Tuesday, January 1, 2013

கவிஞர் கண்ணதாசனை புகழ்கிறார் புரட்சித் தலைவர்

கவியரசர் கண்ணதாசனைப் பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கூறியுள்ள கருத்துக்களில் சிலவற்றைத்தான் இங்கே காணப்போகிறோம்.
“காலக்காற்ற இந்த மாபெரும் கவிஞரை எங்கெல்லாமோ அலைக்கழித்தது. எந்தத் துறை முகத்திற்கு இந்தப் படகு பயணப் பட்டாலும், அங்கெல்லாம் இது சீரோடும், சிறப்போடுமே போற்றப்பட்டது. அவரிடமிருந்த தமிழ்தான் அதற்குக் காரணம்.
மற்றவர்கள் கவிதை எழுதினார்கள். கவியரசு கவிதையாகவே வாழ்ந்தார்.
‘கவிஞர்’ என்றால் அது கண்ணதாசன் ஒருவரைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்கு அவருக்குப் புகழ் சேர்ந்தது.
பாரதி - பாரதிதாசனுக்குப் பிறகு தமிழுக்கு அவர்தான் என்பது நிலைமை அவர் காலத்தில் வாழ்ந்தது தமிழர்களாகிய நமக்குப் பெருமை. பல கவிஞர்கள் வாழ்க்கைப் பயணத்தை முடித்த பிறகே வாழ்த்தப்பட்டார்கள்.
கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த போதே வரலாறாகிவிட்டார். மரணத்திற்குப் பிறகு அவருக்குச் சூட்டப் போகிற கீர்த்தி கீரிடத்தை, வாழ்ந்த போதே பார்க்கக் கொடுத்து வைத்த கவிஞர்களில் அவரே தலையானவர்.
மற்றவர்கள் சரித்திரம் படித்தவர்கள். கவிஞர் சரித்திரமே படைத்தார். பள்ளியிறுதி பார்க்காத அவர், பழந்தமிழ்ச் சாற்றைப் பருகி, புதுத் தமிழ் பொழிய வாழ்ந்தார் என்பது அதிசயமாகவே இருக்கிறது.
அவர் சொன்னால் கவிதை. அவரை சொன்னதெல்லாம் கவிதை என்று வாழ்ந்தவர் அவர்.
இலக்கியம் படைக்க முடிந்தவர்களால், எளிதான் கவிதைகளைப் படைக்க முடிந்ததில்லை. இந்த இலக்கியவேலி, கவியரசு காலத்திலேதான் அவராலேதான் வீழ்த்தப்பட்டது.
‘மாங்கனி’ போன்ற காவியங்களை எழுதிய அவரது கரமே, கோடிக்கணக்கானவர்கள் கேட்டு மகிழ்க்கின்ற எளிதான், இனிமையான திரைப்படப் பாடல்களையும் எழுதியது. திரைப்படப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சிக்குரிய அற்புதங்களாவதற்கு அவரே பெருங் காரணமாக இருந்தார். அருவி நடை, ஆன்றபுலமை, அன்புள்ளம், பிள்ளை மனது உயர்ந்த சிந்தனை- உலகளாவிய பார்வை இவையே கவியரசு கண்ணதாசன்.
நூறு கவிஞர்கள் சேர்ந்து செய்ய வேண்டிய இலக்கியப் பணியைக் கவிஞர் அவர்கள் ஒருவரே செய்தார்.
எப்போதோ ஒருமுறை தோன்றுகின்ற இதிகாசக் கவிஞர் அவர்”
கண்டீர்களா?
சாகாவரம் பெற்ற சக்தியக் கவிஞர் கண்ணதாசனைப் பற்றிப் புவிபோற்ற வாழ்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கூறியுள்ள கருத்துக்களை... பார்வையை... இதனைவிடக் கவியரரைப் புவியியல் யார், ஆழழ்ந்து நோக்கி ஆய்வு செய்திட இயலும்? சொல்லுங்கள் பார்ப்போம்!
எதனையும் நுட்பமாக ஆய்கின்ற ஆற்றல் பெற்ற எம்.ஜி.ஆர். அற்புதமாகக் கவியரசரை அணுகி, ஆய்ந்து கூறிய கருத்துக்கள் காலத்தை வென்று நிற்கும் கருத்தாய்வுப் பெட்டகந்தானே!
தன்னை இந்த அளவிற்கு ஆய்கின்ற ஆற்றல் பெற்ற எம்.ஜி.ஆர். அற்புதமாகக் கவியரரை அணுகி, ஆய்ந்து கூறிய கருத்துக்கள் காலத்தை வென்று நிற்கும் கருத்தாவுப் பெட்டகந்தானே! தன்னை இந்த அளவிற்கு ஆய்கன்ற அன்புள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். படங்களுக்கு அந்தக் கவியரசர் அள்ளித் தந்த பாடல்களை... இல்லை!... இல்லை!... பார்ப்போற்றும் பாடல்களைத் தொடர்ந்து நாமும் காப்போகமாக.

No comments:

Post a Comment