Tuesday, March 26, 2013

பத்மபூஷன் விருதை ஜானகி புறக்கணித்தது தவறு

ஜேசுதாஸ்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு பின்னணி பாடகி எஸ். ஜானகிக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது. ‘உரிய காலத்தில் தனக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இது காலம் தாழ்த்திய விருது’ என்று அதனை வாங்க மறுத்துவிட்டார். இதுகுறித்து தற்போது பின்னணி பாடகர் ஜேசுதாஸ் கருத்து கூறியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது :-
ஜனாகி அம்மா மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. சின்ன சின்ன ஆட்களுக்கு முன்னாடியே கொடுத்துட்டு நமக்கு தாமதமா தர்றாங்களே என்கிற அவுங்க கோபத்துல நியாயம் இருக்கு. ஆனால் அதைவெளிக்காட்டிக்காம விருதை வாங்கியிருக்கணும். ஏன்னா பெரிய ராஜ்யத்திலேருந்து கிடைக்கும் கெளரவமான விருது.
நான் 7 முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கு அதோட விதிமுறைகள் தெரியும் விருதுக்கு தேர்வான பிறகு உங்களுக்கு இதை வாங்கிக்க சம்மதமான்னு கேட்பாங்க அப்படி ஜனாகி அம்மாவிட்டேயும் நிச்சயம் கேட்டிருப்பாங்க அப்பவே மறுத்திருக்கலாம். நாம் பாட வரும்போது அவார்ட் கொடுப்பானங்கன்னு பாட வரலை தட்சிணாமூர்த்தி சாமிக்கு 94 வயசாகுது. இசையில் பெரிய ஜாம்பவான். மேதை அவருக்கு ஒரு அவார்ட்கூட கொடுக்கல அதற்காக அவரது திறமையை யாராவது குறைச்சி மதிப்பிட முடியுமா.
இவ்வாற ஜேசுதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment