
இது தவிர தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மும்பை குடிசை பகுதியில் இருந்து ஒரு ஏழைக் குழந்தையை தத்தெடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான செலவுகளை ஏற்றுக்கொள்கிறார். இதுவரை 21 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். நிரந்தரமாக ஒரு அறக்கட்டளை தொடங்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.
ஹன்சிகாவின் திரைப்பட சாதனைகள், சமூக சேவைகள் இவற்றை பாராட்டி பிரபல பெண்கள் இதழான ஜே. எப். டிபிள்யூ (ஜஸட் ஃபார் வுமன்) இதழ் ஹன்சிகாவை இளம் சாதனையாளராக தேர்வு செய்து அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி சென்னையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் இந்த விருதை அவருக்கு வழங்குகிறது. ஹன்சிகாவுடன் நடிகைகள் சரோஜாதேவி, த்ரிஷா, சமூக சேவகர்கள் சுஜாதா மோகன், அலமேலு வள்ளி, விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிக்கல், விஞ்ஞானி தோமஸ் ஆகியோரும் விருது பெறுகிறார்கள்.
No comments:
Post a Comment