Wednesday, June 19, 2013

காதலிக்காக வேடம் மாறும் ஹீரோ

இயக்குனர் ஆர். ஜெயகாந்தன் கூறியது:- காதலை மையமாக வைத்து உருவாகும் படம் விருதாளம் பட்டு. உயிருக்கு உயிராக காதலிக்கும் ஜோடியை பிரித்து அப் பெண்ணை மணக்க திட்டமிடுகிறான் தாய் மாமன்.
காதலனை கடத்திச் சென்று அடித்து உதைத்து இறந்துவிட்டான் என நினைத்து ரயில் தண்டவாளத்தில் வீசுகிறான். உயிருக்காக போராடிய காதலனை திருநங்கைகள் காப்பாற்றி தங்களைப் போலவே வேடம் அணியச் செய்து காதலியுடன் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் என்பதே கதை. ‘வசூல்’, ‘வேடப்பன்’, ‘காதல் பயணம்’ போன்ற படங்களில் நடித்த ஹேமந்த் குமார் ஹீரோ.
சானியா ஸ்ரீவஸ்தவா ஹீரோயின். இசை ராம்ஜி. ஒளிப்பதிவு எஸ். வெங்கட். தயாரிப்பு எம். கனகராஜ், கே. எம். வெங்கடாஜலபதி, நடன கலைஞராக பணியாற்றிய நான், இசை அமைப்பாளர் சவுந்தர்யன், உதவி இயக்குனர் செந்தமிழன் ஆகியோரிடம் உதவியாளராகவும் பணியாற்றி உள்ளேன்.

No comments:

Post a Comment