Wednesday, June 19, 2013

அம்மாவாக ஆசை

சமந்தாவும் சித்தார்த்தும் காதல் வயப்பட்டுள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் இருவரும் கோவில்களுக்கு பெற்றோருடன் சென்று சாமி கும்பிட்டனர். அதன் பிறகுதான் இவர்கள் காதல் விவகாரம் வெட்ட வெளிச்சமானது.
பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்கின்றனர். நெருக்கமாக போட்டோவுக்கும் போஸ் கொடுக்கிறார்கள். சமந்தாவுக்கு தற்போது தெலுங்கில் 5 படங்கள் கைவசம் உள்ளன. தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு திருமணம் நடக்கும் என தெரிகிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாய் ஆக ஆசை வந்துள்ளதாகவும் சமந்தா கூறியுள்ளார். இது குறித்து சமந்தா டுவிட்டரில் 'படப்பிடிப்பில் ஒரு குழந்தையை பார்த்தேன். அதை தூக்கி கொஞ்சினேன். பிஞ்சு விரலால் அக்குழந்தை என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டது. அக்குழந்தையை விட்டு என்னால் விலக முடியவில்லை. எனக்கு வயது ஆகிவிட்டது தெரிகிறது. எனக்கும் தாய் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு உள்ளது' என்று குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment