Thursday, December 26, 2013

கோத்திரம் ஒன்றாக இருந்தும் பாலுவின் காதலை பெற்றோர் எதிர்த்தது ஏன்?

பாலு சென்று கதவைத் திறந்தார். வாசலில் சாவித்திரியின் பெற்றோரும், பாலுவின் தகப்பனாரும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னே, அவர்களை அங்கு அழைத்துக்கொண்டு வந்தவரும் நின்றுகொண்டிருந்தார். அவர் யார் தெரியுமா?
கதவைத் திறந்த பாலுவிற்கு ஒரே ஷாக் முதலில் ரூமிற்குள் வந்தவர் கோதண்டபாணிதான். பாலு அன்று காலை ஒரு படப்பிடிப்பிலே பாடியதை அறிந்துகொண்டு, பாலு இருக்குமிடத்தைத் தெரிந்துகொண்டு சாவித்திரியின் பெற்றோரையும் உடன் அழைத்துக்கொண்டு வந்தவர் கோதண்டபாணிதான்.
சாவித்திரியின் பெற்றோர் கோபமாக உள்ளே வந்தாலும், தங்கள் பெண்ணைக் கண்டதும் அழுதுவிட்டார்கள். நடந்ததையெல்லாம் பாலு விவரமாகக் கூற, ஒரு நல்ல நாள் பார்த்து சாவித்திரியைக் கொண்டு வர ஒப்புக்கொண்டு அவளை அழைததுக்கொண்டு கிளம்பினார்கள்.
பாலுவின் சினிமா வாழ்விற்கு உறுதுணையாக நின்ற கோதண்டபாணிதான், பாலுவின் வாழ்வு நல்லபடியாக அமையவும் காரணமாயிருந்தார். இரு தரப்பிலும் பேசி, பாலுவையும் சாவித்திரியையும் இணைத்தவர் அவர் தான்.
இரு குடும்பத்தினரும் மனம் வந்து இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தனிக்குடித்தனம் அமைத்த பாலுவிற்கும், சாவித்திரிக்கும் பெரியவர்கள் துணையாக இருக்கவில்லை.
முதன் முதலாக சாவித்திரி கர்ப்பமாக இருந்தபோது பெரியவர்கள் துணையில்லாமல் கணவனும் மனைவியும், மனைவிக்குக் கணவனும் மட்டுமே ஆதரவாக இருந்தார்கள்.
முதல் குழந்தை, பெண் குழந்தை பிறந்தது. இசை சம்பந்தமான ‘பல்லவி’ எனப் பெயர் சூட்டப்பட்டது. பல்லவி குழந்தையாக இருந்தபோது திடீரென அழுதாள். காரணம் தெரியாமல் பாலுவும் அவர் மனைவியும் தவித்தார்கள்.
எத்தனையோ நாள் இரவில் காரை எடுத்துக்கொண்டு காற்றோட்டமாக பீச்வரை சென்று குழந்தை தூங்கியதும் வீட்டிற்குத் திரும்பிய இரவுகள் பல உண்டு.
ஆனால் எந்த பிரச்சினைகள் வந்தாலும், கணவன் மனைவியிடையே அது பிரதிபலித்ததில்லை. உண்மையான காதல், பாசம் ஆகிய இரண்டும் பிரச்சினைகளைச் சுருக்குவதற்கு பெரிதும் உதவின.
பாலுவிற்கு எந்தக் காலத்திலும் நண்பர்கள் பட்டாளம் அதிகம். அதனால் உறவினர்கள் ஆதரவில்லை என்பது ஒரு குறையாகவே தெரிய வில்லை பாலுவிற்கும், சாவித்திரிக்கும்.
பல்லவி பிறந்தவுடனேயே, பாலுவின் குடும்பத்தினரும், சாவித்திரியின் குடும்பத்தினரும் மனம் மாறி குழந்தையின் 8!வி=தி!8, பாலு வீட்டிற்கு வந்து போனார்கள். இந்தக் காலக்கட்டத்தில் பாலு மிகவும் பிஸியாகி, தனது சினிமா மார்க்கெட்டைத் தக்க வைத்துக்கொள்ள முழு மூச்சுடன் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.
பாலுவின் துணையியார் இரண்டாவது முறையாகக் கருத்தரித்தார். முதல் குழந்தைக்கும இரண்டாவது குழந்தைக்குமிடையே இடைவெளி ஒரு வயதை விடக் குறைவாகவேயிருந்தது. கைக் குழந்தையை வைத்துக்கொண்டு கணவன், மனைவி இருவரும் சிரமப்பட்டனர்.
இருந்தாலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற இலட்சியம் வெறியாக மாறியிருந்த காலம் அது. சோதனைகளைச் சிரித்த முகத்துடன் தாங்கிக் கொண்டார்கள். சாவித்திரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, சாவித்திரியின் தாயார், பிறந்த வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார். பாலுவிற்கு, சாவித்திரியை அந்த நிலையில் அனுப்ப மனமில்லை. அந்த நேரத்தில் புதிதாகப் பிறக்கப் போகும் இந்தக் குழந்தை உறவை ஒட்டவைக்கும் ஒரு பாலமாக இருக்கும் என்ப¨தை மறுக்கவும் மனமில்லை.
எனவே,அன்றிருந்த ரிக்கார்டிங்கை அவசர அவசரமாக முடித்துவிட்டு, சாவித்திரியை வழியனுப்ப ஸ்டேஷனுக்குப் போனார் பாலு. சாவித்திரியும் தன் தாயுடன் கிளம்பினார். கணவரை விட்டுப் பிரியாத சாவித்திரிக்கு அந்தப் பிரிவு மிகுந்த கஷ்டத்தைத் தந்தது. பாலு அவரைத் தேற்றி வழியனுப்பி வைத்தார். பச்சை விளக்கு எரிந்தது.
அந்தப் பச்சை விளக்கு எரிவது பாலுவிற்குத் தன் வாழ்வு. ‘பசுமை’ யாக இருக்கப் போவதற்காக எரிவதாகத் தோன்றியது. வண்டி கிளம்பியது. பாலுவைத் தனிமை வாட்டியது. யாருமில்லா வீட்டில் நுழைய பாலுவிற்குப் பிடிக்கவில்லை. படுக்கையில் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் பாலு.
டெலிபோன் மணியடித்தது. பாலு அதை அட்டண்ட் செய்தார். அரக்கோணம் ஸ்டேஷன் மாஸ்டர் பேசினார். பாலுவிற்கு ஒரு மகன்,அரக்கோணம் ரயில்வே ஆஸ்பத்திரியில் பிறந்திருப்பதாகக் கூறி பாலுவை வாழ்த்தினார்.

எம். ஜி. ஆரின் தந்தை வழி பூர்வீகம்

இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கோபாலன் 1920ம் ஆண்டு மாரடைப்பால் இறந்துவிட்டார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கிவிட ராமுபிள்ளை வேலுப்பிள்ளை ஆறுதல் சொன்னார்கள்.
அதன் பின் தன் கணவரை இழந்த சத்தியபாமா தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்கிய சொந்த வீட்டில் அவர் சேர்த்துவைத்த பணம், நகைகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு கண்டியிலே வாழ்ந்து வந்தார். இந்தக்காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகின்றார்கள்.
ஏற்கனவே தன் கணவரைப் பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமாவுக்கு மேலும் துன்பம் ஏற்பட்டது. ஒன்றுக்குப் பின் ஒன்றாக அவரது மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் எம். ஜி. ஆர் தன் தாயின் கழுத்தைக் கட்டிப்பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம்.
ஐந்தாவது குழந்தையாக நீ பிறந்த பிறகு தானடா பெற்ற அப்பாவையும், உன் கூடப் பிறந்த 3 பேரும் செத்துப் போனார்களடா என்று எம். ஜி. ஆரை கட்டிப் பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுக்கள் எந்தத் கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போதும் எல்லாம் அந்தத் தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளையின் உதவியை நாடினார்.
அப்போது அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டிப் பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிக சிறந்தது என கூறினர். அப்போது சத்திய தாய், எனக்கு சொந்த இடம் என்பது கேரள வடவனூர்தான்.
அந்த ஊர் வேண்டாம் என்றுதான் சபதத்தோடு இங்கு வந்தோம். இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன் என்ற கேள்வி அவருக்கு எழுந்த சமயம்தான் கும்பகோணத்தில் இருக்கும் மதுரை போய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவர் இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர் நாராயணனுக்கு சத்தியபாமா தன் குடும்ப நிலைமைகளைப் பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.
அதன்படி அவருடைய அழைப்பின்படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்துவிடுங்கள் என்று சொல்லுகிறார். அதன்படி வேலுப்பிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் சென்றார்கள்.
சத்தியபாமா நாராயணனின் உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா கூறினார். அதன்படி, இந்த இரண்டு பிள்ளைகளையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பாடசாலையில் சேர்த்து விட்டார்கள்.
மேலும் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கிக்கொடுத்து விட்டு இந்தப் பிள்ளைகளின் படிப்புக்கான செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகியது. இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடுதான் எங்கேயாவது வேலை செய்து தன் பிள்ளைகளைக் காப்பாற்றுவதாக நாராயணனிடம் கூறினார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இந்த சத்தியபாமாவின் நிலைமைகளை பார்த்து இந்த அழகான பிள்ளைகளுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.
இந்த நிலையில் எம். ஜி. ஆருக்கும், சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சங்கரபாணி தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார். பாடசாலை முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாகப் படித்தவர் நீதிபதியாகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர். அவர் போல நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும்.
இதை கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திர த்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம். ஜி.ஆர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டுக்கொண்டு பாடசாலை சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம். ஜி. ஆருக்கு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.

உலக சினிமா

* சீன் கானரி தன் 32 வது வயதிலேயே ‘007 ஜேம்ஸ்பாண்ட்’ ஆகி உலகப் புகழ்பெற்றார். ரோஜர் மூர் என்ற நடிகரோ 1973 ல் தான் ஜேம்ஸ்பாண்ட்டாக நடிக்க ஆரம்பித்தார். அப்போது ரோஜர் மூரின் வயது என்ன தெரியுமா? 44 ஆண்டுகள்.
* ஹார்டி ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் வில்லனாகத் தான் நடித்தார். ‘ஹிhலீ தீizarனீ’ என்ற படத்தில் அவரது வில்லன் நடிப்பு நினைவில் நிக்கும்படி அமைந்திருந்ததாம்.
* லாரல் கதை வசனம் எழுதி இருவரும் இணைந்து நடித்த முதல் படமான ‘ஷிlipping wivலீs’ என்ற படம் சக்கைபோடு போட்டதாம். இதில் லாரலுக்கு மிகச் சிறிய வேஷம்தான்.
* சென்னையில் அமைக்கப்பட்ட முதல் ஏர்கண்டிஷன் தியேட்டர் ‘மினர்வா’.
* முதன் முதலாக ஒரே கட்டடத்திற்குள் அமைக்கப்பட்ட மூன்று தியேட்டர்கள் சஃபையர், ப்ளூ டைமண்ட், எமரால்டு. (தற்போது இல்லை)
* இந்தியாவிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட சினிமா தியேட்டர் பெங்களூரிலுள்ள ‘கபாலி’ தியேட்டராகும்.
* போதனா சீனிவாசராவ் என்பவர் 1921 ஆம் ஆண்டு ஆந்திராவில் விஜயவாடா நகரில் ‘மாருதி தியேட்டர்’ என்ற பெயரில் நிரந்தரமான தியேட்டர் ஒன்றினை முதன்முதலாக கட்டினார்.
* 1905 ஆம் ஆண்டில் சந்தோணி, ஆல்பர்ட்னி ஆகிய இரண்டு திரைக்கலைஞர்களும் ஒன்றாக இணைந்து ‘டூரின்’ (ஹிurin) என்ற இடத்தில் முதல் முறையாக ‘சினி ஸ்டுடியோ’ என்ற பெயரில் ஆரம்பித்தனர். இந்த ஸ்டுடியோதான் இத்தாலியில் ஆரம்பிக்கப்பட்ட முதல் திரைப்பட ஸ்டுடியோவாகும்.
* 1 1914 ஆம் ஆண்டில் ‘பாஸ்ட்ரோன்’ என்ற இத்தாலிய திரைக்கலைஞர் ‘காபிரியா’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டார். இத்திரைப்படத்தில்தான் முதன் முதலாக ‘டாலி’ (ளிolly) யை உபயோகப்படுத்தி படமாக்கினார்.
* ரஷ்ய நாட்டில் ‘ஜார்ஜ் நிக்கோலஸ்’ பட்டம் சூட்டிக்கொண்ட விழாவினை லுமியர் காமிராமேன்கள், பிரான்ஸிஸ் டப்ளியர் மற்றும் சார்லஸ் மாய்சன் ஆகியோர் படம் பிடித்தனர். இப்படப்பிடிப்புதான் ரஷ்ய நாட்டில் நிகழ்ந்த முதல் படப்பிடிப்பு ஆகும்.
* 1907 ஆம் ஆண்டில் முதன் முதலாக ‘அலெக்சாண்டர் ட்ரான்கோ’ என்ற புகைப்படக்காரர்தான் ரஷ்ய நாட்டில் முதன் முதலாக திரைப்படக் கம்பெனியைத் தொடங்கினார்.
* 1908 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பதேயும், கெளமாண்ட்டும் இணைந்து முதன் முதலாக மாஸ்கோவில் திரைப்பட ஸ்டுடியோவையும், சோதனைக் கூடத்தையும் நிறுவினர்.
* லெனின் ஆட்சிக் காலத்தில்தான் ரஷ்யாவில் முதன் முறையாக ‘பிலிம் இன்ஸ்டிடியூட்’ தொடங்கப்பட்டது.
* 1922 ஆம் ஆண்டு இந்தியாவில் திரையிடப்பெற்ற திரைப்படங்களுக்கு - குறிப்பாக, கல்கத்தாவிலும், பம்பாயிலும் திரையிடப்பெற்ற திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டது.
* அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ‘எல்லீஸ் ஆர். டங்கன்’ தமிழ் மொழியில் இயக்கிய முதல் படம் ‘சதிலீலாவதி’. வந்த ஆண்டு 1936. கதை எஸ். எஸ். வாசன். இப்படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார் மக்கள் திலகம் ‘எம். ஜி. ஆர்’.
* எல்லீஸ் ஆர். டங்கன் தான் தமிழ்த் திரைப்பட உலகில் முதன்முறையாக தண்டவாளங்கள் அமைத்து (traணீks) அதன் மீது trolly - யை வைத்து, அதன்மீது காமிராவை வைத்து படமாக்கினார். இவர் தமிழ் மொழியில் இயக்கிய படங்கள் எட்டு தான். என்றாலும் ஒவ்வொரு படமும் திரைக் காவியங்கள் எனலாம்.
* தமிழ்த் திரை உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ‘கே. சுப்பிரமணியம்’ மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனம், விடுதலை உணர்ச்சி இல்லாமை - இவைகளுக்கு எதிராக சீர்திருத்த நோக்கோடு படம் எடுத்த சாதனையாளர். அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவலான ‘தியாகபூமி’யைப் படமெடுத்து விடுதலை உணர்ச்சிக்கு வித்திட்டார். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் இப்படத்திற்கு தடை விதித்தது.

Tuesday, December 10, 2013

மனோரமாவின் காதல் திருமணம்

வறுமையுடன் போராடிக்கொண்டிருந்த மனோரமா, நாடக நடிகையானார். அப்போது அவருடைய காதல் திருமணம் நடந்தது.
மனோரமாவும், அவரது தாயாராகும் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்த நேரத்திலும், மனோரமாவின் இலவச பாட்டுக் கச்சேரி அனைத்து மங்கல நிகழ்ச்சிகளிலும் நடந்துகொண்டு இருந்தது.
இந்த நிலையில் கோட்டையூரில் ஏகாதசி நாள் விழா நடந்தது. அன்றைய தினம் இரவு ‘அந்தமான் காதலி’ என்ற நாடகம் நடந்தது. அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்கு பாட வராது எனவே, அவருக்காக பாடவும், நாடகத்திற்கு இடையே நடனம் ஆடவும் ஒரு பெண்ணைத் தேடினார்கள். அந்த வாய்ப்பு மனோரமாவுக்கு கிடைத்தது.
இந்த நாடகத்தில் பணிபுரிந்த டைரக்டர் சுப்பிரமணியன், உதவியாளர் திருவேங்கடம், ஆர்மோனிய வித்வான் தியாகராசன் ஆகியோர் வெகுவாக பாராட்டியதோடு, மனோரமா என்ற பெயரையும் வைத்தார்கள்.
கோட்டையூர் நாடகத்திற்கு எலக்ட்ரீசியனாக இருந்த பால்ராஜ் என்பவர், மனோரமாவின் திறமையை பார்த்து வியந்தார். புதுக்கோட்டையில் நடந்த ‘விதியின் விசித்திரம்’ என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க மனோரமாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். வெறுமனே பாடியும், நடனமாடியும் வந்த மனோரமா, நாடக நடிகையானார். அதன் பிறகு அவர்கள் பசிக் கவலையும் மெல்ல, மெல்ல மறைந்தது.
அதன் பின்னர், எலக்ட்ரீசியன் பால்ராஜ் எழுதி தயாரித்த ‘யார் மகன்?’ என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார். சித்தன்னவாசலில் நடந்த இந்த நாடகத்திற்கு டைரக்டர் ‘வீணை’ எஸ். பாலசந்தர் தலைமைதாங்கினார்.
நாடகத்தின் இடைவேளையில் அந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு ஒரு வெள்ளி டம்ளரை பரிசளிக்கும்படி டைரக்டர் எஸ். பாலசந்தரிடம் கொடுத்தனர். அதை வாங்கிக்கொண்டு நாடகத்திற்கு தலைமை தாங்கி பேசிய எஸ். பாலசந்தர், ‘இந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த பெண்மணிக்கு பரிசு கொடுக்குமாறு என்னிடம் ஒரு வெள்ளி டம்ளரை தந்து இருக்கிறார்கள். ஆனால் நியாயமாக இந்த பரிசை, சிறந்த முறையில் கதாநாயகியாக நடித்த மனோரமா வுக்குத்தான் தரவேண்டும் என்றார். அதன் பிறகு, மனோரமாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மனோரமா தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். திருச்சி டால்மியாபுரத்திலிருந்து, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தாண்டி, மதுரை வரை அந்த நேரம் யாரும் அசைக்க முடியாத பிரபல நடிகையாகிவிட்டார்.
அந்தக் காலக் கட்டத்தில் வட இந்திய திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய நடிகை சுரையாவை ஒப்பிட்டு, தென்னாட்டு சுரையா மனோரமா’ என்று விளம்பரம் செய்தார்கள்.
சபா நாடகக் குழுவில் மனோரமா நடித்துக்கொண்டு இருந்தபோது, அந்த சபாவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன், மனோரமாவை காதலித்தார்.
அந்தக் காதலை மனோரமா ஏற்றுக்கொண்டார். மனோரமா- ராமநாதன் திருமணம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்றது.
இளம் வயதில் வறுமையால் வாடினார். தாயாருடன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு வாழ்க்கையின் ஓரத்துக்குச் சென்றார். பிறகு எதிர்நீச்சல் போட்டு புகழின் சிகரத்தை அடைந்தார். அவர்தான் ‘மெல்லிசை மன்னர்’ எம். எஸ். விஸ்வநாதன்.
எம். எஸ் விஸ்வநாதனின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இலப்புள்ளி கிராமம்.
தந்தை பெயர் சுப்பிரமணியன். தாயார் நாராயணி. கேரள வழக்கப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பரம்பரை பெயர் உண்டு. ‘மனையங்கத் ஹவுஸ்’ என்பது எம். எஸ். விஸ்வநாதனின் பரம்பரை பெயர் அதனால்தான் மனையங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என சேர்த்து ‘எம். எஸ். விஸ்வநாதன் ஆனார்.

இளையராஜாவின் சகோதரர்களை கலக்கிய பாலு, பாரதிராஜா மோதல்

நடிப்புத் திறமையை காட்ட நடத்திய நாடகம்
ghலு சினிமாவில் பாட ஆரம்பித்த காலத்தில்தான் பாரதிராஜாவைச் சந்தித்தார். இளையராஜாவை பாலுவிற்கு தெரியும். அந்தக் காலகட்டத்தில் பாரதிராஜாவின் அறிமுகம் பாலுவிற்குக் கிடைத்தது.
பாலு வெளியூர் கச்சேரிகளுக்குப் போகும்போது பாரதிராஜா ஓய்வாக இருந்தால், அவருடன் செல்வது வழக்கம். காரில் பாலு சென்றால், முன் சீட்டில் அவர் பக்கத்தில் அமர்ந்து பாலுவிடம் தனது எதிர்கால சினிமா உலகக் கனவுகளைக் கூறுவது பாரதிராஜாவின் வழக்கம். தான் சினிமா உலகில் சாதனை புரிய வேண்டும் என்ற வெறி அந்தக் காலத்திலேயே பாரதிராஜாவின் உள்ளத்தில் ஒரு தீயாக எரிந்து கொண்டிருந்தது.
ஒரு சமயம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலுவின் கச்சேரி நடைபெற்றது. பாலுவுடன் பாரதிராஜாவும் சென்றிருந்தார். பாரதிராஜா பாலுவின் அறையில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு ஜடத்தைக் கூட தன்னால் நடிக்க வைக்க முடியும் என்று பெருமையுடன் கூறிக் கொண்டிருந்த போதுதான், அந்த விபரீத யோசனை பாலுவுக்குத் தோன்றியது. பாரதிராஜாவிடம் ‘உனக்கு நடிக்கச் சொல்லிதர முடியும் என்ற நம்பிக்கை இருக்கு.
அதையும் ‘டெஸ்ட்’ பண்ணிப் பார்த்து விடுவோம். நானும் நீயும் இப்பொழுது ஒரு சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்.
அந்தச் சண்டை உண்மையானதாக மற்றவர்களுக்கு தோற்றமளிக்க வேண்டும். அப்படி நம் குழுவில் இருப்பவர்கள் நமது சண்டையை நம்பினால் உண்மையிலேயே உனக்கு நடிக்கிற திறமையிருக்கு உன்னாலும் நடிப்புச் சொல்லித்தர முடியும் என்று ஏத்துக்கிறேன்’ என பாலு கூற உற்சாகமாக பாலுவின் சவாலை ஏற்றார் பாரதிராஜா.
உடனே பாரதிராஜா பாலுவைப் பார்தது ‘நீ என்ன? உன் மனசுக்குள்ள பெரிய முகமது ரபின்னு நினைப்போ? நாலு சினிமாவில் பாடினதுக்கே இவ்வளவு கொழுப்பா?’ என்று கேட்க அதற்கு பாலு ‘நானாவது நாலு படத்தில் பாடியிருக்கேன். சினிமாவுக்குள்ள நுழையாமலே உனக்கு பெரிய சாந்தாராம் என்ற நினைப்பா?’ என்று கேட்க வார்த்தைகள் பின்னி சிறிய வாக்குவாதம் பெரிய சண்டையாக உருவெடுத்தது.
இவர்கள் சண்டை போட்டுக் கொண்டு ரூமை விட்டு வெளியே வர இவர்களின் குரலைக்கேட்டு இளையராஜாவின் சகோதரர் பாஸ்கர், கங்கை அமரன், மற்றும் இசைக்குழுவினர் வெளியே வர, பாரதிராஜாவும், பாலுவும் சண்டை போடுவது ஒரு பெரிய குழப்பத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் பாலுவும், பாரதிராஜாவும் கை கலக்கும் அளவிற்குப் போய்விட்டவுடன், பாஸ்கரும் அமரனும் இருவரையும் பிரித்துவிட்டார்கள். தங்கள் ஊரைச் சேர்ந்த பாரதிராஜாவுடன் பாலு சண்டை போட்டது பாஸ்கருக்குப் பிடிக்கவில்ல.
அதே நேரத்தில் சாதுவான பாலுவிற்குப் கோபம் வரும்படி பாரதிராஜா நடந்துகொண்டது அமரனுக்குப் பிடிக்கவில்லை. அதே நேரத்தில் ஒற்றுமையான குழுவின் இடையே இப்படியொரு பிளவு ஏற்பட்டதை யாராலும் தாங்க முடியவில்லை. ஒரு மாதிரியாக சண்டை ஓய்ந்து, பாலுவும் பாரதிராஜாவும் நடித்ததாகக் கூற இவர்கள் சண்டையைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த பாஸ்கரும், கங்கை அமரனும் கோபம் தாங்காமல், பாலுவையும் பாரதிராஜாவையும் அடிக்கவே வந்து விட்டனர்.

கங்கை அமரனுக்கு கல்யாணம் பண்ணி வச்ச பிள்ளையார் யார்?

rந்திரகாந்தா நாடகக் குழுவின் மிகப் பிரம்மாண்டமான நாடகம் மணியன் எழுதிய ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ இந்த நாடகத்திற்கு இசையமைக்கும் பொறுப்பு பாவலர் பிரதர்ஸ் குழுவைச் சேர்ந்தது.
சந்திரகாந்தாவின் நெருங்கிய உறவினர் மணிமேகலை என்கிற கலா என்ற பெண், தவறாமல் நாடகத்திற்கு வருவாள். அந்தப் பெண்ணுக்கு இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு கிதார் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
கிதார் வாத்தியத்தின் தந்திகளை மீட்டச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த கங்கை அமரன் அந்தப் பெண்ணின் மனத்தை நேசிக்க இருவரிடையே காதல் பிறந்தது. இலைமறைவு, காய் மறைவாக இருந்த காதல் மெதுவாக வளர்ந்தது. அமரனின் இந்தக் காதலைப் பற்றி அறிந்து பாலு அவரது காதல் நிறைவேற வள்ளி கல்யாணத்துக்கு உதவி செய்த விநாயகப் பெருமான் மாதிரி, இருவரிடையே தூது போனார்.
இறுதியில் கங்கை அமரன் கல்யாணத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார் பாலு. இன்றும் மேடையில் கங்கை அமரன் பாலுவைப் பார்த்து ‘எனக்கு கல்யாணம் பண்ணிவச்ச பிள்ளையார் (உடம்பு சைஸைப் பார்த்து) இவர்தான்’ என்று கூறி ரசிகர்களைச் சிரிக்க வைப்பது வழக்கம்.

உலக சினிமா

i ‘அரவுண்டு தி வேர்ல்டு’ என்னும் படம் இந்தியாவின் முதல் 70 எம். எம். படமாகும். ஆண்டு 1967.
i அகன்ற திரையில் திரைப்படம் காண்பிக்கும் முறை 1928 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹென்றி செர்ட்டின்’ என்பவரால் முயற்சிசெய்து பார்க்கப்பட்டது. அப்போது அதற்குப் பெயர் ‘அனமோர்போஸ்கோப்’ என்பது. 1953 ஆம் ஆண்டு ஓர் அமெரிக்க சினிமா கம்பெனி தான் இதன் இயற்பெயரை மாற்றி ‘சினிமாஸ்கோப்’ என்ற பெயரை சூட்டியது.
i இந்தியாவின் முதல் ஏர்கண்டிஷன் திரையங்கம் தெற்கு பம்பாயில் இருக்கிறது 1935 ல் கட்டப்பட்ட ‘ரீகல் தியேட்டர்’ தான் இதன் சிறப்பைப் பெறுகிறது. அத்துடன் முதன் முதலில் சினிமாஸ்கோப் திரையிடப்பட்டதும் இங்குதான்.
i முப்பது அல்லது நாற்பது நிமிட ஓட்டங்கொண்ட கதை சொல்லும் துண்டுப் படங்களை 1905 ல் ஜே. எஃப். மதன் என்பவர் தயாரித்தார். அவரது ‘எல்ஃபின்ஸ்டோன் பயாஸ்கோப் கம்பெனி’ (கல்கத்தா) இந்தப் படங்களை வெளியிட்டது.
i முதல் நீளமான கதைப் படத்தைத் தயாரித்தவர் ‘ஆர். ஜி. டோர்னே’, ‘புண்டலிக்’ என்ற இந்தப் படம் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மகான் ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லுவதாகும். மே 18, 1912 ல் இது வெளியிடப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க இந்தியரால் தயாரிக்கப்பட்ட முதல் கதைப் படம் தாதா சாகிப் பால்கேயின் ராஜா ஹரிச்சந்திரா. இது மே 3 1913 ல் வெளியிடப்பட்டது.
i ஹாலிவுட் பேரழகி ‘மர்லின் மன்றோ’வின் திருமண ஒப்பந்தப் பத்திரம் அண்மையில் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 2.5 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதாம். 1956 ல் அமெரிக்க நாடகாசிரியர் ‘ஆர்தர் மில்லரை’ மன்றோ தனது மூன்றாவது கணவராக மணம் செய்தபோது அந்த மண ஒப்பந்தம் கையெழுத்தானதாம். மில்லருக்காக யூதராக மதம் மாறி மணம் புரிந்த மன்றோ, 1961 ல் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
i ஒரு பாடல் கூட இல்லாது வெளிவந்த முதல் திரைப்படம் ‘நெளஜவான்’. 24 மணி நேரத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்ட துப்பறியும் திரைப்படமான ‘நெளஜவான்’ - ல் பாடல்களைச் சேர்க்காமல் தயாரிப்பாளர் ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்று பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு இரு பாடல் காட்சிகளைப் பிறகு இணைத்தார்களாம்.
i ‘மேன் வித் தி அயர்ன்மாஸ்க்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் ‘உத்தம புத்திரன்’. நடிகர் பி. யு. சின்னப்பா நடித்தது. வெளியான ஆண்டு 1940. இதில் சின்னப்பா இரட்டை வேடம் ஏற்று நடித்து புகழ்பெற்றார். தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ். இதே கதை, வீனஸ் பிக்சர்சால் தயாரிக்கப்பட்டு சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
i முதல் மலையாளப் படத்தை எடுத்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் 1961 ல் ‘கண்டம் வெச்ச கோட்டு’ என்ற பெயரில் முதல் மலையாள வண்ணப் படத்தையும் எடுத்தது.
i 1920 - 1930 களில் உலகிலேயே மிகவும் பிரபலமான நபராக இருந்தவர் நகைச்சுவை நடிகர் ‘சார்லி சாப்ளின்’ தானாம். ஒரு முறை அவர் தன் சொந்த ஊரான லண்டனுக்குச் சென்றிருந்த போது இரண்டே நாட்களில் சார்லி சாப்ளினுக்கு 73,000 ரசிகர் கடிதங்கள் வந்தனவாம்.
i சார்லி சாப்ளின் 1977 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று சுவிட்சர்லாந்தில் அவரது இல்லத்திற்கு அருகிலேயே கார்சியர்கார்வேலி என்னும் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரது ஊர்க்காரர்களுக்கு ஒரு அதிர்ச்சி. காரணம் சார்லியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது.
i கொள்கைக்காரர்கள் 6,00,000 டாலர்கள் கேட்டு சார்லி குடும்பத்திற்கு எழுதினார்கள். அவரது மனைவி மறுத்துவிட்டார். கடைசியில் போலந்து, பல்கேரிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு அகதிகளை பொலிஸ் கைது செய்தது. சாப்ளின் மீண்டும் 1978 ஆம் ஆண்டு மே 23 அன்று அதே இடத்தில் கான்கிரீட்டால் அடக்கமானார்.

Tuesday, December 3, 2013

தற்கொலை செய்யும் அளவிற்கு வறுமையால் வாடிய எம். எஸ். விஸ்வநாதன்.

,ளம் வயதில் வறுமையால் வாடினார். தாயாருடன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வாழ்க்கையின் ஓரத்துக்குச் சென்றார். பிறகு எதிர்நீச்சல் போட்டு, புகழின் சிகரத்தை அடைந்தார். அவர்தான் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்.
எம். எஸ். விஸ்வநாதனின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இலப்புள்ளி கிராமம். தந்தை பெயர் சுப்பிரமணியன் தாயார் நாராயணி.
கேரள வழக்கப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பரம்பரை பெயர் உண்டு. மனையங்கக் ஹவுஸ் என்பது எம். எஸ். விஸ்வநாதனின் பரம்பரை பெயர் அதனால்தான் மனையங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என சேர்த்து எம். எஸ். விஸ்வநாதன் ஆனார்.
எம். எஸ். விஸ்வநாதன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். அப்போது தந்தை சுப்பிரமணியன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பொதுப்பணித் துறையில் வேலை பார்த்து வந்தார்.
எம். எஸ். விஸ்வநாதன் குழந்தையாக இருந்தபோது சில பிரச்சினை காரணமாக சுப்பிரமணியன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அதன் பின்னர் திருச்சியில் ஜெயில் வார்டர் வேலை கிடைத்தது. தாய் வழி தாத்தா கிருஷ்ணன் நாயரும் அங்கே ஜெயில் வார்டர் பணியில் இருந்தார்.
திருச்சியில் இருந்தபோது சுப்பிரமணியன் திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அப்போது எம். எஸ். விஸ்வநாதனுக்கு 4 வயது.
தந்தை இறந்த 15 நாட்களுக்குள் இன்னொரு இழப்பும் ஏற்பட்டது. விஸ்வநாதனின் தங்கை வேசம்மாவும் மரணம் அடைந்தார். இந்த சோகங்களை 4 வயதில் விஸ்வநாதன் தாங்க நேரிட்டது.
எனவே ஊரார் விஸ்வநாதனை அதிர்ஷ்டமில்லாதவன் என்று ஏளனமாகப் பேசினார்கள்.
இதனால் விஸ்வநாதனின் தாயார் நாராயணி, மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டார். அதனால் ஒரு விபரீத முடிவு எடுத்தார்.
ஒருநாள் அதிகாலை 3 மணிக்கு மகன் விஸ்வநாதனை எழுப்பினார் நாராயணி. மகனை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் சாலைக்கு சென்றார். ஒரு குளக்கரையில் வந்து நின்றனர்.
மகனை குளத்தில் தள்ளிவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தார்.
என்ன நடக்கப்போகிறது என்பதை லேசாகப் புரிந்துகொண்ட விஸ்வநாதன் ‘நீ முதலில் குதிம்மா’ என்றார்.
‘ஏன்டா, அப்படிச் சொல்றே?’ என்றார் தாயார்.
‘என்னை தள்ளிவிட்டு, நீ அப்புறம் குதிக்காமல் தப்பிச்சுப் போயிட்டா என்ன செய்வது?’ என்றார். விஸ்வநாதன்.
இப்படி தாய்க்கும், மகனுக்கும் இடையே உரையாடல் நடந்து கொண்டிருந்தபோது அங்கே தாத்தா கிருஷ்ணன் நாயார் வந்தார். நடந்ததை தெரிந்துகொண்டார்.
நாராயணிக்குட்டி செத்துப்போயிட்டா எல்லாம் சரியா போயிடுமா? இதென்ன பைத்தியக்காரத்தனம் அந்த புள்ளைய குளத்தில் தள்ள எப்படி உனக்கு மனம் வந்தது? நான் இருக்கும்போது உனக்கென்ன கவலை? உங்களையெல்லாம் நான் காப்பாற்றாமல் போயிடுவேனா? வா வீட்டுக்கு’ என்று ஆறுதல் கூறி இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
இந்த நிலையில் கிருஷ்ணன் நாயருக்கு திருச்சியிலிருந்து தெற்கு மலபாரான கண்ணனூருக்கு வேலை மாற்றல் உத்தரவு வந்தது.
கண்ணனூர் போனவுடன் அங்குள்ள ஒரு பள்ளியில் விஸ்வநாதனை சேர்த்தார். ஆனால் விஸ்வநாதனுக்கு படிப்பு மீது ஆர்வம் இல்லை.
பள்ளிக்கு செல்லாவிட்டால் தாத்தா திட்டுவார் என்பதற்காக பையை எடுத்துக்கொண்டு கிளம்புவார்.
மாணவர்களின் வருகையைப் பதிவு செய்வதற்காக விஸ்வநாதன் பெயரை ஆசிரியர் படித்ததும் உள்ளேன் ஐயா என்று குரல் கொடுத்து விட்டு, அடுத்த சில நிமிடத்தில் விஸ்வநாதன் மாயமாய் மறைந்துவிடுவார்.
பள்ளிக்கூடம் அருகே ஓர் இசைப்பள்ளி இருந்தது. அங்கு சென்று ஓரமாக நின்று பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருப்பார். பள்ளிக்கூடம் விடுகிற நேரத்தில் மீண்டும் புத்தகத்தை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்புவார்.
எம். எஸ். விஸ்வநாதனுக்கு படிப்பைவிட இசை ஆர்வமே அதிகமாக இருந்தது.

பொட்டு வைத்த முகமோ பாடலின் சரணம் பாட முடியாமல் மூன்று முறை தவித்த பாலு

மூன்று முறையும் ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலின் சரணம் பாட முடியாமல் தவித்த பாலு பார்த்தசாரதி சுவாமி சபையின் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பாதியில் பாடலை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பாலுவின் குழுவில் டி. எம். எஸ். பாடல்களைப் பாடும் பாடி வாசு, பாலுவிற்குப் பிறகு இரண்டு பாடல்களைப் பாடினார். மேடையிலிருந்து உள்ளே வந்த பாலு தனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை உருவாயிற்று என்று புரியாமல் குழம்பினார்.
இரண்டு பாடல்கள் இடைவெளிக்குப் பிறகு மேடைக்கு வந்த பாலு, ரசிகர்களிடம் ‘நான் மீண்டும் பொட்டு வைத்த முகமோ’ பாடலைப் பாடப் போகிறேன்’ என்று கூறிவிட்டு பாட்டைப் பாட, பாடல் வெகு நேர்த்தியாக அமைந்தது. ரசிகர்களும் அமோகமாகக் கைதட்டி ஆரவாரம் செய்து பாலுவை உற்சாகப் படுத்தினார்கள்.
அதற்குப் பிறகு ஆயிரக் கணக்கான கச்சேரிகள் நடந்து விட்டன. இன்றுவரை அது மாதிரி ஒரு சம்பவம், பாலுவின் கச்சேரிகளில் நடைபெற்றதேயில்லை. அதேபோல், அன்று அந்தக் கச்சேரியில் அப்படி நடந்ததற்குக் காரணமும் புரியவில்லை.
கல்லூரி மாணவராக இருந்து, படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் பாடகரான பாலு கல்லூரியில் கச்சேரி செய்ய வேண்டுமானால், இன்று மிகவும் கவனமாக நடந்து கொள்வார்.
கல்லூரியில் படிக்கும் இளநெஞ்சங்களின் உள்ளங்களை நன்கு அறிந்தவர் பாலு. ஒரு சமயம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம். ஐ. டி. (மெட்ராஸ் இன்ஸ்டியூட் அப் டெக்னாலஜி) மாணவர்கள் தினத்திற்கு கச்சேரி செய்ய ஒப்புக் கொண்டிருந்தார். பாலு சினிமாவில் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம்.
கச்சேரியன்று, பாலுவின் குழுவில் பாடிக் கொண்டிருந்த திருமதி சசிரேகாவிற்கு ஒரு சினிமா பாடல் பதிவு ஜெமினி ஸ்டுடியோவில் இருந்தது. பாலு தன்னுடைய இசைக் குழுவை இளையராஜாவின் தலைமையில் அனுப்பி விட்டு சசிரேகாவை உடன் அழைத்துக் கொண்டு ஜெமினி ஸ்டுடியோவுக்குச் சென்றார் பாலு.
சினிமா பாடல் பதிவு என்பது சில சமயங்களில் பத்து பதினைந்து டேக்குகள் கூட எடுக்கும். இந்தக் காலத்தில் உள்ளபடி தனித்தனியாக இசையைப் பதிவு செய்து கொள்ளக் கூடிய கருவிகள் அப்போதில்லை. அதனால் ஒரு வாத்தியம் வாசிப்பவர் தவறு செய்தாலும் மீண்டும் முதலிலிருந்துதான் தொடங்க வேண்டும் அன்று அப்படிப்பட்ட சில தவறுகள் காரணமாக ரிக்கார்டிங் இரவு 7.30 மணிக்குத்தான் முடிந்தது.
பாலு எம். ஐ. டி. போய்ச் சேரும்போது மணி இரவு 8.15. மாணவர்கள் கோபத்திலிருந்தார்கள். அவர்களை விட மேலும் அதிகமான கோபத்தோடு பாலுவை வரவேற்றார் இளையராஜா. மேடைக்குச் சென்றார் பாலு பல திக்குகளிலிருந்து காகித அம்புகள் பறந்தன. மாணவர்களின் நியாயமான கோபத்தை மதித்து மெளனமாக இருந்தார் பாலு. ஒரு மாணவன் ஒரு முழு அப்பிளைத் தூக்கி பாலுவை நோக்கி எறிய, பாலுவிற்கு பள்ளி நாட்களில் விளையாடிய கிரிக்கெட் உதவி செய்தது.
அப்பிளை கெட்ச் பிடித்தார். பாலுவின் இந்தச் செய்கைக்கு மாணவர்களிடமிருந்து ஒல்ரவுண்ட் கைதட்டல் கிடைத்தது. உடனே பாலு மைக்கில் ‘இசை நிகழ்ச்சிக்குப் பிறகு டின்னர் சாப்பிடும் நேரத்திற்குத் தான் நான் வந்திருக்கிறேன். நான் பசியோடுதான் இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டு என்னுடைய நண்பர் எனக்கு அப்பிளைக் கொடுத்திருக்கிறார்.
அதற்கு நன்றி இதைச் சாப்பிட்டுவிட்டு அனைவரும் போதும் போதும் என்று சொல்லும் வரை பாடுகிறேன்’ என்று கூறி அப்பிளைக் கடித்துச் சாப்பிட நிலைமை சற்று அடங்கியது. அவ்வளவுதான் அன்று இரவு பன்னிரண்டு மணி வரை பாலுவும், அவர் இசைக் குழுவும் பாடி மாணவர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தனர். கச்சேரி முடிந்ததும் அப்பிள் வீசிய மாணவர் பாலுவைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டார். அதற்கு பாலு என்ன சொன்னார் தெரியுமா?
தம்பி நீங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க, அப்பிள் அடிப்பதோடு நிறுத்திக் கொண்டீங்க. உங்கள் கோபத்தில் அப்பிளுக்குப் பதிலாக கல்லை எறிந்தால் கூட நான் உங்களிடம் கோபித்துக் கொண்டிருக்க முடியாது.’
அன்றிலிருந்து இன்றுவரை மாணவர்களுக்காக நடக்கும் கச்சேரி என்றால் பாலு குறித்த நேரத்தில் வந்துவிடுவார். மற்றொரு முறை மாணவர்கள் மத்தியில் மறக்க முடியாத சண்டை செய்துள்ளார் பாலு. சண்டை யாருடன் தெரியுமா?
பிரபலமான இயக்குநர் பாரதிராஜாவுடன் தான் சண்டை. நடந்த இடம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் விடுதி. ‘பாரதிராஜாவுக்கும், எஸ். பி. பி.க்கும் சண்டை வருவானேன்?’ என்கிaர்களா?

உன்னை நான் சந்தித்தேன்


உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்
பொன்னைத்தான் உடல் என்பேன் சிறு
பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை மணந்தேன் தொட்ட
கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்
எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
கொண்ட நாணத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்

Tuesday, November 12, 2013

சாரதாவை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சிவாஜிகணேசன்

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை (ஊர்வசி பட்டம்) மூன்று முறை பெற்றவர் நடிகை சாரதா.
இவரை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், சிவாஜிகணேசன். சாரதாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் தெனாலி ஆகும். தந்தை வெங்கடேசலு. தாயார் சத்தியவதிதேவி. சாரதா ஆந்திராவில் பிறந்தாலும், வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஆந்திராவில் 8 ஆம் வகுப்பு வரை படித்தார்.
சாரதா சிறுமியாக இருந்தபோதே பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். 1956 ஆம் ஆண்டு என். டி. ராமராவ் நடித்த ‘கன்னியாசுலகம்’ என்ற படத்தில் சிறுமி வேடத்தில் நடித்தார். அதன் பின்னர் ‘ரத்தக்கண்ணீர்’ என்ற தெலுங்கு நாடகத்தில் நடித்தார்.
தனது 14 வது வயதில் 100 க்கும் மேற்பட்ட நாடகங்களில் கதாநாயகியாக நடித்தார். 1961 ஆம் ஆண்டு நடிகர் நாகேஸ்வரராவின் சொந்த படக் கம்பெனியான அன்னபூர்ணா பிக்சர்ஸ் மூலம் ‘இத்தரு பித்ருலு’ (இரு நண்பர்கள்) படத்தில் தங்கை வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்தார்.
இது பற்றி சாரதா கூறியதாவது :-
‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் கலைத்துறையில் ஈடுபாடு இல்லை. சங்கீதம், நாட்டியம் ஆகியவற்றை எனக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் என் தாயாருக்கு இருந்ததால், 6 வயதில் பரத நாட்டியம் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு 13 வயதில் நாடகத்தில் எப்போதாவது ஒரு முறை நடித்து வந்தேன்.
சென்னைக்கு வந்தபின், படங்களில் சிறுமி வேடத்தில் நடிக்க ஆரம்பித்தேன். ஒரு முறை ‘அனார்கலி’ என்ற படத்தில் அஞ்சலிதேவி நடித்துக்கொண்டு இருந்தபோது அவரை சந்தித்தேன். தன் தலையில் இருந்த கிரீடத்தை, என் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தார் சிறந்த நடிகராக வர வேண்டும் என்று வாழ்த்தினார்.
என் தாயாரின் முயற்சியால்தான் நான் கலைத்துறைக்கு வந்தேன். இல்லையென்றால் கலைத்துறைக்கு வந்து இருக்க முடியாது. எல். வி. பிரசாத், புதுமுகங்களுக்கு பயிற்சி கொடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்.
நானும் அங்கு சினிமாவில் நடிக்க பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு நாகேஸ்வரராவ் படத்தில் தங்கை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.’
இவ்வாறு சாரதா கூறினார்.
இந்த நிலையில் ‘திப்பதி’ என்ற தெலுங்கு நாடகத்தில் நடிகை சாரதா நடித்து வந்தார். ஒரு நாள் அந்த நாடகத்திற்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.
நாடகத்தில் சாரதாவின் நடிப்பு அற்புதமாக இருந்ததை, சிவாஜி கவனித்தார். நாடகத்தில் மிகவும் சிறப்பாக நடித்த சாரதாவை, தமிழ்ப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சிவாஜி முடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த ‘குங்குமம்’ என்ற படத்தில் சாரதா இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை விஜயகுமாரியும் நடித்தார்.
கிருஷ்ணன் பஞ்சு டைரக்டர் செய்தனர். அதனைத் தொடர்ந்து ‘துளசிமாடம்’, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ போன்ற படங்களில் சாரதா நடித்தார். 1972 ஆம் ஆண்டில் மாதவன் இயக்கத்தில் ‘ஞானஒளி’ படத்திலும் 1978 ஆம் ஆண்டு ராமண்ணா டைரக்ஷனில் ‘என்னைப்போல் ஒருவன்’ படத்திலும், சிவாஜியுடன் சாரதா மிகவும் சிறப்பாக நடித்து புகழ் பெற்றார்.
சிவாஜியுடன் நடித்தது பற்றி சாரதா கூறியதாவது :-
‘திருப்பதி நாடகத்தில் நான் நடித்துக் கொண்டிருந்த போது, அந்த நாடகத்திற்கு சிவாஜி தலைமை தாங்க வந்தார். நாடகத்தில் எனது நடிப்பை பார்த்து ‘குங்குமம்’ படத்திற்கு தயாரிப்பாளரிடம் கூறி, எனக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்தார்.
அப்போது எனக்கு கெரக்டர் நடிப்பை சொல்லிக் கொடுத்தார். எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜியிடம் கற்றேன். ‘குங்குமம்’ படத்தில் அவருடன் முதன் முதலில் நடிக்க செல்வதற்கு முன்பு ரொம்பவும் பயந்தேன்.
அதற்கு சிவாஜி, ‘நான் என்ன புலியா, சிங்கமா? நானும் மனிதன்தானே! எதற்காக பயப்படுகிறாய்!’ என்றார். அதன் பிறகுதான், எனக்கு பயம் போய் தைரியம் வந்தது நடிப்பில் ஆர்வம், இருப்பவர்களுக்கு சிவாஜி நடிப்புச் சொல்லி தருவார்.
ஆர்வம் இல்லாதவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்! நடிப்பதற்கு முன்பு ‘இந்த கெமரா கோணத்தில் இப்படி நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று சொல்லித் தருவார்’ இவ்வாறு நடிகை சாரதா கூறினார்.

பாலு அன்று பறக்கவிட்ட பாட்டுக்கொடி இன்றும் பாட்டொளி வீசி பறக்கிறது

சோதனைகளைச் சந்தித்து துவண்டுவிடாமல் போராடி வெற்றி பெறுபவர்கள் மட்டுமே சாதனைகள் பலவற்றைச் செய்கிறார்கள்.
இது சரித்திரம். நமக்குச் சொல்லும் உண்மை. இந்த உண்மை சினிமா உலகத்திற்கு அதிகமாகப் பொருந்தும் திறமையிருந்தும் வாய்ப்பில்லாத ஏராளமானவர்கள் நம்பிக்கையுடன் போராடும் இடம் சினிமா உலகம். காரணம், என்றாவது முன்னுக்கு வந்தால் பணத்தோடு புகழும் கிடைக்கும். இதைக் கனவுத் தொழிற்சாலை என்று பலரும் அழைக்கிறார்கள்.
சினிமா உலகில் வெற்றி பெற்று நிலைத்து நிற்பவர்களின் சரித்திரத்தைப் பார்த்தால் அது நம்பிக்கையில் வாழும் தொழிற்சாலை என்பது புரியும். என்றாவது ஒருநாள் சினிமா உலகின் சரித்திரத்தில் நாம் இடம்பெறுவோம் என்ற நம்பிக்கையோடு சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு சினிமா உலகில் வளைய வருபவர்கள் இன்றும் பலர் உண்டு. இது போன்ற சோதனைகள் பலவற்றைச் சந்தித்த அனுபவம் எஸ். பி. பிக்கு உண்டு. அதில் ஒரு மிகப் பெரிய சோதனைதான் தெலுங்குப்பட உலகில் ஏற்பட்டது.
நடிகர் கிருஷ்ணாவைச் சந்தித்ததிலிருந்து புத்துணர்ச்சி பெற்ற பாலு என். டி. ஆர். ஏ. என். ஆர். ஆகியோருக்குப் பாட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதே நேரத்தில் மாபெரும் இசை மேதை கண்டசாலா மாதிரி பாடவும் அவருடைய மனம் இடம் தரவில்லை. தன் குரலிலேயே என்.டி. ஆர். ஏ. என். ஆர். ஆகியோருக்குப் பொருந்தும் மாதிரி பாட முடிவெடுத்தார் பாலு.
ஏ. என். ஆர். என். டி ஆர். நடித்த படங்களை, சமயம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க ஆரம்பித்தார் பாலு. இரு பெரும் நடிகர்களும் ஒரு குறிப்பிட்ட டைமிங்கில் பேசுவதைக் கவனித்தார்.
நடிப்புத் துறையில் எல்லாவற்றுக்கும் ஷ¤ட்டிங்கிற்கும் டைமிங்குந்தான் முக்கியம். சண்டைக் காட்சிகளில் அடிபடாமலே சண்டை போட டைமிங் முக்கியம். இதே மாதிரி பாடல் காட்சிகளில் பின்னணிக் குரலுக்கேற்ப வாயை அசைக்க டைமிங் தேவை. எல்லாத் துறைகளிலும் டைமிங் இல்லாமல் இருக்க முடியாது. சினிமாத்துறையில் வெற்றிபெற டைமிங்கோடு நல்ல டைமும் தேவை.
பாலுவின் எண்ணத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு பாடல் காட்சியும் வந்தது. அவர் அந்த இயக்குநரிடம் தன் எண்ணத்தைக் கூறி சம்மதம் வாங்கி, பாடலைப் பாடினார். பாடல் அமோகமாக வெற்றி பெற்றது. பார்த்தவர்கள் பாலு பாடுவதாகவே நினைக்கவில்லை. ஏதோ நாகேஸ்வரராவ் பாடுவதாகவே நினைத்தார்கள். இன்றளவும் பாலு ஏ. என். ஆர். அவருடைய மகன். எல்லோருக்கும் பாடி வருகிறார். இது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று கருதுகிறார். அன்று பறக்கவிட்ட பாலுவின் பாட்டுக்கொடி இன்றும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டுதான் இருக்கிறது.
தெலுங்குப் பட உலகைப் பிடித்த பாலு தன் பார்வையை தமிழ்ப்பட உலகை நோக்கித் திருப்பினார்.

எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறுகுறிப்புகள்

எம்.ஜி.ஆர். பற்றி சுவையான சிறுகுறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும் சில.
எம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி (1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜீ.ஆர். அத்தனையும்என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம்.
எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என். ஜானகி.
எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா.... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்.
சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்.
முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் iட்டிங் போக முடியாது என்பதால் பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.
‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி. ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.
நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ். வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்.
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர். கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம். ‘மலையக்கள்ளன’ ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது.
காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான் உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரி¨மைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது.
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மூன்றும் எம்.ஜி.ஆர். டைரக்ஷ்ன் செய்த படங்கள்.
னிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம் அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்.
எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரை முருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா.
தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான் அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிடங்களுக்கு ஒரு களைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்.
“பொன்னியின் செல்வன்” கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஆசை நிறைவேறவில்லை.
அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து “நான் எம்.ஜி.ராமச்சந்திரன் சினிமா நடிகர்” என்று அறிமுகம் செய்துகொள்வார்.
ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்.
ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே’ என்றுதான் அழைப்பார்.
அடி¨மைப் பெண் பட ஷ¥ட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைக் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர் நடிகர் எம்.கே. ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறைய பின்பற்றினார். எம்.ஜி.ஆர்.
முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி கண்ணாடி இருந்தாதான் கண்டுபிடிப்பாங்க போல” என்பாராம்.
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்.
“நான் ஏன் பிறந்தேன்” ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர். எழுதிய சுயசரிதைத் தொடர் அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய “எனது வாழ்க்கை பாதையிலே” தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றுப் பெறவில்லை அவர் பெருமைகள்.

உலக சினிமா

* நியூயோர்க்கில் உள்ள ‘§டியோ சிட்டி மியூசிக் ஹால்’ என்ற சினிமா தியேட்டரே உலகில் மிகவும் பெரியது. இதில் ஒரே சமயத்தில் 6400 பேர் உட்கார்ந்து சினிமா பார்க்கலாம்.
* மறைந்த தயாரிப்பாளர் ‘சாண்டோ சின்னப்பதேவர்’ தான் தயாரிக்கும் படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் தன் முகத்தைக் காண்பிக்காமல் இருக்கமாட்டார். இவரைப் போல மயிர்க்கூச்செறியும் மர்மப் படங்களைத் தயாரித்து உலகப் புகழ்பெற்ற ‘ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்’ கிற்கும் இந்தப் பழக்கம் உண்டு. தான் தயாரிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வினாடியாவது தம் தலையை நீட்டி வைப்பார்.
அவர் தயாரித்த ‘லைட் போட்’ என்ற படத்தில் ஒன்பது நடிகர்களுக்கு மட்டுமே பங்கு இருந்தது. அவரது வழக்கப்படி தன் த¨லையைக் காண்பிப்பதற்கு அந்தப் படத்தில் இடம் இல்லாதிருந்தது.
ஹிட்ச்காக் தமது வழக்கமான ஆசையை இந்தப் படத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்றே அனைவரும் கருதியிருந்தார்கள். ஆனால் படத்தின் கடைசிக் கட்டத்தில் நடிகர் ஒருவர் பத்திரிகையைப் பார்க்கும் காட்சி வந்தது. அந்தப் பத்திரிகையில் ஒரு விளம்பரம் காணப்பட்டது. அந்த விளம்பரத்தில் ‘ஹிட்ச்காக்’ படம் இடம்பெற்றிருந்தது.
* பக்திப் படங்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில் ஒரு குருமகா சந்நிதானத்தின் (சாமியாரின்) அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்திக்கொண்டு வெளிவந்த தமிழின் முதல் படம் ‘சந்திரகாந்தா’ (கதை ஜே. ஆர். ரங்கராஜு : இயக்கம் பி. கே. ராஜா சாண்டோ, தயாரிப்பு ஜுபிடர் பிக்சர்ஸ்)
* பேரறிஞர் அண்ணா எழுதிய புகழ்பெற்ற நாடகங்களுள் ஒன்று ‘ஓர் இரவு’ இந்த நாடகம் திரைப்படமாக்கப்பட்டது. இதனை முதன் முறையாக ‘ப. நீலகண்டன்’ இயக்கினார். இப்படத்தில் ‘ஏ. நாகேஸ்வரராவ்’ முதன் முதலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிவந்த ஆண்டு 1951.
* ட்ரூமன் கேபார்ட் என்ற நாவலாசிரியர் எழுதிய சிறுகதையைப் படமாக்க ஐந்து இலட்சம் டொலருக்கு வாங்கினார் படத் தயாரிப்பாளர்.... இது இங்கிலாந்தில்....ஹிட்ச்காக் ஒரு கட்டுரையில் ‘சஸ்பென்ஸ்’ பற்றி இவ்வாறு கூறுகிறார். ‘சஸ்பென்ஸ்’ என்பது கொலை, கொள்ளைகள் நிறைந்த கதைகளில்தான் இடம்பெற வேண்டும் என்று சிலர் நினைப்பது பைத்தியக்காரத்தனமானது.
வெறும் காதல் மட்டுமே உள்ள கதையில்கூட சஸ்பென்ஸ் இருக்க முடியும். காதலர்கள் கடைசியில் ஒன்றாக இருக்கின்றார்களா... என்பதே ஒரு சஸ்பென்ஸ்தான் முடிவு என்னவாக இருக்கும் என்ற ஆவலை ரசிகர்களின் மனதில் ஏற்படுத்தக்கூடிய எல்லாக் கதைகளுமே ‘சஸ்பென்ஸ்’ கதைகள் தான்.
* ‘நல்ல தம்பி’ படத்திற்கு கதை வசனம் எழுதியதற்காக பேரறிஞர் அண்ணா கலைவாணர் என். எஸ். கேயிடம் எந்தவித சன்மானத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், என். எஸ். கே. அண்ணாவிற்கு ஒரு கார் வாங்கி கொடுத்திருந்தார். இந்தக் காரையே அண்ணா, கலைவாணர் கடைசி காலத்தில் கஷ்டப்படும்போது திரும்பிக் கொடுத்துவிட்டதான செய்தி பல ரசிகர்களுக்குத் தெரியாது.

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்.
நான் பாத்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்.
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்.
இடையோ இல்லை இருந்தால் முல்லைக்
கொடி போல் மெல்ல வளையும் சின்னக்
குடை போல் விரியும் இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப்
புன்னகை வருவதினாலே நிலவோ மலரோ எதுவோ
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ?
இந்தக் காதலி சுகம் பெறுவாளோ
கனவோ நனவோ எதுவோ?
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்.
பாடல்: நான் பார்த்ததிலே
திரைப்படம்: அன்பே வா
பாடியவர்: டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1966

Friday, November 1, 2013

பாலுவின் முதல் தமிழ் பாடல் இதுவரை வெளியாகவில்லை

“முதல் கோணல் முற்றும் கோணல்” என்ற பழமொழி பொய்யானது குறித்து மகிழ்ச்சி
nkல்லிசை மன்னரைச் சந்தித்த ஒரு வருடத்திற்குப் பின் அவரை மீண்டும் பாலு எங்கே சந்தித்தார் தெரியுமா? அது ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் நடந்த சந்திப்பு ஒரு தெலுங்கு பாடலை பாடிவிட்டு பாலு வெளியே வர, அதே ரெக்கார்டிங் தியேட்டரில் ஒரு பாடல் பதிவிற்காக மெல்லிசை மன்னர் உள்ளே நுழைந்தார். பாலு அவரைப் பார்த்து ‘விஷ்’ செய்ய தலையாட்டி அதை ஏற்றுக் கொண்டு உள்ளே போய்விட்டார் எம்.எஸ்.வி.
தன்னை எம்.எஸ்.வி. மறந்து விட்டார் என்று பாலு நினைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டு விட்டார். உள்ளே சென்ற மெல்லிசை மன்னர் திரும்பி வந்து பாலுவை கூப்பிட்டார். “தம்பி, நீதானே அன்னைக்கு ஸ்ரீதர் ஒபிசிலே என்னைப் பார்த்தே” என்றார்.
“ஆமாங்க” என்றார் பாலு
“அதுக்கு அப்புறம் ஏன் என்னை வந்து பார்க்கலே” என்றார் எம்.எஸ்.வி.
“நீங்கதான் என் தமிழை இம்பரூவ் பண்ணச் சொன்னீங்களே, அதுதான் உங்களை வந்து பார்க்கலை”
“இப்ப உங்கள் தமிழ் நல்லாத்தானே இருக்கு? நீங்க நாளைக்கே என்னை வந்து பாருங்க” என்று கூறிய எம்.எஸ்.வி. தன் உதவியாளர் நாராயணனைக் கூப்பிட்டார்.
“நாராயணா, இந்தப் பையனை நாளைக்கு கொம்போசிங் வரச்சொல்லு” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
மறுநாள் “ஹோட்டல் ரம்பா” என்ற படத்திற்காக கொம்போஸிங் நடந்தது. பாலுவும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு நாட்கள். கொம்போஸிங் நடந்தது. அடுத்த நாள் ரெக்காடிங் அது ஒரு ஜாலி டைப் பாடல். பாடல் நன்றாக வந்திருப்பதாக எல்லாம் கூறினார்கள். ஆனால் பாலு முதலில் பாடிய படம் இதுவரை வெளியாகவில்லை.
இதுபற்றி பாலுவிடம் கேட்டால், “என்னுடைய முதல் தமிழ் பாடல் இதுவரை ஏனோ வெளியாகவில்லை என்பது வருத்தம்தான் ஆனால் முதல் கோணல் முற்றும் கோணல் என்ற பழமொழி பொய்யானது குறித்து மகிழ்ச்சி, இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் கூட தன்னுடைய முதல் ரெக்கார்டிங் போது பவர்கட்டானது குறித்து என்னிடம் கூறியிருக்கிறார்.
பவர்கட்டானது கெட்ட சகுனமாக அவருக்கு அமையவில்லை அதே மாதிரி, என் முதல் பாடலும் வெளியாகாமல் போனது எனக்கும் கெட்ட சகுனமாக அமையவில்லை” என்கிறார். வாழ்க்கையில் எல்லாவற்றையும் லைட்டாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் பாலுவிற்கு என்றுமே உண்டு.
அடுத்து பாலு, மெல்லிசை மன்னரின் இசையில் “சாந்தி நிலையம்” படத்திற்காக “இயற்கையென்னும் இளைய கன்னி” என்ற பாடலை பி. சுசிலாவுடன் இணைந்து பாடினார். இந்தப் பாடல் வெளிவருவதற்கு முன்னரே “ஆயிரம் நிலவே வா” பாடல் வெளியாகி எஸ்.பி.பி.என்ற பெயர் (பிரபல்யமாகி விட்டது. இதற்கிடையில் 15 படங்களில் எல்லா முன்னணி நடிகர்களுக்கும் பின்னணி பாடிவிட்டார் பாலு.
தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆகிவிட்ட பாலு சொந்தமாக ஓர் இசைக்குழு நடத்த ஆரம்பித்தார். அவரது இசைக் குழுவில் ஆர்மோனியம் வாசித்தது இன்றைய இசைஞானி இளையராஜா அன்று அவருடைய பெயர் ‘ராஜ’தான். கங்கை அமரன் கிட்டார் வாசிக்க, அவரது சகோதரர் பாஸ்கர்... என்று அவரது குடும்பமே எஸ்.பி.பியுடன் இணைந்து பணியாற்றி வந்தது. சினிமா உலகில் பிரபல்யம் ஆன பின்பு எஸ்.பி.பி.க்கு நிறையக் கச்சேரிகள் கிடைத்தன.
அவர் பாடிய பாடல்கள் மட்டும் இல்லாமல் மற்ற பின்னணி பாடகர்களின் பாடல்களையும் எஸ்.பி.பி. மேடையிலே பாடிவந்தார். டி.எம்.எஸ். குரலுக்கு மட்டும் பாலுவின் நண்பர் “பாபு வாசு” என்பவர் பாடினார். அசல் டி.எம்.எஸ். மாதிரியே பாடக்கூடிய குரல்வளம் பெற்றவர் வாசு. பாலு புகழேணியின் உச்சிக்குச் சென்ற காலகட்டத்தில் ஒரு சமயம், ஒரு கார் விபத்தினால் வாசு பாடுவதை விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது, மேலும் பாலுவின் நல்ல நண்பர்களில் ஒருவராக வாசு திகழ்ந்தார்.
தமிழ்ப்பட உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட பாலுவிற்கு ஒரு சோதனைக் காலமும் வந்தது. மற்றொரு திறமையான பாடகராலேயே ஆனால், பாலுவின் கண்ணோட்டத்தில் அந்தப் பாடகர்தான் பாலுவுக்கு மிகவும் பிடித்த பாடகர். பாலுவிற்கு தமிழில் பாடல்கள் குறைய்க் காரணமாக இருந்த பாடகர் யார் தெரியுமா? எந்தப் பாடல் மூலம் இந்த நிலை உருவாயிற்று தெரியுமா? பாடலைச் சொன்னால் பாடகர் யார் என்று உங்களுக்கே தெரிந்துவிடும்.
பாலுவிற்கு ஒரு சவாலாக அமைந்த அந்தப் பாடல் எது? (தொடரும்)

தமிழ்த் திரையில் சாதனைப் பெண்கள் முதல் இயக்குநர் டி.பி.ராஜலட்சுமி

ஆண்களே ஆதிக்கம் செலுத்திய திரையுலகில் ஒரு பெண் இயக்குனராக வெற்றி பெறுவதென்பது இப்போதும் கூட சாதனைதான். எனில் அன்றைய காலகட்டத்தில் ஒரு பெண், திரைப்படத்தை இயக்குவது என்பது ஆண்கள் அனைவரும் மூக்கின்மேல் விரலை வைக்கும் செயல். அந்த செயலை செய்தவர் டி.பி. ராஜலட்சுமி.
இவர் தஞ்சை மாவட்டம் திருவையாற்றைச் சேர்ந்தவர். இசையும் நடனமும் பயின்ற அவர், நாடகக்காவலர் சங்கரதாஸ் சுவாமிகள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்து பெயர் பெற்றார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க அவர் முடிவெடுத்ததும், ஆச்சாரமான அவரது குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்ப, ராஜலட்சுமியை விவாகரத்து செய்தார் அவரது கணவர்.
மெளனப் படங்களை இயக்கிய ராஜாசாண்டோவின் இயக்கத்தில் உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய படங்களில் ராஜலட்சுமி நடித்தார். தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் (1931) படத்தில் நடித்த பெருமை ராஜலட்சுமிக்கு உண்டு. எல்லீஸ் ஆர்டங்கன் இயக்கத்தில் சீமந்திரி, கே. சுப்ரமணியம் இயக்கத்தில் பக்த குசேலா, டி.ஆர். ரகுநாத் இயக்கத்தில் பரஞ்ஜோதி எனத் தொடர்ந்து 20 படங்களுக்கு மேல் நடித்தார்.
தனது 20வது வயதில் டி.வி. சுந்தரத்தை காதல் மறுமணம் செய்தார் ராஜலட்சுமி. மல்லிகா என்ற ஆதரவற்ற பெண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்த அந்த இணையருக்கு, அதன்பின் பிறந்த குழந்தையின் பெயர் கமலா. அக்குழந்தை பிறந்த பிறகு 1936 இல் டி.பி.ராஜலட்சுமி இயக்குநரானார். படத்தின் பெயர் மிஸ் கமலா. இப்படம்தான் தமிழில் ஒரு பெண் இயக்குநர் இயக்கிய முதல் படம். அதன்பின் மதுரை வீரன் (எம்.ஜி.ஆர். நடித்தது அல்ல) என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். திரைத்துறையை பெண்களாலும் ‘ஆட்டிவைக்க’ முடியும் என நிரூபித்தவர் டி.பி. ராஜலட்சுமி.
முதல் சகலகலாவல்லி - பானுமதி:
அஷ்டாவதானி எனப் பெயர் பெற்றவர், நடிகை பானுமதி. ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர். அவரது அப்பா வெங்கடாச்சலய்யா கர்நாடக இசை அறிந்த மேடை நாடகக் கலைஞர். அதனால் சிறு வயதிலேயே பானுமதிக்கு பாட்டு, நடிப்பு ஆகியவற்றில் பயிற்சி கிடைத்தது. ‘வரவிக்ரயம்’ என்ற தெலுங்கு படத்தில் 1938 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார் பானுமதி. தமிழ்ப் படங்களிலும் அவருடைய நடிப்பாற்றல் வெளிப்பட்டது. தமிழிலும் தெலுங்கிலும் எடுக்கப்பட்ட ‘தர்மபத்தினி’ என்ற படம் மூலம் தமிழக ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பானுமதி.
நாகேஸ்வரராவுடன் லைலா மஜ்னு, அறிஞர் அண்ணா வசனத்தில் கலைவாணர் என்.எஸ்.கே. எடுத்த நல்லதம்பி, எம்.கே. ராதாவுடன் அபூர்வ சகோதரர்கள், பி.யு. சின்னப்பாவுடன் ரத்னகுமார் போன்ற படங்களில் நடித்த பானுமதி, 1953 இல் சண்டிராணி என்ற படத்தை இயக்கினார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை கதை, கலைஞர் மு. கருணாநிதியின் வசனம், நாயகனாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த மெகாஹிட் படமான மலைக்கள்ளனில் பானுமதிதான் நாயகி.
சிவாஜியுடன் கள்வனின் காதலி படத்தில் முதன் முதலில் ஜோடி சேர்ந்த பானுமதி அதன் பிறகு எம்.ஜி.ஆருடன் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரைவீரன், நாடோடி மன்னன், தாய்க்குப்பின் தாரம், ராஜாதேசிங்கு, கலையரசி, காஞ்சித்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சிவாஜியுடன் ரங்கோன்ராதா, மக்களைப் பெற்ற மகராசி, அம்பிகாபதி, ராணி லலிதாங்கி, ராஜபக்தி, அறிவாளி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சதாரம், அன்னை உள்ளிட்ட பல படங்களில் அவருடைய நடிப்பு முத்திரை பதித்தது. பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த போதும் பானுமதிக்கு படங்களில் தனி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் அளிக்கப்பட்டு வந்தன. தங்களுக்கு ஜோடி பானுமதி என்றால் பெரிய நடிகர்கள் கூட சற்று அச்சத்துடன் சில அடிகள் தள்ளி நின்றே நடிப்பார்கள்.
நடிப்பில் ஹீரோக்களுடன் போட்டிபோட்ட பானுமதி, தனித்துவம் கதாநாயகர்களுடன் சேர்ந்தும் சொந்தக் குரலில் பாடியும் வந்தார். (எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நாயகர்களுக்குப் பாடல் காட்சிகளில் பின்னணிக் குரல்தான்) ‘அழகான பொண்ணு நான்.. அதற்கேற்ற கண்ணு தான்...’ ‘மாசிலா உண்மைக்காதலே....’, ‘ஆஹா நம் ஆசை நிறைவேறுமா....’ ‘ஆசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ’ ‘சம்மதமா நான் உங்கள்கூட வர சம்மதமா’.... என அவர் பாடிய பல தமிழ்ப்பாடல்கள் இன்றும் நம் காதுகளுக்கு சுகம் தரும்.
1986 இளையராஜாவின் இசையில் ‘கண்ணுக்கு மை எழுது’ என்ற படத்தில் ‘வாடா மல்லியே நான் சூடா மல்லியே’ என்ற பாடலைப் பானுமதி பாடினார். 1992 இல் ‘செம்பருத்தி’ படத்திலும் இளையராஜா இசையில் ‘செம்பருத்திப் பூவு.. சித்திரத்தைப் போல’ என்ற பாடலை பாடினார் பானுமதி. தெலுங்கில் சில நடிகைகளுக்கும் பானுமதி பின்னணி பாடியுள்ளார்.
படங்களை இயக்கியதுடன் இசையமைப்பாளராகவும், படத்தொகுப்பாளராகவும் (எடிட்டர்) பானுமதி செயல்பட்டார். அதனால்தான் அவரால் தொடர்ச்சியாக சொந்தப் படங்களைத் தயாரிக்க முடிந்தது. நாயகியாக நடிப்பது குறைந்த பிறகும் தனக்குப் பிடித்த கதைகளை அவர் இயக்கி வந்தார்.
குழந்தைகளுக்காக அவர் இயக்கிய ‘பத்த துருவ மார்க்கண்டேயா’ என்ற படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. கதை எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்து தெலுங்கில் (நாலு நேனு) தனிப்புத்தகமே எழுதி அதற்காக தேசிய விருதும் பெற்றவர் பானுமதி. 2003இல் அவருக்கு பத்மபூஷன் விருதை இந்திய அரசு வழங்கியது. தமிழ்த் திரையுலகின் (தென்னகத் திரையுலகின்) சகலகலாவல்லி பானுமதி.
முதல் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி:
தமிழ்த் திரையுலகின் முதல் கனவுக்கன்னி, டி.ஆர்.ராஜகுமாரி. முகப்பொலிவும் பேசும் கண்களும் பல ரசிகர்களின் தூக்கத்தைக்கெடுத்தன. தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயிதான் திரையுலகில் டி.ஆர். ராஜகுமாரி எனப் புகழ்க்கொடி நாட்டியவர். நடனமும் பாட்டும் அறிந்த ராஜகுமாரி அறிமுகமான படம், குமார குலோத்துங்கன்.
1931 இல் வெளியான அப்படம், அப்படியொன்றும் வெற்றிபெறவில்லை. தமிழ்த் திரையுலகம் தனது முதல் கனவுக்கன்னியை அடையாளம் காண மேலும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1941 இல் வெளியானது ‘கச்ச தேவயானி’ கே. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளியான இப்படம் ராஜகுமாரிக்கு பெயரையும் ரசிகர்களுக்கு தங்கள் மனதில் குடியிருக்க ஒரு நடிகையையும் தந்தது.
அடுத்து வந்தது தமிழின் மெகாஹிட்டான ‘ஹரிதாஸ்’, தியாகராஜ பாகவதருடன் டி.ஆர்.ராஜகுமாரி ஜோடி ‘:wsஜி நடித்த இப்படத்தில்தான் ராஜகுமாரியின் முழுப் பரிமாண நடிப்பும் அழகும் வெளியிடப்பட்டன. 1944 இல் வெளியான இப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்ட பெருவெற்றிப்படம். அதில் இடம் பெற்ற ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாட்டிற்கு பாகவதருடன் ஜோடி சேர்ந்து கலக்கியிருந்தார் டி.ஆர்.ராஜகுமாரி.
அன்றைய முன்னணி நாயகர்களான பி.யு. சின்னப்பா டி.ஆர். மகாலிங்கம் ஆகியோருடன் நடித்த ராஜகுமாரி அடுத்த தலைமுறை நாயகர்களான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜி ஆகியோருடனும் நடித்தார். கலைஞரின் திரைக்கதை வசனத்திலும் சிவாஜியின் அபார நடிப்பினாலும் உருவான ‘மனோகரா’ படத்தில் வில்லி பாத்திரமான வசந்த சேனையாக நடித்தவர் டி.ஆர். ராஜகுமாரி. எம்.ஜி.ஆருடன் குலேபகாவலி போன்ற படங்களில் நடித்தார்.
காலமாற்றத்தால் புதுபுது நாயகிகள் திரையுலகில் கொடிநாட்டியபோது, டி.ஆர். ராஜகுமாரி தன் சகோதரரும் இயக்குநருமான டி.ஆர். ராமண்ணாவுடன் இணைந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் என்ற அவர்களது பட நிறுவனத்தின் முதல் தயாரிப்பு, 1953 இல் வெளியான வாழப்பிறந்தவன். அடுத்த ஆண்டில், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சேர்ந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’யைத் தயாரித்தனர். படம் வெற்றிபெறவில்லை. எனினும் குலேபகாவலி, பாசம், பெரிய இடத்துப்பெண், பணம் படைத்தவன், பறக்கும்பாவை என எம்.ஜி.ஆரை வைத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களைத் தயாரித்தார். டி.ஆர். ராஜகுமாரி கடைசியாக நடித்த படம், ‘வானம்பாடி’ சென்னை தியாகராய நகரில் அவர் பெயரிலேயே ராஜகுமாரி என்ற திரையரங்கத்தையும் கட்டினார்.
ரசிகர்கள் பலரின் கனவுக்கன்னியாக இருந்த டி.ஆர். ராஜகுமாரி தனக்கான வாழ்க்கை நாயகனைத் தேர்ந்தெடுக்கவேயில்லை. தனிமையிலேயே வாழ்ந்த அவர் 1999 ஆம் ஆண்டு தனது 77வது வயதில் காலமானார். அவருடைய கடைசிக்காலங்களில் யாரையும் சந்திக்கவில்லை. அவரது புகைப்படமும் வெளிவராமல் பார்த்துக்கொண்டார். இறக்கிவைக்க முடியாத சோகத்துடன் முடிந்து போனது அந்த கனவுக் கன்னியின் வாழ்வு.

உலக சினிமா

* இந்திப்பட உலகின் புகழ்பெற்ற இயக்குனர் வி. சாந்தாராம். இவர் தனது பிரபாத் ஃபிலிம் கம்பெனியில் தயாரித்த படம் - ‘சீதா கல்யாணம்’, வெளிவந்த ஆண்டு 1933. மொழி தமிழ்.
* 1949 ஆம் ஆண்டு ‘மனதேசம்’ என்ற படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தாலும், 1950 ஆம் ஆண்டு கதாநாயகனாக ‘பாதாள பைரவி’ மூலம் அறிமுகமானவர் ‘என்.டி.ராமாராவ்’.
* 1938 ஆம் ஆண்டு ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ‘தக்ஷயாகம்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆர். ஏற்று நடித்த வேடம் என்ன தெரியுமா? ‘மகா விஷ்ணு’.
* தான் விரும்பியவனை திருமணம் செய்து கொள்ள பெண்ணுக்குள்ள சுதந்திரத்தை உரிமையை முழக்கிய தமிழகத்தின் ஆரம்பகால கலைப் படைப்புகளில் முதன்மையானது ராஜா சாண்டோ தயாரித்தளித்த படம் ‘அனாதைப் பெண்’. ராஜா சாண்டோ மெளனப் படங்களில் நடித்து இந்தியாவில் புகழ்பெற்ற புதுக்கோட்டை தமிழர் ஆவார்.
* சென்னை நகரில் ‘சீனிவாசா சினிடோன்’ என்ற ஸ்டுடியோவை ஏ. நாராயணன் என்பவர் உருவாக்கினார். இதற்கு மற்றொரு பெயரும் உண்டு ‘சவுண்ட் சிட்டி’ உருவான நாள் 1.4.1934. அந்தஸ்டுடியோவில் தயாரித்த படம் “ஸ்ரீநிவாச கல்யாணம்”.
* சேத்துப் பட்டில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உருவான இந்த ஸ்டுடியோவில் ஏ. நாராயணனின் துணைவியார் மீனா நாராயணன் ஒலிப்பதிவாளராகப் பணிபுரிந்தார்.
* திரைப்படங்களில் அந்த காலத்தில் இயக்குனர் பெயரும், கம்பெனி பெயரும் மட்டுமே காட்டப்பட்டு வந்தன. நடிகர் நடிகைகளின் பெயர்களையும் இந்தியப் படங்களில் முதன் முதலில் வெளியிடச் செய்தவர் ‘ராஜா சாண்டோ’ ஆவார்.
* 1923 ஆம் ஆண்டில் சென்னையில் ‘கோவர்த்தனா’ என்ற ஆய்வுக்கூடம் (ழிaboratory) ஆர்.எஸ். பிரகாஷ் என்பவரால் முதன் முதலில் நிறுவப்பட்டது.
* சினிமாச் செய்திகளை வெளியிடுவதற்காக முதன் முதலாக ‘மூவி மிரர்’ என்ற பத்திரிகை 1927 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆசிரியர் ‘எஸ்.கே. வாசகம்’ ஆவார்.
* 1917 ஆம் ஆண்டு நடராஜ முதலியாரால் தயாரிக்கப்பெற்ற ‘திரெளபதி வஸ்திராபகரணம்’ என்ற திரைப்படத்தில் திரெளபதியாக நடிப்பதற்கு எந்த தமிழ்ப் பெண்ணும் நடிக்க முன்வராத காரணத்தால் மேலை நாட்டைச் சார்ந்த வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவரால் நடிக்கப்பெற்றுக் காட்சி படமாக்கப்பட்டது.
* திரைப்படத்தில் ஆண் வேடத்தில் நடித்த முதல் பெண்மணி ‘கே.பி. சுந்தராம்பாள்’ ஆவார். அதேபோல் ஒரு இலட்சம் ரூபாய் நடிப்பு ஊதியம் பெற்ற முதல் தமிழ்க் கலைஞர் என்கிற பெருமையையும் இவரே பெறுகிறார்.
* 1936 ஆம் ஆண்டில் ‘ராஜா தேசிங்கு’ என்னும் முதல் சரித்திரப் படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது.
* 1937 ஆம் ஆண்டில் சேலம் மொடர்ன் தியேட்டர்ஸின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சதி அகல்யா’ தயாரித்து வெளியிடப்பட்டது.
* ஏ.வி. மெய்யப்ப செட்டியார் (ஏ.வி.எம்) தயாரித்த ‘நந்தகுமார்’ 1938 இல் வெளிவந்தது. இப்படத்தில் தான் ‘டி.ஆர்.மகாலிங்கம்’ முதன் முறையாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில்தான் முதன் முறையாக சொந்தக் குரலில் பாடாமல் பின்னணி பாடலுக்கு வாயசைக்கும் முறை புகுத்தப்பட்டது.

Friday, October 18, 2013

வரலாறு படைத்த தமிழ்க் கலைஞர்கள்: இரட்டையர்கள் கிருஷ்ணன் பஞ்சு

திரைக்கு வந்து 60 ஆண்டுகளாகியும் இன்றும் பேசப்படும் தமிழ்ப் படங்களின் வரிசையில் பராசக்தியையும் ரத்தக் கண்ணீரையும் தவிர்க்கவே முடியாது. முதல் படத்திற்கு கலைஞர் திரைக்கதை வசனம், இரண்டாவது படத்திற்கு திருவாரூர் தங்கராசு கதை - வசனம், பராசக்தியில் சிவாஜி தன் அபார நடிப்பினாலும் வசன உச்சரிப்பாலும் அசத்தினார்.
ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதா தனக்கேயுரிய நக்கல் - நையாண்டி நடிப்பால் கலக்கினார். இவர்களைப் பற்றியெல்லாம் நிறைய பேசப்படுகின்றன. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் தமிழ்த் திரையுலகின் இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன், பஞ்சு. அதிகம் பேசப்படாத சாதனையாளர்களில் இவர்கள் இருவரும் அடக்கம்.
பஞ்சு என்கிற பஞ்சாபகேசனுக்கு சொந்த ஊர் கும்பகோணம். பிராமண சமுதாயத்தில் பிறந்த இவர், தனது பூணூலைக் கழற்றி காவிரி ஆற்றில் எறிந்து விட்டு முற்போக்கான சிந்தனைகளுடன் செயல்பட்டவர். அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழ்த் திரைப்பட இயக்கத்தின் முன்னோடியான ராஜா சாண்டோவிடம் உதவியாளராகச் சேர்ந்து, எடிட்டிங் பயிற்சியும் பெற்றார். அப்போது கோவை கந்தன் ஸ்டுடியோவில் (பின்னர் இது பட்சிராஜா ஸ்டுடியோ எனப் பெயர் பெற்றது) லெபராட்டரியில் கிருஷ்ணன் பணியாற்றி வந்தார். பஞ்சுவும் கிருஷ்ணனும் நண்பர்களானார்கள்.
மனுநீதி சோழன் கதையை ‘ஆராய்ச்சி மணி’ என்ற பெயரில் ராஜா சாண்ட்டோ இயக்கினார். அதில் பசுமாடு அழுதுகொண்டே மணி அடிப்பது போன்ற காட்சி சரியாக எடுக்கப்பட முடியாமல் இருந்தது. இதைக் கவனித்த பஞ்சுவும் கிருஷ்ணனும் ராஜாசாண்டோவிடம் இதை இப்படி எடுக்கலாமே என ஆலோசனைகள் சொன்னார்கள்.
சொல்வதைவிட செய்துகாட்டுவதே சிறந்தது என்று அவர்களிடம் சொன்ன ராஜாசாண்ட்டோ அவர்களையே அந்தக் காட்சியை எடுக்கச் சொன்னார். மிகச் சிறப்பாக எடுத்து அருமையாக எட்டிங் செய்து தந்த இருவரையும் பாராட்டியதுடன், தான் இயக்கவிருந்த ‘பூம்பாவை’ என்ற படத்தையும் அவர்கள் இருவரையுமே இயக்கச் சொன்னார் ராஜா சாண்டோ. இயக்குநர்கள் கிருஷ்ணன். பஞ்சு உருவான பின்னணி இதுதான்.
பூம்பாவை படம் 1944 இல் வெளியானது. கே.ஆர். ராமசாமி, ஜீவரத்னம், கலைவானர், டி.ஏ. மதுரம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கலைவாணர் என்.எஸ்.கே. சிறையில் இருந்த போது அவரது குழுவினரின் நலனுக்காக ‘பைத்தியக்காரன்’ என்ற படத்தை இயக்கினார்கள் கிருஷ்ணனும் பஞ்சுவும். எஸ்.வி. சகஸ்ரநாமம், எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் நடித்த இப்படம் வெளியாவதற்கு முன்பு கலைவாணர் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவரையும் நடிக்க வைத்து படத்தை வெளியிட்டனர். அண்ணாவின் கதை வசனத்தில் கலைவாணர் தயாரித்து நடித்த ‘நல்லதம்பி’ படமும் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் வெளிவந்தது.
குலதெய்வம், தெய்வப்பிறவி, உயர்ந்த மனிதன், சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும், பெற்றால்தான் பிள்ளையா, எங்கள் தங்கம் போன்றவை இந்த இரட்டையர்கள் இயக்கிய முக்கியமான படங்களாகும். இவற்றில் சில படங்கள் இந்தியிலும் எடுக்கப்பட்ட போது அவற்றையும் இந்த இரட்டையர்களே டைரக்ட் செய்தனர்.
கதை - திரைக்கதையை சீராக அமைப்பதில் கிருஷ்ணனும், படப்பிடிப்பு படத்தொகுப்பு பணிகளை சிறப்பாக கவனிப்பதில் பஞ்சுவும் கெட்டிக்காரர்கள்.
இருவரும் தங்கள் பணியை சரியாகப் பகிர்ந்த கொண்டு தொடர்ந்து படங்களை இயக்கினார்கள். இருவரும் சேர்ந்து சுமார் 50 படங்களை இயக்கியுள்ளனர். 1984 இல் பஞ்சு தனது 70வது வயதில் உடல் நலமின்றி காலமானார்.
அதன் பிறகு கிருஷ்ணன் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. சில ஆண்டுகளில் அவரும் மறைந்தார். சிறந்த கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், நடிகர்கள் உள்ளிட்ட கலைஞர்களை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு பல வெற்றிப் படங்களைத் தந்தவர்கள் இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு.

கணவருடனும் கைக்குழந்தையுடனும் சினிமாவுக்கு வந்தேன்

சௌகார் ஜhனகி
பெயர் சொன்னால் போதும் அறிமுகமே தேவையில்லாத, நடிப்பாற்றல் மிக்க அற்புதமான நடிகை செளகார் ஜானகி. தற்போது பெங்களூரில் வசித்து வரும் இவர் சமீபத்தில் நடந்த சினிமா நூற்றாண்டு விழாவில் பங்குகொள்வதற்காகவே சென்னை வந்திருந்தார். “இந்திய சினிமா பேசத் தொடங்கிய 1931ஆம் ஆண்டுதான் நான் பிறந்தேன்.
பேசும் படத்துடன் சேர்ந்தே வளர்ந்த நான் கறுப்பு வெள்ளைப் படங்கள், கலர் படங்கள், சினிமாஸ்கோப், 70 எம். எம்., 3டி என்று எல்லாத் தொழில் நுட்ப வளர்ச்சிகளையும் பார்த்துவிட்டேன். என் தந்தை பெயர் வெங்கோஜிராவ். தாயார் பெயர் சாச்சி தேவி. கிழக்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்த ஆச்சார்யமான பிராமணக் குடும்பம் எங்களுடையது. காந்திய கோட்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட என் தந்தை சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறைக்கும் சென்று வந்தவர். இந்திய ஜனாதிபதியாக இருந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் என் தந்தைக்கு நெருங்கிய நண்பர்.
அவரது ஆலோசனைப்படியே லண்டன் சென்று காகிதத் தயாரிப்பு தொடர்பாக மூன்றாண்டு தொழில் படிப்பைப் படித்துவிட்டு வந்தார் என் தந்தை. இதன் காரணமாக கைகளால் காகிதம் தயாரிக்கும் முறையிலும் யந்திரம் மூலம் காகிதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்திலும் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார். எனக்கு ஒரு அண்ணன், இரண்டு தங்கைகள், ஒரு தம்பி ஏராளமான படங்களில் நடித்திருக்கும் என தங்கை கிருஷ்ண குமாரியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
மற்றொரு சகோதரி தேவகி காலமாகிவிட்டார். தம்பி பாஸ்கர் குளிர்சாதன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். எங்கள் எல்லோரையும் ஒழுக்கமான குழந்தைகளாகவும், கண்ணியமான பழக்க வழக்கங்கள் உடையவர்களாகவும் எங்கள் தந்தை வளர்த்தார். திரைப்படத் துறையினர் என்னுடைய நேரம் தவறாமை குறித்து பாராட்டிப் பேசுவார்கள். இதற்குக் காரணம் இது போன்ற நல்ல குணங்களை சாப்பாட்டுடன் சேர்த்து எங்களுக்கு ஊட்டி வளர்த்தது என் தந்தைதான். மேலும் இன்று நான் சிறப்பாக ஆங்கிலம் பேசுவதற்குக் காணமும் என் தந்தைதான்.
தினமும் காலை ஆங்கிலச் செய்தித்தாள்களை எடுத்து வைத்துக் கொண்டு குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது படித்து, புதிது புதிதாக ஆங்கிலச் சொற்களை அன்றாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தை எங்களுக்கு அவர் ஏற்படுத்தினார். என் தந்தை முதலில் ஆந்திராவிலுள்ள தாயாராம் சன்ஸ் என்ற பேப்பர் மில்லில் பணியாற்றினார்.
பின்னர் பெங்காலில் உள்ள ஷட்டகா பேபர் மில்லுக்குச் சொன்றார். இப்படி பல மாநிலங்களுக்கும் அவர் பணி மாறிய காரணத்தால் என்னால் பள்ளிப்படிப்பை இரண்டாவது பாரத்துக்கு மேல் தொடர முடியவில்லை. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நாங்கள் சிறிது காலம் வசித்த போது, சாரதா வித்தியாலயா பள்ளியில் நான் படித்தேன்.
அப்போது சிறு குழந்தைகளுக்காக நடத்தப்படும் ரேடியோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செல்வேன். அப்போது பல ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பிறகு, எனது குரல் நன்றாக இருப்பதாகக் கூறி பெரியார்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிகளிலும் எனக்கு வாய்ப்பளிக்க ஆரம்பித்தனர். எனக்கு அப்போது ‘ஏ கிரேட் ஆர்டிஸ்ட்’ என்ற அந்தஸ்தையும் அளித்தனர். பள்ளியில் படித்த காலத்தில் எனக்கு கணக்கு கணக்குப் பாடம் சுத்தமாக வரவில்லை. கணக்கு என்றாலே அலர்ஜியாக இருந்தது.
எனவே என் தந்தையிடம் மன்றாடி கணக்குப் பாடம் இல்லாத வகையில் வேறு பள்ளியில் என்னை மாற்றிவிடச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். எனவே என் தந்தை சமஸ்கிருதம், தெலுங்கு ஆகியவற்றை முக்கிய பாடங்களாகக் கொண்ட பாடத் திட்டத்தின் கீழ் ஆந்திரா மகிள சபா பள்ளியில் சேர்த்துவிட்டார். ஆந்திரா மகிள சபா பள்ளியில் படித்த போது என்னால் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது. காந்தி அப்போது சென்னை வந்து மூன்று நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்தி பிரசார சபாவில்தான் தங்கியிருந்தார். அப்போது காந்திஜிக்கு மூன்று நாட்களும் உடனிருந்து பணிவிடை செய்ய ஆந்திரா மகிள சபா நிர்வாகி துர்காபாய் தேஷ்முக் என்னை தேர்வு செய்து அனுப்பினார். காந்தி சென்னையில் இருந்த மூன்று நாள்களும் அவருக்குப் பணிவிடைகள் செய்ததை என் வாழ்க்கையில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தப் பள்ளியில் நடக்கும் கலை விழாவின் போது நான் நாடகங்களில் தவறாமல் பங்கு கொள்வேன். ஒரு முறை துர்க்காபாய் தேஷ்முக் என் தந்தையிடம் உங்கள் பெண்ணுக்கு படிப்பைவிட கலைகளில் ஈடுபாடு அதிகம் இருக்கிறது.
நாடகங்களில் சிறப்பாக நடிக்கிறாள்’ என்று பாராட்டிச் சொன்னார். ஒரு முறை நான் பங்கு பெற்ற ரேடியோ நாடகம் ஒன்றைக் கேட்ட தயாரிப்பாளர் பி. என். ரெட்டி ரேடியோ ஸ்டேஷனைத் தொடர்பு கொண்டு என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் நாகிரெட்டியின் மூத்த சகோதரர் இவர் பின்னர் ரேடியோ ஸ்டேஷனுக்கே வந்து அங்குள்ள அதிகாரிகள் மூலம் என்னைப் பார்த்தார்.
‘உன் குரலைப் போலவே நீயும் அழகாகத்தான் இருக்கிறாய். நான் எடுக்கும் ‘குண சுந்தரி கதா’ என்ற படத்தில் நீ நடிக்கின்றாயா? என்று கேட்டார் அவர் இப்படிக் கேட்டதும் நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை என் ஆழ மனதில் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் ஏற்பட்டிருக்கிறது. “வீட்டில் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்’ என்று சொல்லி விட்டேன். எங்கள் வீட்டைப் பொறுத்தவரை எனது அண்ணனின் ஆதிக்கம்தான் அதிகம். பல முக்கிய முடிவுகளை அண்ணன்தான் எடுப்பார்.
சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்பைப் பற்றி வீட்டில் சொன்னதுதான் தாமதம் அவ்வளவுதான்... பெல்ட்டை எடுத்து என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டார் அண்ணன். வீடே இரண்டுபட்டுப் போனது. சினிமாவில் நடிப்பது குறித்து பேச்சு வந்ததுதான் தாமதம், உடனடியாக எனக்கும் திருமணம் செய்து வைத்துவிடுவது என்ற முடிவுக்கு வீட்டில் உள்ளவர்கள் வந்துவிட்டார்கள்.
அவசரத்தில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. காக்கிநாமாவிலுள்ள ரேடியோ நிலையத்தில் பணியாற்றும் சீனிவாசராவ் என்பவரை முடிவு செய்துவிட்டனர். என் அப்பாவுக்கு இவரை மிகவும் பிடிக்கக் காரணம் நன்கு படித்த நல்ல வேளையில் இருந்த இவருக்கு சிகரட், மது போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருப்பார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் 5ம் திகதி என் சுதந்திரம் பரிபோனது. ஆம் அன்றுதான் என் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு விஜயவாடாவில் சத்திய நாராயணபுரம் என்ற பகுதியில் ஒரு சிறிய வீட்டில் குடி புகுந்தோம். அப்போது என் தந்தை அஸ்ஸாம் மாநிலத்தின் ஷில்லங்கல் உள்ள ஒரு காகித ஆலையில் பணியாற்றி வந்தார். என் கணவருக்கு தான் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் என்ன காரணத்தாலோ ஏற்பட்டுவிட்டது.
உடனே என் தந்தையுடன் தொடர்பு கொண்டு அஸ்ஸாமிலேயே தனக்கு ஒரு ‘ரி(ளிlழி ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்க, அவரும் சரி வாருங்கள் என்று சொல்லிவிட்டார். உடனே என் கணவரும் அப்போது பார்த்து வந்த வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு அஸ்ஸாம் புறப்படத் தயாராகி விட்டார். இவையெல்லாம் எனக்கு பின்னர்தான் தெரிய வந்தது. என்னைக் கலந்தாலோசிக்காமலேயே அவர் எல்லாவற்றையும் செய்து விட்டார். வேறு ஒரு நல்ல வேலை உறுதியாகாமல் தற்போது பார்த்து வந்த வேலையை விட்டது தவறு என்பதையும் பின்னர் அவர் உணர்ந்தார். கணவரும் நானும் ஷில்லாங் போய் இறங்கும் போது எனக்கு நல்ல காய்ச்சல்.
ஆஸ்பத்திரிக்குச் சென்றால் நான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார் டொக்டர். ஷில்லாங்கில் என் கணவர் வேலை தேட ஆரம்பித்தார். அப்போது மெட்ரிக்குலேஷன் படித்து வந்த என் தங்கையின் புத்தகங்களை நானும் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். பகலில் தங்கை படிக்கும் அதே புத்தகங்களை இரவில் நான் படிப்பேன். இப்படியே படித்து தனியாக மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதினேன்.

Tuesday, October 1, 2013

சினிமாத் துணுக்குகள்

உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகளின் தந்தையுமான தோமஸ் அல்வா எடிசன் தான் இன்றைய சினிமாவிற்கும் தந்தையும் தாயுமாவார். அவர் கண்டுபிடித்த கருவியின் பெயர்: ‘கினிடாஸ்கோப்’ இந்த ‘கினிடாஸ்கோப்’ என்ற கருவியை பெட்டி போன்ற அமைப்பில் உருவாக்கினார்.
இந்தப் பெட்டியின் வெளிப்புறத்தில் ஒரு லென்சு அமைக்கப்பட்டிருந்தது. இந்த லென்சின் வழியாகப் பார்த்தால் உள்ளே படங்கள் தெரியும். இதிலுள்ள குறை, ஒருவர் மட்டுமே இதைப் பார்க்க முடியும் என்பதே. என்றாலும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு படம் பார்த்தனர்.
* தோமஸ் அல்வா எடிசன்தான் முதன் முதலில் காதல் காட்சியைப் படமாக்கியவர்.
இவர்தான் முதன்முறையாக பலரும் கண்டுகளிக்கும் விதத்தில் திரையில் காண்பிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். 1894ஆம் ஆண்டு ‘ரிச்மண்ட்’ என்ற இடத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.
* இவர்தான் முதன்முதலில் திரைப்படம் தயாரிப்பதற்கான ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கினார். ஸ்டுடியோவின் பெயர் ‘பிளாக் மரியா’
* திரைப்படம் எடுக்கின்ற ஃபிலிமின் அளவு 35ணிணி என்பதை நிர்ணயம் செய்தவர் ‘எடிசன்’ தான்.
* ஃபிலிம்கள் கெமராவிலும், புரொஜக்டரிலும் ஒரே சீரான அளவில் சுழல்வதற்கு ஏற்ற விதத்தில் ஃபிலிமின் இரு புறங்களிலும் முதல்முறையாகத் துளையிட்டவர் ‘தோமஸ் அல்வா எடிசன்’ ஆவார்.
* சலனப்படத்திற்கு வித்திட்டவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘லூமியர் சகோதரர்கள்’ ஆவர். ஒருவரின் பெயர் லூயிஸ், இன்னொருவரின் பெயர் அகஸ்டஸ் லூமி. இந்த இரண்டு சகோதரர்களும் ஒன்றாகச் சேர்ந்து ‘லியான்ஸ்’ நகரில் புகைப்படக் கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவினர். திரைப்படத்தின்மேல் கொண்ட காதலால் தாங்கள் தயாரித்த கெமராவின் மூலம் தங்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வெளியேறும் காட்சியைப் படம் பிடித்தார்கள். இப்படத்தை 1895ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் நாள் பாரீஸ் நகரிலுள்ள வியாபாரிகளுக்குப் போட்டுக் காண்பித்து அவர்களை வியக்க வைத்து, தொடர்ந்து படமெடுத்தனர்.
* இன்று ‘அனிமேஷன்.... அனிமேஷன்’ என்று பேசப்படுகிறதே, அதற்கு அன்றே வித்திட்டவர் ‘ஜோர்ஜ் மெல்லீஸ்’ ஆவார். இவர் 1902ல்  Thip to the Moon திரைப்படத்தில் அனிமேஷன்(Animation)  காட்சிகளை இடம்பெறச்செய்தார்.
* ஜோர்ஜ் மெல்லீஸ் தான் இன்று பேசப்படும் தந்திரக் காட்சிகளுக்கு வித்திட்டவர். மேலும் இவர் Disscive, Fade in, Fade out, Slow Motion, Speed motionபோன்ற திரைக் கலை நுட்பங்களை திரைப்படத்தில் இடம்பெறச்செய்தவர்.
* குளோசப் காட்சியை எத்தகைய இடத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அறிவித்தமுன்னோடி ‘எட்வின் போர்ட்டர்’ ஆவார். ‘எடிட்டிங்’ கிலும் சாதனை செய்தவர். இன்றைய அக்ஷன் படங்களுக்கு முன்னோடியான இவர், இயக்கி தயாரித்த (தி கிரேட்ட்ரெய்ன் ரொபரி’ (1903) அன்று மகத்தான வசூலைத் தந்தது.
* எடிட்டிங்கால் அடுத்தடுத்து காட்சிகளை உருவாக்கி மக்களை மிகவும் கவர்ந்த இயக்குநர் ‘சிசில் ஹேப்வொர்த்’ ஆவார் இவரின் சாதனைப் படம் ‘ரெஸ்க்யூடு பைரோவர்’ (1905).
* திரைப்படத் துறையில் பல மாறுதல்களைச் செய்து சாதனை புரிந்தவர் இயக்குநர் ‘டேவிட் வார்க் கிரிஃபித்’ ஆவார் இவரை ‘திரைப்படத்தின் தந்தை’ எனப் பாராட்டுகிறார்கள். குளோசப் காட்சிகளுக்கு தனி அந்தஸ்தை உருவாக்கியவர். மேலும் திரைப்படக் காட்சிகளை விறுவிறுப்பாக்கிக் காட்டவேண்டும் என்பதற்காக இரண்டு வெவ்வேறு காட்சிகளை“Cross Cutting என்னும் முறையில் எடிட்டிங்செய்து சாதனை புரிந்தவர்.
* கிரிஃபித் தான் முதன்முதலில் வெளிப்புறங்களில் படம் எடுத்தவர்.
* திரைப்படத்தில் லோங் ஷொட், மீடியம் ஷாட், மீடியம் குளோசப் ஷாட், மீடியம் லோங் ஷொட் குளோசப் ஷொட், டைட் குளோசப் ஷொட் போன்ற பல்வேறு ‘ஷொட்’களில் தேவைக்கேற்ப படம் பிடித்துக் காண்பிக்க முடியும் என்பதை சிந்தித்து செயல் படுத்தியவர் ‘கிரிஃபித்’ தான்.
* முதன்முறையாக பிரம்மாண்டமான படம் எடுத்துச் சாதனை புரிந்தவர்’ கிரிஃபித்’ ஆவார். இவர் உருவாக்கிய ‘தி பார்த் ஆஃப் எநேஷன்’, இன்ட்டாவரன்ஸ்’ (முறையே 1915, 1916) போன்ற படங்கள் இன்று திரைப்பட வல்லுனர்களால் போற்றப்பட்டு வருகின்றன.

கே.ஆர்.விஜயாவுக்கு பதிலாக ஜெயலலிதா நடித்த படம்

‘அம்மா என்றால் அன்பு’ அடிமைப்பெண்ணில் ஜெயலலிதா பாடிய பாடல்
1969ம் ஆண்டில் ‘அடிமைப் பெண்’, ‘நம் நாடு’ ஆகிய 2 படங்களில் எம். ஜி. ஆர். நடித்தார். இரண்டுமே வெற்றிப் படங்கள் என்றாலும், ‘அடிமைப்பெண்’ மெகாஹிட் படம். எம். ஜி. ஆரின் சொந்தப்படம். நாடோடி மன்னனுக்குப் பிறகு, அவர் பிரமாண்டமாக தயாரித்த படம். ஆனால், இதை எம். ஜி. ஆர். டைரக்டர் செய்யவில்லை. கே. சங்கர் டைரக்ட் செய்தார்.
அடிமைப் பெண்ணின் கதையை எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா எழுதியது. வசனத்தை சொர்ணம் எழுதினார். பாடல்களை வாலி, ஆலங்குடி சோமு, புலமைப்பித்தன், அவிநாசி மணி ஆகியோர் எழுத, கே. வி. மகாதேவன் இசை அமைத்தார்.
ஆரம்பத்தில், இப்படத்தின் கதாநாயகியாக கே. ஆர். விஜயா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில காட்சிகளும் எடுக்கப்பட்டன. பின்னர், அவருக்கு பதிலாக ஜெயலலிதா நடித்தார். அசோகன் ஆர். எஸ். மனோகர், ‘சோ’, ஓ. ஏ. கே. தேவர், பண்டரிபாய், ஜோதிலட்சுமி, பேபி ராணி ஆகியோரும் நடித்தனர். ‘அடிமைப்பெண்’ கதை, நிறைய சம்பவங்களும், திருப்பங்களும் கொண்டது. செங்கோடன் (அசோகன்) கொடியவன். வேங்கை மலைத் தலைவி மங்கம்மா (பண்டரிபாய்) மீது மோகம் கொள்கிறான்.
அவள் வெறொருவரை மணந்து, தாயான பிறகும் அவளை அடைய முயற்சி செய்கிறான். ‘உன் குழந்தையைக் கொலை செய்வேன்’ என்று மிரட்டுகிறான். ஆனால் அவளோ புலியென மாறி, அவன் காலைத் துண்டாக்குகிறாள். ஒரு காலை இழந்த செங்கோடன், மங்கம்மாவை பழி தீர்த்துக்கொள்ள அவளுடைய 2 வயது மகன் வேங்கையனை கடத்திச் சென்று, ஒரு சிறு இருட்டறையில் அடைத்து வைக்கிறான். இதனால், வேங்கையன் கூனிக்குறுகி வளருகிறான்.
மங்கம்மா, செங்கோடன் கண்ணில் படாமல் மறைந்து வாழ்கிறாள். அவளைக் கண்டுபிடித்து அவள் கண் எதிரே வேங்கையனின் கால்களைத் துண்டிக்கப்போவதாக சபதம் செய்கிறான். செங்கோடன் பெண்களை அடிமையாக்கி, கால்களில் விலங்கு மாட்டுகிறான். எதிர்க்கும் ஆண்களின் தலை துண்டிக்கப்படுகிறது.
இருட்டறையில் கூனனாகவே வளர்ந்து வரும் வேங்கையன், வாலிபனான பிறகும் பேசக்கூட முடியாத அளவுக்கு குழந்தை போல் இருக்கிறான். ஒரு அழகி (ஜெயலலிதா) மூலம், அவனுக்கு விடிவுகாலம் ஏற்படுகிறது. கூன் நிமிர்ந்து, செங்கோடனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறான். கொடியவர்களை ஒடுக்குகிறான். அடிமைப் பெண்களை விடுவிக்கிறான். 1.5.1969 வெளியான இந்தப் படத்தில், எம். ஜி. ஆர். மாறுபட்ட வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
ஆரம்பக் காட்சிகளில் முதுகை வளைத்து கூனனாக நடித்த காட்சிகளில், ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார். பின்னர் கூன் சரியாகி வீரதீரச் செயல்கள் செய்யும்போது, வழக்கமான எம். ஜி. ஆரைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இப்படத்தில் ஜெயலலிதா மிகச் சிறப்பாக நடித்ததோடு, ‘அம்மா என்றால் அன்பு’ என்ற வாலியின் பாடலை சொந்தக் குரலில் பாடினார்.
வாலி எழுதிய ‘ஏமாறாதே ஏமாற்றாதே’ என்ற பாடலும், ஆலங்குடி சோமு இயற்றிய ‘தாயில்லாமல் நானில்லை’ என்ற பாடலும் புலமைப்பித்தனின் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலும் ஹிட்டாகின.
‘ஆயிரம் நிலவே வா’ பாடல் மூலம் தான் எஸ். பி. பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரை உலகுக்குப் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார். சண்டைக் காட்சிகள் புதுமையான முறையில் விறுவிறுப்பாக அமைந்தன. சிங்கத்துடன் எம். ஜி. ஆர். சண்டை போடும் காட்சி, மெய் சிலிர்க்கச் செய்தது.
‘அடிமைப்பெண்’ மதுரை சிந்தாமணி தியேட்டரில் 176 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. சென்னையில் மிட்லண்ட் உட்பட 4 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
திருச்சி, கோவை, சேலம் உட்பட 9 நகரங்களில் 100 நாள் ஓடியது. நெல்லையில் சென்டரல் தியேட்டரில் 120 நாள் ஓடியது குறிப்பிடத்தக்கது. 1969ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான தமிழக அரசின் விருது இப்படத்துக்குக் கிடைத்தது.

சந்திரபாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும்பகை புகைய காரணமென்ன?

நகைச்சுவை நடிகர் சந்திரபாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த விரிசல் என்ன? சந்திரபாபு ஏன் தற்கொலை செய்து கொண்டார்?
குலேபகாவலி படப்படிப்பின் போது சந்திரபாபு, பட குழுவினருடன் சேர்ந்து ஜோக் அடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அவர் அடித்த ஜோக்கிற்கு எம்.ஜி.ஆரை தவிர எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர்.
“என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர். சிரிச்சா முத்தா உதிர்ந்திடும்” (எல்லோரையும் மிஸ்டர் என்றுதான் அழைப்பார்)
“உங்க ஜோக்குக்கு கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்”
இதனை அவமானமாக உணர்ந்த சந்திரபாபு மற்றவர்களுடன் விசாரித்ததில் தெரிந்து கொண்டது அவர் எப்போதும் எதிலும் தான் மட்டுமே பிரயலமாகத் தெரிய வேண்டும் என்றுநினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்கும் இடம் தேடித்தான் போக வேண்டும்.
அதை பற்றி சந்திரபாபு சொன்னது,
“அன்று அவர் வளர்த்துக்கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான்கண்கூடாகக் காண்கிறேன். அந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன்”
குலேபகாவலி, புதுமைப்பித்தன் வெற்றிகளுக்கு பிறகு, எம்.ஜி.ஆர். படங்களில் கொமெடிக்கு சந்திரபாபுதான் வேண்டும் என்றார்கள் விநியோகஸ்தர்கள். ‘சந்திரபாபுவின் கொமெடிக்காகவே படத்தை பார்க்கலாம்’ போன்ற பேச்சுக்கள் எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு சென்றன.
அதில் இருந்து “சந்திரபாபு வேண்டாம். அவன் இருந்தால் நான் கால்iட் தரமாட்டேன்’ என்று எம்.ஜி.ஆர். கூறியதாக வந்த செய்திகள் சந்திரபாபுக்கு தெரிய வந்தது.
ஆனால் அதற்கு பிறகும் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். சந்திரபாபுவை புகழ்ந்த பேசியிருக்கிறார்.
சந்திரபாபுவும், ஜெயலலிதாவும் ஒரு சுவர் ஏறி குதிப்பதுபோல காட்சி. முதலில் ஏறிய சந்திரபாபு, நிலைத்தடுமாறி கீழே விழப்போக ஜெயலலிதா பிடித்துக்கொண்டார்.
சாப்பாட்டு நேரத்தில் அனைவருக்கும் உணவு வந்துவிட சந்திரபாபுவுக்கு மட்டும் வரவில்லை. எம்.ஜி.ஆர். தன்னுடைய சாப்பாட்டை, சந்திரபாபுவுக்கு கொடுத்துவிட்டு, சாப்பிடாமல் இருந்துவிட்டார். கேட்டதற்கு பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.
ஏன் இப்படி உம்மென்று இருக்கிறார் என்று ஜெயலலிதா விடம் சந்திரபாபு கேட்டதற்கு ஜெயலலிதா சந்திரபாபுவை விழாவில் தாங்கி பிடித்தது அவருக்கு பிடிக்கவில்லை என்று சொன்னாராம். இதை கேட்டவுடன் சந்திரபாபுவுக்கு சங்கடமாகிவிட்டதாம். ஏனெனில் சந்திரபாபுவிற்கும் ஜெயலலிதாவின் குடும்பத்திற்கும் ஏற்கனவே நல்ல பழக்கம் உண்டு. ஜெயலலிதா சிறுமியாக இருக்கும் போதே அவர்கள் வீட்டுக்கு சந்திரபாபு செல்வாராம். ஜெயலலிதாவும் ‘அங்கிள்’ என்று ஓடி வந்து பழகுவாராம்.
சந்திரபாபு எம்.ஜி.ஆரை வைத்து ‘மாடி வீட்டு ஏழை’ என்றொரு படத்தை ஆரம்பித்தார். இந்த படத்தில் நடிக்க சம்மதித்த எம்.ஜி.ஆர். சம்பளத்தின் ஒரு பகுதியை கருப்பாகவும், மீதியை வெள்ளையாகவும் கேட்டதாக சந்திரபாபு, பின்னர் பிலிமாலயா பத்திரிகையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
முற்பணம் வாங்கிய எம்.ஜி.ஆர். பூஜைக்கும் அடுத்த நாள் படப்பிடிப்பிற்கும் மட்டுமே வந்திருக்கிறார். பிறகு எம்.ஜி.ஆரின் கால்iட் கிடைக்கவே இல்லை.
நேரே சென்று பேசி பார்க்கலாம் என சென்ற சந்திரபாபுவை, அரை மணி நேரம் கண்ணெதிரே காக்க வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
‘நான் நடிகன், நான் கதாசிரியன், நான் வசனகர்த்தா, நான் டைரக்டர் என பெருமைப்பட்ட என்னை, டேய் நீ புரொடக்ஷன் போயும் கூடத்தான்” என அப்போது உணர வைத்ததாக கூறியிருக்கிறார் சந்திரபாபு.
கடைசியில் அவரை பார்த்த போது கால்iட் பற்றி கேட்டிருக்கிறார். கால்iட் சம்பந்தமாக அண்ணனிடம் பேசிக்கொள்ளுமாறு எம்.ஜி.ஆர். சொல்ல அண்ணன் சக்ரபாணியை பார்க்க சென்றார் சந்திரபாபு.
அங்கே அவர்களுக்குள் நடந்த உரையாடல் ஒரு கட்டத்தில் முற்றிப்போய், சேரைத்தூக்கி அடிக்கும் நிலைக்கு போய்விட்டார் சந்திரபாபு. இந்த விஷயம் வெளியே பரவி, படம் நின்று போய் அடமானம் வைத்திருந்த சந்திரபாபுவின் சொத்துகள் ஏலத்திற்கு வந்தது. பெயரும் கெட்டுப்போனது. குடி இன்னும் அதிகமாக குடி கெட்டது.
ஒரு பேட்டியில் சந்திரபாபுவிடம் இப்படி கேட்டார்கள்.
எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கொம்பவுண்டராப் போகலாம்.
இதைப்போன்ற அவரின் வெளிப்படையான பேச்சுதான் அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பகையை வளர்த்தது.
அடுத்ததாக...... சந்திரபாபு தற்கொலையெல்லாம் செய்து கொள்ளவில்லை. எம்.ஜி. ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரிக்கத் தொடங்கினார் சந்திரபாபு. ஆனால் படம் பாதியுடன் நின்றுவிட்டது. இதன் காரணமாக குடிப்பழக்கம் அதிகரித்தது அவருக்கு.
அதிகரிக்க அதிகரிக்க உடல் நிலை மோசமடைந்து ஒரு நாள் இரத்த வாந்தி எடுத்தார். அத்துடன் அவர் கதை முடிந்துவிட்டது.

Thursday, September 19, 2013

வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்கு தண்டனை

காசு கொடுத்தால் மாலை போடும்
கோயில் யானைகளுடன் விலை மகளிரை ஒப்பிடும்
விரிந்த உள்ளம் கவிஞர் கண்ணதாசனுக்கே வரும்.
சூழ்நிலைக் கைதிகளாய் வாழ்விழந்த
அந்தப் பெண்களை கவிஞர் புரிதலுடன்
அணுகியிருக்கிறார். பரிவுடன் நடத்தியிருக்கிறார்.
அவரது தனிக்கவிதை ஒன்று திரைப்பாடலாகவும்
உலா வந்தது.
“கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் நிற்குதடா ஐயோ பாவம்!
காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்!”
இந்தப் பாடலில் விலை மகளிரின்
வழக்கறிஞராகவே மாறியிருப்பார் கவிஞர்.
“வண்டு வந்து தேன்குடித்தால் மலருக்குத்தான் தண்டனை வழுக்கிவிழும் பெண்களுக்கோ சட்டத்திலும் வஞ்சனை” என்பது திரைப்பாடல் வடிவம்.
இதன் மூலமாகிய தன் தனிக்கவிதையில், “பணமிருப்போர் தவறு செய்தால் பாதுகாக்கும் சட்டமே - நீ
வலையை வீசிப் பிடிப்பதெல்லாம் ஏழைகளை
மட்டுமே” என்பார் கவிஞர்.
“அந்த ஊரில் ஒரு வேசி இருந்தாள்” என்று ஒருவர் கதை எழுதியிருந்தாராம். ஜெயகாந்தன் அதைப் படித்துவிட்டு, “என்னடா எழுதியிருக்கிறான்? அந்த ஊரில் ஒரு பெண் இருந்தாள். அங்கிருந்த ஆண்களெல்லாம் சேர்ந்து அவளை வேசியாக்கினார்கள் என்றல்லவா எழுதியிருக்க வேண்டும்” என்றாராம்.
கவிஞர், பெண்ணை ஆண்கள் எப்படியெல்லாம் வேசியாக்கினார்கள் என்று பட்டியலிடுவார்.
“குணமிருந்தும் தவறு செய்வாள் குழந்தைக்காக
ஒருத்தி - இந்தக்
கொடுமை செய்ய உடன்படுவாள் குடும்பம் காக்க
ஒருத்தி
படித்திருந்தும் வேலையின்றிப் பள்ளிகொள்வாள்
ஒருத்தி - திரைப்
படத்தொழிலில் ஆசைவைத்து பலியானாள்
ஒருத்தி” என்பார்.
“கண்ணீரில் மிதக்குதடா கற்பு எனும் ஓடம் இது
கம்பனுக்கும் வள்ளுவருக்கும் கடவுளுக்கும்
பாடம்” என்று முடிக்கும் போது கவிஞரின் கனிவு
புலப்படும்.
தப்புத்தாளங்கள் படத்தில்
“நினைவெங்கும் மாங்கல்யம் தாய்மை
நிதந்தோறும் விளையாட்டு பொம்மை
பொருளாதாரம் செய்த விந்தை - இவள்
பொருள்தாரம் ஆகிவிட்ட
சந்தை” என்றெழுதியிருப்பார் கவிஞர்.
விளிம்பு நிலை மனிதர்கள் மீது அவருக்கிருந்த அன்பும் அனுதாபமும் இந்தப் படப்பாடல்களில் வெளிப்படும். எதிர்மறை வாழ்வை ஏற்றுக்கொண்டவன் குரல் இந்தப் படத்தின் பாடல்களில் ஓங்கிக் கேட்கும்.
“படிக்க ஆசவச்சேன் முடியலே
உழைச்சு பாத்துபுட்டேன் விடியலே
பொழைக்க வேறுவழி தெரியலே
நடந்தேன் நான்நெனச்ச வழியிலே...
இதுக்குக் காரணந்தான் யாரு...?
படைச்ச சாமியப்போய் கேளு
இதுக்குப்போய் அலட்டிக்கலாமா...
என்ற பாடலும் தப்புத்தாளங்கள் - வழி தவறிய பாதங்கள் என்ற பாடலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்கள். அந்த நாட்களில், ஜனதா கட்சியில் தலைப்பாகையும் தாடியுமாய் ராஜ்நாராயணன் என்ற மனிதர், தான்தான் அடுத்த பிரதமர் என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார். அதில் கவிஞர் கண்ணதாசனுக்கிருந்த எரிச்சல், இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும்.
பாராளும் வேஷங்கள் பரதேசிக் கோலங்கள் விதி-வழி-தினமோடும் ஓடங்கள்.

கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது

ஒரு பெண்ணைப் பார்த்து
நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து
மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
ஒரு பெண்ணைப் பார்த்து
நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து
மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை
அவளில்லாமல் நாளில்லை
நானில்லாமல் அவளில்லை
ல ல லல்ல லா ல ல லல்ல
ல ல ல லல்ல ல ல ல ல
கொடி மின்னல் போலொரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தே
குயிலோசை போலொரு வார்த்தை
குழாலோ யாழோ என்றிருந்தேன்
கொடி மின்னல் போலொரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போலொரு வார்த்தை
குழாலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
ஒரு பெண்ணைப் பார்த்து
நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து
மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல்
அவனில்லை
ல ல லல்ல லா ல ல லல்ல
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழிலில் மதுவோ குறையாது
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை சேர்த்தாள்
என்னோடு தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை சேர்த்தாள்
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ?
ஒரு பெண்ணைப் பார்த்து
நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து
மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை
ல ல லல்ல லா ல ல லல்ல
ல ல ல லல்ல ல ல ல ல

குழந்தை நட்சத்திரங்களின் துறுதுறுப்பு

குழந்தை நட்சத்திரங்களில் துறுதுறுப்பு நல்ல எக்ஸ்ப்ரஸ்ன், ரசிகர்களை ஈர்த்த நடிப்பு என்று கலக்கியவர் டெய்சி ராணி. யார் பையன் (1957) படத்தில் டெய்சி ராணி சீறு பையனாக டைட்டில் ரோலர் இந்தி குழந்தை நட்சத்திரம்.
களத்தூர் கண்ணம்மா (1960) படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசன் பார்த்தால் பசி தீரும் (1962) படத்தில் இரட்டை வேடம் பாதகாணிக்கை (1962) வானம்பாடி (1963) ஆனந்த ஜோதி (1963) படங்களில் நடித்த பின் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஏனோ வாய்ப்பு தான் இல்லையோ அல்லது வேறு காரணமோ டி. கே. எஸ். நாடகக் குழுவில் பயிற்சி.
களத்தூர் கண்ணம்மா படத்தில் கமலுடன் நடித்த தசரதன் நானும் ஒரு பெண் படத்தில் எம். ஆர். ராதாவின் மகனாக நடித்திருப்பார் மேஜர் சந்திரகாந்த் படத்தில் நாகேஷ¤டன் கல்யாண சாப்பாடு போட்டவா தம்பி கூடவா பாடலில் நடித்தவர் நினைவில் நின்றவள். வா ராஜா வா என்று நினைவில் நிற்கும்படி நடித்தவர் தான் தசரதன்.
என்னோடு களத்தூர் கண்ணம்மாவில் நடித்த தசரதன் இன்று நான் காரில் போகும்போது ரோட்டில் நடந்து போகிறார் என்று பல வருடங்களுக்கு முன் கமல் ஹாசன் வருத்தப்பட்டார்.
காதர் பாசமலரின் துவங்கி மதராஸ் டூ பாண்டிச்சேரியில் பக்கோடா காதர் ஆக பிரபலமானாவர்.
தசரதனும் பக்கோடா காதரும் கணக்கே இல்லாமல் பல படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக தலை காட்டினார்கள். இருவருமே இறந்து விட்டார்கள்.
கமல்ஹாசனின் குழந்தை நட்சத்திர வாழ்வு முடிவுக்கு வந்த பின் கர்ணன் (1964) படத்தில் மாஸ்டர் ஸ்ரீதர் என்ற பையன் தலை காட்டினான் கமலுக்கும் ஸ்ரீதருக்கும் வயதில் பெரிய வித்தியாசமெல்லாம் கிடையாது.
ஒருவேளை கமல் தொடர்ந்து சினிமாவில் நடித்திருந்தால் இந்த ஸ்ரீதர் செய்த ரோல்கள் தான் செய்திருக்க முடியும். கந்தன் கருணை (1967) யில் பாலமுருகனாக நடித்த மாஸ்டர் ஸ்ரீதர் பின் சத்தியம் தவறாதே (1968), தெய்வீக உறவு (1968) என்ற படங்களில் நாடக வசனம் பேசி பக்கா நாடக நடிக சிறுவனாக வளர்ந்து நம்ம குழந்தைகள் (170) படத்தில் நாடக பாணியிலிருந்து மீள முடியாத வளர்ந்து விட்ட வயதுக்கு வந்துவிட்ட பையனாக இருந்தான்.
சிவாஜியின் இடத்தைப் பிடிக்கலாமா? எம். ஜி. ஆர். இடத்தைப் பிடிக்கலாமா? என்ற கனவுடன் மாஸ்டர் ஸ்ரீதர் வாலிபனாக சினிமாப் பத்திரிகையில் பேட்டி கொடுத்துக்கொண்டு
குட்டி பத்மினி பாசமலர் (1961) படத்தில் குழந்தை சாவித்திரியாகத் தலைகாட்டி, நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) படத்தில் பிரபலம் கமலின் குழந்தை நட்சத்திர வாழ்வு முடிவுக்கு வந்த பின் குட்டி பத்மினி பிஸி நவராத்திரி (1964) க்கு பின் குழந்தையும் தெய்வமும் (1965) குழந்தையும் தெய்வமும் தான் குட்டி பத்மினிக்கு இன்று வரை சிறந்த படம் குட்டி பத்மினியும் எதிர்கால கதாநாயகி நான் தான் என்ற பெருமிதத்தில் தான் இருந்தார். சிவாஜி அங்கிளுடன் ஜோடியாக நடிப்பேன் எம். ஜி. ஆர். ஆங்கிளுடன் ஜோடியாக நடிப்பேன் என்று தான் பேட்டிகளில் சொல்லிக்கொண்டிருந்தார்.
நம் நாடு (1969) படத்தில் பார்க்கும் போதே இந்த முகம், மூக்கு அவ்வளவு சரியில்லை என்பது தெரிந்துவிட்டது. அந்தப் படத்தில் குட்டி பத்மினிக்கு தம்பியாக நடிகை ஸ்ரீதேவி துணைவன் (1969) படத்தில் தேவர் அறிமுகப்படுத்திய குழந்தை நட்சத்திரம் ஆதி பராசக்தி (1971) தெய்வக் குழந்தைகள் (1973) என்று ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்த முக்கிய படங்கள் கற்பகம் (1963) படத்தில் பேபி ஷகிலா குழந்தை நடத்சத்திரம் (‘அத்தை மடி மெத்தையடி’ ஆடி விளையாடலாமா பேபி ஷகிலாவின் பிற படங்கள் எங்க வீட்டுப் பிள்ளை, இரு வல்லவர்கள், எங்க பாப்பா ரோஜா ரமணி சிறுவனாக பக்த பிரகலாதா (1967) ல் இருமலர்கள் (1967) என் தம்பி (1968), சாந்தி நிலையம் (1969), போன்ற படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் மணிரத்தினத்தின் அஞ்சலி (1990) யில் ரோஜா ரமணியின் மகன் தருண் தான் ரேவதி ரகுவரனுக்கு மகன்.
பேபி ராணி நடித்த படங்கள்
பேசும் தெய்வம் (1967), குழந்தைகக்காக (1968), கண்ணே பாப்¡ (1969) ஆகியவை கமல் குழந்தை நட்சத்திரமாக இல்லாத தமிழ்த் திரையில் ஆக்கிரமித்த மற்றொரு நடிகர் மாஸ்டர் பிரபாகர் பாமா விஜயம் (1967), இரு கோடுகள் (1969) என்று தொடர்ந்த மாஸ்டர் பிரபாகர் கதாநாயகனாக வா ராஜா வா (1969) வில் முக்கியத்துவம்.
அனாதை ஆனந்தனில் டைட்டில் ரோல் செய்த (1970) மாஸ்டர் சேகர் குடியிருந்த கோவில் (1968) படத்தில் இரட்டை சின்ன எம். ஜி. ஆர். அகத்தியர் (1972) மணிப்பயல் (1973) சொல்லத்தான் நினைக்கிறேன் (1973) வரை பையனாக நடித்தவர் தான் மாஷ்டர் சேகர் இன்று இவர் உயிருடன் இல்லை.
ராமு (1966) படத்தில் அறிமுகமாகி பெற்றால் தான் பிள்ளையா (1967), சபாஷ் தம்பி (1967) ஆகிய படங்களில் நடித்த மாஸ்டர் ராஜ்குமார்.
குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் “ணிiniaturலீ தினீults” என்ற மிகையில் தான் நின்றனர். கொழுந்தங்க வசனமெல்லாம் டயலாக்கா பெரிய மனுஷ தோரணையில் தான்.
குழந்தை நட்சத்திரங்கள் அனைவருமே எதிர் காலத்தில் திரையில் கதாநாயகன் கதாநாயகிகளாக வலம் வருவோம் என்று நம்பியவர்கள் தான்.
கமல் ஹாசன் பதின்வயதில் டான்ஸ் அஸிஸ்டண்ட் ஆக இருந்தார். மாணவன் (1970) படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் குட்டி பத்மினியுடன் ஒரு பாடல் காட்சியில் ஆடிப்பாடினார் ‘விசிலடிச்சான் குஞ்சிகளா குஞ்சிகளா வெம்பிப் பழுத்தப் பிஞ்சுகளாக பிஞ்சுகளா இந்தப் பாடலில் கமலுக்கு ஒரு குளோசப் ஷாட் கூட கிடையாது.
தொடர்ந்து கமல் டான்ஸ் அஸிஸ்டண்ட் ஆகத்தான் கொஞ்சகாலம் அன்னை வேளாங்கண்ணி (1971) யில் அஸிஸ்டண்ட் டைரக்டர் அகில் ஸ்ரீவித்யாவுடன் நடித்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. ஜெமினி கணேசன் டைரக்டர் ஸ்ரீதரிடம் கூட்டிக்கொண்டு போனார் கமலைப் பார்த்துவிட்டு ஃபோட்டோஜினிக் ஃபேஸ் கிடையாது என்று அபிப்பிராயப்பட்ட டைரக்டர் ஸ்ரீதர் அஸிஸ்டன்ட் டைரக்டராகச் சேர்த்துக்கொள்ள முடியும் என்று சொன்னாராம்.
குறத்தி மகன் (1972) படத்தில் நிறைய காட்சிகளில் நடிக்க வாய்ப்பே இல்லாமல் முக்கிய ரோல் செய்த செயற்கையான நாடக பாணி நடிகர் மாஸ்டர் ஸ்ரீதரைப் பார்த்து ‘ராஜா வாழ்க’ என்று கோஷம் போட்டுக்கொண்டு நடிக்க வேண்டியதாகிப் போனது.
ஆர். சி. சக்தியிடம் கமல் ‘படத்தில் என்னை கே. எஸ். ஜி. ஒரு ஓரமாக நிறுத்திட்டாருண்ணே’ என்று தேம்பினார்.. அடுத்து அரங்கேற்றம் (1973) படத்தில் நிறைய காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. முன்னூறு ரூபாய் தான் கொடுத்தார்களாம் பாலச்சந்தரிடம் முறையிட்டபோது அவர் பின்னால் நல்ல சம்பளம் கிடைக்கும் கவலைப்படாதே
சொல்லத்தான் நினைக்கிறேன் (1973) படத்தில் வில்லன் ரோல் அந்தப் படத்தில் ரசிகர்கள் கவனம் பெற்று விட்டார்.
‘அடே டேய களத்தூர் கண்ணம்மாவில் நடிச்ச பயடா
அவள் ஒரு தொடர்கதை (1974) அபூர்வ ராகங்கள் (1975) மன்மதலீலை (1976) அதன் பின் நடந்ததெல்லாம் சரத்திரம்.
1976 ல் நடிகை ஸ்ரீதேவி கமலுடன் மூன்று முடிச்சு படத்தில் நடித்தார். அபூர்வ ராகங்களில் கருதி பேதமாக தலை காட்டிய ரஜினி காந்த் மூன்று முடிச்சில் தேள் கொடுக்கும் போல் வித்தியாசமான வில்லனாக கவனம் பெற்றுவிட்டார்.
குழந்தை நட்சத்திரங்களில் கமல் ஹாசனும் ஸ்ரீதேவியும் மட்டுமே அகில இந்திய அளவில் நட்சத்திரமாக பிரகாசித்து சாதித்துவிட்டார்கள்.

பாடும் நிலா பாலுவின் படு சுட்டித்தனம்

சாதாரணமாக யாரிடமும் கடன் வாங்காத பாலுவின் தந்தை, பாலுவிற்காக கொஞ்சம் பணத்தைக் கடன் வாங்கி வந்தார். பாலுவும் நண்பர்களோடு ஜாலியாக பம்பாய்க்கு சென்று வந்தார். இன்னும் தான் முதன் முதலாகப் பார்த்த வட இந்திய நகரம் பம்பாய்தான்.
கிராமத்திலிருந்து பம்பாய் பட்டணத்துக்குச் சென்று மிகப் பெரிய கட்டடங்களைப் பார்த்து பிரமித்துப் போய் நின்றிருக்கிறார் பாலு. ரெக்கார்டிங்கின் போது பம்பாயில் ஓடிய ஓர் ஆங்கில சண்டைப் படம் பார்த்த நினைவு இருந்தது.
அந்தப் படத்தில் சண்டை போட்டு விழும் நபர்களின் ரத்தம் ஏன் சிவப்பாக தெரியவில்லை என்று பாலுவிற்கு பெரியதாகக் கவலை. பாலு இரவெல்லாம் தூங்காமல் யோசித்துப் பார்த்தும் விடை தெரியவில்லை. கூட வந்த நண்பர்களிடம் கேட்க, அவர்களுக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பாலு தன் சந்தேகத்தை ராதாபதி ஆசிரியரிடம் கேட்க, அவர் கறுப்பு வெள்ளை படத்தில் எப்படி கலர் தெரியும் என்று பதில் கேள்வி கேட்டார்.
அப்போதுதான் தான் பார்த்த படம் கறுப்பு வெள்ளைப் படம் என்பதும் அதில் கலர் தெரியாது என்பதும் பாலுவிற்கு புரிந்தது. பாலு பம்பாய்க்குச் செல்லும் போது கைச்செலவுக்காக பத்து ரூபாய் பணம் கொடுத்து அனுப்பினார். பாலுவின் தந்தை. தான் ஊருக்குச் செல்வதற்காக தன் தந்தை பட்ட கஷ்டங்கள் பாலுவின் மனத்தை உறுத்தின. அவர் கொடுத்தனுப்பியதில் தனக்கு எதுவும் வாங்கிக் கொள்ளாமல் தன் சகோதரிகளுக்கு இரண்டு கவுன் வாங்கிக் கொண்டு போனார் பாலு. பாலுவின் இந்தச் செய்கை அவருக்கு வீட்டில் உள்ளவர்களிடம் நல்ல பெயரை வாங்கித் தந்தது.
காளஹஸ்தியில் இருக்கும் போதுதான் கிரிக்கெட் மீது ஆர்வம் பிறந்த பாலுவிற்கு. பாலுவின் வீட்டிற்கு அருகில் இருந்த மலையின் அடுத்த பக்கத்தில் பெரிய வற்றிய ஏரி ஒன்று இருந்தது. தினமும் கிரிக்கெட் விளையாட நண்பர்களுடன் மலையின் மீது ஏறி அந்தப் பக்கம் போய்விடுவார் பாலு. மலை ஏறி இறங்காமல் அந்த மைதானத்துக்குப் போக சுற்றிக்கொண்டுதான் போக வேண்டும். ஆகையால் தான் இந்த குறுக்கு பாதையிலுள்ள மலையில் தர்ப்பைச் செடி புதராக வளர்ந்து இருக்கும்.
மாலையில் கிரிக்கெட் விளையாடி விட்டு நண்பர்களுடன் மலையில் ஏறி வந்து கொண்டிருந்த போது யாரோ ஒரு கிராமத்து வாசி, மலையில் இருந்த சிக்கி முக்கிக் கற்களை வைத்துக்கொண்டு பீடி பற்ற வைத்துக்கொண்டு போனதை பார்த்தார்கள். பாலுவின் கூட வந்த நண்பன் ஒருவன் பாலுவிடம் “உன்னால் கற்களை வைத்துக்கொண்டு நெருப்பு வரவழைக்க முடியுமா?” என்று கேட்க பாலுவும் சவாலை ஏற்றார்.
தர்ப்பை புதரிலிருந்து தர்ப்பைகளைப் பிடுங்கி ஒரு கட்டாகக் கட்டி கற்களைத் தட்டி நெருப்புப் பொறிகளை உண்டாக்கி தர்ப்பைகளைப் பற்ற வைத்தார். நன்கு காய்ந்த தர்ப்பை பற்றிக் கொண்டது.

காவியமாகிய ஓவியம்

இந்தித் திரை உலகின் பிரபல டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் கமால் அம்ரோகி. இவர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். ஒருநாள் பாரீஸ் மாநகர தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தார்.
அங்கே ஒரு கலைக்கூடம் அவர் கண்களில் பட்டது. உள்ளே சென்று பார்வையிட்டார். பல்வேறு நாட்டு கலாசாரம். வரலாற்றை விளக்கும் படங்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு ஓவியம் அப்படி அவரை ஈர்த்தது. அருகே சென்று பார்த்தார் அது புகழ் பெற்ற பேரரசி ரசியா சுல்தானா ஓவியம். அதன் கீழ் என்றும் அழியாத காவியம் என்று எழுதப்பட்டிருந்தது.
தத்ரூபமான அந்தப் படத்தை கமால் கண்ணிமைக்காமல் பார்த்தார். ஓவிய ரசியா சுல்தானாவின் தோற்றத்தில் இந்திய நடிகை ஒருவர் தென்படுவதை அவர் உணர்ந்திருக்கிறார்.
மீண்டும் அவர் ரசியா சுல்தானாவின் நீண்ட மூக்கு, அகன்ற விழிகள், பரந்த நெற்றியை பார்த்த போது, அவை அனைத்தும் அவர் நடிகை ஹேமமாலினியிடம் கண்டவை. அப்போதே அவர் ஹேமமாலினியை வைத்து ரசியா சுல்தானா படம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். தயாரித்தார். வெளியிட்டார். அந்த படம் பெரும் வசூலைக் குவித்தது.
ரசியா சுல்தானா சினிமா உருவான விதத்தை அவர் தனது டைரியில் எழுதிவைத்திருக்கிறார். அதில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களைத்தான் இங்கே தருகிறோம்.
கமால் நடிகை மீனாகுமாரியின் கணவர். முதலில் திருமணம் செய்து கொண்டு பிரிந்த இவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்கள். கமால் 73 வது வயதில் இறந்தார். மீனாகுமாரியின் கல்லறை அருகிலே தன்னை புதைக்கும்படி கூறினார். அவ்வாறே புதைக்கப்பட்டார்.
இவர் ஹேமமாலினியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற இயக்குனர். அதனால் அவரது மரியாதைக்குரியவராக திகழ்கிறார். சத்யம் சிவம் சுந்தரத்தின் மூலம் ஜீனத் அமனை ராஜ்கபூர் புகழ் ஏணியில் ஏற்றியதுபோல் ஹேமமாலினிக்கு கமால் அமைந்தார்.
ரசியா சுல்தானா படத்தில் ஹேமமாலினிக்கு தேவையான உடைகளை கமால் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று வாங்கியிருக்கிறார். முஸ்லிம் அரசிகள் எவ்வாறான உடைகளை அணிந்திருக்கிறார்கள் என்பதை பல்வேறு அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டிருக்கிறார். அதில் ஐதராபாத்தில் உள்ள ஜலர்ஜங் மியூசியமும் ஒன்று. அங்கு முஸ்லிம் அரசிகள் அணிந்த உடைகள், ஆபரணங்கள், அணிகலன்கள் எல்லாம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
அவைகளைப் பார்த்து, அடிப்படையாகக் கொண்டு ரசியா சுல்தானா படத்திற்கு பெரும் பணச் செலவில் ஆடைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவ்வளவு பொருட் செலவில் உருவாக்கிய ஆடைகளை மீண்டும் மக்கள் பயன்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தையும் தன் டைரியில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த படத்தில் பயன்படுத்திய இறகு பேனாவை, ஹேமமாலினி வெகுகாலம் பயன்படுத்தி வந்தார். தன்னிடம் ஆட்டோகிராப் கேட்ட ரசிகர்களுக்கு அதை பயன்படுத்தி கையெழுத்திட்டார். அதை கமால் பெருமைக்குரிய விஷயமாக கருதியிருக்கிறார்.
ரசியா சுல்தானா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அதே கம்பீரத்தோடு ஹேமா நடிக்க காத்திருக்க அருகில் செல்லும் கமால் ‘பேகம் சரியா நீங்கள் உத்தரவு கொடுத்தால் நாம் படப்பிடிப்பை தொடங்கலாம்’ என்று மெல்லிய குரலில் சொல்வாராம். அப்போது உடன் இருப்பவர்கள் எல்லாம் சிரித்துவிடுவார்களாம்.
பின்பு அனைவருமே ஹேமாவை, ரசியா என்று அழைத்திருக்கிறார்கள். முதல் காட்சியில் ஒரு பிரமாண்டமான மாளிகையில் உயர்ந்த சிம்மாசனத்தில் ராணி வேடத்தில் ஹேமாவை உட்காரவைத்திருக்கிறார். உட்கார்ந்ததும் ஹேமாவின் கண்கள் கலங்கிவிட்டனவாம். ‘இயக்குனர் என்னை இன்னொரு உலகத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டார்” என்று மெய்சிலிர்க்க கூறியிருக்கிறார். அதுவரை அவர் உணர்ந்திராத பரவச அனுபவமாக அது இருந்திருக்கிறது.
படத்திற்காக ரசியாவின் வாழ்க்கை வரலாற்றை பலமுறை கமால் படித்திருக்கிறார். அவருடைய நடை, உடை, பழக்க வழக்கம், உணவு விஷயம் போன்ற அனைத்தையும் கரைத்துக் குடித்து படமாக்கியுள்ளார். அதனால் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஹேமா, நான் அந்த படத்திற்காக ரசியா சுல்தானாவாகவே வாழ்ந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கான உடைகளை ஷமீம் வாகாயி என்ற கொஸ்ட்யூம் டிசைனர் உருவாக்கியிருக்கிறார். அவர் தன் திறமை முழுவதையும்ஆடை வடிவமைப்பில் காட்டியுள்ளார். அவர் டிசைன் செய்யும் உடைகள் ஒவ்வொன்றையும் ஹேமாவிடம் கொண்டு செல்லும் கமால், ‘இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா ரசியா?’ என்று கேட்பாராம். ‘இதை நீ அடுத்த ஷொட்டில் அணியப்போகிறாய். இது உனக்கு அற்புதமாக இருக்கும்” என்று புகழ்ந்து ஆர்வத்தோடு தொடர்ந்து நடிக்க வைத்திருக்கிறார்.
‘ரசியாவாக நடித்த நான், படப்பிடிப்பு முடிந்து வெகு நேரம் ஆன பின்பே இயல்புக்கு வருவேன். பெரும்பாலும் அப்போது ரசியாவாகவே வாழ்ந்தேன். நான் குதிரையில் வேகமாக செல்லும் போது என் கிரீடம் வெயில் பட்டு தகதக்கும். வெற்றியில் படர்ந்த வியர்வை கன்னங்களில் வழியும். அதில் ஒவ்வொரு காட்சியும் மிக யதார்த்தமாக இருந்தது.
நான் எப்போதுமே சிம்பிளாகத்தான் உடை அணிவேன். பெரும்பாலும் நகைகள் அணியமாட்டேன். எனக்கு கம்பீரமான உடை, ஆபரணம் என்று டைரக்டர் அள்ளிப்போட்டு அலங்காரம் செய்தார். கலர்கலராக உடைகளில் தோன்றினேன்.
என்னோடு நடித்த பர்வின்பாபி வழக்கமாக ஆடம்பர ஆடை, அணிகலன் அணியக்கூடியவர். அவரே என்னைப் பார்த்து தன்னைவிட ஆடம்பரமாக அழகாக நான் இருப்பதாக குறிப்பிட்டார். அந்த உடைகளை நான் அணிவதற்கு ரொம்ப நேரமாகும். வியர்த்துப்போகும்” என்கிறார்.
உண்மையில் ரசியா சுல்தானா படத்தில் பலரது உழைப்பு இருந்தாலும் அந்த படம் முழுக்க முழுக்க ஹேமாவை நம்பியே எடுக்கப்பட்டிருக்கிறது. ‘ஹேமா இது உன்னுடைய படம். உன்னுடைய தோற்றம் மட்டுமல்ல, மொழி உச்சரிப்பும் அதற்கு ஏற்றபடி இருக்க வேண்டும்’ என்று கமால், ஹேமாவிற்கு உருது மொழி உச்சரிப்பை கற்றுக்கொடுத்திருக்கிறார்.
அப்போது ஹேமாவிடம், ‘நீங்கள் ரசியாவாக வாழ ஆசையா? ஹேமமாலினியாக வாழ ஆசையா?” என்று கேட்டிருக்கிறார்கள்.
“நான் ஹேமமாலினியாக இருந்து கொண்டே ரசியாவாக நடிக்க விரும்புகிறேன். அதுதான் எனக்கு மகிழ்ச்சி.