
அப்போது ‘அசோக்குமார்’ உட்பட சில படங்களில் தியாகராஜ் பாகவதரோடு சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டி ருந்தார். நான் ‘டி. கே. எஸ். சகோதரர் கள் நாடக சபாவில்’ என். எஸ். கே, எஸ். வி. சுப்பையா, எம். என். ராஜம் போன்றவர்களுடன் நடித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் கோவையிலுள்ள சென்ட்ரல் ஸ்டுடியோவிற்கு, நண்பர்களைப் பார்க்க அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பிலிருந்து ஏறுகிறேன்.
அதே பஸ்ஸில் எம். ஜி. ஆரும் ஏறுகிறார். அவர், கலைஞர், நம்பியார் போன்றோர் அப்போது சென்ட்ரல் ஸ்டுடியோவில் மாச சம்பளத்திற்குப் பணியாற்றுகிறார்கள். எம். ஜி. ஆரைப் பார்த்து விட்டு ‘வணக்கம்’ சொல்கிறேன். அப்போது தான் முதன் முறையாக நாங்கள் பேசுகிறோம். ‘வாங்க தம்பி’ என்று வாஞ்சையாக அழைத்து, எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார். ‘பெரிய ஆளா வருவீங்க.....’ என்று வாழ்த்தினார்.
No comments:
Post a Comment