Wednesday, June 12, 2013

மாதவனும் மலர்விழியும்

கிரிஜா புரொட்க்ஷன் சார்பில் எஸ். சரவணன் தயாரிக்கும் படம், ‘மாதவனும் மலர் விழியும்’. அஸ்வின், சிஜா ரோஸ், நீரஜா நடித்துள்ளனர். மாசில் இயக்கி உள்ளார்.
வசந்தமணி இசை அமைந்துள்ளார். இதன் பாடலை தயாரிப்பாளர் கெயார் வெளியிட வி.சி. குகநாதன் பெற்றார். படம் பற்றி இயக்குனர் மாசில் கூறியதாவது:
நாட்டியத்தை மையமாக கொண்ட படம். காதலுக்காக நடனம் கற்கும் ஹீரோ.
மாணவன் காதலுக்காக உயிரைத் தியாகம் செய்யும் மாஸ்டர். இவர்களை அழிக்க வரும் வில்லன்.
இந்த நான்கு பேருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினைகளும், போராட்டங்களும்தான் கதை.
வெளியில் பிரகாசமாக தெரியும் நாட்டிய கலைஞர்களின் வாழ்க்கை சோகமானது என்பதை சொல்கிறோம். சிஜா ரோஸ் ஆடும் நடனம் பேசப்படுவதாக இருக்கும். ஜான்பாபு நடனம் அமைந்துள்ளார்.

No comments:

Post a Comment