
ஜனனி அய்யர் ‘அவன் இவன்’ ‘பாகன்’ படங்களில் நடித்தவர். அதர்வா பழைய ‘நடிகர் முரளி’யின் மகன் ஆவார். பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி படங்களில் நடித்துள்ளார்.
ஜனனி அய்யரும் அதர்வாவும் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
ஆனாலும் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமானார்கள். நட்பாக பழகினார்கள். தற்போது அது காதலாக மலர்ந்துள்ளது. ‘முப்பொழுதும் உன் கற்பனைகள் படப்பிடிப்பிலேயே இருவரும் அடிக்கடி சந்தித்து காதல் வளர்த்தார்களாம். ஆனாலும் அவர்கள் தொடர்பு பற்றிய விஷயங்கள் வெளியாகவில்லை. ரகசியமாகவே வைத்து இருந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜனனி அய்யரிடம் இது குறித்து கேட்ட போது மறுத்தார். அதர்வா என் நண்பர். பொது நிகழ்ச்சிகளில் சில மணி நேரம் தான் சந்தித்து இருக்கிறோம். எங்களுக்கு திருமணம் நடக்கப்போவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார்.
No comments:
Post a Comment