தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி, பெங்காலியிலும் ரீமேக் ஆக காரணமாக இருந்த சு+ப்பர் ஹிட் படம் 'அவள் ஒரு தொடர்கதை''. கே.பாலசந்தருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்த இப்படத்தில் nஜய்கணேஷ், விஜயகுமார், கமல்ஹாசன் நடித்திருந்தனர். நடிகை சுஜhதா அறிமுகமானது இப்படத்தில்தான் என்பது சிறப்பு.
nஜமினி கணேசன் தயாரித்த 'நான் அவன் இல்லை'' படத்தை கே.பாலசந்தர் இயக்கினார். பணத்துக்காக 5 பெண்களை ஏமாற்றும் மன்மதனின் கதை. படம் ஓடவில்லை.
ஆனால் இதே படம் ஜPவன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரீமேக் ஆகி ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. உலக சினிமா எடுக்கிறோம் எனக் கூறிக் கொண்டு திரையுலகில் பலர் பு+ச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் 1970களின் கடைசியில் உலக தரமான படங்களை தந்து அந்த வேலையை சத்தம் இல்லாமல் செய்து காட்டியவர் மகேந்திரன்.
அவரை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்த படம் 'தங்கப் பதக்கம்''. மேடை நாடகத்துக்காக இந்த கதையை அவர் தயார் செய்தார். மேடையில் வெற்றி பெற்ற இக்கதையை படமாக தயாரிக்க சிவாஜp முடிவு செய்தார். மேடையில் வில்லன் நடிகர் செந்தாமரை ஏற்ற வேடத்தில்தான் சிவாஜp நடித்திருந்தார். படத்துக்கு கதை, திரைக்கதையுடன் வசனங்களை மகேந்திரன் எழுத, மாதவன் இயக்கினார். வெள்ளி விழா கண்ட படம் இது.
'அன்றே சிந்திய ரத்தம்'' படத்தில் எம்ஜpஆரும் ஸ்ரீதரும் இணைய இருந்தனர். சில காரணங்களால் '_ட்டிங் தொடங்கி, படம் நின்றுபோனது. அவர்கள் இணைய மாட்டார்களா என்ற ரசிகர்களின் ஏக்கத்தை போக்கியது 'உரிமைக் குரல்''. எம்ஜpஆருக்கு மாபெரும் வெற்றியை தந்த இப்படத்தில் லதா, புஷ்பலதா, சச்சு, நம்பியார், நாகேஷ் நடித்தனர். நடிகர் அசோகன் தயாரிப்பில் எம்ஜpஆர், மஞ்சுளா நடித்த படம் 'நேற்று இன்று நாளை''. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்த படத்தை ப.நீலகண்டன் இயக்கினார். இந்தியில் ஹேமமாலினி இரட்டை வேடங்களில் நடித்த படம் 'சீதா அவுர் கீதா''. 'எங்க வீட்டுப் பிள்ளை'' பாணி கதைதான்.
அதே படத்தை தமிழ், தெலுங்கில் நாகிரெட்டி தயாரித்தார். தமிழில் 'வாணி ராணி'' என்றும் தெலுங்கில் 'கங்கா மங்கா' என்றும் தயாரானது. தர்மேந்திரா வேடத்தில் தமிழில் சிவாஜp நடித்தார். வாணிஸ்ரீP இரட்டை வேடங்களில் நடித்தார். சி.வி.ராNஜந்திரன் இயக்கத்தில் 100 நாள் கொண்டாடிய படம் இது.
1941ல் டிகேஎஸ் சகோதரர்கள் நடத்திய நாடகம் 'குமாஸ்தாவின் பெண்''. அதையே டிகேஎஸ் சகோதரர்கள் பின்பு படமாகவும் தயாரித்து, நடித்தனர். ஒரிஜpனல் நாடகத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் நடித்திருந்தார். எனவே அதே படத்தை 'குமாஸ்தாவின் மகள'' என்ற பெயரில் எடுக்க ஏ.பி.என். முடிவு செய்தார். அவரே இயக்கிய இப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன் நடித்தனர்.
கன்னட நடிகை ஆர்த்தி நாயகியாக அறிமுகமானார். nஜயலலிதாவின் 100வது படம் 'திருமாங்கல்யம்''. கெமராமேன் வின்சென்ட் இயக்கி இப்படத்தில் முத்துராமன், லட்சுமி, பண்டரிபாய், ஸ்ரீதேவி, சச்சு, சுகுமாரி நடித்தனர்.
மேஜர் சுந்தர்ராஜனின் மேடை நாடகம் 'டைகர் சாத்தாச்சாரி'', அதே பெயரில் படமானது. வி.டி.அரசு தயாரித்து இயக்கினார். சிவகுமார், சசிகுமார், பி.ஆர்.வரலட்சுமி, சுகுமாரி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜனே கதாநாயகன். கவிஞர் வாலியின் மேடை நாடகமான 'கலியுக கண்ணன்'', படமானது.
கிருஷ்ணன், பஞ்சு இயக்கிய இந்தப் படத்தில் nஜய்சங்கருடன் nஜயசித்ரா நடித்திருந்தார். அசோகனும் வாசுவும் கதாநாயகனாக நடித்த படம் 'வைரம்''.
இந்தியில் வெளியான 'விக்டோரியா 203'' படத்தின் ரீமேக் ஆன இப்படத்தை ராமண்ணா இயக்கியிருந்தார். nஜய்சங்கர், nஜயலலிதா ஜோடியுடன் சச்சு, கே.எஸ்.nஜயலட்சுமி, மனோகர் ஆகியோரும் நடித்திருந்தனர்.
தெலுங்கில் லட்சுமி நடிப்பில் இதே படம் வெளியானது. இந்தி சு+ப்பர் ஸ்டாராக அமிதாப் பச்சன் உயர காரணமாக அமைந்த படம் 'ஜன்ஜPர''. இந்த படத்தின் ரீமேக்கில் அமிதாப் வேடத்தில் புரட்சித் தலைவர் நடித்தார். எஸ்.எஸ்.வாசனின் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கினார். லதா கதாநாயகி.