
தமிழில் மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் சதா
‘ஜெயம்’ படத்தில் கிராமத்து பெண்ணாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் சதா. அடுத்து
நடித்த ‘வர்ணஜாலம்’, ‘அந்நியன்’ உள்ளிட்ட படங்களில் கிளாமர் இமேஜிக்கு மாறினார். இது
அவருக்கு கைகொடுக்கவில்லை. 2011 ஆம் ஆண்டு ‘புலிவேசம்’ படத்தில் நடித்தார். அதன்
பிறகு மீண்டும் தமிழில் வாய்ப்பு என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.
இந்நிலையில் சுந்தர் சி இயக்கும் ‘மதகஜ ராஜா’ படத்தில் குத்துபாட்டுக்கு ஆட அழைப்பு
வந்தது. இதை பயன்படுத்தி மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம் என்ற எண்ணத்தில்
உடனடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதுபற்றி சதா கூறும் போது “ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று சுந்தர் சி கேட்டதும்
ஓகே சொல்லிவிட்டேன். பாடலை பார்த்த பிறகு சுந்தர் சி மீண்டும் என்னை அழைத்து கவுரவ
வேடத்திலும் நடிக்க வேண்டும் என்றார். அதை ஏற்று நடித்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு
தமிழில் நடிப்பது சந்தோஷம். தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு, கன்னட
படங்களில் நடித்தேன். அவை வெற்றி பெறாததால் பொருத்தமான வேடங்கள் அமையவில்லை. இப்போது
3 தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இதில் 2 படங்களில் நடிக்க
உள்ளேன்” என்றார்.
No comments:
Post a Comment