Wednesday, June 12, 2013

ஆமா... பீடி பிடிச்சேன்! அதுல என்ன தப்பு?

தமிழில் ‘கொக்கி’, ‘திருவண்ணாமலை’, ‘தலையெழுத்து’ படங்களில் நடித்த பூஜாகாந்தி, தொடர்ந்து இங்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் கன்னடத்துக்கு சென்றார். இப்போது அங்கு டொப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்.
தனது 50 வது படத்தை நெருங்கும் அவர் கர்நாடக மீடியாக்களுக்கு செய்திச் சுரங்கம். திடீர் அரசியல் பிரவேசம் அதிரடி பிரசாரம், பாலியல் தொழிலாளிகளுக்கான போராட்டம், திடீரென்று திருமண நிச்சயதார்த்தம், பிறகு அதுவும் முறிந்து போனது என கன்னட தேசத்தின் கொன்ட்ரவர்ஸி ஆர்ட்டிஸ்.
சமீபத்தில் ‘தண்டுபாளையா’ கன்னடப் படத்தில் (தமிழில் ‘கரிமேடு’) டொப்லெஸ் காட்சியில் நடித்து சினிமாவிலும் பட்டையைக் கிளப்பினார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை வந்திருந்த பூஜாகாந்தியிடம் பேசினோம்.... “பெங்காலியில் நான் ஒரு சின்ன படத்துல நடிச்சிருந்ததை பார்த்து என்னைத் தேடி கண்டு பிடிச்சு, ‘கொக்கி’யில் அறிமுகப்படுத்தினார் டைரக்டர் பிரபு சொலமன்.
என்கிட்ட என்ன திறமை இல்லைன்னு, அதுக்குப் பிறகு தமிழ் சினிமா என்னை கைவிட்டதுன்னு தெரியலை. ‘திருவண்ணாமலை’ என்ற கொமர்ஷியல் படத்துலயும் சக்சஸ் பண்ணி காண்பிச்சேன் அதுக்கு பிறகும் வாய்ப்பு வரலை. அதுக்காக சோர்ந்து போயிட முடியுமா என்ன? உடனே கன்னடத்துல முயற்சி பண்ணினேன். ‘முங்காருமலே’ படம் பெரிய ஹிட்டாச்சு. இப்ப 40 படத்தை தாண்டிட்டேன். தெலுங்கு, மலையாளம், இந்தியிலயும் நடிச்சிட்டேன்.
ரிலீசான ‘தண்டுபாளையா’ படம், என்னோட இன்னொரு பரிமாணத்தை காட்டியது. நான் வெறும் கிளாமர் நடிகை இல்லை. படத்துல ஏத்துக்கிட்ட கெரக்டருக்காக உயிரையும் கொடுப்பேன்னு அதுல நிரூபிச்சேன். கன்னட பீல்டில், நான் சரியான துணிச்சல்காரின்னு எனக்கு ஒரு இமேஜ் இருக்கு. அதனால்தான் இயக்குநர் சீனிவாசராஜு, ‘தண்டு பாளையா’ கதையை என்கிட்ட தைரியமா சொன்னார். வேறொரு நடிகைகிட்ட இந்த கதையை சொல்றதுக்கு ரொம்ப தைரியம் வேணும்.
படத்துல, சீனுக்கு சீன் பீடி குடிக்கணும். புருஷனுக்கு எதிர்லயே இன்னொருத்தன் கூட அப்படி இப்படின்னு இருக்கணும். சாராயம் குடிக்கணும். சாராயத்தை பத்து பேர் என் மேல் ஊத்தும் போது, சந்தோஷமா போஸ் கொடுக்கணும். மனசுல பயமே இல்லாம ஒருத்தன் கழுத்தை அறுக்கணும். நடிப்புன்னு இருந்தாலும், இந்த கெரக்டரில் நடிக்கிறதுக்கு என்னை விட்டா யார் இருக்காங்க, சொல்லுங்க? அந்தப் படம் தமிழில் ‘கரிமேடு’ பெயரில் வந்திருக்கு.
இனிமேலாவது என்னோட திறமையை புரிஞ்சிகிட்டு தமிழ் படத்தில் வாய்ப்பு தருவாங்கன்னு நினைக்கிறேன் என்கிறார் நம்பிக்கையுடன் பூஜா காந்தி. திடீர்னு அரசியல் பிரவேசம்? திடீர்னு எல்லாம் கிடையாது.
நான் ரொம்ப நாள் யோசிச்சு எடுத்த முடிவு அது. பாலியல் தொழிலாளிகள், எய்ட்ஸ் நோயாளிகளின் மறு வாழ்வுக்காக என்னால் முடிஞ்ச சில காரியங்களை செய்றேன். இந்த பணியை அதிகப்படுத்தவும், மக்களுக்கு சேவை செய்யவும் அரசியல் ரொம்ப முக்கியம்னு நினைச்சேன். அதனால் சேர்ந்தேன்.
‘தண்டுபாளையா’ லேடி தாதா கெரக்டர், உங்க அரசியல் இமேஜை பாதிக்காதா? சினிமா வேற நிஜம் வேறன்னு ரசிகர்களுக்கு நல்லாவே தெரியும். அதனால் நிஜத்தில் நான் எப்படிப்பட்டவள்ளு ரொம்ப நல்லாவே தெரிஞ்சு வெச்சிருப்பாங்க.
முதல் தேர்தலில் ஜெயிக்கலையே? தேர்தல் என்பது அரசியலில் ஒரு பகுதிதான். அதுவே முடிவு அல்ல. வெற்றி, தோல்வி பற்றி எல்லாம் நான் யோசிக்க மாட்டேன். என்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு சேவை செய்யணும். அதுதான் முக்கியம்.

No comments:

Post a Comment