Wednesday, April 30, 2014

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கலை உலக வாரிசு - சரண்

எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதுடன், படங்களும் தயாரிக்கிறார்.
எஸ். பி. பாலசுப்பிரமணியம் - சாவித்திரி தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
மகள் பல்லவிக்கு 1994 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. கணவர் பெயர் கிரிதர் ராஜா. இவர் ‘ஸ்ரீராம் சிட்ஸ்’ நிர்வாக இயக்குனர் எஸ். வி. எஸ். ராஜாவின் மகன்.
திருமணம் ஆன சமயத்தில் கிரிதர் ராஜா அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறையில் இருந்தார். திருமணம் ஆனதும், மனைவி பல்லவியையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார்.
சில ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தபின், அவர்கள் சென்னை திரும்பினர். இப்போது சென்னையில் சொந்தமாக கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்துகிறார் கிரிதர் ராஜா.
எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் பெயர் சரண். இவர் பட அதிபர். இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்.
உன்னை சரண் அடைந்தேன், ‘மழை’ ஆகிய படங்கள் சரண் தயாரித்தவை. ‘உன்னைச் சரண் அடைந்தேன்’ படத்தில் அவர் நடித்திருக்கிறார். இப்போது, ‘சென்னை 600028’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.
இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது.
மாணவ பருவத்தில் பாலசுப்பிரமணியம் ஒல்லியாக இருந்தார். இப்போது குண்டாகிவிட்டது ஏன் என்று கேட்டதற்கு. ‘இனிப்பு தின்பண்டங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிகமாக இனிப்பு சாப்பிட்டதால் குண்டாகிவிட்டேன்’ என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது :-
‘எனக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நிறைய கடிதங்கள் வரும். நான் பதில் எழுத நேரமிருக்காது. ஆனால் கூடுமானவரை எல்லோருக்கும் போட்டோ அனுப்புவேன். நான் ரசிகர்களை நேசிக்கிறேன்.
பல ரசிகர்கள் என்னை சந்தித்துப் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். எல்லோரையும் திருப்திப்படுத்த என்னால் முடியவில்லை.
ஆகையால் ரசிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் உங்களுக்காக உங்கள் சந்தோஷத்திற்காக நான் என்னால் முடிந்த அளவு பாடிக்கொண் டேயிருப்பேன். நாம் சந்திக்க முடியாவிட்டாலும் நமது உறவு என்றும் நிரந்தரமானது. எனக்கு பாடக்கூடிய மூட் வந்தால்தான் இசை நன்றாக இருக்கும். முழு மனதோடு ஈடுபடவில்லை என்றால் நல்ல, தரமான இசையைத் தர இயலாது.
ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலையை மட்டும் செய்வதைத்தான் பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறேன். வெகு சீக்கிரத்தில் எனக்கு கோபம் வந்துவிடும். ஆனால் அமைதியாக இருப்பது முக்கியம் என்று கருதி நான் மிகவும் பிரயாசையின் பேரில் அமைதியாக இருக்க முயற்சி செய்கிறேன். பொறுமைக்கு என்றும் பலன் உண்டு. ஆனால் பலன் தாமதமாகத்தான் கிடைக்கும்.
புதிதாக பாட வருபவர்கள், தங்களைப் பற்றி உயர்வாக நினைத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இரண்டு பாடல்கள் பாடி விருது வாங்கினா அதை ஒரு பெரிய சாதனையாக கருதக்கூடாது. பிரபலமான பாடகர்களின் குரலில் பாடி முயற்சிப்பதை தவிர்த்து சொந்த பாணியில் பாட முயற்சிக்க வேண்டும். பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். கஷ்டப்பட்டு உழைக்கத் தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு பாடலையும். முதல் பாடலாக நினைக்க வேண்டும். பந்தாவை அறவே விட்டுவிட வேண்டும். எவ்வளவு பணிவாக நாம் இருக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்மால் வாழ்வில் முன்னேற முடியும்.
எனக்கு கிரிக்கெட், டென்னிஸ் ஆகிய விளையாட்டுகள் பிடிக்கும்.
குறிப்பாக, கிரிக்கெட் என்றால் உயிர். மாணவனாக இருந்தபோது, பல காலம் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன்.
சார்ஜாவில் கிரிக்கெட் பார்க்க சென்றிருக்கிறேன். கிரிக்கெட்டில் நிறைய நண்பர்கள் உண்டு. கபில், மொகிந்தர், அனில் கும்ப்ளே, ராஜ ஸ்ரீநாத் போன்றவர்களை நான் அறிவேன். ரிக்கார்டிங்கை கான்சல் பண்ணிவிட்டு கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் பழக்கம்கூட உண்டு.
டென்னிஸ் மாட்சுகள் எல்லாம் வீடியோ டேப் செய்து வைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது அதைப் போட்டுப் பார்ப்பேன்.
கடவுள் நம்பிக்கை உள்ளவன் நான். தினசரி காலை எழுந்திருக்கும் போது என் தாயையும், தந்தையையும் நினைத்துக் கொண்டுதான் எழுந்திருப்பேன். அதேபோல இரவு படுக்கைக்குச் செல்லும்போது கடவுளை மனதிற்குள் நினைத்து அந்த நாளில் யாருக்காவது நான் அறியாமலே ஏதாவது கெடுதல் செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று வேண்டிக் கொள்வேன். இதைத் தவிர பூஜைகள் எதுவும் தனியாகச் செய்ததில்லை.
எதிர்காலத் திட்டங்கள் என்று எதுவும் இல்லை. முடியும் வரை உழைத்துப் பாட வேண்டும். குரல் எப்பொழுது ஒத்துழைக்க மறுக்கிறதோ, அப்பொழுது பாடுவதை விட்டுவிடவேண்டும்.
ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. கடைசிவரை, ஏதாவது ஒரு பகுதியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆவல். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், மீண்டும் இதே மண்ணில் பிறந்து, பாடகராகவே வாழ ஆசைப் படுகிறேன். இந்த ஜென்மத்தில் நல்ல குடும்பம், நண்பர்கள். ரசிகர்களின் ஆதரவு இருப்பது போலவே, அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.’ இவ்வாறு எஸ். பி. பாலசுப்பிரமணியம் கூறினார்.

எம். ஜி.ஆருக்கு குழந்தை

எப்படி இந்த குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும் என்று அடுத்த நாளில் எந்த விதமான குடும்ப சிந்தனையும் இல்லாமல் ஒரு புதுமனிதன் போல் வெளியே தன் தொழிலுக்காக சென்றார்.
எப்போதும் போல் காலை 5 மணிக்கு எழுந்து தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியில் செல்லும் போது அறையில் செல்லமாக மனைவியின் கன்னத்தை கிள்ளிவிட்டு ஒரு பொன் சிரிப்போடு சிரித்து விடைபெற்று அம்மாவுடைய ஆசிர்வாதத்தோடு வெளியே செல்லும் பழக்கத்தை வைத்துக் கொண்டார்.
எம். ஜி. ஆருக்கு திருமணமாகி ஒருவருடம் ஆகிவிட்டதா என்று யோசித்து காலங்கள் இவ்வளவு வேகமாக போகிறதே அம்மா என்று நினைத்து கொண்டு இருக்கும்போது இன்று மகனே உன் மனைவியை அழைத்துக் கொண்டு எங்கேயாவது கோயிலுக்கு சென்று வாருங்கள் என்றார். உடனே மகன் எம். ஜி. ஆர். எனக்கு எப்போதுமே கோயில், குளம், சினிமா, கடைவீதி, கடற்கரை அங்கு இங்கு சென்று போய் பழக்கம் உண்டா அதனாலே நீயே அழைத்துப் போய் வா என்றார்.
எந்தப் படத்தில் எந்த வேடத்தில் கிடைத்தாலும் நடிப்போம் என்ற முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது ஒரு நாள் தன் தாய் எம். ஜி. ஆர். சூட்டிங் முடித்து வீட்டிற்கு வந்த பிறகு சந்தர்ப்பம் பார்த்து மகனே என்று அழைத்து உனக்கு நான் ஒரு சந்தோசமான செய்தியை சொல்ல போகிறேன்.
அப்பிடியா என்னங்கம்மா சொல்லுங்கம்மா என்றார் எம். ஜி. ஆர். மகனே நீ ஒரு குழந்தைக்கு தகப்பனராக ஆகிவிட்டாய் என்று தாய் மிக மன மகிழ்ச்சியோடு சொன்னார். இதை கேட்ட எம். ஜி. ஆர். முகத்தில் எந்த விதமான ஒரு சந்தோசமும் இல்லை. ஆனாலும் அதை அம்மாவிடம் காட்டிக்கொள்ளாமல் அம்மா ரொம்ப சந்தோசம் என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.
அண்ணனுக்கு இரண்டு குழந்தைகள் ஒன்று பெண், ஒன்று ஆண். இந்த நிலையில் இவ்வளவு சீக்கிரம் நமக்கும் குழந்தையா என்று நினைத்து வேதனைப்பட்டார். என்ன செய்வது எல்லாம் கடவுள் செயல் உழைப்பில் கவனமாகவும் உறுதியாகவும் இருந்த எம். ஜி. ஆருக்கு மீண்டும் ஒரு கடுமையான சோதனை ஏற்பட்டது.

தெரிந்த பாடல் தெரியாத தகவல்கள்

,இந்தப் பதிவில் எம்.ஜி ஆரும் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம். கண்ணதாசனும் எம். ஜி. ஆரும் மிகச் சிறந்த நண்பர்கள்.
இருவரும் ஒரே கட்சியில் பணியாற்றியவர்கள். 1972ம் ஆண்டு பொது இடங்களில் குடிப்பதற்கான தடை நீக்கப்பட்டிருந்தது. அதனால் ஆண்கள் குடிபோதையில் அடிமையாகி குடும்பங்களை மறந்து திரிகிறார்கள் என்று நிறைய பெண்கள் எம். ஜி. ஆரிடம் முறையிட்டனர். எம். ஜி. ஆர். அந்த காலத்தில் தன் படங்களில் சமூக பிரச்சினையை தீர்ப்பது போன்ற காட்சியில் அதிகம் நடிப்பார்.
தன் அரசியல் பிரவேசத்திற்கு சினிமாவை ஒரு மிகச் சிறந்த கருவியாக எம். ஜி. ஆர் பயன்படுத்தினார். எம். ஜி. ஆர். குடிப்பழக்கத்திற்கு எதிரான தன் கருத்தை படத்தில் பாடலாக வைக்க வேண்டும் என நினைத்தார்.
இந்த பாடலை நம் கவிஞரை விட யாராலும் எழுத முடியாது என்று நினைத்து அவரிடம் இந்தப் பாடலை எழுதச் சொன்னார். நம் கவிஞரோ எப்போதும் போதையில் இருப்பவர். அதனால். தான் எப்படி இந்தப் பாடலை எழுத முடியும் என யோசித்தார். இருந்தாலும் எம். ஜி. ஆரின் அன்புக் கட்டளையும் தட்ட முடியவில்லை.
அந்த சூழ்நிலையில் அவர் எழுதிய பாடல் தான் ‘சிலர் குடிப்பவர் போலே நடிப்பார் சிலர் நடிப்பவர் போலே குடிப்பார்’ எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடலில் குடியால் ஏற்படுகின்ற தீமையும் சொல்லியிருப்பார், அதே சமயம் குடியால் ஏற்படுகின்ற அனுபவத்தையும் மறைமுகமாக சொல்லியிருப்பார்.
சிலர் குடிப்பதுபோலே நடிப்பார் சிலர் நடிப்பதுபோலே குடிப்பார்.
சிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டலில் மயங்குவார். மதுவுக்கு ஏது இரகசியம் அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம். மதுவில் விழுந்த வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம். நானமில்லை வெட்கமில்லை போதையேறும்போது நல்லவனும் தீயவனே கோப்பையேந்தும்போது புகழிலும் போதையில்லையே பிள்ளை மழலையில் போதையில்லையே
காதலில் போதையில்லையே நெஞ்சில் கருணையில் போதையில்லையே.
மன.ம் மதி, அறம், நெறி தரும் சுகம் மதுதருமோ நீ நினைக்கும் போதைவரும் நன்மை செய்துபாரு நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப்பாரு
கவிஞரை பொறுத்தவரை குடிப்பது என்பது தனி மனித ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை அது எந்த விதத்திலும் சமுதாயத்தை பாதிக்காது என்பது அவரது கருத்து. எல்லாவற்றிலும் ஒரு போதையுண்டு. பணம் பொருள். புகழ் போன்றவையும் ஒரு வகையான போதையே அதனால் குடிபோதை பெரிய தவறல்ல என்பது அவரது கருத்து.
எம். ஜி. ஆர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். 1963ல் அவர் தி.மு.க வில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார். தி. மு.க என்பது கடவுள் நம்பிக்கையில்லாத கடவுளுக்கு எதிரான ஒரு கட்சியாக வடிவெடுத்திருந்த சமயம் அது. அப்போது எம். ஜி.ஆரின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவர் கட்சியின் கொள்கையை மீறுகிறார் என்று குற்றம்சாட்டி அவரை கட்சியின் தலைமையில் சொல்லி கட்சியை விட்டு அகற்ற பார்த்தனர்.
அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பாடம் புகுத்துவது போன்ற ஒரு பாடல் எழுதுமாறு கண்ணதாசனிடம் கேட்டார். சூழ்நிலைக்கு பாட்டு எழுதுவது என்பது நம் கவிஞருக்கு கைவந்த கலை. அப்படி அவர் எழுதிய பாடல்தான் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்று தொடங்கும் பாடல்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிப்படும் மயங்காதே
ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அரிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில்பாதி
கழகத்தில் பிறப்பது தான் மீதி
மனம் கலங்காதே மதியமயங்காதே
இந்தப் பாடலில் தனக்கு எதிராக என்னதான் நடந்தாலும் கடைசியில் நியாயம் தான் ஜெயிக்கும் என்பது போல் பாடல் எழுதியிருப்பார். ‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே” என்ற வரிகள் வரும் காட்சியில் பின்னாலே கோபுரங்களை பார்த்து எம். ஜி. ஆர் கை காட்டுவது போல் அமைந்திருக்கும் (அது கடவுளை மறைமுகமாக குறிப்பதாக காட்சியமைதிருப்பார்) பின்னாலே தெரிவது அரிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு’ போன்ற வரிகள் இரண்டு அர்த்தங்களுடன் எழுதப்பட்டவை.
இவ்வாறு எம். ஜி.ஆரின் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தவர் கண்ணதாசன் அதனால் தான் அவரை எம். ஜி. ஆர் தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக்கி அழகு பார்த்தார்.