Wednesday, February 6, 2013

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

என் திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம்தான் என்று அடித்துச் சொல்கிறார் நடிகை ஓவியா. அப்படி தற்போது யாரை காதலிக்கிaர்கள், என்று கேட்டால் காதல் வந்தால் சொல்லி அனுப்புகிறேன் என்கிறார் நாசூக்காக.
களவானி படத்துக்குப் பின்னால் சில்லுன்னு ஒரு சந்திப்பு படம் மூலம் விமலோடு ஜோடி சேர்ந்திருக்கும் ஓவியா, தான் நடிக்கும் படத்தில் உங்களை ஹீரோயினியாகப் போடச் சொல்வதாக விமல் கூறி வாய்ப்பு வாங்கிக் கொடுப்பதாக பேச்சு அடிபடுகிறதே உண்மையா என்றாலும் உடனடியாக மறுக்கிறார்.
யாருடைய தயவும் எனக்குத் தேவையில்லை என் நடிப்புத் திறமைக்கு வாய்ப்பு வந்தாலே போதும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிப் படங்களிலும் நான் பிஸியாக இருக்கிறேன். இந்த நிலையில் யாருடைய சிபாரிசும் எனக்கு வேண்டியதில்லை என கொஞ்சம் காட்டமாகவே கூறுகிறார் அவர்.

No comments:

Post a Comment