Wednesday, February 6, 2013

கடலில் காணாமல் போன நடிகை லட்சுமி மஞ்சு

சூப்பர் ஸ்டாரின் நண்பரும் பிரபல தெலுங்கு ஹீரோவுமான மோகன்பாபுவின் மகள் லுட்சுமி மஞ்சு இவர் நடிகை மட்டுமில்லை. தயாரிப்பாளரும் ஆவார். தற்போது தமிழ் தெலுங்கில் மறந்தேன் மன்னித்தேன். தலைவன் வருகிறான் படங்களை தயாரித்து வருகிறார்.
கடல் படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க சம்மதமா என்று கேட்டிருக்கிறார் மணிரத்னம். அவர் படத்தில் நடிக்கக்கொடுத்து வைத்திருக்கணுமே என்று லட்சுமியும் நடிக்க ஒப்புக் கொண்டார்.
படத்தில் விலை மாது கேரக்டர் அதே நேரத்தில் அர்ஜுனின் ஆசை நாயகி, அவரின் எதிரியான அரவிந்தசா மியை அர்ஜுனுக்காக பழிசு மத்துவது போன்ற கேரக்டர் ஆஹா பெரிய கேரக்டராக இருக்கே இதில் நடித்தால் தமிழில் பெரிய இடத்துக்கு வந்து விடலாம் என்று நடித்தார். லட்சுமி சுமார் 10 காட்சிகளும், ஒரு பாடல் காட்சியையும் படமாக்கினார் மணிரத்னம்.
தெலுங்கு, தமிழில் கடந்த 1ம் திகதி படம் வெளிவந்தது. ஓடியபோய் ஆர்வத்துடன் பார்த்தார் லட்சுமி. அர்ஜுனுடன் இவர் நடித்த பாடல் காட்சியைக் காணவில்லை. அதுமட்டுமில்லை. அர்ஜுனும் இவரும் இணைந்து நடித்த பல காட்சிகள்படத்தில் இல்லை. அரவிந்தசாமி இவரை சந்திப்பது குண்டு காயம் பட்டு அர்ஜுனை பார்த்து இவர் அழுவது.
அர்ஜுன் தப்பிய பிறகு அவரை பொதுமக்கள் அரவிந்தசாமியுடன் தவறான உறவு இருப்பதாக நினைத்த இழுத்துக் கொண்டு செல்வது, தேவாலயத்தில் அறவிந்தசாமி மீது பலிபோடுவது என்ற நான்கு காட்சிகள் மட்டுமே இருந்தது. இதைப் பார்த்த லட்சுமி மஞ்சு அதிர்ச்சி அடைந்தார். ஏற்கெனவே படத்தின் விளம்பரங்களை பரமோஷன்களில் தன்னை புறக்கணிப்பதில் வருத்தத்தில் இருந்த லட்சுமிக்கு இது மேலும் வருத்தத்தைக் கொடுத்துள்ளது.
இதனை தன் டுவிட்டரில் லட்சுமி பகிர்ந்து கொண்டிருக்கிறார். கடல் படம் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். எனது காட்சிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டிருந்தன. நான் நடித்த பாடல் காட்சி இல்லை. மணிசார் எது செய்தாலும் அதற்கு நல்ல காரணம் இருக்கும் இதற்கும் அப்படி ஒரு காரணம் இருக்கும் என்று நம்புகிறேன். அவர் மீது இன்னும் நல்ல மதிப்பு இருக்கிறது. பெஸ்ட் ஆப் லக் நெக்ஸ் டைம்’ என்று டுவிட் செய்திருக்கிறார்.

No comments:

Post a Comment