
தமிழகத்தில் 8 இலட்சம் மாணவர்கள்
பிளஸ் 2 பரீட்சை எழுதுகின்றனர். தோற்பவர்களில் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அவற்றில்
சிலரைப் பற்றியே ளியுலகிற்கு தெரிகிறது. அது ஏன் என்பதை ஆராய்ந்து, அதற்கு சரியான தீர்வைச் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. நான்கு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அதில் தோல்வி அடைந்ததும், பெற்றோருக்குப் பயந்து அந்த ஊரைவிட்டு ஓடுகின்றனர்.
அப்போது பள்ளியின் முதல்வர் திடீரென்று கொலை செய்யப்படுகிறார். கொலை செய்தது மாணவர்கள்தான் என்று நினைத்து பொலிஸ் அவர்களை துரத்துகிறது. ஆனால் நிஜமாகவே கொலை செய்தவர்கள் மாணவர்களை சிக்க வைக்க துரத்துகின்றனர்.
இப்படி திகிலான கதையுடன், மாணவர்களின் தற்கொலை பற்றியும் சொல்லியிருக்கிறேன்.
No comments:
Post a Comment