எஸ். செல்வசேகரன் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட புகழ்பெற்ற மேடை, வானொலி நடிகராவார். கோமாளிகள் நாடகத் தொடரில் சிங்கள மொழியில் பேசும் உபாலி பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றதை அடுத்து ‘உபாலி செல்வசேகரன்’ எனவும் அழைக்கப்படுகிறார். நகைச்சுவையோடு குணசித்திர பாத்திரங்களிலும் திறமையாக நடிப்பவர்.

கொழும்பு கொச்சிக்கடை சென் பெனடிக்ட் கல்லூரியில் கல்வி பயின்றார் செல்வசேகரன்.
இலங்கை வானொலியின் வர்த்தகச் சேவையில் எஸ். ராம்தாஸின் (கோமாளிகளின் கும்மாளம்’ தொடரிலும் எஸ். எஸ். கணேச பிள்ளையின் ‘இரை தேடும் பறவைகள்’ தொடரிலும் கே. எஸ். பாலசந்திரனின் ‘கிராமத்துக் கனவுகள்’ தொடரிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர். இவர் ரூபவாஹினியில் எதிர்பாராதது என்ற தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தவர்.
இவர் கோமாளிகள், ஏமாளிகள், நாடு போற்ற வாழ்க போன்ற திரைப்படங்களில் நடித்தவர். நடிகர் வி. பி. கணேசனுக்கு புதிய காற்று, நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க போன்ற படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தவர் இவரே. இதனால் இவர் நாடு போற்ற வாழ்க படத்தில் நடித்த போது இவருக்கு எஸ். என். தனரத்தினம் குரல் கொடுக்க நேர்ந்தது.
புஞ்சி சுரங்கனாவி என்ற சிங்களப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதம் வழங்கப்பட்டது. கே. எம். வாசகரின் சுமதி எஸ். ராம்தாசின் ‘காதல் ஜாக்கிரதை கலாட்டாக் காதல் போன்ற பல மேடை நாடகங்களில் நடித்தவர். இவர் என்பது குறிப்பிடத்தக்கது. புஞ்சி சுருங்கனாவ, மச்சான், மாப்பா, சூரிய அரண ஆகிய சிங்கள படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
No comments:
Post a Comment