடி கேரக்டர்களும். ஆனால், இங்கே குணசேகரனே ஹீரோ. அவரே காமெடியன். இந்த இரண்டையும் வெகு அழகாகப் பிரித்தாள, சிவாஜியாலும் அவர் கண்களாலும் குரலாலும் மட்டுமே முடியும்.
ஓ... ரசிக்கும் சீமானே, ‘ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசுகாரியத்தில் கண்வையடா தாண்டவக் கோனே, முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோனே, காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே, கா கா கா..., என்கிற பாடலின் போது, ஒவ்வொருவித சூழல். மனதில் ஒவ்வொருவிதமான நிலை. ஒரு குணசேகரனாகவே மாறியிருப்பார் சிவாஜிகணேசன்.
நீதிமன்ற இறுதிக்காட்சியில் குற்றவாளிக்கூண்டுக்குள் நின்று கொண்டு, நீதிபதியை (கவிஞர் கண்ணதாசன்) பார்த்து, சிவாஜியின் பார்வையில் பாதியும் குரலில் மீதியுமாய் தெறித்துக்கொண்டே இருக்கிற வசனங்கள், எரிமலைக்கு நிகரானவை. இரண்டு கைகளையும் கூண்டில் வைத்துக்கொண்டு, அவலங்களையும் அவமானங்களையும் பரிசாகப் பெற்ற முகத்தில், நொடிக்கொரு எக்ஸ்பிரஷன்கள் காட்ட, சிவாஜியால் மட்டும்தான் முடியும். கோயில் கூடாது என்றேன் ஏன்..அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காகஎன்று சொல்லிக் கொண்டே வந்து, “இது கல்யாணியின் குற்றமா, யார் குற்றம்...?” என்று கேட்டுக்கொண்டே வந்து, ஷாட் பை ஷாட், வார்த்தைக்கு வார்த்தை ஏற்ற இறக்கங்களுடன் பேசிய வசனங்களை வைத்துக்கொண்டு, ‘சிவாஜி மாதிரி பராசக்தி வசனம் பேசிக் காட்றேன்என்று நடித்துக்காட்டி, வசனம் பேசி, சினிமாவுக்குள் நுழைந்து, ஜெயித்தவர்கள் உண்டு. ஆனால் என்ன... இதுவரை ஒரு சிவாஜி கூட அப்படி வந்துவிடவில்லை. ஏனென்றால்... ஒரு கலைஞரின் வசனம்... ஒரு பராசக்தி சினிமா... ஒரேயொரு நடிகர்திலகம்!
பராசக்தி என்று பெயர் வைத்து, ஆன்மிகக் கூட்டத்தை உள்ளே இழுத்தது தான் முதல் வெற்றி. சக்ஸஸ்என்ற வசனத்தைத்தான் சிவாஜி முதலில் பேசி முதல்நாள் முதல் காட்சியை எடுத்தார்களாம். ஆனால், படம் முழுவதும் தோல்விகளையும் காயங்களையும் எதிர்கொண்ட கதாபாத்திரம் குணசேகரன்!


கோபுவிடம் கதை கேட்ட வாசன்




கோபுவின் திருவல்லிக்கேணி வீட்டுக்கு வந்த அந்த மனிதர் எளிய தோற்றத்தில் இருந்தார். வந்தவர் கோபுவின் கையைப் பற்றிக் குலுக்கினார். அமைதியான குரலில் அவர் கூறிய விஷயத்தைக் கேட்டதும் கோபுவின் இதயம் கொஞ்சம் கூடுதலாகப் படடபத்தது. ''என் பெயர் ஜி.எஸ். மணி. நான் ஜெமினி அதிபர் வாசனின் மாப்பிள்ளை. மாமனார், என்னைத் திரைப்பட இயக்குநராகப் பார்க்க விரும்புகிறார்.
சவுண்ட் ஆஃப் மியூசிக்ஆங்கிலப் படத்தைத் தழுவி தமிழுக்கு ஏற்றாற்போல் நீங்கள்தான் திரைக்கதை, வசனம் எழுத வேண்டும். இது எனது விருப்பம். ஆனால், மாமனாருக்கு நீங்கள் கதை சொல்லி அவரை அசத்திவிட வேண்டும்என்று அவர் கூறியதும் சந்திரலேகாபடத்தின் முரசு நடனக் காட்சியில் ஒலிக்கும் டம்...டம்...டம்... என்ற ஓசைபோல கோபுவின் இதய ஒலி அவருக்கே காதுவரை கேட்டது.

ஜெமினிக்கு எழுதுகிறோமோ இல்லையோ, வாசன் முன்பாக அமர்வதே பெரும் பாக்கியம்என்று நினைத்தார் கோபு. திரைக்கதை எழுதி முடித்து, கதையைச் சொல்ல வாசன் முன்பாகப் போய் நின்றதும் கோபுவுக்கு வியர்த்துக் கொட்டத் தொடங்கிவிட்டது. தருடன் நண்பனாகவே பழகிவிட்டதால், முதன்முறையாக ஒரு பெரிய திரைப்பட ஜாம்பவானின் முன்பாக நின்றதும் வெலவெலத்துப் போனது.
இவருதான் சித்ராலயாகோபு!
காதலிக்க நேரமில்லைபடத்தை எழுதியவர்!''. மருமகன் மணி சொல்ல, வாசன் அவரை ஏற இறங்கப் பார்த்தார். ஐ சி!என்றவர், ''உட்காருங்க மிஸ்டர் கோபு. ஸ்கிரிப்டை நீங்க படிக்கத் தொடங்கலாம்'' என்று கூறி விட்டார். காபி, டீ கூடத் தரவில்லை.
எடுத்தவுடனே ஒரு டீ எஸ்டேட்!" என்று கோபு டீயைச் சற்று அழுத்திச் சொல்லியும் கூட அவருக்கு டீ தரப்படவில்லை. தனது கன்னத்தில் கை வைத்தபடி வாசன் கதையைக் கேட்கத் தயாராகிவிட்டார். ஒரு டீ எஸ்டேட். ஹீரோ ஜெமினி கணேசன் குதிரையில வர்றார்கோபு. சொல்லத் தொடங்கினார்.
நிறுத்துங்கநிறுத்துங்கஏன்.. அவர் குதிரையில வரனும்?'' வாசன் புருவங்களை நெரித்தபடி கேட்டார். கோபு திணறினார். தொடக்கத்திலேயே பிரேக் போடுகிறாரே!என்று நினைத்த கோபு.
இல்ல சார்.. ஹீரோ ஒரு பணக்கார எஸ்டேட் உரிமையாளர்! எங்கும் பச்சைப் பசேல்னு ஊட்டியோட பசுமை.. மார்கஸ் பாட்லே ஒளிப்பதிவாளர்! ஆங்கிலப் படம் போல் எடுக்க, ஹீரோ குதிரையில வந்தா கெத்தா இருக்கும் இல்லியா!'' என்று கோபு இழுத்தார். ''ஹீரோ குதிரையில வந்தா நல்லா இருக்கும்ன்னு எழுத்தாளர் விரும்புறார்... ஓகே புரஸீட் '' என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு தொடர்ந்து கதையைக் கேட்டார் வாசன்.
கோபுவுக்கோ, ‘காதலிக்க நேரமில்லையில் பாலையாவுக்கு நாகேஷ் கதை சொன்ன காட்சி நினைவுக்கு வந்துவந்து போனது. அந்தக் காட்சியில் கதை கேட்ட பாலையா திணறினார். இங்கே கதை சொன்ன கோபு திணறினார். ஒரு பதினைந்து நிமிடம் ஓடியிருக்கும். கதை சுவாரசியம் பிடிப்பதை உணர்ந்து சற்று நேரத்தில் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து அருகில் அமரவைத்துக்கொண்டு கதைகேட்டார் வாசன்.
ரேடியோல மாலி ப்ளூட் கேட்டிங்களா?” என்று ஒரு கேரக்டர் நாகேஷிடம் கேட்க, அதற்கு நாகேஷ், ''கேட்டேன்.. தரமாட்டேன்னு சொல்லிட்டார் !'' என்ற வசனத்தை கோபு கூறியபோது, சங்கீத ரசிகரான வாசன் விழுந்து விழுந்து சிரித்தார். குடும்பத்தாரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட வாசன் முகம் முழுமையாக மலர்ந்துவிட்டது.
கிளம்பும் முன்பு கோபுவைப் பார்த்த வாசன், ''நான் நாலணா பெஞ்ச் டிக்கெட்காரன். எனக்கு இந்தப் படத்துல ஒண்ணுமே இல்லை. இது ஹை கிளாஸ் படம். ஜேன் அயர்மாதிரி எடுக்கலாம். ஏ சென்டர் ல பிரமாதமா ஓடும். கிராமப்புறங்கள்ல ஓடாதுஎன்றார். என்ன ஆச்சரியம்! அவர் கூறியது போல் நகரப் பகுதிகளில் சாந்தி நிலையம்அமோக வெற்றி பெற்றது. மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பு.
கமலாவிடம் ஏமாந்த மஞ்சுளா!
அந்த நாட்களில் காஞ்சனாவை கலர் காஞ்சனாஎன்றே அழைப்பார்கள். கலர் படங்களுக்கு ஏற்ற அழகான முகவெட்டும் நிறமும் அற்புதமாகக் கைகொடுக்க பல நேரத்தில் அவருக்கு ஒப்பனைக்கான தேவையே இருக்காது. ஒரு நாள் சாந்தி நிலையம்படப்பிடிப்பின் இடைவேளையின்போது, ஜெமினி, கோபு, பண்டரிபாய், காஞ்சனா, ரமாப்ரபா, நாகேஷ், மஞ்சுளா என நடிகர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் மஞ்சுளா, பதினான்கு வயதே நிரம்பிய பெண். படப்பிடிப்புத் தளத்தில் அங்கும் இங்கும் ஓடி அனைவரையும் கலாட்டா செய்து கொண்டிருப்பார். காஞ்சனா, கோபுவின் மனைவியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, “கோபு அண்ணாவின் சம்சாரம் கமலா ரொம்ம சாமர்த்தியசாலி. அவரை ஏமாற்றவே முடியாது '' என்று கூறினார். உடனே மஞ்சுளா, “அதையும்தான் பார்த்துவிடுவோம், நான் திருமதி கோபுவை ஏமாற்றிக் காட்டுகிறேன்என்று சவால் விட்டார்.
படப்பிடிப்புத் தளத்தில் இருந்த தொலைபேசியில் கோபுவின் வீட்டுக்கு டயல் செய்த மஞ்சுளா, “மிஸஸ் கோபு இருக்காங்களா?” என்றார். நான்தான் பேசுகிறேன்!'' என்று கமலா கூற, உடனே மஞ்சுளா,'' மேடம்.. நான் மஞ்சுளா பேசறேன். கோபு அங்கிளை விரும்பறேன். ஐ வாண்ட் டு மாரி ஹிம்!'' என்றார். உடனே கமலா,'' நோ பிராப்ளம்! விட்டது தொல்லை! கேரி ஆன்!'' என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
பேயறைந்தவரைப் போல் ரிஸீவரை வைத்துவிட்டு வந்த மஞ்சுளாவின் முகத்தையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.'' என்ன அங்கிள்... ஆண்டிஇப்படிச் சொல்லிட்டங்கஎன்று அழாத குறையாகத் தோல்வியைக் ஒப்புக்கொள்ள, அங்கிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள்.


ஆச்சரியமூட்டிய அட்வான்ஸ்!
சாந்தி நிலையம்பட அனுபவம் முற்றிலும் புதிதாக இருந்தது. அப்படி உணரக் காரணம், ஜெமினி நிறுவனத்தை வாசனும் அவர் மருமகனும் மிகவும் புரொஃபெஷனல்ஆக நடத்தி வந்ததுதான். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு, சிறந்ததை நாடி அதற்கான விலையைக் கொடுக்கத் தயங்காத முனைப்பு எனச் சொல்லிக்கொண்டே போகலாம். சாந்தி நிலையம்படத்துக்கான பாடல் ஒளிப்பதிவு முடிந்து எம்.எஸ்.விஸ்வநாதனும் கோபுவும் ஒரே காரில் வீட்டுக்குக் கிளம்ப, ஜெமினி அலுவலகத்திலிருந்து ஓடிவந்த ஒருவர், ஆளுக்கு ஒரு கவரை நீட்டினார்.
கவரைப் பிரித்த கோபு திகைத்தார்.
விசு.. அட்வான்ஸ் ஆயிரம்தான் தருவாங்க. இவங்க ஐந்தாயிரம் தந்திருக்காங்ளே'' என்று வியந்தார். உடனே எம்.எஸ் வி. தனது கவரைப் பிரித்து.''அட ஆமாப்பா! எனக்கு மேலே ஒரு சைபரைப் போட்டுப் பத்தாயிரம் தந்திருக்காங்களே என்று கூக்குரலிட்டார்.
மார்க்ஸ் பார்ட்லேவுக்கு இந்தப் படத்துக்காகத் தேசிய விருது கிடைத்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் அருமையான மெட்டுக்களை அமைத்திருந்தார். இயற்கை என்னும் இளைய கன்னிபாடலை முதன்முறையாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் ஒலிக்க வைத்திட்டார். இப்போதும், ‘சாந்தி நிலையம்படத்தை டிவியில் ஒளிபரப்பினால், அனைவரும் போன் செய்து பாராட்டுவதாகக் கூறுகிறார் கோபு. சாந்தி நிலையம்பட வேலைகள் முடியும் தருவாயில், திடீரென்று sriதரிடம் இருந்து கோபுவுக்கு ஒரு போன்.
கோபு... கோவை செழியன் காதலிக்க நேரமில்லைமாதிரியே ஒரு படம் கேட்கறாரு. உடனே ஒரு கதை பண்ணனும். காந்தி பீச்சுக்கு வந்துடு... டிஸ்கஷன் முடிஞ்சு கிளம்பரச்சே உன் வீட்டுலதான் எனக்கு டின்னர். கமலாகிட்டே சொல்லிட்டு வந்துடுஎன்றார்.