
நடிப்பு என்ற பெயரில் இவர்களின் இப்படிப்பட்ட அதிரடிக் கவர்ச்சி ஆபாசமாக இருப்பதால் இதைப் பார்க்கும் இளைஞர்களை சமூகத்தில் தவறான திசைக்குத் திருப்பும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கும்' என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் மீடியாக்களில் வெளியாகிவிடவே, பிரியாமணியை சந்தித்த செய்தியாளர்கள் பலர், 'நீங்க லேட்டஸ்ட்டாக நடிக்கும் படத்தின் ஸ்டில்ஸ்கள் எங்கே கிடைக்கும்?' என்று விசாரித்திருக்கிறார்கள் உடனே பொங்கிய பிரியாமணி 'சண்டி' படத்தில் நான் ஆபாச உடை அணிந்து நடிப்பதாக புகார் கொடுத்தவருக்கு எப்படி தெரியும்? இன்னும் இதன் ஷ¥ட்டிங்கே தொடங்கவில்லை.
இந்த பட ஷ¥ட்டிங்கின் போது ரிலாக்ஸ்ட்டாக நான் இருந்தபோது யாரோ எடுத்த படங்கள் வெளியே உலாவின அதை பார்த்துவிட்டு இந்த புகார் கூறப்பட்டுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறது. படத்தில் ஆபாச உடை அணிந்திருக்கிறேன் என்று கூறுபவர் அதற்கான ஆதாரம் எதையாவது காட்ட முடியுமா? படத்தில் இடம்பெறும் காட்சியில்தான் ஆபாசமாக இருக்கக்கூடாது திருமண காட்சியில் ஒருவேளை நான் நீச்சல் உடை அணிந்திருந்தால் ஆபாசம்தான். ஆனா இப்படத்தில் திருமண காட்சிக்காக சேலைதான் உடுத்தி நடிக்கிறேன்.
இது ஆபாசமா? தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் யாரும் இதுவரை நான் ஆபாச உடை அணிந்தேன் என்று புகார் கூறியதில்லை. உடை அணிவதற்கான எந்த விதிமுறையையும் நான் மீறியதில்லை. சில விளம்பர படங்கள் உண்மையிலேயே ஆபாசமாக இருக்கிறது. அதுபோன்ற காட்சிகள் மீது ஆட்சேபம் தெரிவித்தால் நியாயமிருக்கும்' என்று பொரிந்து தள்ளிவிட்டார். யார் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று படம் வரட்டும் பார்க்கலாம்.
No comments:
Post a Comment