Wednesday, June 12, 2013

மீண்டும் இணையும் சந்தானம் விசாகா

கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்துக்குப் பிறகு சந்தானம், சேது, விசாகா இணைந்து நடிக்கும் படம், ‘வாலிப ராஜா’ மற்றும் சித்ரா லட்சுமணன். ஜே.பி. தேவதர்ஷினி உட்பட பலர் நடிக்கின்றனர்.
இன்னொரு ஹீரோயினும் நடிக்க இருக்கிறார். ஹெச் முரளி வழங்க வொங்ஸ் விஷன் 1 என்ற நிறுவனம் தயாரிக்கிறது. கே.வி.
ஆனந்திடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார். கதை, திரைக்கதை சாய் கோகுல் ராம்நாத், கணேஷ் ராஜ், வசனம் செந்தில்குமார். இசை ரதன். ஒளிப்பதிவு லோக்நாத்.
இவர் மலையாளத்தில் ஹிட்டான ‘உஸ்தாத் ஓட்டல்” படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். படத்தின் டைட்டில் கெரக்டரில் சந்தானம் மனநல மருத்துவராக வருகிறார். காதல் கொமெடியுடன் கூடிய படம்.
எதிர்வரும் 19ம் திகதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடக்கிறது” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்

No comments:

Post a Comment