
ரஜpனியின் ~லக.. லக..' மகத்துவம்
‘சந்திரமுகி’யில் சிம்ரன் நடிப்பதாக இருந்த சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடித்தார். இதற்கான காரணத்தை ‘சந்திரமுகி’ அனுபவங்கள் பற்றி டைரக்டர் பி. வாசு தெரிவிக்கும்போது குறிப்பிட்டிருந்தார். அதில்...
‘சந்திரமுகி’யில் ரஜினி சார் நடிக்கிறார் என்றதும், அடுத்து 2 விஷயங்கள் முக்கியமாகப்பட்டது. ஒன்று: கதாநாயகி, அடுத்தது இசை.
கன்னடத்தில் செளந்தர்யா நடித்திருந்தார். 100 சதவீதம் சந்திரமுகியாகவே மாறிப்போனார். செளந்தர்யா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் ‘சந்திரமுகி’ கேரக்டருக்கு வேறு ஒரு நடிகையை யோசித்திருக்கவே மாட்டோம். துரதிர்ஷ்டவசமாக அவர் விமான விபத்தில் இறந்து விட்டார்.

சிம்ரன் சிறந்த நடனக்கலைஞர். அவர் நாயகி என்று முடிவானதும் இசைக்கு என் மனதில் வந்து போனவர் வித்யாசாகர். வித்தியாசமான இசையை கதைக்கு தேவையான விதத்தில் தருபவர் என்பதால் என் விருப்பத்தில் அவர் இருந்தார். தெலுங்கில் வரும் ‘ராரா’ பாட்டு ரொம்பப் பிரபலம். அதுபற்றி வித்யாசாகரிடம் பேசியபோது, ‘அதே டியூன் வேண்டாம். நான் ஒரு டியூன் போடுகிறேன். பிடித்திருந்தால் வைத்துக்கொள்ளுங்கள்’ என்றார். அப்படி அவர் புதிதாக டியூன் போட்டு ஹிட்டானதுதான் சந்திரமுகியில் வரும் ‘ராரா’ பாட்டு.
‘சந்திரமுகி’ கேரக்டரில் நடிக்க சிம்ரன் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார். திருமணமாகி அவர் கருவுற்றிருந்த நேரம் அது. படத்தில் ‘ராரா’ பாட்டில் சந்திரமுகி குதித்துக் குதித்து சுழன்றாடியபடி நடனமாட வேண்டும். அப்படி சிம்ரன் ஆடும்போது நிச்சயம் கருவில் வளரும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்பு அதிகம்.
இதை சிம்ரனிடம் சொல்லி ‘சந்திரமுகி வாய்ப்பா? குழந்தையா?’ என்ற முடிவை அவரிடமே விட்டோம். சிம்ரனின் தாய்மையுணர்வு வென்றது. அதனால் அவர் விலகிக்கொள்ள ‘சந்திரமுகி’யாக என் மனதில் அடுத்த கணமே வந்து போனவர்தான் ஜோதிகா.
இயல்பில் நடனக் கலைஞராக இல்லாவிட்டாலும், ஜோதிகா தனது ஆர்வத்தில் அந்த சந்திரமுகி கேரக்டரோடு கலந்து போனார் என்பதே உண்மை.
ரஜினி சாரை பற்றி சொல்ல வேண்டுமானால், தனது கேரக்டர் என்னவென்று உறுதியானதுமே, அந்த கேரக்டரை தனது மனதுக்குள் ‘டிசைன்’ பண்ணத் தொடங்கிவிடுவார். சரவணன் கேரக்டர், வேட்டையன் கேரக்டர் இந்த இரண்டும் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி என்னிடம் விவாதித்துக் கொள்வார்.
இந்தப் படத்தில் ரஜினி சாருக்கே உரிய பஞ்ச் டயலாக்குகள் கிடையாது என்பதை முதலிலேயே முடிவு செய்து கொண்டோம். இருந்தாலும் படத்தில் என்னென்ன செய்யலாம் என்பதை அவர் மனதுக்குள் ‘டிசைன்’ செய்து விட்டார்.
ஒருநாள் என்னை அழைத்த ரஜினி. ‘படத்தில் வேட்டையன் வரும் போது ஏதாவது புதுமையாக இருந்தால் நல்லது’ என்றார். அதோடு நில்லாமல், ‘இப்போ நான் ஒரு சீன் பண்ணிக் காட்டுகிறேன். எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்’ என்றவர், ஒரு பத்து அடி தூரம் நடந்து போனார்.
அடுத்த கணம் அதேவேகத்தில் திரும்பினார். என்னை நெருங்கியதும் முகத்தில் ஆக்ரோஷமான பாவனையுடன் ‘லகலகலகலக’ என்று செய்து காட்டினார்.
நான் என்னையும் அறியாமல் ‘சூப்பர்’ என்றேன். என்றாலும் அவருக்கு சந்தேகம் ‘அதெப்படி உடனே ‘சூப்பர்’னு சொல்லிட்டீங்க...?’ என்று கேட்டார்.
பதிலுக்கு நான் அவரிடம் ‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னது மாதிரி’ என்று நீங்கள் முன்பு கூறிய வசனம் ரசிகர்களிடம் எப்படி ‘ரீச்’ ஆனதோ அதுமாதிரி இந்த ‘லகலகலகலக’வும் பிரபலம் ஆகும். முதலில் நான் ஒரு ரசிகனா உங்களைப் பார்க்கிறேன். பார்த்ததும் பிடித்துப் போய்விட்டது. இதையே வேட்டையனுக்கான கெட்டப்பில் நீங்கள் செய்யும் போது இன்னும் பிரமாதமாய் இருக்கும்’ என்றேன்.
இந்தப் படம் தமிழில் ரிலீஸான 14.04.2005 அன்றே தெலுங்கிலும் ‘டப்’ செய்து வெளியிடப்பட்டது. 280 நாட்கள் ஓடி பெரிய ‘ஹிட்’.
அந்த ஆண்டு தெலுங்கில் நேரடிப் படமாக வந்த தெலுங்கு ஹீரோக்கள் நடித்த படங்களைவிட இந்தப்படம் அதிகம் வசூல் செய்தது.
இந்தப் படத்தின் பெயரை சொல்லத் தெரியாத சிறுவர்கள் கூட தங்கள் பெற்றோர்களிடம் ‘லகலகலகலக படத்துக்குப் போவோம்’ என்று நச்சரிப்பு செய்து தங்கள் பெற்றோரை தியேட்டருக்கு அழைத்துப் போனதாக அறிந்த போது, ரஜினி சாரின் ‘லகலக’ மகத்துவம் தெரிந்தது.
வேட்டையன் கேரக்டருக்குள் ரஜினி சார் எப்படி ஒன்றிப்போனார் என்பது இன்னும் ஆச்சரியம். ‘லகலக’ சொல்லிவிட்டாரே தவிர, வேட்டையன் கெட்டப்பில் எப்படியிருப்பார் என்பது முடிவாகவில்லை. அதற்கும் அவரே விடையாக வந்தார். குஷால்தாஸ் கார்டனில் படப்பிடிப்பு நடந்த போது வேட்டையன் கேரக்டரை ‘ஸ்டில்’ எடுக்கலாமே என்று பேசினோம்.
‘வாசு சார்! ஒரு மணி நேரத்தில் வருகிறேன்! என்று சொல்லிவிட்டு கேரவனுக்கு போனவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் படத்தில் நீங்கள் பார்த்த அந்த வேட்டையன் ‘கெட்டப்’பில் வெளிப்பட்டார். முதலில் அவரை யாரென்றே யூனிட்டில் உள்ளவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. வெறித்தனமான பார்வையில் கம்பீரம் கலந்த வேட்டையனாக ரஜினி சாரை பார்த்த போது, என் மனதில் இருந்த வேட்டையன் என் எதிரே நிற்பதாகவே உணர்ந்தேன்.
கிளைமார்க்ஸ் காட்சியை மட்டும் தொடர்ந்து 6 இரவுகள் எடுத்தோம். எந்தவித தயக்கமும் இன்றி இரவு 9 திணிக்கு தொடங்கும் படப்பிடிப்பில் விடியக் காலை 4 மணி வரை நடித்துக் கொடுத்துவிட்டுப் போனார் ரஜினி.
மொத்தப் படத்தையும் 80 நாட்களில் எடுத்து முடித்தேன். படத்தில் நடிகர் நடிகைகள் தவிர கதவு படி, வீடு மூன்றையும் கேரக்டராக்கியதையும் ரஜினி சார் பாராட்டினார்.
இந்த படத்துக்கான காட்சிகள் சென்னை குஷால்தாஸ் கார்டனில் படமாக்கப்பட்டது போல தெரியும். உண்மையில் வீட்டின் படிகள் மைசூரிலும், கதவுகள் பெங்களூரிலும், வேட்டையன் அறை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், ‘சந்திரமுகி’ ஜன்னல் வழியாக பார்க்கிற காட்சி பெங்களூரில் இந்திரா கார்டனிலும் படமாக்கப்பட்டது. இந்தக் கதையின் ஒவ்வொரு காட்சியுமே ‘ஆப்த மித்ரா’ மூலம் எனக்குள் பதிவாகியிருந்ததால், குழப்பம் எதுவும் இன்றி இந்த மாதிரியான காட்சிகளை கையாள முடிந்தது.
படத்தின் நூறாவது நாளில் இருந்து 200வது நாள், 300வது நாள் என தொடர்ந்து ரஜினி சார் என்னிடம் போனில் வாழ்த்து தெரிவித்து விடுவார். படம் 700வது நாள் வந்த போது என்னிடம் பேசி வாழ்த்தியவர், ‘நான் இப்போது ராகவேந்திரா கோவிலில் இருந்து உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறேன்’ என்றார். கோவிலுக்கு வந்த இடத்திலும் மறக்காமல் வாழ்த்துகிற அந்த பண்பு என்னை ரொம்ப நேரம் பரவசத்தில் வைத்திருந்தது.
படம் ‘பிரிவியூ’ வின்போது ரஜினி சார் மனைவி லதாவுடன் வந்திருந்தார். படம் முடிந்து போகும் போது ‘வரேன்’ என்று மட்டும் சொல்லி கை கொடுத்துவிட்டுப் போய்விட்டார். மறுநாள் என்னை வீட்டுக்கு அழைத்தவர், நான் போனதும் உற்சாகமாய் வரவேற்றார். அப்போது அவர் என்னிடம், ‘எனது ஒவ்வொரு படத்தையும் என்னுடன் இருந்து லதா (மனைவி) பார்ப்பார்.
படம் அவருக்கு பிடித்திருந்தால் படம் முடியும் போது எனது வலது கை மணிக்கட்டை அழுத்தமாக ஒரு பிடி பிடிப்பார். அப்போதே அவருக்கு படம் பிடித்து விட்டதை உணர்ந்து கொள்வேன். படம் ரொம்ப பிடித்திருந்தால் இந்த ‘பிடி’ அழுத்தமாக இருக்கும். நேற்று ‘சந்திரமுகி’ பார்த்து முடித்த பிறகு அவரிடம் ஒரு சின்ன ‘ரியாக்ஷன்’ கூட இல்லை. வீட்டுக்கு வந்த பிறகுதான் அதற்கான காரணத்தை கேட்டேன்.
அதற்கு லதா என்ன சொன்னார் தெரியுமா? ‘படம் முடிந்த போது ஏற்பட்ட பிரமிப்பில் இருந்து நான் விடுபடவே ரொம்ப நேரம் ஆயிற்று. பிறகு எப்போது உங்கள் கையை அழுத்தி படம் பற்றிய ரிசல்ட்டை சொல்றது? இப்ப சொல்றேன்.
இதுமாதிரி படம் இதுவரைக்கும் நீங்க பண்ணலை. அந்த அளவுக்கு அற்புதமான படம். அதைக் கேட்ட பிறகுதான் எனக்கு உயிரே வந்தது. உடனே உங்களை பாராட்ட வேண்டும் என்றே நேரில் வரச்சொன்னேன்’ என்றார் ரஜினி. எம்.கே. தியாகராஜ பாகவதரின் 3 தீபாவளி கண்ட ‘ஹரிதாஸ்’ பட சாதனை¨யை சந்திரமுகி முறியடிக்கும் என்கிறார்கள். லதா, ரஜினிகாந்தின் பிரமிப்பை படம் பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் அடைந்ததால்தான் இந்த சாதனையை ‘சந்திரமுகி’ படைக்கிறது என பி. வாசு கூறினார்.
No comments:
Post a Comment