இப்போதைக்கு கல்யாணம் இல்லை
மொடலிங் துறையில் இருந்து மிஸ் சென்னை பட்டம்பெற்ற பிறகு டைரக்டர் ப்ரியதர்ஷன்மூலமாக தமழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. கமல், விக்ரம், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என்று கிட்டத்தட்ட அத்தனை பெரிய நட்சத்திரங்களோடும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நாகர்ஜூனா, வெங்கடேஷ், மகேஷ்பாபு, ஜூனியர் என். டி. ஆர். என்று அங்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து நம்பர் - 1 நடிகையாக வலம் வந்தார். அதன் பிறகு புதுமுகங்களின் வரவால் த்ரிஷாவுக்கு கொஞ்சம் சினிமாவில் சறுக்கல் இருந்தாலும், வருஷத்துக்கு மூன்று - நான்கு படங்கள் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்.
பொதுவாக த்ரிஷா என்றாலே அவரைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்கும். சமீபகாலமாக அவரைப் பற்றிய பரபரப்பான செய்தி அவரது திருமணத்தை பற்றி தான். தெலுங்கில் மிகப் பெரிய தயாரிப்பாளரான சுரேஷ் காருவின் மகனும், நடிகருமான ராணா டகுபதிக்கும், த்ரிஷாவுக்கும் காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
இதுபற்றி த்ரிஷாவிடம் நாம் நேரடியாக கேட்டபோது, அவர் கூறியதாவது, என் கல்யாணம் பற்றிய செய்திகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் வருகிறது. இப்போதைக்கு நான் படங்களில் தான் பிஸியாக இருக்கிறேன். ராணாவுக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கு.
ஆனால் அது கல்யாணம் வரைக்கும் போகுமா..? என்பது எனக்கு தெரியல, பழகி பார்க்கணும், சினிமாவுக்கு வந்து 10 வருடம் ஆகிறது. பல மொழிகளிலும் நடிச்சாச்சு. நிறைய கொமர்ஷியல் படங்களிலும் நடிச்சாச்சு. இப்பதான் த்ரிஷா எந்த ரோல் கொடுத்தாலும் நடிப்பாங்க என்று நம்புறாங்க.
இதனால் எனக்கு நல்ல நல்ல ரோல் கிடைக்குது. ரொம்பவே என்ஜோய் பண்ணி படங்களில் நடிக்கிறேன்.
எதையும் மூடி மறைத்து பேசுறவ நான் கிடையாது. அது என்னோடு பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருக்க என் கல்யாண விஷயத்தை நான் ஏன் மறைக்க போறேன். இப்போது விஷால் கூட சமர், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை, ஜெயம் ரவியுடன் பூலோகம் போன்ற படங்களில் நடித்து வருகிறேன்.
இதுதவிர இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேசிக்கிட்டு இருக்கேன். எனக்கு ராணா புதிய நபர் கிடையாது. ஏற்கனவே அவரது அப்பா சுரேஷ் சாரின் தயாரிப்பில் வெங்கடேஷ் கூட நமோ வெங்கடேசா, ஆடலாரி, பொடிகார்ட் போன்ற படங்களில் நடிச்சுருக்கேன். அவர் தயாரிப்பில் நான் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். ராமநாயுவிடுவின் பேரன் தான் ராணா. நடிகர் வெங்கடேஷ் ராணாவுக்கு சித்தப்பா முறை. அவங்க குடும்பம் எல்லோருடனும் நான் நன்றாக பழகி இருக்கேன்.
ராணா எனக்கு நல்ல நண்பர். அவருடன் கொஞ்சம் பழகி பார்க்கணும் கல்யாணம் என்பது காலம் முழுக்க வாழ்க்கை நடத்தும் விஷயம். அது விளையாட்டு கிடையாது. ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். என்னுடைய கல்யாணம் இப்போதைக்கு இல்ல. என்ன நம்புங்க ப்Zஸ் என்றார்.
த்ரிஷா பேசி முடித்ததும், அவரது திருமணம் பற்றி அப்படியே அம்மா உமா கிருஷ்ணனிடம் கேட்டோம். அவர் சொன்னபோது, சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு த்ரிஷாவும், ராணாவும் சேர்ந்து ஒரு போடோ ஷ¥ட் கொடுத்தாங்க. அந்தப் படங்களை பார்த்ததும் இருவருக்கும் விரைவில் கல்யாணம் என்று செய்தி வந்துவிட்டது. திருமண விஷயத்தில் த்ரிஷாவுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம். அவ தப்பா எந்தமுடிவும் எடுக்கமாட்டாள்.
எது செய்தாலும் அது சரியா இருக்கும். எங்களுக்கு ஜாதி, மதம் எல்லாம் முக்கியம் கிடையாது. த்ரிஷா யாரை பிடிக்கிறது என்று சொல்கிறாளோ அவரை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைப்போம். நிச்சயம் அவள், வாழ்க்கை விஷயத்தில் அவசரப்படாமல் சரியான முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.
கேமரா முன்னாடி நிற்பது த்ரிஷாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவளா விரும்பி படத்தில் நடிக்கிறாள். இப்போது த்ரிஷா நடித்து வரும் படங்களின் ஷ¥ட்டிங் பாதிக்கக்கூடாது என்று நினைக்கிறோம். கையில் இருக்கும் படங்களை முடிக்கட்டும் அவளுக்கு யார்னு அவளே முடிவு பண்ணட்டும். நானே முதல்ல மீடியாவுக்கு கூப்பிட்டு சொல்கிறேன்.
அதுவரை கொஞ்சம் அவரப்பட்டு எதையும் எழுதாதிங்க என்று ரொம்பவே கெஞ்சி கேட்டுக் கொண்டார் த்ரிஷா அம்மா. கல்யாண விஷயத்தில் ஆரம்பத்தில் நடிகர் - நடிகைகள் உண்மையை மறைப்பதும், பின்னர் இறுதியாக கல்யாண பத்திரிகையோடு பத்திரிகையாளர்களை சந்திப்பதும் சகஜம் தான். ஆனால் த்ரிஷா விஷயத்தில் எப்படியோ? பொறுத்திருந்து பார்ப்போம்.
ஸ்ருதிஹாசனின் சம்பளம் ரூ. 1 கோடி
கமல் ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசனின் சம்பளம் ரூ. 1 கோடியாக உயர்ந்துள்ளது. 7 ஆம் அறிவு, 3 ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன்.இந்தியில் அறிமுகமான லக் படம் ஓடாததால் அங்கு மார்க்கெட் இல்லை. தற்போது பிரபுதேவா இயக்கும் புதிய இந்தி படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பிரபுதேவா இந்தியில் பிரபல இயக்குனராக இருப்பதால் அவர் படத்தில் நடிப்பதன் மூலம் இந்தியில் தனது மார்க்கெட் உயரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.
இதுவரை ரூ. 40 இலட்சம், ரூ. 60 இலட்சம் என்றுதான் சம்பளம் வாங்கினார். ஆனால் தற்போது பலுபு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஸ்ருதிக்கு ரூ. 1 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் ரவிதேஜா ஜோடியாக நடிக்கிறார். கதாநாயகிகளுக்கு ரூ. 1 கோடிதான் அதிகபட்ச சம்பளமாக நிர்ணயிக்கப்படுகிறது.
அதை ஸ்ருதி எட்டிப்பிடித்துள்ளதால் ஏற்கனவே ரூ. 1 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் வியப்பாகியுள்ளனர். நிறைய படங்களில் நடித்த பிறகே இந்த சம்பள நிலையை தொட முடியும். ஆனால் ஸ்ருதி குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். சில படங்களே ஹிட்டாகி உள்ளன. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அழுது கொண்டே அனுஷ்கா ஓட்டம்
அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பின் போது நாயகி அனுஷ்கா அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு வரும் அவர் தனக்கு மேக்கப் போட கூடவே ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளார்.
இதைப் பார்த்த மேக்கப் யூனியன் ஆட்கள் கடுப்பாகிவிட்டார்களாம். நாங்கள் இருக்கையில் அனுஷ்கா எப்படி தனியாக ஒரு பெண்ணை அதுவும் எங்கள் சங்கத்தில் உறுப்பினராகாதவரை அழைத்து வந்து மேக்கப் போட வைக்கலாம் என்று கொதித்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து மேக்கப் யூனியனைச் சேர்ந்த சுமார் 30 பேர் அலெக்ஸ் பாண்டியன் ஷ¥ட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து அனுஷ்காவுக்கு மேக்கப் போடும் பெண்ணை வெளியேறச் சொன்னார்களாம். மேலும் அவர்கள் அனுஷ்காவை திட்டித் தீர்த்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அனுஷ்கா அழுதுகொண்டே அங்கிருந்து ஓடிவிட்டார்.
நிலைமை மோசமடைவதை உணர்ந்த கார்த்தி தலையிட்டு மேக்கப் யூனியன் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அனுஷ்காவுக்கு மேக்கப் போட்ட பெண்ணை வெளியேற்றிய பிறகே ஷ¥ட்டிங் மீண்டும் துவங்கியுள்ளது.
மீனாள் புதிய அவதாரம்
பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் நார்த்தங்கா என்ற கெரக்டரில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் மீனாள். இந்த கேரக்டர் தனக்குப் பெரும் பெயரை வாங்கித் தரும் என்றும் மனசெல்லாம் உற்சாகம் பொங்க சந்தோஷமாக கூறுகிறார் மீனாள்.தவமாய் தவமிருந்துதான் மீனாளின் முதல் படம். சேரனால் அறிமுகப்படுத்தப்பட்ட மீனாள், முதல் படத்திலேயே நல்ல பெயரை வாங்கினார். ஆடுகளம் படத்திலும் இவருக்கு அழுத்தமான பாத்திரம் கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது பாரதிராஜாவின் பார்வையில் சிக்கி வெயிட்டான ரோலை வாங்கி விட்டார். அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தில் இவருக்கு முக்கியமான பாத்திரத்தை அளித்துள்ளாராம் பாரதிராஜா.
இதுகுறித்து மீனாள் கூறுகையில், தனது அன்னக்கொடியும் படத்தில் நார்த்தங்கா என்ற கெரக்டரில் என்னயோ அல்லது தவமாய் தவமிருந்து படத்தில் நடித்தவரையோ போட வேண்டும் என்று நினைத்துள்ளார் பாரதிராஜா. இதையடுத்து என்னை வரவழைத்துப் பேசினார். அப்போது தவமாய் தவமிருந்து படத்தில் நடித்தது நான்தான் என்று அவரிடம் கூறியபோது அவரால் நம்பவே முடியவில்லை. அப்படியே அசந்து போய்விட்டார்.
இந்த நேரத்தில் நான் சேரன் சேருக்கும், ஆடுகளம் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த வெற்றிமாறனுக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்த இரண்டு படங்களும்தான் பாரதிராஜாவிடம் என்னை கொண்டு போய் சேர்க்க உதவியுள்ளன என்றார் நெஞ்செல்லாம் சந்தோஷம் பொங்க.
அன்னக்கொடி படத்தில் நடித்து வரும் மீனாள் ஒவ்வொரு காட்சியையும் நடித்து முடிக்கும்போது பாரதிராஜா பிரமாதம் என்று கூறி பாராட்டித் தள்ளுகிறாராம். இத்தனை நாள் எங்கம்மா இருந்தே என்றும் பாராட்டுகிறாராம்.
தற்போது தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மீனாள். தங்கரின் மனைவி வேடத்தில் வருகிறாராம். ஏற்கனவே பள்ளிக்கூடம் படத்திலும் தங்கருக்கு ஜோடி போட்டவர் மீனாள் என்பது நினைவிருக்கலாம். அதேபோல கலியுகம், மச்சான் ஆகிய படங்களையும் எதிர்பார்த்துள்ளார் மீனாள்.
விவேக்குடன் கவர்ச்சி கலந்த கொமெடி கேரக்டர்களில் நிறைய நடித்துள்ள மீனாள் இப்போது முக்கிய வேடங்களில் நடிக்கப் புகுந்திருப்பது அவருக்கு நிச்சயம் ஒரு புதிய அவதாரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எனது தாயார் சினிமாவில் கோரஸ் பாடித்தான் என்னை வளர்த்தார்
கூட்டத்தோடு கூட்டமாக ‘கோரஸ்’ பாடத் தொடங்கிய எல். ஆர். ஈஸ்வரி வெகு விரைவிலேயே சிறந்த பின்னணி பாடகியாக உயர்ந்தார். எல். ஆர். ஈஸ்வரியின் குரலில் ஒருவித வசிய சக்தி இருக்கும். பாடும் முறையில் ‘கிக்’ இருக்கும். எனவே இலட்சக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றார்.‘இது எனக்கு இறைவன் கொடுத்த வரம்’ என்று கூறிய ஈஸ்வரி, தொடர்ந்து சொன்னார்.
“ஏழ்மையில் பிறந்த நான், இந்த அளவு உயர்ந்திருக்கிறேன் என்றால், அதற்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எனக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் டி. எல். ராஜேஸ்வரி. பரமக்குடிதான் எங்களுடைய பூர்வீகம். ஆனால், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை புதுப்பேட்டைதான்.
எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில்தான் நான் பிறந்தேன். எனது தந்தை பெயர் அந்தோணி தேவராஜ். தாயார் ரெஜினா மேரி நிர்மலா. எனக்கு அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் உண்டு.
எனது தந்தை இளம் வயதிலேயே (36 வயது) இறந்து விட்டார். அப்போது எனக்கு வயது 6. வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த எங்களது குடும்பத்தை எனது தாயார் சினிமாவில் கோரஸ் பாடி, அதில் கிடைத்த மிக சொற்ப வருமானத்தைக் கொண்டு காப்பாற்றி வந்தார்.
எப்படியோ கஷ்டப்பட்டு என் தாயார் என்னைப் பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்கு மேல் கல்லூரிக்கு என்னை அனுப்பி படிக்க வைக்க முடியாத சூழ்நிலை எனது தாயாருக்கு. ஆகவே, எனது தாயாருக்கு உதவி செய்ய நான் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.
அப்போது எனக்கு வயது 16. என் தாயார் சினிமாவில் கோரஸ் பாடச் செல்லும் போது, அவருடன் செல்வேன். அவர்கள் பாடுவதைக் கேட்டு அதே மாதிரி நானும் பாடுவேன்.
ஒருநாள் ஏ. பி. நாகராஜன் தயாரித்த ‘வடிவுக்கு வளைகாப்பு’ என்ற படத்திற்கு கோரஸ் பாட எனது தாயார் சென்றபோது, நானும் அவருடன் சென்றேன். பாடலின் இடையே ‘ஹம்மிங்’ கொடுக்க வேண்டிய பெண் அன்று வராததால், தற்செயலாக நான் அந்தப் பாட்டுக்கு ‘ஹம்மிங்’ கொடுத்தேன். இதுதான் நான் முதன் முதலில் சினிமாவிற்கு கொடுத்த குரல்.
இதைக்கேட்ட அங்கிருந்த ஏ. பி. நாகராஜனும், இசையமைப்பாளர் கே. வி. மகாதேவனும் ‘உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. நீ எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய், பார் என்று மிகவும் பாராட்டினார்கள்.
இதைக்கேட்டவுடன் அந்த நிமிடமே எங்களது குடும்ப கஷ்டமெல்லாம் பறந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்.
இது எனக்கு வாழ்க்கையில் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. வடிவுக்கு வளைகாப்பு’ படத்தை அடுத்து ஏ. பி. நாகராஜனும், வி. கே. ராமசாமியும் சேர்ந்து ‘லட்சுமி பிக்சர்ஸ்’ என்ற படக் கம்பெனியைத் தொடங்கி, ‘நல்ல இடத்து சம்பந்தம்’ என்ற படத்தைத் தயாரித்தனர். அதில் கே. வி. மகாதேவன் இசை அமைப்பில் எனக்கு பாட வாய்ப்புக் கிடைத்தது.
‘புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு;
உன் பிறந்த இடத்தை மறந்து விடாதே நினைத்துப்பாரு’
‘பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே’
‘இவரேதான் அவரு வரேதான் இவரு’
‘துக்கத்திலும் சிரிக்கணும்; துணிவுடனே இருக்கணும்’
என்ற 4 பாடல்கள் பாடும் வாய்ப்பை எனக்கு ஏ. பி. நாகராஜன் வழங்கினார்.
எனது பெயர் டி. எஸ். ராஜேஸ்வரி என்று இருந்ததை சுருக்கமாக ‘எல் ஆர். ஈஸ்வரி’ என்று மாற்றி வைத்தவரும் ஏ. பி. நாகராஜன்தான்.
அப்போதெல்லாம் ஒரு பாடல் பாடினால் 100 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அக்காலத்தில் இது பெரிய தொகை. வறுமையில் வாடிக் கொண்டிருந்த என் குடும்பத்தை, வசதியாக வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது’ என்றார் எல். ஆர். ஈஸ்வரி.
தற்கொலைக்கு முன் சில்க் சுமிதா எழுதி வைத்திருந்த கடிதம்
த ற்கொலை செய்து கொள்வதற்கு முன், சில்க் சுமிதா ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். ‘எனக்கு வாழ்க்கை தருவதாகக் கூறியவர் ஏமாற்றிவிட்டதால், இந்த முடிவுக்கு வந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.படுக்கை அறையில் தூக்கில் சுமிதா பிணமாகத் தொங்குவதைப் பார்த்த ராதாகிருஷ்ணமூர்த்தி, பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது மகளின் கணவரான கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கொடுக்கவே அவரும் விரைந்து வந்தார்.
ராதாகிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் ராமு, மருமகன் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து கடற்பாரையால் பின்பக்க அறைக்கதவை உடைத்து திறந்தனர்.
அங்கு மின் விசிறியில் நைலான் சேலையால் தூக்குப்போட்டு சில்க் சுமிதா தொங்கியபடி இருந்ததைப் பார்த்ததும் மூவரும் உறைந்து போனார்கள். ‘உயிர் இருக்குமோ’ என கருதிய அவர்கள் , சில்க் சுமிதாவின் உடலை கீழே இறக்கினார்கள்.
ராதாகிருஷ்ணமூர்த்தி டொக்டர் என்பதால் சில்க் சுமிதாவின் கையைப் பிடித்து ‘நாடி’ பார்த்தார். சில்க் சுமிதா உடலில் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் அவருக்குத் தெரியவில்லை. உடல் குளிர்ந்து இருந்தது.
உடனே சில்க் சுமிதாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக முடிவு செய்தனர். வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ராதாகிருஷ்ணமூர்த்தி டெலிபோன் செய்து அம்புலன்ஸ் அனுப்பும்படி கூறினார். ஆஸ்பத்திரியில் இருந்து அம்புலன்ஸ் வந்தது. சில்க் சுமிதாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.
ஆஸ்பத்திரியில் சில்க் சுமிதாவை டொக்டர்கள் பரிசோதித்து விட்டு, அவர் இறந்த வெகு, நேரம் ஆகிவிட்டது என தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து சில்க் சுமிதாவின் உடல், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
சில்க் சுமிதா கறுப்பு நிறத்திலான பனியனும், கால்சட்டையும் அணிந்து இருந்தார். நைலான் சேலையில் தூக்குப் போட்டுக்கொண்டதால் கழுத்தில் சேலை இறுகியதற்கான தழும்பு காணப்பட்டது. வாயில் ‘பல்’ கடித்து இறுக்கிய நிலையில் இருந்தது. கண்கள் திறந்தபடி இருந்தன. சில்க் சுமிதா மரணம் பற்றி தகவல் கிடைத்ததும் கிண்டி பொலிஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரி பிண அறையில் வைக்கப்பட்டிருந்த சில்க் சுமிதாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சில்க் சுமிதா தூக்கில் தொங்கிய அறை மிகவும் சிறியது. அதில் மெத்தையுடன் கூடிய ஒரே ஒரு படுக்கை மட்டுமே இருந்தது. படுக்கைக்கு நேர் மேலே மின்சார விசிறி, அந்த மின்சார விசிறியில்தான் சுமிதா தூக்குப்போட்டு தொங்கியபடி கிடந்தார்.
படுக்கை மீது ஒரு நாற்காலி வைத்து அதன் மீது ஏறி நின்று மின்சார விசிறியில் நைலான் சேலையை கட்டி இருக்கிறார். பிறகு, சேலையின் மறுமுனையில் சுருக்கு போட்டு, அதை தனது கழுத்தில் மாட்டிக்கொண்டு நாற்காலியை காலால் தட்டி விட்டு தொங்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. சில்க் சுமிதாவின் தற்கொலை திரை உலகில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இது கொலையாக இருக்கலாமோ என்று பொலிஸார் முதலில் சந்தேகப்பட்டனர். ஆனால் ‘சில்க் சுமிதா எழுதி வைத்திருந்த ஒரு கடிதம், அவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்தியது.
22-9-1996 திகதியிட்ட அக்கடிதம், அரைகுறை தெலுங்கில் எழுதப்பட்டிருந்தது. வாக்கியங்கள் முழுமை இல்லாமல் இருந்தன.
அந்தக் கடிதம் வருமாறு:-
‘அபாக்கியவதி, கடவுளே, நான் ஏழு வருஷமா என் வயிற்றுக்காக த்தானே கஷ்டப்பட்டு இருக்கேன். எனக்கு என்று யாருமே இல்லை. நான் நம்பினவங்க எல்லாம் என்னை மோசம் பண்ணிட்டாங்க. பாபு (ராதாகிஷருஷ்ண மூர்த்தி) தவிர என் மேலே வேறு யாருக்கும் அன்பு கிடையாது. என் பின்னால் இருந்தவங்க எல்லாம் செட்டில் ஆயிட்டாங்க. பாபு தவிர மற்ற எல்லோரும் என் உழைப்பை சாப்பிட்டவங்கதான். என் சொத்தை அனுபவிச்சவங்கதான் என் அழிவுக்கும் வழிவகுத்தாங்க யாருக்குமே என்னிடம் பாசம் இல்லை.
வாழ்க்கையில் எனக்கும் நிறைய ஏக்கம்- எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் என்னைச் சுற்றி இருக்கிறவங்க.
எனக்கு மன நிம்மதி இல்லாமல் நான் செத்துப்போகிற அளவுக்கு பண்ணிட்டாங்க. நான் எவ்வளவோ சாதிச்சாலும், எனக்கு மன நிம்மதி இல்லாமல் செய்துட்டாங்க. எல்லோருக்குமே நான் நல்லது பண்ணி இருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையை இந்த மாதிரி பண்ணிட்டாங்களே, என்ன நியாயம்?
எனக்கு இருக்கிற கொஞ்ச சொத்தையும் பாபு குடும்பத்துக்கும், என் குடும்பத்துக்கும் சரி சமமா பங்கு வச்சு கொடுத்திடுங்க. என்னுடைய ஆசையை எல்லாம் ஒருத்தர் மீது வைத்திருந்தேன். அவர் என்னை மோசம் செய்துவிட்டார்.
கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரைப் பார்த்துக்கொள்வார். கடவுள் என்னை எதுக்காக படைத்தார்?
என்னால் நிறைய அனுபவித்தவர்கள், நான் எவ்வளவுதான் நல்லது செய்தாலும், எனக்கு அவர்கள் கெடுதல்தான் செய்தார்கள். கடவுள் அவர்களைப் பார்த்துக் கொள்வார். என்னுடைய உழைப்பை சாப்பிடாதவங்க கிடையாது. ஆனால் யாருக்கும் என் மீது விசுவாசம் கிடையாது. (பாபு தவிர) 5 வருடத்துக்கு முன்பு ஒருத்தன் எனக்கு வாழ்க்கை தருகிறேன் என்று சொன்னான். இப்போது கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டான். வாழ்க்கையில் நான் எவ்வளவோ பொறுத்துக்கிட்டேன்.
ஆனால் இப்போது என்னால் முடியவில்லை. இதை எழுதுவதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன். அது எனக்குத் தெரியும். ஆசை ஆசையாக நகைகள் வாங்கினேன். அது யாருக்கோ’
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சில்க் சுமிதாவின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் அவரது உடல் அம்புலன்ஸ் வண்டி மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவரதுவீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.