Friday, June 28, 2013

சிக்கலில் இருந்து மீண்டு விட்டேன்

நடிகை அஞ்சலி சித்தி கொடுமைப்படுத்துவதாக வீட்டை விட்டு வெளியேறினார். சில நாட்கள் தலைமறைவாக இருந்துவிட்டு ஐதராபாத் பொலிசில் ஆஜரானார். தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் அவர் ஏற்கனவே நடித்த ஊர் சுற்றி புராணம் படம் பாதியில் நிற்கிறது. அஞ்சலி மீது நீதிமன்றில் வழக்குகளும் தொடரப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் அஞ்சலி ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :-
என் வாழ்க்கையில் எதிர்பாராதவை நிறைய நடந்து விட்டன. பிரச்சினைகள் சூழ்ந்து இருந்தது. எனவே தான் வேறு வழி இல்லாமல் சில முடிவுகளை எடுத்தேன். இப்போது சிக்கல்களில் இருந்து மீண்டு சந்தோஷமாக இருக்கிறேன். இப்போது பழையபடி படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறேன். இதனால் எனக்குள் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. புதிய அனுபவங்களை உணர்கிறேன். பலமானவளாகவும் என்னை கருதுகிறேன். ஒவ்வொரு முடிவுகளையும் சுயமாக சிந்தித்து எடுக்கிறேன்.
எனது வாழ்க்கை என் கைக்குள் வந்து விட்டது. மற்றவர்களுக்கு கீழ்படிந்து வாழ்வதும் இழிவாக நடத்தப்படுவதும் எனக்கு பிடிக்கவில்லை. நான் சர்ச்சையில் சிக்கி இருந்த போது நிறைய பேர் ஆறுதலாக இருந்தார்கள். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் போன்றோர் நம்பிக்கையூட்டினார்கள். இப்போது எதற்கும் நான் கவலைப்படவில்லை. முழுக் கவனமும் சினிமாவில் தான். நல்ல கேரக்டர்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்று உழைக்கிறேன்.

No comments:

Post a Comment