இந்தியாவில் 17 மொழிகளில் பாடி சாதனை படைத்த ஜhனகி
,ந்தியாவிலேயே திரைப்படங்களில் அதிகப் பாடல்கள் பாடிய பின்னணி பாடகி என்ற சாதனையைப் படைத்தவர் லதா மங்கேஷ்கர். ஆனால், 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற சாதனைக்கு உரியவர் எஸ். ஜானகி. அவர் பாடிய பாடல்கள் எண்ணிக்கை 16 ஆயிரம்.
ஜானகி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற ஊரில், 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி பிறந்தார்.
சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் ஏற்பட்டது. 1956 இல் அகில இந்திய வானொலி, பாட்டுப் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்துகொண்டு, இரண்டாம் பரிசு பெற்றார். அன்றைய ஜனாதிபதி டொக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு பெற்றார்.
இதைத் தொடர்ந்து, ஏ. வி. எம். ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமிக்கப்பட்டார். தமிழில், ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்துக்காக அவர் முதன் முதலாக பின்னணி பாடினார். இசை அமைத்தவர் டி. சலபதிராவ்.
இதற்கு அடுத்த நாளே கண்டசாலாவுடன் சேர்ந்து ஒரு தெலுங்கு பாடலைப் பாடினார். முதல் வருடத்திலேயே, எவ்வித முயற்சியும் செய்யாமல் 6 மொழிகளில் 100 பாடல்களைப் பாடினார்.
ஜானகியின் வாழ்க்கையில், பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் ‘கொஞ்சும் சலங்கை.’ இந்தப் படத்தில், ஜெமினி கணேசன் நாதசுர வித்துவானாகவும், சாவித்திரி அவருடைய காதலியாகவும் நடித்தார்கள். சாவித்திரி ‘சிங்காரவேலனே தேவா...’ என்ற பாட்டைப் பாட அதற்கேற்ப ஜெமினிகணேசன் நாதசுரம் வாசிப்பார்.
சாவித்திரிக்காக குரல் கொடுத்தார் ஜானகி. ஜெமினி கணேசனுக்காக நாதசுரம் வாசித்தார் காருக்குறிச்சி அருணாசலம். ஜனாகியின் பாடலும், காருகுறிச்சியின் நாதசுர இசையும் இணைந்து சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் இருந்தது ரசிகர்களுக்கு. அந்தக் காலக்கட்டத்தில், திருமண வீடுகளில் தவறாது ஒலித்த பாடல் இது. இசைத்தட்டு விற்பனையிலும் சாதனை படைத்தது. இந்தப் பாடலைத் தொடர்ந்து, ஜானகி ரொம்பவும் ‘பிசி’யாகி விட்டார். அவர் பாடல் இடம் பெறாத படமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. எல்லா பிரபல கதாநாயகிகளுக்கும் குரல் கொடுத்தார்.
ஒரே நாளில் நாலைந்து பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னணி பாடுவதில் ஜானகி நிகழ்த்தியுள்ள சாதனைகள் பல. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், வங்காளி, சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கினி, துளு, சவுராஷ்டிரா, ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் சுமார் 16 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார்.!
அது மட்டுமல்ல, 5 வயது குழந்தையின் குரலிலும், 60 வயது கிழவியின் குரலிலும் (குரலை மாற்றி) பாடக்கூடிய ஆச்சரியமான திறமையும் அவருக்கு இருந்தது. சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.
அவருக்கு விருது வாங்கித் தந்த படங்களாவன :
(1) 16 வயதினிலே (தமிழ்) 1978
(2) ஓப்போல் (மலையாளம்) 1981
(3) சிதாரா (தெலுங்கு) 1985
எம். ஜி. ஆர். – சிவாஜி இருவர் மனங்களிலும் ஒரே எண்ணம்
ஒரே நேரத்தில் எம். ஜி. ஆர். படங்களுக்கும் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதிய ஒரே வசனகர்த்தா நானாகத்தான் இருக்க வேண்டும். 1962 ஆம் ஆண்டு ஒரே நாளில் நான் வசனம் எழுதிய எம். ஜி. ஆரின் ‘தாயைக் காத்த தனயன்’ படமும் சிவாஜியின் ‘படித்தால் மட்டும் போதுமா’ படமும் ரிலீஸானது.
ஒன்று தேவர் படமும் இன்னொன்று ரெங்கநாதன் பிக்சர்ஸ் படமுமாக இருந்த போதிலும், முறையே ஒன்றை எம். ஜி. ஆர். பிக்சர்ஸ¤ம், இன்னொன்றை சிவாஜி ஃபிலிம்ஸ¤ம் சென்னை நகரில் வெளியிட்டிருந்தார்கள்.
இரண்டுமே சூப்பர் வெற்றியடைந்து 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக்காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தன.
அன்று காலை எம். ஜி. ஆரின் அடுத்த படத்துக்காக வசனம் எழுதச் சென்றிருந்தபோது எம். ஜி. ஆர். என்னை அழைத்து, ‘போன படம் வெற்றியடைஞ்சதுக்கு உனக்கு எந்த பரிசும் நான் கொடுக்கலை.
இப்போ தாயைக்காத்த தனயன் பெரிய வெற்றியடைஞ்சிருக்கு, உனக்கு என்ன பரிசு வேணும்?’ என்று கேட்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்னே, உங்க அன்பு இருந்தா போதும்’ என்றேன். ‘அப்படியா அப்போ நானே ஏதாவது பண்றேன்’ என்று சொல்லிவிட்டார்.
அன்று பிற்பகல் சிவாஜி பட ஷ¥ட்டிங் போனபோது அவர் என்னை தனியே அழைத்து, ‘ஆரூரான், இதற்கு முந்தி நீ எழுதின பாசமலர் பெரிய வெற்றியாச்சு. அதுக்கு நான் பரிசு எதுவும் தரலை. இப்போது நீ எழுதின படித்தால் மட்டும் போதுமாவும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. உனக்கு என்ன பரிசு வேணும் சொல்லு.
அண்ணன் கிட்டே இருந்தா தர்ரேன். இல்லேன்னா வாங்கித் தர்ரேன்’ என்று கேட்டதும் நான் ஆடிப் போனேன். அதெப்படி அவர்கள் இருவரது மனதிலும் ஒரே மாதிரி எண்ணம் ஓடுதுன்னு ஆச்சரியப்பட்டேன். எம். ஜி. ஆருக்கு சொன்ன அதே பதிலையே இவருக்கும் சொன்னேன்.
‘அன்புதான் நிறைய இருக்கே, வேறென்ன வேணும்?’ என்றார் நான் ஒண்ணும் சொல்லவில்லை. இரண்டு நாள் கழித்து எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி வரச்சொன்னாங்க.
போனபோது எம். ஜி. ஆர். இருந்தார். ஒரு பெரிய வெள்ளித் தட்டில் நான்கு மூலைகளிலும் சிறிய தங்கத் தகடுகள் பொருத்தியிருக்க, தட்டின் நடுவில் ‘எம்ஜியார் பிக்சர்ஸ் தாயைக் காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர்தாஸ¤க்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த தட்டை எம். ஜி. ஆர். வழங்கினார்.
மறுநாள் பிற்பகல் சிவாஜி பிலிம்ஸிலிருந்து அழைப்பு வந்தது. போனால் அங்கே சிவாஜி மூன்றரை சவரன் எடையுள்ள, உள்ளங்கையை விட அகலமான தங்கப் பதக்கம் ஒன்றை எனக்கு அணிவித்தார்.
அதில் ‘சிவாஜி பிலிம்ஸ் படித்தால் மட்டும் போதுமா 100 வது நாள் வெற்றி விழா’ என்று சிவாஜி பிலிம்ஸ் எம்ப்ளத்துடன் பொறிக்கப்பட்டிருந்தது.
அவ்விரண்டு பரிசுகளையும் என் வீட்டு வரவேற்பறை ஷோகேஸில் பக்கம் பக்கமாக வைத்திருக்கிறேன். அவற்றைப் பார்க்கும் போது அந்தப் பரிசுகளைவிட அவ்விரண்டு மேதைகளின் முகம் தான் என் கண்களில் காட்சியளிக்கும்.
நடிகர்களை பிடிக்க அதிகாலையில் வாசலில் காத்திருக்க வேண்டும்
வாகினி அதிபர் நாகிரெட்டி தயாரித்த படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ (1965) அந்தப்படத்தில் கதாநாயகியாக சரோஜாதேவி நடித்தார். சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்வதற்காக அவர் சரோஜாதேவியைத் தேடி வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை.
இதுபற்றி நடிகை சரோஜாதேவி கூறியதாவது:- ‘ஒருநாள் அதிகாலை நாங்கள் விழித்து எழுந்து வெளியில் வந்த போது, வீட்டு வாசலில் ஒரு ஹெரால்டு வந்த போது, வீட்டு வாசலில், ஒரு ஹெரால்டு கார் நின்று கொண்டு இருந்தது.
காரில் தயாரிப்பாளர் நாகிரெட்டி இருந்தார். அவரைப் பார்த்ததும் எனது அம்மா அதிர்ச்சி அடைந்து, ‘நீங்கள் இப்படி செய்யலாமா? வந்த உடனே அழைப்பு மணியை அடித்து இருக்கலாமே’ என்று கூறினார்.
அதற்கு நாகிரெட்டி, ‘நீங்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்ததால் உங்களை தொல்லைப்படுத்த வேண்டாம் என்று காத்து இருந்தேன் என்று கூறினார்.
பின்னர் ‘என் படத்தில் நடிக்க சரோஜாவை ஒப்பந்தம் செய்யவே வந்து இருக்கிறேன்’ என்று சொன்னார். அப்போதெல்லாம் அதிகாலை நேரத்தில் சென்றால் மட்டுமே நடிகர், நடிகைகளை வீட்டில் பிடிக்க முடியும் இல்லாவிட்டால் படப்பிடிப்புக்கு போய் விடுவார்கள். அதனால்தான் அதிகாலை நேரத்திலேயே நாகிரெட்டி வந்து காத்திருந்தார். அவர் கேட்டுக் கொண்டபடி ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில் நடித்தேன்.
இவ்வாறு சரோஜாதேவி கூறினார்.
~சந்திரா' வுக்காக சம்பளத்தை குறைத்த ஸ்ரேயா
தான் முதல் முறையாக கன்னடத்தில் நடிக்கும் சந்திரா படத்திற்காக சம்பளத்தை வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளாராம் ஸ்ரேயா.
சரியான இடுப்பழகி என்று ரகிசர்களால் பாராட்டப்பட்டவரான ஸ்ரேயா இப்போது தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து விட்டார். சீக்கிரம் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வரும் ஸ்ரேயா கன்னடத்தில் சந்திரா என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக அவர் தனது சம்பளத்தைக் கூட வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளாராம்.
ஸ்ரேயாவின் தற்போதைய மார்க்கெட் ரேட் 70 முதல் 80 இலட்சம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கன்னட மார்க்கெட்டில் அந்த அளவுக்கு தந்தால் கம்பெனிக்கு கட்டுப்படியாகாது என்று அவரிடம் எடுத்துக் கூறப்பட்டதால், தனது சம்பளத்தை வெகுவாக குறைத்துக்கொள்ள ஒப்புக் கொண்டாராம் ஸ்ரேயா.
எவ்வளவு சம்பளத்திற்கு ஸ்ரேயா நடிக்கிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அங்கு முதலிடத்தில் உள்ள குத்து ரம்யாவுக்கு தரப்படும் சம்பளமே ஷ்ரியாவுக்கும் தரப்படுவதாக கூறப்படுகிறது.
முதலில் ரம்யாவைத்தான் இந்தப் படத்திற்குக் கூப்பிட்டனராம். ஆனால் சில பல காரணங்களால் அவர் மறுத்து விட்டாராம். பிறகு அமலா பாலை நாடினார்கள். தியா மிர்ஸாவை தேடினார்கள். அம்ரிதாவை ராவை நாடி ஓடினார்கள். எல்லோருமே விலகிப்போனதால் ஸ்ரேயாவை ‘ப்ரீஸ்’ செய்து ‘பிக்ஸ்’ பண்ணி விட்டனர்.
இப்படத்தில் இளவரசி வேடத்தில் வருகிறாராம் ஷ்ரியா. படத்தை இயக்குவது ரூபா ஐயர். படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ். பி. பாலசுப்ரமணியம் ஆகியோர் முக்கிய ரோல்களில் வருகின்றனராம்.
ஸ்ரேயாவுக்கு கன்னடத்தில் இதுதான் முதல் ஹீரோயின் படம் என்றாலும் கூட, ஏற்கனவே புனீத் ராஜ்குமார் நடித்த அரசு படத்தில் கெஸ்ட் ரோலில் வந்து போயுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
பெரிய இடம் தேடும் பிரணீதா
நடித்தால் பெரிய நடிகர்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம் பிரணீதா. முதல் படம் வெளியாகி ஓடி முடிப்பதற்குள்ளாகவே ஏகப்பட்ட பந்தாக்களைப் போட்டு சீன் காட்டும் நாயகிகளின் பட்டியல் இன்னும் கோடம்பாக்கத்தில் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஆரம்பத்தில் சின்ன ஹீரோவுடன் ஜோடி சேருவார்கள். அந்தப் படம் எக்குத்தப்பாக ஓடிவிட்டால், அடுத்து பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் ஜோடி போடுவேன். பெரிய பட்ஜெட் படமாக இருக்க வேண்டும். நல்ல கம்பெனியாக இருக்க வேண்டும் என்று பில்டப் செய்து பிலாக்காணம் பாடுவார்கள்.
இந்த நிலையில் சகுனி படம் மூலம் சினிமாவுக்கு வந்துள்ள பிரணீதாவும் அதேபோல ஏகப்பட்ட பில்டப், பிட்டப்புக்களுடன் சினிமாக்காரர்களை மிரள வைக்கிறாராம். முதல் படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு விட்ட இவர் இப்போது வெயிட்டாக பேச ஆரம்பித்துள்ளாராம்.
அதாவது நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பாராம். சின்னச் சின்ன ஹீரோக்களையெல்லாம் சீண்டக்கூட மாட்டாராம். கழுகு படத்தில் ஹீரோவாக நடித்த இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் தம்பி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க இவரைக் கேட்டபோது மறுத்துவிட்டாராம். அப்போதுதான் இப்படிப் பதிலளித்தாராம்.
முதல் படமே இன்னும் வந்து போணியாகவில்லை. அதற்குள்ளாகவே இப்படி ஒரு சீனா என்று புலம்புகிறார்களாம் ‘சின்ன நாயகர்களை கையில் வைத்துக் கொண்டு பெரிய நாயகிகளுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
ஸ்ரீதேவியின் இடத்தில் தமன்னா
தமிழ்நாட்டின் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்து தமிழ் ரசிகர்களை மட்டுமன்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கலக்கி ஒருவழியாக இந்திப் படவுலகில்கரைசேர்ந்தவர் ஸ்ரீதேவி.
இவருக்கு பொலிவூட்டில் செம பிரேக் கொடுத்த படம் 1983ல் வெளியான ஹிம்மத்வாலா. 1981ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படத்தோட ரீமேக்தான் இது. தெலுங்குல ஜெயபிரதாவும் கிருஷ்ணாவும் நடிச்சிருந்தாங்க! ராகவேந்திராவ் இயக்கியிருந்தார். இந்தியில் ஜிதேந்திராவும் ஸ்ரீதேவியும் இணைந்திருந்தாங்க.
ஸ்ரீதேவி நடித்த ஹிம்மத்வாலா அந்த காலத்திலேயே 12 கோடி ரூபாய்க்கு கல்லா கட்டிய படம்! ஸ்ரீதேவி பாடிய “nainon சீலீin sapna” என்ற பாடல் அந்தக் காலத்து இளசுகளிடம் ரவுசு கட்டிய பாடல்! இப்ப இந்த படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் எடுக்கப்போறாங்களாம்.
ஸ்ரீதேவி நடிச்ச ரேகா கேரக்டருக்கு யார் தெரியுமில்ல நம்ம தம்மன்னாதான் செலக்ட்! அந்த புகழ்பெற்ற பாடலுக்கு இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி டான்ஸ் அமைக்கச் சொல்லி ஃபாரா கானிடம் சொல்லியிருக்கார் டைரக்டர் சஜித்கான். ஹிம்மத்வாலா அன்று ஸ்ரீதேவிக்கு கொடுத்த பிரேக்கை இன்னிக்கு தமன்னாவுக்கு கொடுக்குமா?
நயன்தாராவுடன் ஆர்யா காதலா?
மறுப்பு; ஆனால் விருந்துக்கு அழைப்பு
நயன்தாராவும் பிரபுதேவாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். பிரபுதேவா இந்திப் படங்கள் இயக்கும் பணியில் மூழ்கி உள்ளார். நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் அஜீத், ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு படமொன்றில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்கிறார்.
நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் தற்போது நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசு கிசு பரவியுள்ளது. சமீபத்தில் ஆர்யா புதிதாக கட்டியுள்ள தனது வீட்டின் கிரகப் பிரவேச விழாவை விமரிசையாக நடத்தினார். அதில் நயன்தாராவை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார். அப்போது விசேஷ கேக் செய்து அதில் ‘வெல்கம் பேக் நயன்தாரா’ என ஆங்கிலத்தில் எழுதி வைத்து இருந்தார். நயன்தாரா வீட்டுக்கு வந்ததும் கைகுலுக்கி வரவேற்றார்.
அவர் கையாலேயே கேக்கும் வெட்ட வைத்தார். இதனால் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக சக நடிகர், நடிகைகள் செய்தி பரப்பினர். ஏற்கனவே ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. காதலால்தான் ஆர்யா படத்தில் மீண்டும் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
நயன்தாராவை காதலிக்கிaர்களா? என்று ஆர்யாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, நயன்தாராவும் நானும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். எங்களுக்குள் காதல் இல்லை. நயன்தாரா மன வருத்தத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதால், கேக்கில் அவ்வாறு வாசகம் எழுதி வைத்து வரவேற்றோம். விருந்துக்கு நயன்தாராவை மட்டுமின்றி வேறு சிலரையும் அழைத்து இருந்தேன். நயன்தாரா தற்போது சந்தோசமாக இருக்கிறார். இவ்வாறு ஆர்யா கூறினார்.