Friday, June 28, 2013

சீனியர் நடிகர்களுடன் ஜோடி சேர மறுக்கும்

தற்போது தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாகியிருப்பவர் காஜல் அகர்வால். அதிலும் தமிழில் ஹன்சிகா அதிகப்படியான படங்களில் நடித்த போதும், விஜய், கார்த்தி என பிரபல்யமான ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடித்து வரும் காஜலே தற்போது முதல்தர நடிகையாக கருதப்படுகிறார். அதோடு, என்னதான் பெரிய பட்ஜெட் படங்கள் தன்னைத் தேடி வந்தாலும் அதில் பணியாற்றும் ஹீரோக்கள் விசயத்தில் கவனமாக இருக்கிறார் காஜல்.
குறிப்பாக அதிக வயது கொண்ட ஹீரோக்களின் படங்களை அவர் ஏற்றுக்கொள்வதே இல்லையாம். தெலுங்கில்கூட நாகர்ஜூனாவுடன் நடிக்க வந்த ஒரு படத்தை நாசுக்காக தவிர்த்து விட்டாராம். கூலியை கடுமையாக உயர்த்தின போதும் அம்மணி மசியவில்லையாம். அதன்பிறகுதான் அந்த வேடத்துக்கு ஸ்ரேயாவை கமிட் பண்ணியிருக்கிறார்கள்.
இப்படியொரு மனநிலையில் இருப்பதால்தான் தமிழில் கமலுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த போதும் கூடு கால்சீட் பிரச்சினையை காரணம் காட்டி அவர் தவிர்த்திருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும், இதை வெளிப்படையாக சொல்ல விரும்பாத காஜல், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் எப்போதும் நான் யூத் ஹீரோக்களுடனேயே நடிக்க விரும்புகிறேன். அப்போதுதான் நானும் என்னை யூத்தாக பீல் பண்ணிக்கொள்ள முடியும் என்று தெரிவித்த காஜல் அகர்வால் கடந்த சில தினங்களுக்கு முன்புதான்தனது 28 வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment