
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே- வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே (மலர்ந்தும்)
யானைப் படை கொண்டு சேனை பல வென்று
வாழப் பிறந்தாயடா புவியாளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணங்கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணங்கொண்டு இளமை வழி கண்டு
அத்தை மகளை மணங்கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலைபேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா- இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம் ம்ம் ஹம்ம்ம்
அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ
அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ
பாடியவர்கள்: டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கண்ணதாசன்
படம்: பாசமலர்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
No comments:
Post a Comment