Sunday, March 24, 2013

சித்தார்த் சமந்தா தரிசனத்தால் பரபரப்பு

தமிழில் நான் ஈ படத்தில் நடித்தவர் சமந்தா. அதேபோல் 'போய்ஸ்' படம்மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இருவரும் கடந்த சனிக்கிழமை பகல் 11 மணியளவில் ஸ்ரீ காள்ஹஸ்தி சிவன் கோவிலுக்கு தங்களின் பெற்றோருடன் ஜோடியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு, கோவில் அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகளைச் செய்தனர். இருவரும் ராகு- கேது பூஜையில் ஜோடியாக அமர்ந்து பூஜை செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு, பிரசாதம், சுவாமி படம் ஆகியவை வழங்கப்பட்டன. பொன்னாடை போர்த்தி இருவரும் கெளரவிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தனர். அந்த நேரத்தில் நடிகர் சித்தார்த்தின் தந்தை சூர்யபிரகாசுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு கோவில் வளாகத்திலேயே மயக்கம் அடைந்தார்.
உடனே அங்கிருந்த அர்ச்சகர்கள் அவரை மீட்டு, முதலுதவி செய்தனர். பின்னர் கோவில் அம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திருப்பதி தனியார் மருத்துவமனைக்கு சூரியபிரகாஷ் அனுப்பி வைக்கப்பட்டார்.
கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சித்தார்த் நடிகை சமந்தாவை புகைப்பட கலைஞர்கள், நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை நடிகர் சித்தார்த் கடுமையாக சாடினார்.
ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு காதல் சம்பந்தமாக சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த நடிகை சமந்தா 'நான் ஒரு இளம் நடிகரை காதலிக்கிறேன். ஆனால் அவரின் பெயரைச் சொல்ல மாட்டேன் என்று கூறியிருந்தார். அந்தப் போட்டியில் அவரின் காதல் விஷயம் வெளியே பரவத் தொடங்கியது.
இதுபற்றி ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வட்டாரங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகை சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் ஒரே நேரத்தில் பெற்றோருடன் ஜோடியாக வந்து ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தது. ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment