Thursday, February 28, 2013

அமலாபால் ஸ்பெயினில் ரகசிய லிப்லொக்

தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி கட்டி பவ்யம் காட்டும் அமலாபால், அக்கட ஆந்திரா தேசத்தில் படு கவர்ச்சி நாயகியாக ஆட்டம் போடுகிறார். கோடி ரூபாய் சம்பள நடிகை பட்டியலில் சேர்ந்து விடவேண்டும் என்பதற்காக எத்தகைய காட்சிகளிலும் நடிக்கத் தயார் என்று சொல்லாமல் சொல்லி வருகிறார்.
பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் “இத்தரம்மாயிலதோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அல்லு அர்ஜுன் கதாநாயகன் அமலாபால் கதாநாயகி. இந்தப் படத்தில் மூன்று இடங்களில் லிப்லொக் முத்தக்காட்சிகள் இடம்பெறுகிறதாம்.
இதற்கான படப்பிடிப்பு தற்போது ஸ்பெயினில் நடந்து வருகிறது. அங்கேயே இந்த மூன்று காட்சிகளையும் எடுத்து விட இயக்குனர் பூரி ஜெகன்னாத் முடிவு செய்தார். இதனை அவர்களிடம் சொன்னபோது முதலில் தயங்கியவர் அல்லு அர்ஜுன், அமலாபால் அடுத்த நொடியே ஒகே சொன்னாராம். இயக்குநர், கெமராமேன் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர மற்ற அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு வெவ்வேறு பின்னணியில் லிப்லொக் முத்தக் காட்சிகளை எடுத்தாராம்.
முதல் காட்சி மட்டும் ஏழு டேக் வரை சென்றது என்றும், அடுத்த காட்சிகள் ஒரே டேக்கில் முடிந்தது என்றும் பட யூனிட்டைச் சேர்ந்தவர்கள் கிசுகிசுக்கிறார்கள். கடைசி வரை முத்தக்காட்சி படங்களை வெளியிடாமல் திரையரங்கில் மட்டுமே அந்த காட்சிகளை காணும் வகையில் திட்டம் வைத்திருக்கிறாராம் பூரி ஜெகன்நாத்.

No comments:

Post a Comment