
கணவரோட தம்பிதான் வண்டியை ஓட்டுச்சு. கோவிலாச்சேரில எதிர்ல வந்த கவர்மென்ட்டு பஸ் மோதிடுச்சு. கணவரோட தம்பி ஸ்பாட்லயே இறந்துடுச்சு. என் வீட்டுக்காரருக்கு எந்த அடியும் இல்லை. எனக்கு மண்டை, நெத்தியில பயங்கரமான அடி.... மயக்கமாயிட்டேன்.
கண் விழிச்சுப் பார்த்த பிறகுதான் நடந்த எல்லாம் தெரியும். அத்தனை சோகத்துலேயும் என கவலையெல்லாம் ‘என்னால மறுபடி பழையபடி பாட முடியுமாங்கிறதா இருந்தது. ‘இவங்களை சங்கீதம் இருக்கிற மாதிரியான சூழல்லயே வச்சிருங்கன்னு டாக்டருங்க சொன்னாங்க.
நிறைய பாட்டு கேட்டேன்.... கச்சேரிகளுக்குப் போனேன்.... என் நம்பிக்கை வீணாகலை. பூரணமா குணமாகி, மறுபடி பாட ஆரம்பிச்சேன். புருஷனைப் பறிகொடுத்துட்டு நின்ன என் கணவரோட தம்பி மனைவிக்கு மறுமணம் செய்து வச்சிட்டேன்.
உங்க கணவர், குழந்தைங்க பத்தி சொல்லுங்களேன்.
“கணவர் குமார்... ஆட்டக்கலைஞர். அவர் என்னைக் காதலிச்சதே, என் இசைக்காகத்தான். என்னோட இந்த வளர்ச்சிக்குப் பின்னணியில் நிற்கிறவர் அவர்தான்.
19 வயசுலயே எனக்குக் கல்யாணமாயிடுச்சு. மகள் மோகனா, பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறா. மகன் அறிவழகன், பிளஸ் ஒன் படிக்கிறான். பொண்ணு அப்படியே அச்சு அசலா என் குரல்லயே பாடுவா.
கர்நாடக சங்கீதம் கத்துக்கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். என் கணவருக்கு விருப்பமில்லை. நமக்குத் தெரியாததை ஏன் அவங்களுக்கு சொல்லித் தரணும்னு கிராமிய இசையைப் படிக்க ஊக்கப்படுத்திட்டிருக்கார்....
சல்மா: யாரோட மியூசிக்ல பாடணும்னு உங்களுக்கு ஆசை?
‘கடவுள் புண்ணியத்துல எல்லா ஜாம்பவான்கள் இசையிலேயும் பாட வாய்ப்புகள் வந்திட்டிருக்கு. வித்யாசாகர் சார் அறிமுகப்படுத்தி வச்சார். அடுத்து ‘மயிலு படத்துல இசைஞானி இசையில பாடற மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைச்சது.
பாட்டைக் கேட்டுட்டு ‘சூப்பர்.... தேங்க் யூன்னு அவர் பாராட்டினது ஆஸ்கார் அவார்டு வாங்கினதுக்கு சமம். அடுத்து ‘ராவணன்’ படத்துல ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்ல பாடிட்டேன்.
யார் கூட சேர்ந்து பாடணும்னு ஆசை?
“எஸ்.பி.பி. சார் கூடவும், யேசுதாஸ் சார் கூடவும் பாடணுங்கிறதுதான் ரொம்ப நாள் கனவு!
No comments:
Post a Comment