
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உருக்கமான பாடலை ஜமுனாராணியால் பாட முடியாது. கவர்ச்சிப் பாடல்களுக்குத்தான் அவரின் குரல் பொருந்தும் என எம்.எஸ்.வி. அடித்துக் கூறினார்.
மகா தேவி படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர், நாயகி சாவித்திரி, சாவித்திரிக்கான அப்பாடல் மிகவும் உருக்கமாக எழுதப்பட்டது. அனைவரும் ஒப்புக்கொண்டாலும் கதாநாயகன் எம்.ஜி.ஆரும் ஒப்புதலளிக்க வேண்டும்.
\இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டே ஜமுனாராணி வேண்டாம் என்றார் எம்.எஸ். விஸ்வநாதன். ஆனால் கவியரசு விடாப்பிடியாக இருந்தார். இந்தக் குரல் சரிவரவில்லை என்றால் கால் iட் செலவை நான் தருகிறேன் என்றார். அந்தப் பாடலைப் பாட ஜமுனாராணிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
ஒலிப்பதிவு ஒத்திகையின் போது மெல்லிசை மன்னர் வெளியேறிவிட்டார். அவருடைய இணை பிரியா நண்பர் ராமமூர்த்தி பாடலைப் பற்றி ஜமுனாராணிக்கு விளக்கம் கொடுத்தார்., இந்தப் பாட்டை உணர்ச்சிபூர்வமாக உருக்கமாகப் பாடினால் தான் உனக்கு வேறு பாடல்களும் கிடைக்கும். இல்லையென்றால் உன்னை செக்ஸ் பாடகியாகத்தான் வைத்திருப்பார்கள்.
இது என்னுடைய மானப்பிரச்சினை. நன்றாகப் பாடு என கவியரசர் ஆலோசனை கூறினார். ஜமுனாராணி பாடிய பாடலைக் கேட்ட எம்.எஸ். விஸ்வநாதன் திகைத்து விட்டார். பாடல் மனதைப் பிசைந்தது. உன்னை தப்பா நினைச்சிட்டோம்மா நன்றாக பாடியிருக்கிறாய். ஆனா வார்த்தை இன்னும் சுத்தமாக இருக்க வேண்டும் எனக் கூறினார் எம்.எஸ். விஸ்வநாதன்.
No comments:
Post a Comment