Tuesday, March 26, 2013

திருமணத்திற்கு முதல் நாளே திருமண போட்டோ கொடுத்த ரஜனி

ரஜனிகாந்த் திருமணத்துக்கு முதல் நாளே திருமண போட்டோவை கொடுத்தார். திருமணத்துக்கு ஒரு நாள் முன்பு பத்திரிகையாளர்களை தன் வீட்டுக்கே அழைத்தார். ‘நாளைக்கு காலைல திருப்பதியில் எனக்கும் லதாவுக்கும் திருமணம். இது காதல் திருமணம். ஆனால் யாரும் வர வேண்டாம்....’ என்று கூறிவிட்டு, தானும் லதாவும் திருமணக் கோலத்தில் இருக்கும் படத்தைக் கொடுத்தார்.
ஆடம்பர திருமணம் வேண்டாம்.... தனது பிறந்த நாளைக் கூட பெரிதாகக் கொண்டாட விரும்பாதவர் ரஜினி. லதாவை காதலித்து, கைப்பிடிக்க முடிவு செய்தபோது, அந்தத் திருமணம் மிக எளிமையாக, பெரிய கூட்டம் ஏதுமில்லாமல் நடக்க வேண்டும் என்றே விரும்பினார்.
எனவே திருப்பதியில் திருமணத்தை வைத்திருந்தார். கணவருக்காக எதையும் செய்யும் லதா.... கணவர் ரஜினி உடல்நலம் குன்றியிருந்தபோது, லதா ரஜினி செய்தவை அவரது மன உறுதி மற்றும் நெருக்கடியை சமாளிக்கும் திறமையைக் காட்டியது. கணவர் உடல் நலம் தேறி வந்ததும் திருப்பதிக்குப் போய் முடி காணிக்கை செலுத்தியது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment