Wednesday, September 13, 2017

பல்லாக்கு வாங்க போனேன் பாடல் பிறந்த கதை



சாரதா இன்னொரு பாடல் பிறந்த கதையை அனுப்பி இருக்கிறார்.
தன்னிடம் ஒரு அம்பாஸிடர் கார் இருந்தும், தன் நண்பரொருவர் வைத்திருந்த வெளிநாட்டுக்கார் மீது கண்ணதாசனுக்கு ஆவல். நண்பரும் அதை விற்கப் போகிறார் என்பதைக் கேள்விப்பட்ட கவிஞர், அதைத் தனக்கே தரவேண்டுமென்று விலையும் பேசிவிட்டார். முழுப் பணமும் கொடுக்க கண்ணதாசனிடம் பணமில்லை. எனவே மூன்றில் ஒரு பங்கு பணம் அப்போதே தருவதாகவும், பாக்கியை விரைவில் தந்துவிடுவதாகவும் சொல்ல ந்ண்பரும் சம்மதித்தார். அது முதல் கவிஞர் அந்தக் காரை தன்னுடைய கார் போலவே கனவு காணத் துவங்கினார். மறுநாள் காலை நண்பரிடம் இருந்து வெளிநாட்டுக் காரை எடுத்து வருவதாக ஏற்பாடு.
ஆனால் முதல் நாள் அந்த நண்பரின் மற்ற நண்பர்கள் சிலர், ‘கண்ணதாசன் கொடுக்கல் வாங்கலில் ரொம்ப மோசமென்றும், அவருக்கு ஊரைச் சுற்றி நிறைய கடன் இருப்பதாகவும், எனவே நண்பரின் பாக்கிப் பணம் வசூலாவது கடினம்என்றும் சொல்ல நண்பர் உஷாரானார்.
இந்தியாவின் ஜனாதிபதியைப் போல சம்பாதித்து ம்கூட, இந்தியாவைப் போல கடன் வாங்கியவர் கண்ணதாசன்என்று கவிஞரைப் பற்றி ஒரு சொல்வழக்கு உண்டு.
மறுநாள் காலை கவிஞர் குளித்து, உணவருந்திவிட்டு, வண்டியை எடுத்து வர தன் ஓட்டுனருடன் நண்பர் வீட்டுக்குச் செல்ல, நண்பரோ குண்டைத் தூக்கிப் போட்டார். அந்த கார் தனக்கு ராசியானது என்றும், அதை விற்க தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் விருப்பமில்லைஎன்றும் கூற, கவிஞர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். தான் ஆசைப்பட்டு தனதாகவே நினைத்திருந்த கார் தனக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அவர் மனதில் தங்கியிருந்தது.
அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு, இயக்குனர் ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்த பணக்கார குடும்பம்படத்துக்கு ஒரு சோகப் பாடல் எழுத அமர்ந்த கவிஞருக்கு அன்று காலை நடந்த சம்பவம் மனதைக் குடைய, பல்லவியை இப்படி துவங்கினார்
பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
சூழ்நிலைகளை தன் பாடலுக்குள் புகுத்திக்கொள்வதில் கண்ணதாசன் திறமைசாலித்தான்.

காமராஜரின் வாழ்க்கையின் சுருக்கத்தை பாடலாக தந்தவா் கண்ணதாசன்




காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான் தலைவனாகப் பார்த்தேன் என்று மனமாரச் சொன்னவர், காமராஜரைப் பற்றி வியந்து வியந்து பாடல் எழுதியவர். அவர் எழுதிய இந்தப் பாடல் காமராஜரின் வாழ்க்கையின் சுருக்கம் என்றே சொல்லலாம்.
தங்கமே! தன்பொதிகைச் சாரலே! தண்ணிலமே!
சிங்கமே! என்றழைத்துச் சீராட்டுத் தாய் தவிரச்
சொந்தம் என்று ஏதுமில்லை!
துணையிருக்க மங்கையில்லை!
தூய மணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை!
ஆண்டி கையில் ஓடிருக்கும்,
அதுவும் உனக்கில்லையே!
கண்ணதாசன் வீட்டில் அசைவம் சமைக்கப்பட்டால் காமராஜர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இரவு நேரங்களில் இருவரும் சந்தித்தால் நேரம் போவதே தெரி யாமல் பேசுவார்கள். நாகர்கோவில் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தி வெற்றி தேடிக் கொடுத்தவர் கண்ண தாசன். கண்ணதாசன் மது அருந்துவார் என்பது அனை வருக்குமே தெரியும். ஆனால் மது அருந்துபவர்கள் காங் கிரஸ் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்தது. அப்போது கண்ண தாசனை அழைத்துப் பேசினார் காமராஜர்.
“”கண்ணதாசா, இந்த சனியன் மதுவை விட்டுத் தொலை. இதனால உன்னைப் பத்தி தப்பாப் பேசுறாங்க. பார் என்று கேட்டுக் கொண்டார். உடனே, கண்ணதாசன் எல்லோரும் சொல்வதுபோல, சினிமா உலக அவசரம், சிக்கல், வீட்டுப்பிரச்னை போன்ற வற்றைச் சொல்லி, “அதுக்காத்தானே குடிக்கிறேன். அதுவும் பெர்மிட் வாங்கித் தானே குடிக்கிறேன் என்று சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனாலும் காமராஜர் விடுவதாக இல்லை.அட.. விட்ருப்பா என்றார். யோசித்த கண்ண தாசன், “”சரி விட்டுர்றேன்குடிக்கிறதை இல்லை. காங் கிரஸ் கட்சியை என்றபடி கிளம்பினார். காமராஜர் பெரிதாகச் சிரித்து தலை அசைத்தார்.
காமராஜர் மீது திடீரென கோபம் கொள்வது, அப்புறம் சேர்ந்து கொள்வது என்று பிள்ளை விளையாட்டு போலவே இருவருக்கும் உறவு இருந்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருந்த கண்ணதாசன் மீண்டும் காமராஜர் அருகே வர ஆசைப்பட்டார். அந்த ஆசையைத் தான் தன் சொந்தத் தயாரிப்பில் வெளிவந்த பட்டணத்தில் பூதம் திரைப்படத் தில் பாடலாக வடித்தார்.
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடிஎன்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி என்று எழுதினார். இந்தப் பாடலைக் கேட்டதும் காமராஜர், “”கவிஞரை வரச் சொல் லுங்க என்று அழைப்பு விடுத்தார். இதைப்போலவே பட்டிக்காடா பட்டணமா? , “கர்ணன் போன்ற படங் களிலும் காமராஜரைக் குறித்து அர்த்தம் பொதிந்த பாடல்கள் எழுதி இருக்கிறார். காமராஜர் மரணம் அடைந்த நேரத்தில் கண்ணதாசன் இந்தியாவில் இல்லாததால் உடனே வர இயலவில்லை. அதற்குப் அவருடைய சமாதிக்குச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
காமராஜரின் நினைவாக நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார் கண்ணதாசன்: லட்சக்கணக்கானவர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள் என்னைப் பாராட்டி இருக்கிறார்கள். அவர்கள் எப்படிப்பட்ட வார்த்தைகளால் என்னை அலங்கரித்தார்கள் என்பதை நான் மறந்துவிட்டேன். ஆனால், “காட்டு ராஜா சிங்கம்! கவிதைக்கு ராஜா கண்ணதாசன்! என என் தலைவர் காமராஜர் புகழ்ந்து கூறிய அந்த மொழிகள் ஒரு கல்வெட்டாக என் நெஞ்சம் ஏற்றுக் கொண்டு இருக்கிறது.
என் பிறந்த நாளை அவரும், அவர் பிறந்த நாளை நானும் என்றென்றும் நினைவில் வைத்திருப்போம். ஜூன 24ம் தேதி முதல் டெலிபோன் அவரிடம் இருந்து எனக்கு வரும். அதைப்போல ஜூலை 15 அவருக்குச் செல்லும் முதல் போன் என்னுடையதாக இருக்கும்.
நான் ஒரு முறை பெத்தடின் ஊசிக்கு அடிமையாக இருந்தேன்.அப்போது காமராஜர், “அந்த ஊசி எத்தனை மோசமானது. தெரிஞ்சும் இப்படிப் பண்றானேஇந்தப் பாவிக்கு யார் புத்தி சொல்றது? என்று பதறியதை நான் அறிவேன். ஆன்மீகத்தில் எனக்கு கண்ணபிரான் பிடித்த மானவர். அரசியலில் காமராஜர். தமிழ்நாட்டின் தேசிய பாரம்பரியத்தின் அந்தக் கடைசி மணி மண்டபமும் உடைந்துவிட்டது. இதுவரை என் துயரங்களை எல்லாம் அவரிடம் சொல்லி அழுதிருக்கிறேன். இனி யாரிடம் சொல்லி அழுவது? என்று கதறினார்.
காமராஜர் பிறந்த தின விழாவை சிறப்பாகக் கொண் டாட விரும்புவார் கண்ணதாசன். அதன்ஒரு பிரதிபலிப் பாகத்தான் தொடர்ந்து 36 கூட்டங்கள் நடத்தி காமராஜர் புகழ் பாடினார். காமராஜர் பிறந்தநாளுக்காக அவர் எழுதி யிருக்கும் பாடல்கள் காலத்தால் அழியாதவை. அவர்கள் இருவருடைய நட்பு போல, என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியது.