சிவாஜிக்காக முதன் முதலில் S.P. B பாட வந்த போது...
பொட்டு வைத்த முகமோ என்ற பாடலுக்கு முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. ஆனால் மெல்லிசை மன்னர் எஸ்.பி.பி.யைத்தான் தேர்ந்தெடுத்தார். சிவாஜியிடம் தான் பெயரெடுக்க வேண்டும் என்று எஸ்.பி.பி. மனத்திற்குள் ஒரு முடிவு செய்து கொண்டார். சிவாஜிக்குப் பாடப் போகும் முதல் பாடல் என்ற பயத்தோடு ஒத்திகைக்குச் சென்றார்.
பாடல் பதிவு நாள் வந்தது. ரிக்கார்டிங் தியேட்டரினுள் பாலு சென்றார். அங்கே நடிகர் திலகம் காத்திருந்தார். எஸ்.பி.பிக்கு நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் எதற்காக வந்திருக்கிறார் எனப்புரியவில்லை. பாலுவைத் தனியாக அழைத்துச் சென்றார் சிவாஜி.
ரிக்கார்டிங் தியேட்டரில் உள்ளவர்களுக்கு ஒரே சஸ்பென்ஸ் சாதாரணமாக பாடல் பதிவுகளுக்கு சிவாஜி வருவது வழக்கம் இல்லையே, இன்று மட்டும் ஏன் வந்திருக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.
அந்தக் காலத்தில் சிவாஜிக்கு அதிகமாக பின்னணி பாடிவந்தவர் டி.எம்.எஸ். தான். டி.எம்.எஸ் பாடல் பதிவுக்குக் கூட வராத நடிகர் திலகம், எஸ்.பி.பி. பாடல் பதிவுக்கு வந்தது மெல்லிசை மன்னரைக் கூட வியப்பில் ஆழ்த்தியது.
எஸ்.பி.பி.யும் சிவாஜியும், ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்த ரூமிற்குள் சென்றார்கள் கண்ணாடி பதிக்கப்பட்ட அந்த அறையில் சிவாஜி எஸ்.பி.பி.யிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. பத்து நிமிடத்திற்குப் பிறகு சிவாஜியும் எஸ்.பி.பியும் வெளியே வந்தார்கள். சிவாஜி நேரே மெல்லிசை மன்னரிடம் வந்து ஏதோ சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
நடிகர் திலகம் சிவாஜி, எஸ்.பி.பி.யிடம் என்ன சொல்லியிருப்பார் என்பது எல்லாருக்கும் சஸ்பென்ஸாக இருந்தது. மெல்லிசை மன்னர் எஸ்.பி.பி.யிடம் எதுவும் கேட்கவில்லை. ‘பொட்டு வைத்த முகமோ பாடல் திட்டமிட்டபடி எடுத்து முடிக்கப்பட்டது. பாடல் மிக நன்றாக வந்திருப்பதாக ரிக்கார்டிங் தியேட்டரில் பேசிக் கொண்டார்கள்.
ஆனால் பாடலைக் கேட்ட போது, டி.எம்.எஸ்.ஸின் குரலைப் போல இந்தப் புதிய குரல் அதுவும் மென்மையான குரல், நடிகர் திலகத்தின் நடிப்போடு இசையுமா என்று சிலர் சந்தேகப்படவும் செய்தனர். ‘சுமதி என் சுந்தரி’ படம் முடிந்தவுடன் பிரிவியூக்கு வழக்கம் போல் எல்லாத் தொழில் நுட்ப கலைஞர்களும் அழைக்கப்பட்டனர்.
சாதாரணமாக எஸ்.பி.பி. இது போன்ற காட்சிகளுக்குப் போகும் வழக்கமில்லை. ஆனால் ‘சுமதி என் சுந்தரி’ படத்திற்கு குடும்பத்தோடு சென்றார். இவர் சென்ற அதே காட்சிக்குத்தான் மெல்லிசை மன்னரும் வந்திருந்தார். அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது எஸ்.பி.பி.யின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும் பாவனைகளையும் அசைவுகளையும் குழையக் குழைய வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் திலகம். சந்தேகப்பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள்.
படத்தில் ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலுக்கு பாலுவின் குரலுக்கு ஏற்ப நடிப்பு ஸ்டைலை மாற்றிக் கொண்டு நடிகர் திலகம் நடித்திருப்பதைப் பார்த்து வியந்தார் பாலு. படம் முடிந்து வெளியே வந்த போது, எம்.எஸ்.வி. பாலுவிடம் “உங்க பாட்டு ஓஹோன்னு வந்திருக்கிறது எனக் கூறி பாராட்டினார். அதற்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பல பாடல்களைப் பாடக்கூடிய வாய்ப்புகள் எஸ்.பி.பிக்குக் கிட்டியது.
நடிகர் திலகம் முதல் ரிகார்டிங்கில் பாலுவைச் சந்தித்து என்ன கூறினார் தெரியுமா? “பாலு! எனக்குப் பாடப்போறேன்னு நினைச்சு உன்னுடைய ஸ்டைலை மாத்திப் பாட முயற்சி பண்ணாதே. உன்னுடைய ரிக்கார்டிங் கேட்கணும்னு நான் இங்க வரலை.
இங்கே சில பேர் உன்கிட்ட வேறு ஒரு பாடகர் ஸ்டைலில் பாடினாத்தான் எனக்குப் பிடிக்கும்னு சொல்லி உன்னை கன்ஃப்யூஸ் பண்ணக்கூடாது என்பதால்தான். நானே நேராக வந்தேன் உன்னோட ஒரிஜினல் ஸ்டைல்ல பாடு அதுக்கு ஏத்த மாதிரி நான் நடிக்க முயற்சி செய்றேன்’ என்பதுதான். உண்மையில் நடிகர் திலகத்தின் அறிவுரைகள் எஸ்.பி.பி.க்கு தைரியத்தைக் கொடுத்தன சிவாஜி கொடுத்த டானிக் பாலுவை அந்தப் பாடலை அற்புதமாகப் பாட வைத்தது.
சிவாஜி சொன்னபடி எஸ்.பி.பி. தமக்கே இயல்பான நளினம் கொஞ்சும் நந்தவனக் குரலில் அந்தப் பாடலை மிக சுதந்திர உணர்வோடு பாடினார். அவருடைய ஸ்டைலுக்காக தன் ஆக்டிங் ஸ்டைலை மாற்றிக் கொண்ட அந்த நடிப்புச் செல்வத்தை, மனதாக பாராட்டிக் கொண்டும் அதே நேரத்தில் அவரின் திறமையைக் கண்டு பிரமித்துக் கொண்டும் இருக்கிறார் எஸ்.பி.பி. இன்றளவும் எஸ்.பி.பி.வியக்கும் ஒரு விடயம் இது.
அந்தப் பாடல், சுமதி என் சுந்தரி படத்தில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் மலர்ந்த பொட்டு வைத்த முகமோ’
சாவித்திரியை மண முடிக்க காரணமான விடயம்
சாவித்திரி சினிமா உலகில் காலடி எடுத்துவைப்பதற்கு செளத்திரி என்னும் ஒருவர்தான் உதவிசெய்தார். பிற்காலத்தில் அவரையே தனது கால்iட்டுக்களைக் கவனிக்கும் கார்டியனாக சாவித்திரி நியமித்திருந்தார்.ஆனால் அவரோ தான் முதலில் செய்த உதவியால்தான் சாவித்திரி இந்த அளவுக்கு பெரிய ஆளாகினார் என்று அனைவருக்கும் கூறி சாவித்திரிக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் போட்டு அவரை ஒரு அடிமைபோல நடத்த ஆரம்பித்தார்.
சினிமா உலகில் நுழைவதற்கு உதவியவர்தான் என்றாலும் செளத்ரி தன்னை அடிமைபோல் நடத்தியது சாவித்திரிக்கு வெறுப்பை அளித்தது. இருவருக்கும் இடையே தகராறு மூண்டது. இதனால் அவரது குடும்பத்தினரும் சாவித்திரிக்கு ஆதரவளிக்க மறுத்தனர்.
யோசித்துப் பார்த்த சாவித்திரி அந்த நேரத்தில் தனக்கு ஆதரவு அளிக்கக் கூடிய ஒரே ஒருவர் ஜெமினி கணேசன்தான் என்ற முடிவுக்கு வந்து அவரது வீட்டில் தஞ்சம் புகுந்தார். ஜெமினியும் அவரை ஆதரித்து தன்னோடு தங்கவைத்துக்கொண்டார்.
இது பின்னர் இருவருக்கும் இடையில் காதலாக மலர ஆதரவின்றித் தவித்த சாவித்திரியை மணமுடித்துக்கொண்டார் ஜெமினி.
இதுதான் ஜெமினி சாவித்திரியை மணமுடிக்க காரணமான