Wednesday, February 6, 2013

என்னை ரசிக்கட்டும - இனியா

‘என்னை ரசிக்கட்டும்’ இப்படி வேறு எந்த நடிகை சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ‘வாகை சூடவா’ படத்தில் அழகாக கண்ணியமாக நடித்து ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்கள் மனதிலும் இடம் பிடித்த இனியாதான்இப்படிச் சொல்லியிருக்கிறார்.
காரணம், இவர் நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் கண்பேசும் வார்த்தைகள் இதில் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு கிளாமர் காட்டியிருக்கிறார்.
‘சூட்டிங்கிங் மானிட்டரில் பார்த்த போது ஒன்றும் தவறாகத் தெரியவில்லை. ஆனால் பெரிய திரையில் பார்த்தபோது எனக்கே கொஞ்சம் கூடுதலாக கிளாமர் காட்டி விட்டோமோ என்று தோன்றியது.
இருந்தாலும் பரவாயில்லை என் ரசிகர்களுக்கு நான் படைக்கும் கிளாமர் விருந்தாக இருந்துவிட்டுப் போகட்டும்.
இன்னொன்று, என்னாலும் கிளாமர் காட்டமுடியும் என்பதை சினிமா உலகினருக்கு சொன்ன மாதிரியாகவும் இருக்கட்டும் என்கிறார் தைரியமாக இனியா.

No comments:

Post a Comment