சிங்களத் திரையுலக வளர்ச்சிக்குப் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களும்
பங்களிப்பு நல்கியதை வரலாறு கூறுகிறது! அவ்வாறு அக்கால சிங்கள சினிமாவில்
முத்திரை பதித்த ஒருவர்தான் எம்.மஸ்தான். இந்தியாவில் சென்னையில் பிறந்த
அவரை நாவலப்பிட்டியில் கடை வைத்திருந்த அவரது
தந்தை இளவயதிலேயே இலங்கைக்குக் கூட்டிவந்ததோடு இங்கேயே படிக்க வைத்திருக்கிறார். மீண்டும் அவர் சென்னை சென்று தமிழ்த் திரையுலகில் சாதனை படைத்த "வேலைக்காரி" "மர்மயோகி" போன்ற பலபடங்களில் கெமராமேனாகப் பணியாற்றியிருக்கிறார்!
சிங்களத் திரைப்படங்கள் இந்தியாவில் தயாராகிவந்த யுகத்தில் 1947ல் தயாரிக்கப்பட்ட இரண்டாவது சிங்களப் படமான "அசோக மாலா" என்ற படத்தில் கெமராமேனாகப் பணிபுரிந்தவர் மஸ்தான்!
தொடர்ந்து 1953ல் திரையிடப்பட்ட 'சுஜாதா ' படத்திலும் கெமராவை இயக்கியவரும் அவரே! இயக்குநராக அவர் முதலில் இயக்கிய
சிங்களத் திரைப்படம் 1957ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி திரையிடப்பட்ட " சுகுமலீ". இலங்கையில் சிங்களத் திரையுலக முன்னோடிகளில் ஒருவரான கே.குணரத்னத்தினால்
ஹெந்தலையில் 'விஜய ஸ்டூடியோ ' நிர்மாணிக்கப்பட்டதும் இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட அவர் 1963ல் 'அதட்ட வெடிய ஹெடஹொந்தாய்' மற்றும் 'உடரட்ட மெனிகே' 1964ல் 'தீவரயோ' 1965ல் 'அல்லப்பு கெதர' 1968ல் 'அட்டவன புதுமய' 1970ல் 'ஆத்மபூஜா' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி வெளியிட்டார்!
இலங்கையின் சிங்களத் திரையுலகின் முன்னணிக் கதாநாயகனாகத் திகழ்ந்த
காமினி பொன்சேகாவைச் சிகரம் தொட வைத்த சிறந்த படங்களில் ஒன்றாக மஸ்தானின் 'தீவரயோ' அமைந்தது. அதேபோல் 'அபூர்வ சகோதரர்கள்' எனும் ஒட்டிப்பிறந்த இரட்டையரின் கதையை இயக்கிக் கொண்டிருந்த வேளையில் 1968ல் குடிவரவுக் குடியகல்வுச் சட்டவிதிகளுக்கமைய மஸ்தான் இந்தியா செல்ல நேரிட்டதால் அப்படத்தை அதில் இரட்டை வேடத்தில் தோன்றிய காமினி பொன்சேக்காவே இயக்கி முடித்து 1970ல் திரையிட்டார்!
1983ல் நிகழ்ந்த இன வன்முறைகளின்போது ஸ்டுடியோக்களுக்கெல்லாம் தீ வைக்கப்பட்டபோது மஸ்தான் இயக்கிய அருமையான படங்கள் உட்பட அனேகம் தீக்கிரையானது சிங்களத் திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
மஸ்தான் 1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி இந்தியாவில் காலமானார் என அறிய முடிகிறது.
தந்தை இளவயதிலேயே இலங்கைக்குக் கூட்டிவந்ததோடு இங்கேயே படிக்க வைத்திருக்கிறார். மீண்டும் அவர் சென்னை சென்று தமிழ்த் திரையுலகில் சாதனை படைத்த "வேலைக்காரி" "மர்மயோகி" போன்ற பலபடங்களில் கெமராமேனாகப் பணியாற்றியிருக்கிறார்!
சிங்களத் திரைப்படங்கள் இந்தியாவில் தயாராகிவந்த யுகத்தில் 1947ல் தயாரிக்கப்பட்ட இரண்டாவது சிங்களப் படமான "அசோக மாலா" என்ற படத்தில் கெமராமேனாகப் பணிபுரிந்தவர் மஸ்தான்!
தொடர்ந்து 1953ல் திரையிடப்பட்ட 'சுஜாதா ' படத்திலும் கெமராவை இயக்கியவரும் அவரே! இயக்குநராக அவர் முதலில் இயக்கிய
சிங்களத் திரைப்படம் 1957ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி திரையிடப்பட்ட " சுகுமலீ". இலங்கையில் சிங்களத் திரையுலக முன்னோடிகளில் ஒருவரான கே.குணரத்னத்தினால்
ஹெந்தலையில் 'விஜய ஸ்டூடியோ ' நிர்மாணிக்கப்பட்டதும் இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட அவர் 1963ல் 'அதட்ட வெடிய ஹெடஹொந்தாய்' மற்றும் 'உடரட்ட மெனிகே' 1964ல் 'தீவரயோ' 1965ல் 'அல்லப்பு கெதர' 1968ல் 'அட்டவன புதுமய' 1970ல் 'ஆத்மபூஜா' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி வெளியிட்டார்!
இலங்கையின் சிங்களத் திரையுலகின் முன்னணிக் கதாநாயகனாகத் திகழ்ந்த
காமினி பொன்சேகாவைச் சிகரம் தொட வைத்த சிறந்த படங்களில் ஒன்றாக மஸ்தானின் 'தீவரயோ' அமைந்தது. அதேபோல் 'அபூர்வ சகோதரர்கள்' எனும் ஒட்டிப்பிறந்த இரட்டையரின் கதையை இயக்கிக் கொண்டிருந்த வேளையில் 1968ல் குடிவரவுக் குடியகல்வுச் சட்டவிதிகளுக்கமைய மஸ்தான் இந்தியா செல்ல நேரிட்டதால் அப்படத்தை அதில் இரட்டை வேடத்தில் தோன்றிய காமினி பொன்சேக்காவே இயக்கி முடித்து 1970ல் திரையிட்டார்!
1983ல் நிகழ்ந்த இன வன்முறைகளின்போது ஸ்டுடியோக்களுக்கெல்லாம் தீ வைக்கப்பட்டபோது மஸ்தான் இயக்கிய அருமையான படங்கள் உட்பட அனேகம் தீக்கிரையானது சிங்களத் திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
மஸ்தான் 1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி இந்தியாவில் காலமானார் என அறிய முடிகிறது.