Wednesday, February 13, 2013

தீபிகாவுக்கு லுங்கி அணிவித்த ஷாருக்

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனின் கொஸ்ட்யூம் ஒன்று, மும்பை வட்டாரத்தைக் கலக்கி வருகிறது. அதுவேறு ஒன்றுமில்லை. லுங்கியும், சட்டையும் தான்.
தமிழ் சினிமாவில் பொதுவாக காட்சியில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஏற்றிக் கட்டி லுங்கி மற்றும் கழுத்தில் கர்ச்சீப் சகிதம், சுவிட்சர்லாந்தில் ஒரு பாட்டு வைப்பார்கள். அப்படித்தான் விஜய் படத்தில் என்னோட லைலா பாட்டை செட் செய்து பட்டையைக் கிளப்பினார்கள்.
அதே பாணியில், ஷாருக்கானும் ஒரு படத்தில் தீபிகாவை வித்தியாசமாக காட்டியுள்ளார். அந்த காட்சியும் இப்போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிட்டதாம். சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பொலிவுட் படத்தில்தான் இந்தக் களேபரம், அது என்ன என்று பார்ப்போமா....?
இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் லுங்கி, சட்டையில் படு ரவுசாக காட்சி தருகிறார் தீபிகா. அதேபோல் ஷாருக்கானும் வேட்டி, சட்டையில் கலங்கடிக்கிறார். கூடவே டான்ஸர்களும் சுத்தமான தமிழ் முகங்களுடன் காட்சி அளிக்கின்றனர்.
இது குறித்து தீபிகா கூறுகையில், உண்மையில் இந்த கொஸ்ட்யூமை செலக்ட் செய்தது ஷாருக்கானும், டைரக்டர் ரோஹித் ஷெட்டியும் தான். ஷாருக்கான், லுங்கியை எடுத்து ஷெட்டியிடம் கொடுத்து தீபிகாவுக்கு இதை அணிவித்தால் வித்தியாசமாக இருக்குமே என்றார். அதை ஷெட்டியும் ஏற்றார். அதேபோல் தனது சட்டையையும் கொடுத்தார் ஷாருக். நான் போட்டுள்ள கூலிங் கிளாஸ் மட்டும் தான் என்னுடையது.
தீபிகாவுக்கு பெரும் ஏற்றம் கொடுத்த படம் ஓம் சாந்தி ஓம். அதுதான் அவரது முதல் படமும் கூட. அப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்திருந்தார். அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். எனவே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நம்ம ஊர் சகலகலா நடிகர் டெல்லி கணேஷ¤ம் நடிக்கிறாராம்.
பொலிவுட் வாழ்க்கை குறித்து தீபிகா கூறுகையில், கடுமையாக உழைத்தால் பலன் கிடைக்கும், இது எனது அனுபவம். அடுத்தடுத்து எனது படங்கள் இந்த ஆண்டு வரவுள்ளன. சென்னை எக்ஸ்பிரஸ் வருகிறது.
தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்துள்ள கோச்சடையான் வருகிறது என்றார் புன்னகையுடன். சல்மான் கானுடன் அவரது கிக் படத்தில் ஜோடியாக நடிக்கப் போகிaர்களாமே என்ற கேள்விக்கு, அப்படியெல்லாம் இல்லை. அது தவறான தகவல் என்று மறுத்தார் தீபிகா. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் கவர்ச்சிப் பிரியாணியும் உண்டாம்.
அது பிரியாமணியின் குத்துப் பாட்டு, ஷாருக்கானே கூப்பிட்டு பிரியாமணியை குத்துப் பாட்டுக்கு ஆடுமாறு கேட்டுக் கொண்டாராம் இதனால் சந்தோஷமாக ஒத்துக்கொண் டாராம் பிரியாமணி. முதலில் நயண்தாராவைத்தான் இதற்காக நாடியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிடவே பிரியாமணியைப் பிடித்தனராம்.

No comments:

Post a Comment