Wednesday, February 20, 2013

இயக்குனர்களை துரத்தும்

திவ்யா
சிம்பு நடித்த குத்து படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை ரம்யா. அதையடுத்து சில படங்களில் நடித்தவர், கெளதம்மேனனின் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தபோது தனது பெயரை திவ்யா ஸ்பந்தனாஸ் என்று புதுப்பித்துக்கொண்டார்.
அதையடுத்து தனுசுடன் பொல்லாதவன் படத்தில் நடித்து ஓரளவு பரபரப்பான இடத்தை எட்டிப் பிடித்தார். இருப்பினும் அந்த இடத்தை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
கர்நாடக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பரபரப்பை கூட்டும் முயற்சியில் இருந்ததால், அரசியல் கோதாவில் குதித்த அவர் இனிமேல், நமக்கு செட்டாக மாட்டார் என்று அவரை ஓரம்கட்டினார்கள் இயக்குனர்கள்.
இந்த நிலையில், தற்போது கன்னடத்தில் மட்டும் சில படங்களில் நடித்து வரும் திவ்யா ஸ்பந்தனாஸ் மீண்டும் கோலிவுட்டில் சில அபிமானத்திற்குரிய இயக்குனர்களை துரத்தி வருகிறார்.
குறிப்பாக கெளதம்மேனன், வெற்றி மாறன் போன்ற இயக்குனர்களிடம் மீண்டும் தன்னை ஆதரிக்குமாறு உரிமையோடு சான்ஸ் கேட்டு வருகிறார் நடிகை. மேலும், கடந்த வாரத்தில் சென்னைக்கு விசிட் அடித்த திவ்யா தன்னுடன் நடித்த சில இளவட்ட ஹீரோக்களை சந்தித்து எல்லா நடிகைகளையும் திருமணத்துக்குப் பிறகு தான் ஓரங்கட்டுவீர்கள்.
ஆனால் என்னை பீல்டில் இருக்கும்போதே ஓரங்கட்டுகிaர்களே என்ன காரணம்? என்றும் கேள்வி கேட்டிருக்கிறார் நடிகை. அதற்கு, திருமணம் ஆகலேன்னாலும் உடம்பு திருமணமான நடிகைகள் மாதிரி ஏறிப்போச்சே, இப்போது நாம் ஜோடி சேர்ந்தால், அக்காளும் தம்பியும் மாதிரி இருக்குமே என்று நறுக் பதில் சொன்னார்களாம்.
இதனால் கடுப்பான நடிகை தன்னைப் பார்த்து இப்படியொரு வார்த்தை சொன்ன அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாமல், கர்நாடகத்துக்கு ஓட்டம் பிடித்திருக்கிறார்.

No comments:

Post a Comment