Wednesday, June 19, 2013

9 வயதில் இருந்தே சாருக்கான் ரசிகை

நான் 9 வயதில் இருந்தே சாருக்கானின் ரசிகையாக இருந்து வருகிறேன்' என்று நடிகை தீபிகா படுகோனே கூறினார்.
சாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இந்தி படம், 'சென்னை எக்ஸ்பிரஸ்' இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இவருடைய தந்தையாக ஒரு முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.
சாருக்கான் தனது தந்தையின் அஸ்தியை கரைப்பதற்காக ராமேஸ்வரம் வருவது போலவும், அங்கு தீபிகா படுகோனேயை சந்தித்து காதல் வசப்படுவது போலவும் கதை.
'சென்னை எக்ஸ்பிரஸ்' படம், தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. விழாவில் சாருக்கான், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள்.
விழாவில், தீபிகா படுகோனே பேசியதாவது :-
'நான் 9 வயதில் இருந்தே சாருக்கானின் ரசிகையாக இருந்து வருகிறேன். 'ஓம் சாந்தி ஓம்' படத்தில் அவர் என்னை கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அதுவே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இப்போது, 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்து இருக்கிறேன். எனது கனவு நாயகனுடன் 2 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தது என் அதிர்ஷ்டம்' இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.
சாருக்கான் பேசும்போது, 'சத்யராஜ் மிகப்பெரிய நடிகர். அவர் ஒரு பெரிய தலை என்னைப் போன்ற நடிகர்களுக்கு அவர்தான் தலைவர்' என்றார்.

No comments:

Post a Comment