ஹீம்பியால் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தான் சூட்டிங் வர முடியும் என்பதை டைரக்டர்களுக்கு தெரியப்படுத்தினார்.
இதற்கிடையில் அண்ணி அவர்கள் எம். ஜி. ஆரை பார்த்து தம்பி நடந்தது நடந்துவிட்டது நீங்கள் கவலைப்பட்டு கொண்டு வீட்டிற்குள் இருப்பதால் இறந்துபோன உங்களுடைய தங்ககுட்டி திரும்ப வரவா போகிறாள், மூன்று நாள் எங்களிடம் யாரிடமும் பேசாமல் எதுவும் சாப்பிடாமல் இப்படி படுத்து கிடப்பது உங்களுடைய உடம்பு என்னவாகும். நீங்கள் இப்படி படுத்து கிடப்பதால் மணியும் ராமும் ஏன் சித்தப்பாவும் நீங்கள் சாப்பிடாமல் படுத்து கிடக்கிறார்கள் என்று கேட்கிறார்கள்.
நீங்கள் வீட்டிற்குள் நுழைந்த உடனே அவர்கள் இருவரையும் அழைத்து செல்லமாக கொஞ்சுவீர்களே. அந்த சின்ன சிறு குழந்தைகள் உங்களை நினைத்து உங்களிடம் வருவதற்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள். தயவு செய்து எழுந்து குளித்து வந்து சாப்பிடுங்க எந்த விஷயத்தையும்
எப்படிப்பட்டதாக இருந்தாலும் கவலைப்படாமல் உங்களுடைய முயற்சியே வீண் போகாமல் நடந்துகொள்ள கூடிய நீங்கள் இப்படி படுத்து கொண்டு இருக்கலாமா, உங்களுடைய வெற்றி பாதையை இடையிலேயே விட்டு விடலாமா என்று சொல்லிவிட்டு அவர் அந்த அறையை விட்டு போய்விடுகிறார். இவைகளையெல்லாம் நினைத்து பார்த்த எம். ஜி. ஆர். எழுந்து அவருடைய பணிகளை தொடங்க முயற்சி செய்தா¡ர்.
ஆனாலும், அவர் அடையாரில் அவர் தங்கி இருக்கும் வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று ஒரு உருத்திராட்சை கொட்டை வாங்கி கழுத்தில் கட்டி கொண்டு நெற்றியில் விபூதிபட்டை அடித்துகொண்டு கதர்சட்டை கதர்ஜிப்பா அணிந்து கொண்டு நேராக அவர் நடித்து வரும் பட கம்பெனிகளுக்கு சென்றார்.
அங்கு எம். ஜி. ஆரை மிக ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். ஏற்கனவே எம். ஜி. சி. சொன்ன தகவலை மனதில் நினைத்து கொண்டு வாங்க எம். ஜி. ஆர். உங்க அண்ணன் எம். ஜி. சி. ஏற்கெனவே எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார். நடப்பது எல்லாம் நம்ம கையிலா இருக்குது எல்லாம் அவன் செயல் கவலை படாதீர்கள் என்று ஆறுதல் கூறினார்கள்.
இதைக் கேட்ட எம். ஜி. ஆர். சற்று சிரித்த முகத்தோடு அவர்களை பார்த்து கடவுளே நான் ஏற்கனவே இந்த முடிவுக்கு வந்து விட்டேன். என் கடன் பணி செய்து கிடப்பதே, நான் கழுத்தில் உருத்திராட்சை கொட்டையும், நெற்றியில் விபூதி பட்டையும் போட்டு இருப்பதை பார்த்து என்னை ஒரு சாமியார் என்று நினைத்து விடாதீர்கள்.
இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உள்ள விரதம் என்று சொல்லி விட்டு மற்ற கம்பெனிகளுக்கும் இவர் செல்லும் இடம் எல்லாம் இதே கேள்வி இதே பதில் எந்த எந்த கம்பெனியில் சூட்டிங் இருக்குது என்று அறிந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி வரும் போது தன்னுடைய அண்ணன் குழந்தைகளுக்கு பிஸ்கட் பக்கெட் வாங்கி கொண்டு வருகிறார். வீட்டிற்குள் நுழையும் போது மணி, ராமு என்று அண்ணன் குழந்தைகளை அழைக்கிறார். சித்தப்பாவின் குரலைக் கேட்ட அந்த குழந்தைகள் ஓடோடி வந்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் இட்டு கொஞ்சுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்த அண்ணனும், அண்ணியும் கண்ணீர் விடுகிறார்கள். காரணம் எம். ஜி. ஆர். கழுத்தில் இருக்கும் உருத்திராட்ச கொட்டையும் நெற்றியில் உள்ள விபூதி பட்டையும் தான் அடுத்து எம். ஜி. ஆர். எப்போதும் போல் படப் பிடிப்புக்கு செல்ல ஆரம்பித்தார்.
தன் மனைவி ஊருக்கு செல்லும்போது குழந்தையை பெற்று நீ குழந்தையுடன் நீ வரும்போது நான் ஒரு கதாநாயகனாக சினிமாவில் நடித்து கொண்டு இருப்பேன் என்று சொன்னதை நினைத்து பார்க்கிறார். அதன்படி தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற முயற்சியை இன்னும் தீவிரப்படுத்துகிறார். இந்த முயற்சியில்தான் பிரபல பட தயாரிப்பாளரான நாராயணன் கம்பெனியாரால் ஏ. எஸ். ஏ. சாமி டைரக்ஷனில் கலைஞர் கருணாநிதியுடைய கதை வசனத்தில் உருவாக இருக்கும் “ராஜகுமாரி” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிற்று. ஒரு வருடத்தில் இந்த படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்தது.
அதே நேரத்தில் ஜெமினி ஸ்டூடியோவினால் டைரக்ஷன் ஜெமினி வாசனால் பல இலட்சக் கணக்கான ரூபாயால் தயாரிக்கப்பட்டது “சந்திரலேகா” இதில் நடித்தவர்கள் எம். ஜி. ஆருக்கு மிக வேண்டிய நண்பரான எம். கே. ராதா, டி. ஆர். ராஜகுமாரி, ரஞ்சன், என் . எஸ். கே., டி. ஏ. மதுரம் ஆகியோரே ஆவார்கள். இந்தப் படம் ஓ ஓ என்று ஓடிக்கொண்டு இருக்கும் போது எம். ஜி. ஆர். நடித்து “ராஜகுமாரி”யும் ஓடிக்கொண்டு இருந்தது.
இதற்கு முன்னாடி எம். கே. தியாகராஜபாகவதர், டி. ஆர். ராஜகுமாரி நடித்த படம் “அரிதாஸ்” இந்தப் படம் ஒரே தியேட்டரில் மதுரையில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது. சென்னையில் இதே போல் பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பாள் இருவரும் நடித்த கண்ணகி என்ற சரித்திர படம் இதைவிட பிரமாதமான பெண்களுக்கு உரிய கதை அம்ஸம் கொண்ட படம். இந்த மூன்று படத்துக்கும் இடையிலே புதுமுகமாக நடித்த எம். ஜி. ஆரின் முதல் படம் நான்காவது இடத்தில் ஓடிக் கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் எம். ஜி. ஆருக்கு அடுத்து கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டு இருக்கும் போது ஒரு நாள் இவர்களையெல்லாம் சந்தித்து பேசி கொண்டு வரும் நேரத்தில் என். எஸ். கே. யை சந்திக்கிறார்.
அவரிடம் தன் நிலைமைகளை தெரிவிக்கிறார் என். எஸ். கே. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தம்பி நீ எதற்கும் கவலைப்படாதே அவசரபடாதே உன் முயற்சியிலிருந்து தவறாதே காலங்கள் கடந்தாலும் உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரும் காலங்கள் இருக்கிறது. உன்னுடைய அழகுக்கும், திறமைக்கும் வாய்ப்புகள் உன்னை தேடிவரும். முதலில் இந்த வேஷத்தைக் கலைத்துவிடு, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் என்னை வந்து பார்த்து பேசி செல்லு என்று வாழ்த்தி அனுப்புகிறார்.
அங்கிருந்த வீட்டுக்கு வந்த எம். ஜி. ஆர். கேரளாவுக்கு சென்று இருந்த தன் தாய் வீட்டிற்குள் இருப்பதை கண்டார். தன் மகன் வீட்டிற்குள் நுழைந்த உடன் தாய் ஓடோடி வந்து தன் மகனை பார்த்து மகனே என்று சொல்லி கட்டி பிடித்து அழுகிறார். மகனே என்னடா வேஷம் என்று சொல்லி கொண்டு அழுகிறாள். மகன் ஒன்றும் சொல்லாமல் தன் ரூமுக்குள் சென்று விட்டார். அடுத்தநாள் காலையில் என். எஸ். கே. சொன்ன அறிவுரைப்படி எப்போதும் போல் ஜிப்பாவும், வேஷ்டியும் அணிந்து சென்றார்.
இதைப் பார்த்த அம்மாவும். அண்ணனும் அண்ணியும் மூவரும் மன சந்தோஷப்படுகிறார்கள்.
முதல்நாள் இரவு எம். ஜி. ஆர். கட்டிபிடித்து இது என்ன கோலம் என்று தாய் கட்டி அழுததால் தான் எம். ஜி. ஆர். உடுத்தியிருந்த உடைகளை கழற்றிவிட்டார் என்று மூவரும் நினைத்து கொண்டார்கள். வெளியே சென்ற பிறகு எம். ஜி. ஆர். ஏற்கெனவே ஒப்பந்தம் செய்தபடி படங்களில் நடித்து வந்தார். இதற்கு இடையில் சில படங்களும் ஒப்பந்தமாகியது.
எம். ஜி. ஆர். தன்னுடைய முன்னேற்றப் பாதையில் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தார். உலகில் முதல் யுத்தம் 1938 இல் நடந்து கொண்டு இருந்த சமயத்தில் இந்தியாவில் இந்தியாவுக்கும் ஆங்கிலேயருக்கும் கடும்போர் நடந்தது. சென்னையில் ஆங்கிலேயர்கள் குண்டு வீசும் அபாயகட்டத்தில் இருந்தது.
இந்த சூழ்நிலையில் கூட எம். ஜி. ஆர். எதற்கும் அஞ்சாமல் படப்பிடிப்புக்குப் போனார். சென்னையை தாக்க வந்த எதிரிகளின் விமானங்களை இந்திய படை விரட்டி அடித்தது. இந்த மாதிரி ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் சென்னையை போன்ற பெரிய நகரங்களில் உள்ள 18 வயது நிரம்பிய வாலிபர்களை கட்டாயமாக இராணுவத்திற்கு அழைத்தார்கள். இதை அறிந்த எம். ஜி. ஆர். சினிமாவில் நடிக்க ஸ்டூடியோக்களுக்கும், கம்பெனி களுக்கும் அலைவதை விட பேசாமல் இராணுவத்தில் சேர்ந்து ஒரு வீரனாகி விடலாம் என்று நினைத்தது உண்டு.