Thursday, February 28, 2013

ஐதராபாத் குண்டு வெடிப்பு; டொக்டர் ராஜசேகர் - ஜீவிதா 5 லட்சம் நிவாரண உதவி


கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காகவும், இறந்தவர்களின் குடும்பங்களின் எதிர்கால வாழ்க்கைக்காகவும் ஆந்திர அரசு நிதி திரட்டுகிறது. இதில் முதன் முறையாக திரைப்பட நட்சத்திரங்களான தமிழ் நாட்டைச் சேர்ந்த டொக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதிகள் 5 லட்சம் நிதி அளித்துள்ளனர். ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து இதனை அவர்கள் வழங்கினர்.
இது குறித்து டொக்டர் ராஜசேகர் கூறும்போது, ‘நடந்திருக்கும் கொடுமைக்கு இது சிறிய தொகைதான். என் படம் ‘மகாகானி’ 1ஆம் திகதி வெளிவருகிறது. இது வெற்றி பெற்று நல்ல வருமானத்தை கொடுத்தால் இன்னொரு பெரிய தொகையை நிதியாக கொடுப்பேன். இதேபோன்ற பயங்கரவாத செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment