Wednesday, April 17, 2013

நெருக்கமாக நடிக்க தயக்கம் இல்லை

பிரியா ஆனந்த்
‘முத்தம் கொடுத்து நடிக்க எனக்கொன்றும் தயக்கம் கிடையாது’ என்றார் பிரியா ஆனந்த். ‘இங்லிஷ் விங்லிஷ்’, ‘நூற்றெண்பது’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிரியா ஆனந்த். அவர் கூறியது, அமெரிக்காவில் பெற்றோருடன் இருந்த போதே நிறைய சினிமா பார்ப்பேன். சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை வந்தேன். ஷங்கா இயக்கிய படங்களை பார்ப்பேன். ஒவ்வொரு படத்திலும் ஒரே மெசேஜ் சொல்வார். அவரிடம் உதவி இயக்குனராக சேர விரும்பினேன். இந்நிலையில் மொடலிங் செய்யும் வாய்ப்பு வந்தது. அதைத் தொடர்ந்து நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
ஒருமுறை ஷங்கரை பார்த்த போது என் விருப்பத்தை கூறினேன். அவர் பலமாக சிரித்தார். தற்போது நடிகையாக எனது திரையுலக வாழ்க்கையை தொடர்கிறேன். சினிமாவில் எனக்கு பின்புலம் யாரும் கிடையாது. என்னுடைய திறமையை மட்டுமே நம்புகிறேன். நெருக்கமான காட்சிகளில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள்.
ஏற்கனவே ‘நூற்றெண்பது’, ‘கோ அன்ட்டே கோட்டி’ படங்களில் ஹீரோவுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து நடித்திருக்கிறேன். நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த காட்சிகளில் ஆபாசமாக நடித்ததாக யாரும் என் மீதும் குற்றம் சொல்லவில்லை. காட்சிக்கு தேவையென்றால் முத்தம் கொடுத்தும், நெருக்கமாகவும் நடிக்க தயங்கமாட்டேன்’ என்றார்.

No comments:

Post a Comment