Tuesday, April 10, 2012

 

நீச்சல் வீரர்  திலீப்பின் ‘ஒத்தவீடு’



பிரபல நீச்சல் வீரர் திலீப்குமார் இவர் ஆழ்கடலில் 15 கி. மீற்றர், 20 கி. மீற்றர் என நெடுந் தொலைவில் நீச்சல் அடித்து பாராட்டுப் பெற்றவர். திலீப்குமார் ‘ஒத்த வீடு’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
நாயகியாக ஜானவி மற்றும் வடிவுக்கரசி, எம். எஸ். பாஸ்கர், திரவியபாண்டியன், நெல்லை சிவா, இமான், சண்முகம், வந்தனா, யோகி தேவராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாலு மலர்வண்ணன் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக நடிப்பது பற்றி திலீப்குமார் கூறியதாவது :-
சினிமாவுக்கு தேவையான நடிப்பு, நடனம், ஸ்டண்ட் போன்றவற்றை மூன்று ஆண்டுகள் கற்றுக் கொண்டு ‘ஒத்த வீடு’ படம் மூலம் நாயகனாகியுள்ளேன். இயக்குனர் பாலுமலர் வண்ணன் கதை சொன்னதும் பிடித்தது. சிறு பிரச்சினை வாழ்க்கையை எப்படியெல்லாம் பந்தாடுகிறது கனவுகளை சிதைக்கிறது என்று கருவில் அற்புதமான சென்டிமென்ட் கதையாக வந்துள்ளது.
கொமெடி, ஸ்டன்ட், காதல் எல்லாம் இருக்கும். கேரள அரசிடம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற வீ. தஷி இசையில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
வீரனார் பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும். வில்லிவலம் கிராமத்தில் விநாயகர் கோவிலில் கரகம் எடுத்து படமாக்கினோம் பெண்கள் மா விளக்கு எடுத்து ஊர்வலம் வந்தனர். வீரனார் ஆட்டத்தை பலரும் பாராட்டினர். ஒத்தவீடு ஓட்டு வீடு என்ற பாடலை நூறு துணை நடிகர்கள் வைத்து படமாக்கினோம் உலகமோ உள்ளங்கையிலே கண்ணோடு வந்தாய் போன்ற பாடல்களையும் பிரமாதமாக படமாக்கியுள்ளோம். படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது.

த்ரிஷாவுக்கு பதிலாக அனுஷ்கா


கிட்டத்தட்ட 3 வருடமாக டூத் பேஸ்ட் ஒன்றின் விளம்பர தூதராக இருந்து வந்த த்ரிஷாவை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் அனுஷ்காவை சேர்த்திருக்கிறது டூத் பேஸ்ட் நிறுவனம்.
தமிழ், தெலுங்கில் நம்பர் - 1 நடிகையாக இருந்தவர் நடிகை த்ரிஷா, இப்போது அனுஷ்கா, ஹன்சிகா, டாப்சி போன்ற நடிகைகளின் வரவால் அந்த இடத்தில் இருந்து பின்னோக்கிவிட்டார். இப்போது அனுஷ்கா இரண்டு மொழியிலும் நம்பர் 1 நடிகையாக வந்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் நடிகைகள் அனுஷ்கா, த்ரிஷா இடையே விளம்பர படத்தில் நடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. த்ரிஷா நம்பர் 1 நடிகையாக இருந்த வரைக்கும் பிரபல டூத் பேஸ்ட் விளம்பரத்தில் தூதராக கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நீடித்து வந்தார். இந்நிலையில் அவர் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக அனுஷ்கா இருப்பதால், அவர் இந்த விளம்பரத்தில் நடித்தால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் விளம்பரத்தை வெளியிடலாம் என்று அந்த விளம்பர நிறுவனம் கருதுகிறது.

சினேகாவின் இடத்திற்கு ஷிகா

தற்போது திரைக் கு
வந் திருக்கும் ‘விண் மீன்கள்’ படத்தின் கதாநாயகி ஷிகா முறைப்படி பரத நாட்டியம் கற்று அரங்கேற்றமும் நடத்தியவர். மனிதவள மேம்பாட்டில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கும் பெங்களூர் அழகியான ஷிகா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். திரைப்படத் துறையில் தங்களது அறிமுகம்...?
இயக்குனர் யோக் ராஜ் இயக்கத்தில் உருவான காலிபட்டா என்னும் கன்னட படத்தில் நான் கதாநாயகியாக அறிமுகமானேன். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன் அதில் வரும் ‘நதீம் தீம் தானா’ என்கிற பாடலும் மிகவும் பிரபலமடைந்தது. அதே பாடலில் நான் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது..... தொடர்ந்து வாரேவா, மயதானத் மலே, காகன சுக்கி ஆகிய கன்னடப் படங்களில் நடித்தேன்.
தமிழுக்கு எப்படி வந்தீர்கள்...?
இயக்குனர் மதுமிதாவின் கொலகொலயா முந்திரிக்காவில் படத்தில் நான் அறிமுகமானேன். அதன் பிறகு இன்று விண்மீன்களில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தமிழ் ரசிகர்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
விண் மீன்களில் அம்மாவாக நடித்திருக்கிaர்களே...? ஆம், அந்தப் படத்தின் கதையை இயக்குனர் விக்னேஷ் மேனன் என்னிடம் சொல்லியபோது எனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து நான் நடிக்க ஒத்துக்கொண்டேன். நல்ல ஆரோக்கியமான குழந்தைகளையே குப்பைத் தொட்டியில் வீசிவிடும் சமூகத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளை அதன் பெற்றோர் எவ்வளவு சிரத்தை எடுத்துப் பராமரிக்கின்றனர்.
அப்படிப் பட்ட ஒரு அம்மாவாக நான் நடித்ததில் எனக்குப் பெருமையே.
தமிழுக்கு வருவதற்கு முன் தமிழ் தெரியுமா...?
இல்லை... சுத்தமாகத் தெரியாது... கொல... கொலயா முந்திரிக்காவில் ஒப்பந்தமானவுடனே நானாகவே தமிழ் கற்கத் தொடங்கினேன்... வசனங்களைப் புரிந்து சரியான முகபாவனைகள் வெளிப்படுத்தத் தேவையான அளவிற்குத் தமிழைக் கற்றுக்கொண்டேன்.... தமிழ் ஒரு அற்புதமான மொழி. இன்னும் கற்றுக் கொண்டி ருக்கிறேன்....
தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் படங்களைப் பற்றி...?
ஏ. எம். ஆர். இயக்கத்தில் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகும் வனயுத்தம் படத்தில் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் நண்பனான குருநாத்தின் காதலி சாந்தினியாக நடிக்கிறேன்.... அது ஒரு காட்டுவாசிப் பெண் வேடம்... முழுக்க முழுக்க காடுகளில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது... மேக் அப் இன்றி காடு மலை என்று மிகவும் சிரத்தையெடுத்து நடிக்கிறேன்.
துப்பாக்கியையும் தூக்கிக் கொண்டே நடக்க வேண்டும்..... நிச்சயம் இந்தப் படம் எனக்கு மேலும் நல்ல பெயரை வாங்கித் தரும்... படம் பார்த்துக் கதை சொல் என்னும் படத்தில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு போட்டோ எடுத்துக் கொடுக்கும் போட்டோகிராப்பர் வேடம் ஏற்று நடிக்கிறேன்... முதல் கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது.... எனக்கோ கெமராவைச் சரியாகப் பிடிக்கவே தெரியாது. அந்தப் படத்தின் கெமரா மேன்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தார். தருண் சத்ரியாவின் காதலியாக நடிக்கும் படம் பார்த்துக் கதை சொல் ஒரு எக்ஷன் படம்....
எந்தமாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை?
எனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் எந்தவிதமான வேடங்களையும் ஏற்று நடிக்கத் தயாராக இருக்கிறேன்...
விண் மீன்களில் புடவை கட்டி வந்த நீங்கள் சினேகா போல இருப்பதாகச் சொல்கிறார்கள். அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் நீங்கள் அவரது இடத்தைப் பிடிப்பீர்களா...?
நான் அடிப்படையில் சுஹாசினி, ரேவதியின் மிகப்பெரிய ரசிகை. சினேகாவின் ஒரு சில படங்களைப் பார்த்திருக்கிறேன். என்னிடமும் பலர் சினேகாவைப் போல இருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் எனக்குப் பெருமை... எனக்கு மிகவும் மரியாதை கிடைக்காததைப் போல் உணர்கிறேன்... அதேசமயம் அவரது இடத்தைப் பிடிப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது.
தங்களது அழகின் ரகசியம்...?
சிந்தனையைத் தெளிவாக வைத்துக் கொள்வதற்கு நல்ல புத்தகங்கள் படிப்பேன். எல்லா நல்ல படங்களையும் விடாமல் பார்த்துவிடுவேன்... மற்றபடி எனது நடனப் பயிற்சியும், நீச்சல் பயிற்சியும் என்னை அழகான உடம்புக்குச் சொந்தக்காரியாக மாற்றியுள்ளது.

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் பெரிய இடத்துப் பெண்


நல்லி குப்புசாமி செட்டியார் எம்.எஸ்.வி.க்கு ஏதோ விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் ஒரு படம் பற்றி சொல்லி இருக்கிறார். இரவெல்லாம் ரெகார்டிங் முடித்துவிட்டு எம்.எஸ்.வி. களைத்துப் போய் தூங்கிவிட்டாராம்.
ஆனால் அவருக்கு காலை ஏழு மணிக்கு கண்ணதாசனோடு அடுத்த ரெகார்டிங் இருந்திருக்கிறது. எம்.எஸ்.வி. எழுந்து அவசர அவசரமாக ஸ்டுடியோவுக்கு போய்ச் சேரும் போது ஒன்பது மணி ஆகிவிட்டதாம்.
கண்ணதாசன் ஒரு பேப்பரில் இந்தப் பாட்டை எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாரம். அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா?

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்....  கடவுளைப் பற்றி எழுதிய பாடல்



காதலித்து மணந்த முதல் மனைவியை விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்து விட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்றுநோய் டொக்டர் தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை, அவளோடு ஏற்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கண்களையும் இழந்து தவிக்க, சந்தர்ப்பவசமாக முதல் மனைவியே அவருக்கு நேர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து, அவரை அவள் பால் திருப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வோக்கிங் அழைத்துப் போகும் போது, அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல்.
இதுதான் சிட்டுவேஷன். இதற்கு பாடல் எழுதுங்கள்’ – இயக்குநர் பீம்சிங் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார்.
அதில் ஒன்று பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக் கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் “டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துவிட்டு வா” என்றார்.
பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார். அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர், “இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் ‘அவன்’ என்பதை அவள் என்று மாற்றிப் பாருங்கள் விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிட்டுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது.
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் ‘அவன்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் ‘அவன்’ தந்த மொழியல்லவா
இதில் ‘அவன் என்று வந்த இடங்களை ‘அவள்’ என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ்!
கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார். ‘எப்படி கவிஞரய்யா இது...?’ என்று.
சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப்போனது. கடவுளைப் பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நேர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது.
என்னை யாரென்றும் எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்.
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் ‘அவள்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா
என்பாடல் ‘அவள்’ தந்த மொழியல்லவா
படம் - பாலும் பழமும்

குரல் வளத்துக்கு குறியாகிய குண்டு எம்.ஜி. ஆரை, எம்.ஆர். ராதா சுடக் காரணம்


எம். ஆர் ராதாவால் சுடப்பட்ட எம்.ஜி.ஆர். யமனுடன் போராடி வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம், சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டில் 1967 ஜனவரி 12ம் திகதி நடந்தது.
அன்று மாலை 5 மணிக்கு ராதாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எம்.ஆர்.ராதா சென்றார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தைத் தயாரித்த பட அதிபர் வாசுவும் உடன் சென்றார்.
பெற்றால்தான் பிள்ளையா’ படத்தை தயாரிப்பதற்கு எம்.ஆர்.ராதா ஒரு லட்சம் ரூபா பண உதவி செய்திருந்தார். படம் முடிந்ததும் அந்தப் பணத்தை வாங்கித் தருவதாக எம்.ஜி.ஆர். கூறியிருந்ததாகவும், அது சம்பந்தமாகப் பேசவே வாசுவுடன் எம்.ஆர்.ராதா அங்கு சென்றதாகவும் கூறப்பட்டது.
எம்.ஜி.ஆரை, ராதாவும், வாசுவும் சந்தித்தார்கள். அப்போது தகராறு ஏற்பட்டது. எம்.ஆர்.ராதா தன் மடியில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரை சுட்டார். எம்.ஜி.ஆர். குனிந்தார். குண்டு இடது புற காது அருகே கன்னத்தில் பாய்ந்தது. உடனே ராதா துப்பாக்கியைத் தன் தலையில் வைத்து விசையை அழுத்தினார். குண்டு அவர் நெற்றியில் பாய்ந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். சுடப்பட்ட எம்.ஜி.ஆர். ராப்பேட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு, சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
எம்.ஆர்.ராதாவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் நெற்றியில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்தது. அதை அகற்றினால் நரம்புகளுக்குச் சேதம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை.
நெப்போலியன் உடலில் பாய்ந்த குண்டை வெளியே எடுக்க முடியாமல் அப்படியே வைத்துத் தையல் போட்டதாக வரலாறு உண்டு. நாளடைவில் அந்த உலோகம் கரைந்து, சதையோடு சேர்ந்துவிடும். எனவே மருத்துவர்கள் இந்த குண்டை அப்படியே விட்டு விட்டுத் தையல் போட்டனர்.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு. பரங்கிமலைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். போட்டியிட்ட நேரத்தில்தான் அவர் சுடப்பட்டார் தேர்தல் பிரசாரத்திற்குப் போகாமலேயே ஆஸ்பத்திரியில் படுத்தபடி அவர் வெற்றி பெற்றார். சிகிச்சைக்குப் பின், எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்தார்கள். எம்.ஜி.ஆரை சுட்டதாக ராதா மீது சைதாப்பேட்டை நீதிமன்றில் வழக்கு நடந்தது.
இந்த வழக்கில் 1967 மே மாதம் 22ம் திகதி எம்.ஜி.ஆர். நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியம் அளித்தார். வழக்கில் ராதாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தால் இது 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆருக்கு அடிக்கடி தும்மல் வரும். ஒரு நாள் தும்மியபோது கழுத்தில் நரம்புகளுக்கு இடையே பதுங்கியிருந்த குண்டு மெல்ல நகர்ந்து, தொண்டைக்கு வந்துவிட்டது. தொண்டையின் மெல்லிய ஜவ்வுக்குள் குண்டு இருந்தது நன்றாகத் தெரிந்தது. உடனே எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டார். சத்திரசிகிச்சை மூலம் குண்டு அகற்றப்பட்டது. குண்டு வெளியேறிய பின், எம்.ஜி.ஆரின் குரல் வளம் பாதிக்கப்பட்டது. மெல்லிய குரலில் பேசினார்.

3 வயதில் நடிக்க வந்தவர் ஸ்ரீவித்யா




ஸ்ரீ வித்யாவை நினைக்கும் போதே ‘அதிசய ராகம், அபூர்வ ராகம்’ என்ற பாடலும் அதில் அவரின் பேரெழிலும் நடிப்பாற்றலும் நம் கண்முன் தோன்றும். அந்தச் சிறப்புமிகு நடிகை இன்று இல்லை. புற்று நோய் முற்றியதால் அவர் அக். 19 அன்று மறைந்தார். மறையும் போது அவருக்கு வயது 53.
தன்னுடைய 13வது வயதில் ‘திருவருட்செல்வர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரீவித்யா நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சுமார் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
‘சட்டம்பிக்காவல்’ என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், மலையாளத்தில் மட்டும் 200 படங்களில் நடித்துள்ளார். ‘இமயம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலுக்கு மரியாதை’, ‘தளபதி’, ‘நம்மவர்’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இவரின் தந்தை அகடம் கிருஷ்ணமூர்த்தி தாயார், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எல். வசந்தகுமாரி, கணவர், மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் ஜோர்ஜ், ஸ்ரீவித்யா கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் புற்று நோய் தாக்கியது. ஆயினும் அவர் இடையிடையே தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடித்துவந்தார்.
பிறகு அந்தத் தொடரிலிருந்து பாதியிலேயே விலகிக் கொண்டார் நடிகை ஸ்ரீவித்யா. உடல் நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் புற்று நோய்க்காக நீண்ட காலம் மருத்துவ சிகிச்சை (கீமோதெரபி) எடுத்துவந்தார். அக். 19 அன்று மாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

சிரமப்பட்டு சினிமாவுக்கு வந்தவர் சினேகா




எ ந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் ரொம்ப சிரமப்பட்டு சினிமாவிற்கு வந்தவர் சினேகா என்று சினேகாவின் அம்மா பத்மாவதி முதன் முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். கல்யாண பத்திரிகை கொடுக்க பட்டுப்புடவை எடுக்க நகை வாங்க என்று கல்யாண வேலைகளில் ரொம்பவே பிஸியாக இருக்கும் சினேகா அம்மா பத்மாவதி முதன்முறையாக சினேகாவை பற்றியும், அவரது கல்யாண ஏற்பாடுகள் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதோ.... சினேகா சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 12 வருஷம் ஆச்சு. விரும்புகிறேன் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்த சினேகா, தொடர்ந்து நிற்க கூட நேரம் இல்லாமல் பல படங்களில் நடித்து வந்தார். வீட்டில் அவள் தான் கடைக்குட்டி ரொம்ப செல்லமா வளர்த்தோம். இன்னும் சொல்லப் போனால் சினிமாவில் அவர் படாத கஷ்டமே இல்லை.
அவ்வளவு பிரச்சினையையும் அவள் சந்தித்த போது, அவளை தூக்கி விட ஆள் இல்லை. சினேகா என்றதால் எல்லாவற்றையும் சமாளித்து எல்லாவற்றையும் கடந்து பல வெற்றிப் படங்களில் நடித்து மக்கள்கிட்ட நல்ல பெயர் எடுத்து ஒரு நிலையான இடத்தைப் பிடித்தார். ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாட்டில் வர்ற கஷ்டம் மாதிரியே சினேகாவின் வாழ்க்கை இருந்தது. அவ்வளவு கஷ்டத்தையும் கடந்து அவளுக்கு ஒரு நல்ல இடத்தை கொடுத்திருக்கிறார் கடவுள்.
மே மாதம் சினேகா பிரசன்னா திருமணம் நடக்க இருக்கிறது. திருமணம் நெருங்க, நெருங்க எல்லோருக்கும் ஏற்படுகிற திருமண பதட்டம் எனக்கும் ஏற்பட்டு இருக்கு. வீட்டில் இருக்கும்போது சினேகா என் ரூம்க்கு வந்து ஒரு நாளைக்கு 4 முறையாவது ஐ லவ் யு மம்மி என்று சொல்லுவாள். சினேகாவிற்கு இப்ப வரைக்கும் நான் தான் சாப்பாடு தரணும். அவ்வளவு செல்லமா வளர்த்துவிட்டோம்.
சமீபத்தில் தாம்பூலம் மாற்ற பிரசன்னா வீட்டிற்கு சென்றோம். அங்கு பிரசன்னா அம்மா அப்பா சொல்ற விஷயத்தை அப்படியே சினேகா கேட்டார். மேலும் நீங்கள் எந்த விஷேசம் என்றாலும் சொல்லுங்க நானும் கலந்து கொள்கிறேன். விரதம் எல்லாம் இருப்பேன் என்று சினேகா சொன்னார்.
பிரசன்னா குடும்பத்தாரின் அனைத்து கண்டிஷன்களுக்கும் சினேகா ஒப்புக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினேகா பிரசன்னா இருவரையும் தனிக்குடித்தனம் வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளோம். இதற்காக அடையாறில் ஒரு வீடு பார்த்துள்ளோம்.
சினேகாவுக்கு இதுவரைக்கும் சமைக்கத் தெரியாது. இப்பத்தான் என் கூட சமையல் அறையில் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு வருகிறாள். கல்யாணத்திற்கு சென்னையில் பல கடைகளில் பட்டுபுடவை வாங்கிட்டோம்.
அப்புறம் ஐதரபாத், மும்பையில் கொஞ்சம் டிரஸ் வாங்கியிருக்கோம். மேலும் மெகந்தி விழாவுக்காக சினேகா விரும்பி ஒரு தங்க அணிகலன் கேட்டார். அதனால் அவருக்காக அதை ஸ்பெஷலாக வாங்கியிருக்கோம். இரண்டு பேரும் குடும்பமும் வேறு வேறு பிரிவினர் என்பதால் இரண்டு பேர் குடும்பம் சார்பிலும் திருமணம் நடத்த உள்ளோம்.
சினேகா 2 முதல்வரிடமும் விருது வாங்கியிருக்கிறார். இதுதவிர நந்தி, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளும் பெற்றுள்ளார். இப்போது சினேகா, ஹரிதாஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு டீச்சராக நடிக்கிறார். இந்தப் படத்திற்கும் அவருக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் சினேகாவை சினிமாவில் நடிக்காதே என்று பிரசன்னா எதுவும் சொல்லவில்லை.
அது அவருடைய விருப்பம் என்று கூறிவிட்டார்.
இதனால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து சினேகா இன்னும் முடிவு செய்யவில்லை.
எங்க வீட்டு கடைசி பெண்ணின் கல்யாணம் அதனால் அவளுடைய வாழ்க்கை நல்லபடியாக அமைய, சந்தோஷமாக இருக்க எல்லோரும் வேண்டுங்க என்று பணிவோடு கேட்டுக் கொண்டு தனது பேட்டியை முடித்தார் பத்மாவதி.

காதல் சரண்யா பெயர் மாற்றம்


நிர்வாணக் காட்சி செய்தியின் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகை காதல் சரண்யா தனது பெயரை சரண்யா நாக் என்று மாற்றியிருக்கிறார். மழைக் காலம் படத்தில் ஓவியக் கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சரண்யா, ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார்.
இந்த நிர்வாண காட்சியை அறிமுக டைரக்டர் தீபன் ஆபாசம் இல்லாமல் படமாக்கியிருப்பதால் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கும் மழைக்காலம் படம் மூலம் தனது பெயரை சரண்யா மாற்றியிருக்கிறார். இதுபற்றி சரண்யா கூறுகையில், இது எனக்கு முக்கியமான படம். இந்தப் படத்தில் இருந்து ‘காதல் சரண்யா’ என்ற பெயரை, ‘சரண்யா நாக்’ என்று மாற்றிக் கொண்டேன் ‘நாக்’ என்பது என் குடும்ப பெயர் என்றார்.



வித்தியா பாலன் அளவுக்கு நான் தயாராகவில்லை

அசின்

lர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த நடிகை வித்யா பாலன் அளவுக்கு நான் தயாராகவில்லை என்று நடிகை அசின் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அசின், இந்தி கஜினி மூலம் பொலிவுட் திரையுலகிற்கு சென்றார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தும் பெரிதாக அசினால் அங்கு பளிச்சிட முடியவில்லை.
தமிழ் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறி வந்த அசின், காவலன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார். பின்னர் மீண்டும் பொலிவுட்டில் வாய்ப்பு வேட்டைகளில் பிஸியாகி விட்டார். தற்போது பொலிவுட்டில் அபிஷேக் பச்சன் மற்றும் அஜய்தேவ்கன்னுடன் நடித்து வரும் அசின் தமிழ் படங்களில் தலைகாட்டுவதே இல்லை.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் பொலிவுட் படங்களிலேயே நான் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் உண்மையானது அல்ல. தென்னிந்திய அளவில் நான் ஒரு பிரபலமான நடிகை என்றாலும், பொலிவுட்டைப் பொறுத்த வரையில் நான் இன்னும் புதுமுக நடிகைதான். தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. நல்ல ஸ்கிரப்டை தேடிக்கொண்டிருக்கிறேன். நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் கண்டிப்பாக தமிழில் நடிப்பேன்.
சினிமாவில் யாரும் யாருக்கும் போட்டியாளர்கள் இல்லை. இங்கே அனைவரும் தங்களது திறமையான நடிப்பால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
டர்ட்டி பிக்சர் படத்தில் வித்யா பாலன் நடித்தது போல் நீங்களும் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அசின், டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் நடித்ததைப்போல் என்னால் நடிக்க முடியாது. நான் இன்னும் அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு தயாராகவில்லை என்று சொன்னார்.

கண்ணதாசனை குடிகாரன் என்று திட்டியதால் வந்த பாடல்

சொன்னது நீ தானா.... சொல் சொல்...








கவிஞர் கண்ணதாசனின் வருகைக்காக மொத்த ஆட்களும் காத்திருந்தார்கள். எம்.எஸ்.வி. கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த சித்ராலயா கோபு “என்னண்ணே ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆக இருக்கீங்க” என்று கேட்டார். அதற்கு விஸ்வநாதன் “இந்தப் பாட்டை கம்போஸ் பண்ணிட்டு வேலுமணி சாரோட பணத்தோட்டம் பட ரீ ரிக்கார்டிங்குக்குப் போகணும்.
இந்த ஆளை (கண்ணதாசனை) இன்னும் காணோமே” என்று புலம்பிக்கொண்டிருக்க ஸ்ரீதரோ இந்தப் பாடலை நீங்க கம்போஸ் பண்ணிக் கொடுத்துட்டுத்தான் வேறு இடத்துக்குப் போகணும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். இடையிடையே சரவணா ஃபிலிம்ஸி லிருந்து ஃபோன் வந்த வண்ணம் இருந்தது.
ஒரு கட்டத்தில் பொறுமையி ழந்து விட்ட விஸ்வநாதன் “என் னய்யா இந்த குடிகாரரோடு இதே வேலையா போச்சு. சொன்ன நேரத்துக்கு வந்து தொலைய மாட்டேங்கிறார்” என்று கத்தி விட்டார் (சாதாரணமாக இப்படி மரியாதையி ல்லாமல் கண்ணதாசனைப் பற்றிப் பேசமாட்டார். ஆனால் வேறு கம்பெனியில் இருந்து அடிக்கடி வந்த போன் அவரை பொறுமையிழக்கச் செய்துவிட்டது).
கண்ணதாசனும் வந்தார். ஸ்ரீதரும் சிட்டு வேஷனைச் சொன்னார். ஆஸ்பத்திரியில் புற்று நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவன், தான் எப்படியும் இறந்துவிடுவோம் என்பதையும், அந்த ஆஸ்பத்திரி டாக்டர் தன் மனைவியின் முன்னாள் காதலன் என்பதையும் அறிந்து, தான் இறந்துவிட்டால் அந்த டொக்டரை தன் மனைவி மணந்து கொள்ள சம்மதிக்க வேண்டும் என்று கூற மனம் நொறுங்கிப் போகும் மனைவி தன் சோகத்தைப் பிழிந்து பாடுவதாக காட்சியை விளக்கினார்.
பி. சுசீலாவும் தயாராக இருக்கிறார். விஸ்வநாதனும் மெட்டுக்களைப் போட்டு காட்டுகிறார். அந்த மெட்டுக்களுக்கு கண்ணதாசனுக்கு வார்த்தைகள் வர மறுக்கின்றன. அவர் சொல்லிய சில வரிகளும் ஸ்ரீதருக்குப் பிடிக்கவில்லை.
இடையில் பாத்ரூம் போவதற்காக கண்ணதாசன் எழுந்து போகிறார். அவர் திரும்பி வரும்போது ஒருவர் கண்ணதாசனிடம் “நீங்க வர லேட்டாச்சுன்னு விஸ்வநாதன் சார் உங்களை குடிகாரர்னு திட்டிட்டாருங்க” என்று சொல்லி விட்டார். (அதாவது போட்டுக் கொடுத்துவிட்டார்).
கண்ணதாசன் கோபப்படவில்லை. மீண்டும் வந்து அமர்ந்தவர், எம்.எஸ்.வி.யுடன் “ஏண்டா விசு, என்னை நீ குடிகாரன்னு திட்டினியாமே! அப்படியா, ஆச்சிரியமா இருக்கே! நீ இப்படி யெல்லாம் சொல்லமாட்டியே! நீயா இப்படிச் சொன்னே! என்னால் நம்பவே முடியலை’ என்றவர் சட்டென்று ராகத்தோடு “சொன்னது நீதானா..... சொல்.... சொல்.... சொல்... என்னுயிரே” என்று பாடிக் காட்ட.....
ஸ்ரீதர் எப்படிப்பட்டவர்? ‘கப்’பென்று பிடித்துக் கொண்டார். “ஐயோ கவிஞரே, இதுதான்யா நான் கேட்டது. எப்படி திடீர்னு உங்களுக்கு வந்தது? விசு அண்ணே அவர் பாடிக்காட்டிய மெட்டையே வச்சுக்குவோம்.
அதையே தொடர்ந்து மெட்டுப் போடுங்க. கவிஞரே நீர் வரிகளைச் சொல்லுமய்யா” என்று கூற சற்று முன்னர் இருந்த இறுக்கமான சூழ்நிலை மறைந்து கண்ணதாசனும் விஸ்வநாதனும் மற்றும் குழுவினரும் உற்சாகமானார்கள்.
யூனிட்டே வாய் பிளந்தது. இன்னொரு வனை திருமணம் செய்யும்படி கூறும் கணவனுக்கு பதிலாக “சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே” என்ற வரிகள் எவ்வளவு கனகச்சிதமாக பொருந்துகி ன்றன என்று திகைப்பில் ஆழ்ந்தனர். அதே உற்சாகத்தோடு கண்ணதாசன் வரிகளை அள்ளி வீச, மெல்லிசை மன்னர் அவற்றுக்கு சந்தம் அமைத்துக்கொண்டே வந்தார்.

 

 

சினிமா உலகை உலுக்கிய சரோஜhதேவியின் திருமணம்



லீடிகை சரோஜாதேவி- ஸ்ரீ ஹர்ஷா திருமணம் பெங்களூரில் 1967 மார்ச் 1ம் திகதி நடைபெற்றது. சரோஜாதேவி, தமிழ்ப் பட உலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தபோதே, அவருக்குத் திருமணம் செய்து வைக்க தாயார் ருத்ரம்மா ஏற்பாடு செய்தார். இதுபற்றி சரோஜாதேவி ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது,
எனக்கு திருமணம் செய்யப்போவதாக எனது தாயார் அறிவித்ததும், அது சினிமா உலகில் பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. பொதுவாக, சினிமா நடிகை என்றால் திருமணத்துக்குப் பின் நடிக்க முடியாது. அவளுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது குதிரைக் கொம்புதான். எனவே தான் பலரும் ‘சரோஜாதேவி இப்போதே ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
இன்னும் பல படங்களில் நடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாமே’ என்று கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் எனது தாயார் ‘எந்த வயதில் எது நடக்க வேண்டுமோ அந்த வயதில் அது நடந்தே தீர வேண்டும்’ என்பதில் கண்டிப்பாக இருந்தார். அவருடைய இஷ்டப்படியே நானும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டேன்.
திருமணத்துக்கு முன்னால் எனது தோழி சுசீலா என்னிடம் சிறந்த மாப்பிளை கிடைக்க வேண்டும் என்றால், ஆஞ்சநேயருக்கு விரதம் இருக்கவேண்டும் என்று கூறினார். அந்த யோசனைப்படி நான் தினமும் ஈரத் துணியுடன் அந்த விரதத்தை இருந்து வந்தேன். அதன் பலனாகத்தான் எனக்கு சிறந்த கணவர் கிடைத்தார் என்று நினைக்கிறேன்.
எனக்கு என் தாயார் பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தார். இறுதியில் ஜெர்மனியில் என்ஜீனியராக வேலை பார்த்து வந்த ஸ்ரீஹர்ஷாவை தேர்ந்தெடுத்தார். இதில் என் சொந்த விருப்பம் எதுவும் இல்லை. என் தாயார் தான் மாப்பிள்ளையை முடிவு செய்தார். இவ்வாறு சரோஜா தேவி கூறியுள்ளார்.
ரோஜாதேவியின் திருமணம் 1967 மார்ச் 1ம் திகதி பெங்களூரில் உள்ள உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது. திருமணத்துக்கு முதல்நாள், பெங்களூர் மல்லீஸ்வரத்தில் உள்ள சரோஜாதேவி வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. சரோஜாதேவின் வீடு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
காலை 10 மணி முதல் 11 மணி வரை ‘சுமங்கலி பூஜை’ நடந்தது. பெண் வீட்டையும், மாப்பிள்ளை வீட்டையும் சேர்ந்த 100 சுமங்கலிப் பெண்கள், மணமகள் சரோஜாதேவிக்கு வளையல்கள் அணிவித்தார்கள்.
மாலையில் நடந்த நிச்சயதார்த்தத்தின்போது, மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த பட்டுச் சேலையை சரோஜாதேவி அணிந்து வந்து, மாப்பிள்ளையின் தந்தைக்கும், தன் தந்தைக்கும் பாதபூஜை நடத்தினார். மறுநாள் காலை 11 மணிக்குத் திருமணம் நடைபெற்றது.
முதலில் ‘மாப்பிள்ளை அழைப்பு’ நடந்தது. மேள தாளம் முழங்க மாப்பிள்ளையை அழைத்து வந்து மணமேடையில் அமரச் செய்தார்கள். பின்னர் சரோஜாதேவி அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளை அருகே அவர் அமர்ந்தார். புரோகிதர்கள் மந்திரம் சொல்ல, சரியாக 11 மணிக்கு சரோஜாதேவி கழுத்தில் ஸ்ரீஹர்ஷா தாலி கட்டினார்.
திருமணத்தைக் காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தார்கள். திருமணத்தையொட்டி, எம். எஸ். சுப்புலட்சுமியின் பாட்டுக் கச்சேரி நடைபெற்றது. சரோஜாதேவிக்கு வாழ்த்துத் தெரிவித்தது, பகவத் கீதை புத்தகத்தையும், வாழ்த்துச் செய்தி யையும் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அனுப்பியிருந்தார். பகவத் கீதையில் கூறியுள்ளபடி, குடும்பம் நடத்துங்கள்.
உங்கள் இல்லறம் மகிழ்ச்சியுடன் நடக்க என் வாழ்த்துக்கள் திருமணம் முடிந்ததும், இருவரும் என்னை சந்தியுங்கள் என்று வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டு இருந்தார்.
மார்ச் 5ம் திகதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மைலாப்பூர் உட்லண்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பட அதிபர்கள், நடிகர்- நடிகைகள் பெருந்திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்
திருமணத்துக்குப் பின் சரோஜாதேவி சினிமாவில் நடிப்பதை, அவர் தாயார் விரும்பவில்லை. ஆனால், ஸ்ரீஹர்ஷாவை சந்தித்த திரை உலகத்தினர், ‘சரோஜாதேவி மிகச் சிறந்த நடிகை. தமிழ் நாட்டில் அவருக்கு பேரும், புகழும் நிறைய இருக்கிறது. அவரை நடிக்கக்கூடாது என்று தடை போட்டுவிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.
பெண்கள் வீட்டில் சும்மா இருப்பது எனக்குப் பிடிக்காத விஷயம். பெண்கள், தங்களுக்கு உள்ள திறமையை வீணாக்கக்கூடாது. எனவே, சரோஜாதேவி தொடர்ந்து நடிப்பார் என்று ஸ்ரீ ஹர்ஷா கூறினார். இதன் காரணமாக சரோஜாதேவி நடிக்க அவர் தாயாரும் சம்மதம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment