
விழாவில் விஜய் பேசும் போது :-
‘தலைவா’ படம் பார்த்தேன். ரொம்ப பிடித்து இருந்தது. எல்லோருக்கும் பிடிக்கும். டைரக்டர் ஏ. எல். விஜய் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, அமலாபால், சத்யராஜ், சந்தானம், மனோபாலா, பொன்வண்ணன் என திறமையானவர்களால் இப்படம் உருவாகியுள்ளது. படத்துக்கு பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் என்றார்.விழாவில் அமலா பால் பேசியதாவது :-
‘தலைவா’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தது பெருமையாகவும் சந்தோசமாகவும் உள்ளது. திறமையானவர்களால் இந்தப் படம் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. ஏற்கனவே ஏ. எ. விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்தேன். இப்போது அவர் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு நடிகைக்கும் விஜய் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. எனக்கு அக்கனவு நிறைவேறியுள்ளது. இது எனக்கு முக்கிய படம். விஜய் இனிமையானவர் ‘என்னம்மா’ என்று அழைத்து அன்பாக பழகினார்.இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment