நமீதாவின் மிட்நைட் பார்ட்டி
தமிழக ரசிக பெருங்குடி மக்களை மச்சான்ஸ் என்று ஆசை ஆசையாக அழைப்பவர் நமீதா. ஆனால்
என்ன காரணமோ ரசிகர்களின் மனதில் இன்னமும் நிறைந்திருக்கும் நமீதாவுக்கு
சினிமாக்காரர்களின் மனதில்தான் இடமில்லை.
தினம் தினம் இயக்குனர் மற்றும் படாதிபதிகளை துரத்தி சான்ஸ் கேட்டு வருவதை இன்றுவரை அவர் விட்டபாடில்லை. தற்போது அரிராஜனின் இளமை ஊஞ்சல் படத்தில் நடித்து வருபவர், இந்தப் படம் திரைக்கு வரும் நேரத்தில் மேலும் சில படங்களை எப்படியேனும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக சில குறுக்கு வழிகளில் இறங்கியிருக்கிறார்.
அதன் முதல் கட்டமாக கடந்த வாரத்தில், சென்னையிலுள்ள பிரதான ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் சில சினிமா நபர்களை வரவைத்து விடிய விடிய மதுபான பார்ட்டி வைத்திருக்கிறார் நமீதா. இந்த சம்பவம் கோலிவுட்டில் காதும் காதும் வைத்த மாதிரி பரவி வருவதையடுத்து, நமீதாவின் பெயரை சொன்னாலே ஜொள் ஊறும் சில நரைமுடி சினிமா பிரபலங்களும் அம்மணியின் அழைப்புக்காக சீக்ரெட்டாக தொடர்பு கொண்டு வருகிறார்களாம். குஜராத் குதிரையின் இந்த படவேட்டையில் யார் யாரெல்லாம் பலியாகப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தாயுடன் தோன்றி அசத்திய விஜய்
விஜய்யுடன் சேர்ந்து நடித்தது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு எனது மகன் விஜய்யை மடியில் கிடத்தி கொஞ்சி மகிழும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்திற்கு என் நன்றிகள் என விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது படவேலைகளுக்கு மத்தியில் பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் இருக்கிறார்.இந்நிலையில் விஜய்யும், அவரது அம்மாவும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் இருவரும் முதன் முறையாக ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரத்தில் தோன்றி நடித்துள்ளனர். விஜய், தனது அம்மா ஷோபா சந்திரசேகரின் மடியில் படுத்தபடி பாசத்தை பொழிவது போன்றும், ஷோபாவும் விஜய் மீது பாசத்தை பொழிவது போன்றும் அந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.
ரொம்ப தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் மக்களிடம் வெகு சீக்கிரத்தில் ரீச்சாகி உள்ளது. காரணம் அம்மா- மகன் பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தை அப்படியே ரியலாக எடுத்துள்ளனர். டென்ஸ் ஏஜென்ஸி மைண்ட் ஷேர் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த விளம்பரத்தை உலகம் முழுக்க ரிலீஸ் செய்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த விளம்பரம் வெளியாகிறது.
இந்த விளம்பரத்தில் நடித்ததை ரொம்ப பெருமையாக கருதுகிறார் ஷோபா. இது குறித்து அவர் மகிழ்ச்சி பொங்க கூறியிருப்பதாவது, சின்ன வயதில் எனது மகனை (விஜய்) மடியில் கிடத்தி கொஞ்சி மகிழ்ந்தது உண்டு. இபபோது பெரிய ஸ்டாராகிவிட்டதால் நிற்க கூட நேரமின்றி ஷ¥ட்டிங், ஷ¥ட்டிங் என்று ஒடிக்கொண்டு இருக்கிறார்.
அப்படி இருக்கையில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் எனது மகனை எனது மடியில் கிடத்தி கொஞ்சி மகிழும் வாய்ப்பு கிடைத்தது. 2 நாளும் எனது மகனுடன் சேர்ந்து நடித்து, அவனுடன் கொஞ்சி மகிழ்ந்தது. மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்திற்கு எனது நன்றிகள் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தக் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டவுடன் உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டார் ஷோபா. ஷ¥ட்டிங், ஷ¥ட்டிங் என்று விஜய் பிஸியாக இருந்ததால் அவருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையாம் ஷோபாவுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு அப்படி ஒரு வாய்ப்பு அமைந்ததால் உணர்ச்சிவசப்பட்டு அழுததாக ஷோபா கூறியுள்ளார்.
எந்திரனில் ரோபோ ரஜpனி கண்ணாடி அணிந்ததன் ரகசியம்
எந்திரன் படத்தில் ரோபோ ரஜினி எப்போதுமே கண்ணாடி அணிந்து நடித்ததன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.ஏதோ விஞ்ஞானியான வசியையும், ரோபோ கதாபாத்திரமான சிட்டியையும் வேறுபடுத்திக் காட்ட ஷங்கர் செய்த வியூகம் இது என்று நாம் நினைத்திருந்தோம். ஆனால் அது விஷ¤வல் கிராபிக்ஸ்க்கு ஆகும் செலவை பண்மடங்கு குறைக்க எடுத்த முடிவு என்று இப்போதுதான் தெரிய வந்துள்ளது.
எந்திரன் படத்தில் விஷ¤வல் எபெக்ட்டுக்காக திட்டமிடப்பட்டிருந்தது ரூ. 70 கோடி. ஆனால், மூன்றே மூன்று விஷயங்களைக் கடைப்பிடித்து விஷ¤வல் எபெக்டுக்கான செலவை ரூ. 30 கோடியாக குறைத்துள்ளார் விஷ¤வல் எபெக்ட் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாஸ் மோகன். விஷ¤வல் எபெக்டில் கண்களின் அசைவை துல்லியமாகக் கொண்டுவர நீண்ட நேரம் ஆகும். எனவேதான், ஷங்கரிடம் பேசி, ரோபோ ரஜினிகாந்தின் உடலில் மூன்று விதமான மாற்றங்களைச் செய்ய ஆலோசனை கூறினேன்.
முதலில் எப்போதுமே கூலிங் கிளாஸ் அணிந்து தோன்றுவது இதனால் கண்களின் அசைவை உருவாக்க அதிக நேரம் செலவிடத் தேவையில்லை.
பிறகு அதிகமாக அசையும் தலை முடியை ஒருபோல் குட்டையாகக் காண்பிப்பது, லெதர் ஆடை அணிவது போன்றவை கடைப்பிடிக்கப்பட்டதாகவும், இதனால் 70 கோடி ரூபாயில் இருந்து 20 கோடி ரூபாவாக விஷ¤வல் எபெக்டுக்கான செலவு குறைக்கப்பட்டதாகவும் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் ஒரு நாள்
சில வருடங்களுக்கு முன் சென்னையில் மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் அடைந்த சிறுவன் இதயந்திரன், தனது உடல் உறுப்புகளை வேறு ஒரு நோயாளிக்கு பொருத்தியதை செய்தித்தாள்கள் மூலம் நாம் படித்திருப்போம். இந்த உண்மை செய்தியை மலையாளத்தில் டிராபிக் என்ற பெயரில் சீனிவாசன் இயக்கி இருந்தார்.பல விருதுகளை, பாராட்டுகளை பெற்ற இப்படம் இப்போது தமிழுக்கு வர இருக்கிறது. மலையாள படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சையத் என்பவர் இப்படத்தை சென்னையில் ஒருநாள் என்ற பெயரில் இயக்க உள்ளார். மலையாளத்தில் செய்ய முடியாத சில விஷயங்களை தமிழில் செய்துள்ளார்.
இந்தப் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் சுப்பர் ஸ்டார் நடிகராகவும், அவர் மனைவியாக ராதிகாவும், பிரசன்னா டொக்டராகவும், சரத்குமார் பொலிஸ் அதிகாரியாகவும், சச்சின் பத்திரிகையாளராகவும், இவர்கள் தவிர பலரும் நடித்துள்ளனர்.
இதில் யாருக்கும் யாரையும் தெரியாது. சென்னையில் ஒருநாள் காலையில் நடக்கும் சம்பவம், அன்று மாலையில் இவர்கள் எவ்லோரையும் சேர்த்து வைக்கிறது. இவர்கள் சேர்ந்து செய்யும் செயலை ஒரு திரைக்கதையாய் கொண்டு வந்துள்ளார் இயக்குநர்.
இந்திய திரை உலகில் வரதராஜ பெருமாளின் மகள் நீலாம்பரி
,ந்திய திரை உலகத்தில் இலங்கைத் தமிழ் பிரபலம் ஒருவருடைய வாரிசு இடம்பிடித்து இருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது. அவர் இலங்கையின் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளின் மகள் நீலாம்பரி பெருமாள் ஆவார்.மலையாள திரை உலகம் இவருடைய அழகையும், நடிப்புத் திறமையையும் அடையாளம் கண்டுகொண்டது. மலையாள திரைப்படமான பம்பாய் மிட்டாயில் கொலை ஒன்றுக்கு பின்னால் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்கின்ற ஊடகவியலாளராக நடிதது இருந்தார்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்...
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும் (நான் பாடும்...)
தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப் பூங்கன்னம் (2)
எங்கே நானென்று தேடட்டும் உன்னை
சிந்தாத முத்தங்கள் சிந்த (2)
அவளெந்தன் மனமேடை தவழ்கின்ற பணிவாடை (2)
காலம் கொண்டாடும் கவிதை மகள்
கவிதை மகள்.... (நான் பாடும்)
நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட (2)
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருந்தாலோ தனிமை (2)
நிழல்போலுன் குழலாட தளிர்மேனி எழுந்தாட (2)
அழகே என் பின்னால் அன்னம் வரும்
அன்னம் வரும்.... (நான்)
13 வயதிலேயே மேடை கச்சேரி நிகழ்த்திய பெருமைக்குரியவர் எம்.எஸ்.வி.
இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி, இசை என்றால் இசையவைப்பது. மனிதர்களையும் உயிரினங்களையும் இசைய வைக்கின்ற பணிய வைக்கின்ற ஓர் அழகு சாதனம் இசை. இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். சோகம், இன்பம், துன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை.அதனால் தான் இசைக்கு மயங்காதார் எவருமில்லை. இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்றெல்லாம் இசையின் மகிமையை புகழ்ந்துரைப்பர் சான்றோர்கள்.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இசையின் மூலம் நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி, இசைப் பின்னணி ஏதுமில்லாத ஏழ்மை குடும்பத்தில் பிறந்த எம்.எஸ். விஸ்வநாதன் நான்கு வயதில் தனது தந்தையை இழந்த சூழ்நிலையில் நீலகண்ட பாகவதரிடம் இசையினை பயின்று 13வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்திய பெருமைக்குரியவர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.அர். நடித்த ஜெனோவா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எஸ். விஸ்வநாதன், பணம் திரைப்படம் முதல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை டி.கே. ராமமூர்த்தியுடன் இணைந்து 700 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 1,200க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த பெருமை எம்.எஸ்.வி.யையே சாரும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. தான். முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார். மூன்றே இசைக் கருவிகளை வைத்தும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார் எம்.எஸ்.வி.
ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர் எம்.எஸ்.வி. தனித்தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும் மனப் பக்குவமும் இவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் இசையமைத்து இருக்கிறார். அந்தக் காலத்தில் பல இசைக் கலைஞர்களுக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை. இவருடைய குழுவில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லை. வறுமையில் வாடிய பல கலைஞர்கள் இவர் மூலம் வளம் பெற்றனர்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான நீராருங் கடலுடுத்த என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர் எம்.எஸ். விஸ்வநாதன்.
டி.கே. ராமமூர்த்தி மெல்லிசை மன்னர் மட்டுமல்ல வில்லிசை மன்னரும் கூட இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.
மிகப் பெரிய வயலின் வித்வான். பணம் படைத்தவன் என்ற திரைப்படத்தில் வரும் கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா என்ற பாடலில் வரும் சோக இசை டி.கே. ராமமூர்த்தியின் வயலின் இசையாகும். சி.ஆர். சுப்பராமன் என்ற மிகப் பெரிய இசையமைப்பாளரின் குழுவில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர் டி.கே. ராமமூர்த்தி அப்போது அதே குழுவில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன்.
எதிர்பாராத சூழ்நிலையில் சுப்பராமன் இயற்கை எய்திய போது அவர் விட்டுச் சென்ற திரைப்படங்களுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து அதன் தொடர்ச்சியாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்து நம்மை எல்லாம் இசை என்னும் இன்பக் கடலில் மூழ்கடித்தவர்கள்.
விபரம் தெரியாத வயதில் தாயை இழந்த ரஜpனி
ரஜினி காந்த் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தாலும் தாய் மொழி மராத்தி. குழந்தையாக இருக்கும்போதே ரஜினி துறுதுறுப்பும், புத்திசாலித்தனமும் மிகுந்தவராக விளங்கினார். ஐந்தாவது வயதில் பாலர் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரராக விளங்கினார்.ரஜினிகாந்த் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது தாயாரை இழந்தார். உடல் நிலை கவலைக்கிடமாகி ஆஸ்பத்தியில் இருந்த தாயாரைப் பார்க்க ரஜினியை அவர் அண்ணன் சத்தியநாராயணா அழைத்துச் சென்றார். தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த ராம்பாய், ரஜினியை தன் அருகே அழைத்து தலையைக் கோதிவிட்டார். கையை எடுத்து முத்தமிட்டார். அதுதான் மகனுக்கு அவர் கொடுத்த கடைசி முத்தம்; மறுநாள் இறந்து விட்டார்.
விவரம் அறியாத சிறு வயதிலேயே அன்னையை இழந்தார் ரஜினி. தாயார் இறந்துவிட்டார். இனி அவரைப் பார்க்க முடியாது என்பதைக்கூட அப்போது அவரால் உணர முடியவில்லை. இதுபற்றி ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது :-
சின்ன வயதில் ரஜினி ஒரு விளையாட்டுப் பிள்ளையாகத் தான் இருந்தான். அம்மா இறந்த போது அவனுக்கு வயது 9. விவரம் தெரியாத வயது. அம்மா உடலை, மாலை போட்டு வைத்திருந்தோம். அப்போதுகூட அம்மா இறந்ததை உணராமல் வீதியில் சைக்கிள் விட்டுக் கொண்டிருந்தான்.
அம்மா தூங்கிக் கொண்டிருப்பதாக அவனுக்கு நினைப்பு. மறுநாள் வீட்டில் அம்மா இல்லை என்று தெரிந்ததும், அம்மா எங்கே? அம்மாவைப் பார்க்கணும் என்று அழுதான். அன்று முதல் அவனுக்கு அம்மா என் மனைவிதான். அண்ணியிடம் ரொம்பவும் பாசமாக இருப்பான். வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வான்.
நான் வீட்டுக்கு வந்ததும், அவன் இருக்கிறானா என்றுதான் முதலில் பார்ப்பேன். அவனைப் பார்க்காமல் ஒருநாள் கூட தூங்கியது கிடையாது. தினமும் அவன் நண்பர்களுடன் சுற்றிவிட்டு, லேட்டாகத்தான் வீட்டுக்கு வருவான். அது எனக்குப் பிடிக்காது சத்தம் போடுவேன். சில சமயம் அடித்தும் இருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் அவன் பெரிதாக நினைக்க மாட்டான். உடனே சமாதானமாகி என் பக்கத்தில் வந்து உட்காருவான். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.
இவ்வாறு சத்தியநாராயணா குறிப்பிட்டுள்ளார்.
தாயார் பற்றி பிறகு ரஜினிகாந்த் கூறுகையில் :-
அம்மா இறந்தபோது நான் விவரம் அறியாத சிறுவனாக இருந்தேன். இப்போது எந்தத் தாயைப் பார்த்தாலும் எங்கம்மாவை நினைத்து ஏங்குகிறேன். அன்னை ஓர் ஆலயம் படத்தில் நான் நடித்தபோது அம்மா, நீ சுமந்த பிள்ளை என்ற பாடல் காட்சியில் நான் நிஜமாகவே என் அம்மாவை நினைத்து அழுதுவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சின்ன வயதில் முரட்டு சுபாவம் உள்ளவராக இருந்தார். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, பெண்களை விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.
மகன், கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, பொலிஸில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்பது ரஜினியின் தந்தை ஆசை. ஆனால் ரஜினிக்கு படிப்பில் நாட்டமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.
வாலிப வயதில் அடியெடுத்து வைக்கும்போது பருவத்தின் உந்துதலாலும், நண்பர்களின் பழக்கவழக்கங்களினாலும் தவறு செய்வோர் பலர்.
ரஜினியின் இளமைப் பருவத்திலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அரும்பிக்கொண்டிருந்த மீசை நன்றாக இருக்க வேண்டும் என்று கருதி, மையினால் மீசை வரைந்து கொள்வார். சிகரெட் பிடிப்பார்.
ஒரு கட்டுரையில் அவர் கூறியிருப்ப தாவது :-
‘16 வயதில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் சேர்ந்தபோது இந்த அரகன்ஸ் முரட்டுத்தனம் கொஞ்சம் மட்டுப்பட்டன. பிரேயர், பிராணயாமம் எல்லாம் செய்தபோது என் சுபாவங்கள் சற்று குறைந்தன. ஆனால் எஸ். எஸ். எல். சி. முடித்தபின் மீண்டும் மூத்த வயது நண்பர்கள் கிடைத்தார்கள்.
முரட்டுத்தனம் மறுபடியும் வந்துவிட்டது. முரட்டுத்தனம் என்றால் சன்டை மாத்திரம் அல்ல. ‘நீ ஒரு கிளாஸ் சாராயம் குடிப்பியா? நான் 6 கிளாஸ் சாராயம் குடிப்பேன்’ என்று சவால் விடுகிற முரட்டுத்தனம். மற்றவர்கள் பார்வையை நம் மீது திருப்ப வேண்டும் என்ற வெறி. இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
ஒருமுறை ஒரு பெண்ணை விரட்டிச் சென்றபோது அவள் பொலிஸாரிடம் புகார் செய்ய பொலிஸார் ரஜினியையும், அவருடைய நண்பர்களையும் பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். ரஜினியின் தந்தை தலைமை பொலிஸ்காரர் என்பதையும் சிறந்த சேவை செய்ததற்காக அரசாங்க விருது பெற்றவர் என்பதையும் அறிந்து கொண்ட பொலிஸார் ரஜினியை விடுவித்து வீட்டில் கொண்டுபோய் விட்டனர்.
நடந்ததை அறிந்த ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணாவுக்கு கோபம் பொங்கியது. ரஜினியை செம்மையாக அடித்து நொறுக்கினார். ரஜினிகாந்த் சிறு வயதிலேயே பயம் இல்லாதவராக துணிச்சல் மிக்கவராக இருந்தார். அவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள காட்டில் பூதச்சாமியார் என்று ஒரு சாமியார் இருப்பதாக மாணவர்கள் பேசிக்கொள்வார்கள்.
‘பூதமாவது சாமியாராவது’ என்று ரஜினி கேலி செய்வார் ‘அப்படியானால் நீ காட்டுக்கு தன்னந் தனியாகச் சென்று அந்த சாமியாரைப் பார்த்துவிட்டு வா பார்க்கலாம்!’ என்று மற்ற மாணவர்கள் சவால் விட்டனர்.
சவாலை ஏற்ற ரஜினி தன்னந்தனியாக காட்டுக்குள் நுழைந்தார். கால்போன போக்கில் வெகு தூரம் சென்றுவிட்டார். சாமியாரைக் காணோம் நடு காடு இருள் சூழ்ந்து கொண்டு வந்தது. ஆள் அரவமே இல்லை.
ரஜினிக்கு லேசாக பயம் வந்தது. அந்தச் சமயத்தில் ‘வா மகனே வா’ என்று ஒருகுரல் கேட்டது. ரஜினி திரும்பிப் பார்த்தார். அங்கே ஒரு சாமியார் நின்று கொண்டிருந்தார். வயது சுமார் 60 அல்லது 70 இருக்கும்.
தலைமுடி சடை சடையாகத் தொங்கியது. ரஜினி அவர் அருகில் சென்றார். அவர் ஏதோ மந்திரம் சொல்லி, அதை திருப்பிச் சொல்லும்படி ரஜினியிடம் கூறினார். அதன்படி ரஜினி திருப்பிச் சொன்னார். ‘இப்போது நீ திரும்பிப் போ நாளைக்கு வா’ என்று சொன்னார் சாமியார்.
ரஜினி காட்டுக்குள் போய் வெகு நேரமாகத் திரும்பி வராததால் அவருடைய நண்பர்கள் பயந்து போய்விட்டார்கள். அப்போது ரஜினிகாந்த், பூதச் சாமியாரை பார்த்துவிட்டேன்’ என்று கூறிக்கொண்டே ஓடிவந்தார்.
‘நிஜமாகவா! சாமியாரை பார்த்தாயா!’ என்று நண்பர்கள் வியப்புடன் கேட்டார்கள். நடந்த விவரங்களை எல்லாம் அவர்களிடம் ரஜினி கூறினார்.
தைரியமாக நடுக்காட்டுக்கு போய் சாமியாரைப் பார்த்துவிட்டுத் திரும்பிய ரஜினியை நண்பர்கள் பாராட்டினார்கள்.
மறுநாள் பூதச் சாமியாரை ரஜினி போய்ப் பார்த்தார். தொடர்ந்து சில நாட்கள் சென்று வந்தார். ரஜினிக்கு யோகாவையும், சில மந்திரங்களையும் சாமியார் கற்றுக்கொடுத்தார். பிறகு, ‘எதிர்காலத்தில் நீ பெரிய ஆளாக வருவாய்’ என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.