ரஜினிகாந்த்தின் மனைவி லதா, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது (1980) ரஜனியைப் பேட்டி காண வந்தார். அவரிடம் மனதைப் பரிகொடுத்த ரஜினி ‘உன்னைப் போல் பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.

தினம் தினம் இப்படி நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து குவியும். ரஜினியுடன் நடித்த நடிகைகள் சிலரும், ரஜினியை மணக்க விரும்பினர். ஆனால் ரஜினியின் மனதில் காதல் மலரவில்லை. அவர் மனதை எந்தப் பெண்ணும் கவரவில்லை.
ரஜினி 30வது வயதில் அடியெடுத்து வைத்த போது, மன்மதனின் மலர்க்கணை அவர் மீது பாய்ந்தது. 1980ம்ஆண்டு மத்தியில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா நிறுவனத்தின் தில்லு முல்லு படம் உருவாகிக் கொண்டிருந்தது.
இந்தப்படத்தின் படிப்பிடிப்பு நடிகை செளகார் ஜானகியின் வீட்டில் நடந்து கொண்டிருந்த போது எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு வந்தனர். அவர்களில் லதாவும் ஒருவர். கல்லூரியின் சிறப்பிதழுக்கு பேட்டி காண வந்திருப்பதாக ரஜினியிடம் கூறினார். பேட்டிக்கு ரஜினி சம்மதித்தார்.
லதா தமிழிலும், ஆங்கிலத்திலும் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார். அவற்றுக்கெல்லாம் சளைக்காமல் தன் பாணியில் பதில் சொன்னார் ரஜினி. லதாவின் அழகும், புத்திசாலித்தனமும் ரஜினியைக் கவர்ந்தன. அந்த நிமிடமே ரஜினியின் இதயத்தில் லதா குடியேறிவிட்டார்.

அதாவது தன் காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார். நடிகர் வை. ஜி. மகேந்திரனின் மனைவியின் தங்கைதான் லதா. மகேந்திரனும் ரஜினியும் நண்பர்கள். எனவே லதாவைப் பார்த்ததற்கு மறுநாள் மகேந்திரனிடம் நான் லதாவை மணந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று ரஜினி கூறினார்.
ரஜினி யாரைக் குறிப்பிடுகிறார் என்பது மகேந்திரனுக்கு சட்டென்று புரியவில்லை. எம். ஜி. ஆருடன் படங்களில் நடித்துவரும் லதாவைக் குறிப்பிடுகிறாரோ என்று நினைத்தார். என்னப்பா லதா உனக்கு சீனியர் நடிகை. எம். ஜி. ஆரோடு எல்லாம் நடித்தவர். அவரையா நீ காதலிக்கிறாய்? என்று கேட்டார்.
நான் கூறுவது நடிகை லதாவை அல்ல. உன் மைத்துனி லதாவைத்தான் கூறுகிறேன் என்றார் ரஜினி. ஒரு நிமிடம் திகைத்து நின்ற மகேந்திரன், சரி இது பற்றி என் குடும்பத்தாருடன் பேசுகிறேன் நல்லது நடக்கும் என்றார்.
லதாவை ரஜனி மணக்க விரும்புவதை தன் மனைவியிடமும், குடும்பத்து பெரியவர்களிடமும் மகேந்திரன் தெரிவித்தார். எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி லதாவும் சம்மதம் தெரிவித்தார். ஆனாலும் இதை ரகசியமாக வைத்திருந்தார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்துக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தியை ‘தினத்தந்தி’ வெளியிட்டது. மணமகள் லதா என்பதையும் செய்தியில் குறிப்பிட்டு இருந்தது.
இச்செய்தி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ‘இது உண்மையா?’ என்று கேட்டு ரஜினிக்கு ஏராளமான போன்கள் வந்தன. கடிதங்கள் குவிந்தன. திரை உலகில் இதுபற்றித்தான் பேச்சு. ரஜினி எதுவும் பேசாமல் மெளனம் காத்தார்.
No comments:
Post a Comment