Tuesday, March 12, 2013

ஜமுனாராணியால் இப்படியும் பாட முடியுமா? என்று கேட்க வைத்த பாடல்

1952 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டுவரை மார்டன் தியேட்டர்களில் மாதச் சம்பளத்துக்கு பாடுவதற்கு ஜமுனாராணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மார்டன் தியேட்டர்களில் இருந்து அவர் வெளியேறியதும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தவர் கவியரசு கண்ணதாசன், பி. சுசீலா, ஜிக்கி, பி. லீலா ஆகியோருடன் ஜமுனா ராணியின் குரலும் ஒலிக்க கவியரசு முக்கிய காரணியாக விளங்கினார்.
1954 ஆம் ஆண்டு வெளியான குலேபகாவலி படத்தின் ஆசையும் நேசமும் என்ற பாடல் ஜமுனா ராணியால் இப்படியும் பாட முடியுமா எனக் கேட்க வைத்தது. போதையில் தள்ளாடியபடி விக்கலுடன் ஹம்மிங்கும் சேர்ந்த பாடல் அது.
அந்தப் பாடலையார் பாடுவது என்ற விவாதம் நடைபெற்ற போது பட்டென ஜமுனாராணியை சிபார்சு செய்தார் கவியரசு.
அன்பு எங்கே என்ற படத்தில் ஜமுனாராணி பாடிய மேலே பறக்கும் ராக்கெட்டு, மின்னல் பூச்சி ஜாக்கெட்டு ஆளை பயக்கும் பேஸ்கட்டு அதுதான் இப்போ மார்க்கட்டு என்ற ஆங்கிலமும் தமிழும் கலந்த வரிகள் முடிந்ததும் மாமா என ஜமுனாராணியின் குரல் அந்தக் காலத்தில் அனைவரையும் மயங்க வைத்தது.

No comments:

Post a Comment