ஐதராபாத்தில் நடந்த சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைய்னோஸ் அணியும், கர்நாடக புல்டோசர் அணியும் மோதியன.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் போல சென்னை - கர்நாடக அணிகள் கருதப்படுகின்றன.

அண்மையில் நடந்த போட்டிக்கு அக்கா ஸ்ருதி ஹாசனுக்கு துணையாக தங்கை அக்ஷரா ஹாசனும் வந்திருந்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
இருவரும் மைதானத்தை சுற்றி வந்தும், விசில் அடித்தும், ஆட்டம் போட்டும் கலக்கினார்கள். ஆனால் மழை வந்து ஆட்டம் பாதியிலேயே நின்று விட்டதால் இருவரும் கவலையுடன் சென்றனர்.
அக்ஷராவின் அழகு இன்னும் மெருகேறி இருப்பதாக சிலர் பேசிக் கொண்டனர். ‘எத்தனை கோடி கொடுத்தாவது இந்த பொண்ணை நம்ம படத்துல நடிக்கவச்சிடனும்’ என்று சில இயக்குனர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment